tag:blogger.com,1999:blog-39009704862950092722024-02-18T21:41:02.527-08:00சத்தியமனை - தேடலும், தேவையும் .."சத்தியமனை" -
இன்றைய சமூகத்திற்கான தேவையும், தேடலும் பற்றிய ஓர் துடிப்பு !ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-31084289460453733102014-09-13T03:24:00.003-07:002014-09-13T07:59:06.512-07:00சாதியம் - நாத்திகம் - நவ பிராமணியம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: #cc0000;"> சாதியம்</span></b><br />
<b><span style="color: #cc0000;"> நாத்திகம்</span></b><br />
<b><span style="color: #cc0000;"> நவ-பிராமணியம் </span></b><span style="font-size: x-small;"> </span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhot_f0De7zPYIe7GN_7MSU-mvNDDxJWLIroF69jeHFC3ycCRTEvZCwGTxrtT3ReItjDUp7PfnBN41_MaOCykIX0iyKEEBnFF2NEEFB4XnxYZPKnBaQy5K0_ggQKevxMkhRQbQNvZqTpIY1/s1600/appa8.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhot_f0De7zPYIe7GN_7MSU-mvNDDxJWLIroF69jeHFC3ycCRTEvZCwGTxrtT3ReItjDUp7PfnBN41_MaOCykIX0iyKEEBnFF2NEEFB4XnxYZPKnBaQy5K0_ggQKevxMkhRQbQNvZqTpIY1/s1600/appa8.png" height="200" width="200" /></a></div>
<span style="font-size: x-small;"></span><br />
<br />
<span style="font-size: x-small;"> </span><br />
<span style="font-size: x-small;"> </span> மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்கிய களத்தில் எவரெல்லாம் வீழ்த்தப்பட்டனர் என எண்ணியிருந்தோமோ அவரெல்லாம் மீண்டெழுந்து ஆர்ப்பரிக்கக் கண்டால் எப்படி உணர்வோம்? அப்படியொரு இரண்டக நிலை இன்று. தமிழகத்தில் சென்ற நூற்றாண்டின் முப்பதுகளிலிருந்து நாத்திகவாதம் வீறுடன் செயற்பட்டிருந்தது. இன்னொரு தளத்தில் கூர்மையாக முன்னெடுக்கப்பட்ட வர்க்கப்போராட்ட அணியினர் நாத்திகவாதிகளோடு பல அம்சங்களில் முரண்பட்ட போதிலும் நாத்திகக் கோட்பாட்டை பிரசாரம் செய்பவர்களாயிருந்தனர், இந்தியத் தேசியத்தை முன்னிறுