Friday, December 6, 2013

பேராசிரியர் கைலாசபதி 31வது நினைவு ஆண்டு .

Photo: பேராசிரியர் கைலாசபதி  31வது நினைவு  ஆண்டு . 
(5-4-1933 -- 6-12-1982 )
 எம்மோடு இருந்து வரலாற்றுப் போக்கை முன்னுணர்ந்து கூறி ஆற்றுப்படுத்த இடமற்றுப்போய் முப்பத்தொரு வருடங்கள் கடந்துவிட்டன.ஆயினும் தீர்க்கதரிசனத்தோடு அவர் கண்டுகாட்டியவாறு நிகழ்வுகள் நடந்தேறி ஒரு வட்டம் நிறைவாகியுள்ளது.அப்போது,1978 இலிருந்து மறைவுவரை(1982) அன்றைய கூட்டமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற  மிதவாத அமைப்பு, தேர்தல் வெற்றிக்காகவும் சுரண்டல் கும்பலைப் பேணவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையில் மக்களை ஏமாற்றுவதாக உள்ளது என்பதை மாதந்தோறும் "செம்பதாகையில்" பத்தி எழுத்தில் அம்பலப்படுத்தி வந்தார் கைலாஸ்.
அந்த எழுத்துக்கள் நூலுருப்பெற்றால் இன்று மிதவாத அமைப்பான கூட்டமைப்பு மீண்டும் நிலைமையைத் தன் கட்டுக்குள் கொண்டுவர எடுக்கும் தந்திரோபாயங்களின் தலைகீழ் கூத்தைக் காண வழி கிடைக்கும்.அன்று இவர்கள் இஸ்ற்றேலியர்போலத் தமிழர் தமக்கான ஈழத்தைப் பெறுவர் என மேடைகளில் முழங்கியதெல்லாம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்கும் ஒரே நோக்கத்துக்காகவே;இன்று மேலதிகமாக மாகாண சபையும் கிடைத்துள்ளது.மிதவாதிகளை நிராகரித்துக்கொண்டு இளைஞர் இயக்கங்கள் மார்க்சியத்தேடலை மேற்கொண்டபோது கைலாஸ் தமிழ்த் தேசியம் ஆரோக்கியமான பாதையில் முன்னேறும் எனக் கருதினார்.
அவரது மறைவின்பின்னர்,மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தீவிரவாதம்போலத் தோற்றம் காட்டும்வகையில் ஆயுதம் ஏந்திய மிதவாதிகள் தமிழ்த் தேசியத் தலைமையைக் கைப்பற்றி இறுதியில் கழித்தல் பெறுபேறில் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டுள்ளனர்.ஆயினும் மிதவாதம் பத்திரமாக மீண்டும் பாராளுமன்ற ஆசன அரசியலை முன்னெடுக்க இயலுமாகியுள்ளது.ஆயுதம் ஏந்துவதே தீவிரவாதம் ஆகிவிடாது;கூட்டணியின் மிதவாத அரசியலையே புலிகளின் ஆயுதமும் பேசியது.அவர்களால் துரோகிகளாக்கப்பட்ட மார்க்சியத் தேடல் இளைஞர்களிடம் தவறுகள் இருந்த போதிலும் தீவிர வாதத்தோடு ஒரு தீர்வுக்கான மார்க்கத்தைக் கண்டடைய முயன்றிருப்பார்கள்.
இப்போது அடைந்தால் ஈழம் மட்டுமே என்ற "தீவிரவாதம்"(இது உண்மையில் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிக்கான வெற்றுக் கோசம் என்பதை உணராத மிதவாதத்தின் விடலைப்பருவக் கோளாறன்றி வேறேதுமில்லை).எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவரப்படலாம் என்பதே இன்றைய மிதவாதிகள் முன்னுள்ள சவால்.அதனை எமது மேலாதிக்க சக்திகளான பௌத்த-சிங்களப் பேரினவாதத்தை எதிர்ப்பதான இனவாதக் கூச்சலைப் போட்டவாறே,அவர்களோடு கள்ளக் கூட்டமைத்து(இரு தரப்பும் மக்களைப் பிரிக்க இனவாதத்தைக் கக்கியவாறே தமக்குள் உறவைப் பேணிவருகின்றனர்) ஒரு தீர்வை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதன் வாயிலாக முடிவுக்குக் கொண்டுவர முயல்கின்றனர்..இதனை இலங்கை முழுவதையும் கபளீகரம் செய்துள்ள இந்தியா வெற்றிகரமாக இயக்கி வருகிறது.இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்மீது கருத்தியல் ஆக்கிரமிப்பும் செய்து, மோசமாக சுரண்டியும்வருகிற தமிழக சுரண்டல் கும்பல் விளங்கிக்கொள்ளாததுபோல நடித்தவாறு, எம்மீது அக்கறை உடையவர்போல் பிரிவினைக்காக இன்னும் போராடுமாறு எம்மை உசுப்பேத்துவதுதான் உலகப் பெரும் அயோக்கியத்தனம்.
சாதி என்றால் ஆதிக்கம்புரியும் கூட்டமும்,ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் சாதிகளும் என்பதுபோலவே தேசம் என்பது மூலதன வாய்ப்போடு மேலாதிக்கம்புரியும் தேசமும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்களும் என்பதே நிதர்சனமாகும்.இந்தியா(அதனுள் இருந்து தமிழகம்) மேலாதிக்க-ஒடுக்கும் தேசம்;இலங்கை முழுவதும்,தமிழ்த் தேசியமும் அவர்களால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்கள்.அவ்வாறன்றி தேசங்கள் தமக்குள் சம உரிமையோடு ஊடாட வேண்டுமெனில் சர்வதேசவாதத்தை முன்னெடுக்கும் சோசலிச மார்க்கத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.இதனையே கைலாஸ் தனது "செம்பதாகை"பத்தி எழுத்தில் மேற்கொண்டு வந்தார்.அவ்வாறு அவரைத் தொடர்ந்து அரசியல் எழுத்தில் ஈடுபடுத்துவதில் தோழர் கே.ஏ.சுப்பிரமனியம் முதன்மைப் பாத்திரம் வகித்தார்.அவரது 24வது நினைவு நளான 27.11.2013இல் என் குறிப்பைப் பதிவிடாத காரணத்தால் கைலாசின் 31வது நினைவு நாளில் அந்த இரு சமூகப் போராளிகளுக்கும் புரட்சிகர வணக்கத்தை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.நீங்கள் முன்னெடுத்த பாதையில் இன்னுமின்னும் பல நூறு இளைஞர்கள் இணைகிறார்கள் என்ற மகிழ்வான செய்தியை இன்றைய நினைவுகூரலின்போது தெரிவிக்க முடிவது ஓரளவு .நிறைவைத் தருகிறது. தொடர்வோம்!!
பேராசிரியர் கைலாசபதி 31வது நினைவு ஆண்டு .
(5-4-1933 -- 6-12-1982 )

எம்மோடு இருந்து வரலாற்றுப் போக்கை முன்னுணர்ந்து கூறி ஆற்றுப்படுத்த இடமற்றுப்போய் முப்பத்தொரு வருடங்கள் கடந்துவிட்டன.ஆயினும் தீர்க்கதரிசனத்தோடு அவர் கண்டுகாட்டியவாறு நிகழ்வுகள் நடந்தேறி ஒரு வட்டம் நிறைவாகியுள்ளது.அப்போது,1978 இலிருந்து மறைவுவரை(1982) அன்றைய கூட்டமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற மிதவாத அமைப்பு, தேர்தல் வெற்றிக்காகவும் சுரண்டல் கும்பலைப் பேணவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையில் மக்களை ஏமாற்றுவதாக உள்ளது என்பதை மாதந்தோறும் "செம்பதாகையில்" பத்தி எழுத்தில் அம்பலப்படுத்தி வந்தார் கைலாஸ்.
அந்த எழுத்துக்கள் நூலுருப்பெற்றால் இன்று மிதவாத அமைப்பான கூட்டமைப்பு மீண்டும் நிலைமையைத் தன் கட்டுக்குள் கொண்டுவர எடுக்கும் தந்திரோபாயங்களின் தலைகீழ் கூத்தைக் காண வழி கிடைக்கும்.அன்று இவர்கள் இஸ்ற்றேலியர்போலத் தமிழர் தமக்கான ஈழத்தைப் பெறுவர் என மேடைகளில் முழங்கியதெல்லாம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்கும் ஒரே நோக்கத்துக்காகவே;இன்று மேலதிகமாக மாகாண சபையும் கிடைத்துள்ளது.மிதவாதிகளை நிராகரித்துக்கொண்டு இளைஞர் இயக்கங்கள் மார்க்சியத்தேடலை மேற்கொண்டபோது கைலாஸ் தமிழ்த் தேசியம் ஆரோக்கியமான பாதையில் முன்னேறும் எனக் கருதினார்.
அவரது மறைவின்பின்னர்,மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தீவிரவாதம்போலத் தோற்றம் காட்டும்வகையில் ஆயுதம் ஏந்திய மிதவாதிகள் தமிழ்த் தேசியத் தலைமையைக் கைப்பற்றி இறுதியில் கழித்தல் பெறுபேறில் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டுள்ளனர். ஆயினும் மிதவாதம் பத்திரமாக மீண்டும் பாராளுமன்ற ஆசன அரசியலை முன்னெடுக்க இயலுமாகியுள்ளது.ஆயுதம் ஏந்துவதே தீவிரவாதம் ஆகிவிடாது;கூட்டணியின் மிதவாத அரசியலையே புலிகளின் ஆயுதமும் பேசியது.அவர்களால் துரோகிகளாக்கப்பட்ட மார்க்சியத் தேடல் இளைஞர்களிடம் தவறுகள் இருந்த போதிலும் தீவிர வாதத்தோடு ஒரு தீர்வுக்கான மார்க்கத்தைக் கண்டடைய முயன்றிருப்பார்கள்.
இப்போது அடைந்தால் ஈழம் மட்டுமே என்ற "தீவிரவாதம்"(இது உண்மையில் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிக்கான வெற்றுக் கோசம் என்பதை உணராத மிதவாதத்தின் விடலைப்பருவக் கோளாறன்றி வேறேதுமில்லை).எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவரப்படலாம் என்பதே இன்றைய மிதவாதிகள் முன்னுள்ள சவால்.அதனை எமது மேலாதிக்க சக்திகளான பௌத்த-சிங்களப் பேரினவாதத்தை எதிர்ப்பதான இனவாதக் கூச்சலைப் போட்டவாறே,அவர்களோடு கள்ளக் கூட்டமைத்து(இரு தரப்பும் மக்களைப் பிரிக்க இனவாதத்தைக் கக்கியவாறே தமக்குள் உறவைப் பேணிவருகின்றனர்) ஒரு தீர்வை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதன் வாயிலாக முடிவுக்குக் கொண்டுவர முயல்கின்றனர்..இதனை இலங்கை முழுவதையும் கபளீகரம் செய்துள்ள இந்தியா வெற்றிகரமாக இயக்கி வருகிறது.இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்மீது கருத்தியல் ஆக்கிரமிப்பும் செய்து, மோசமாக சுரண்டியும்வருகிற தமிழக சுரண்டல் கும்பல் விளங்கிக்கொள்ளாததுபோல நடித்தவாறு, எம்மீது அக்கறை உடையவர்போல் பிரிவினைக்காக இன்னும் போராடுமாறு எம்மை உசுப்பேத்துவதுதான் உலகப் பெரும் அயோக்கியத்தனம்.
சாதி என்றால் ஆதிக்கம்புரியும் கூட்டமும்,ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் சாதிகளும் என்பதுபோலவே தேசம் என்பது மூலதன வாய்ப்போடு மேலாதிக்கம்புரியும் தேசமும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்களும் என்பதே நிதர்சனமாகும்.இந்தியா(அதனுள் இருந்து தமிழகம்) மேலாதிக்க-ஒடுக்கும் தேசம்;இலங்கை முழுவதும்,தமிழ்த் தேசியமும் அவர்களால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்கள்.அவ்வாறன்றி தேசங்கள் தமக்குள் சம உரிமையோடு ஊடாட வேண்டுமெனில் சர்வதேசவாதத்தை முன்னெடுக்கும் சோசலிச மார்க்கத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.இதனையே கைலாஸ் தனது "செம்பதாகை"பத்தி எழுத்தில் மேற்கொண்டு வந்தார்.அவ்வாறு அவரைத் தொடர்ந்து அரசியல் எழுத்தில் ஈடுபடுத்துவதில் தோழர் கே.ஏ.சுப்பிரமனியம் முதன்மைப் பாத்திரம் வகித்தார்.அவரது 24வது நினைவு நளான 27.11.2013இல் என் குறிப்பைப் பதிவிடாத காரணத்தால் கைலாசின் 31வது நினைவு நாளில் அந்த இரு சமூகப் போராளிகளுக்கும் புரட்சிகர வணக்கத்தை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.நீங்கள் முன்னெடுத்த பாதையில் இன்னுமின்னும் பல நூறு இளைஞர்கள் இணைகிறார்கள் என்ற மகிழ்வான செய்தியை இன்றைய நினைவுகூரலின்போது தெரிவிக்க முடிவது ஓரளவு .நிறைவைத் தருகிறது. தொடர்வோம்!!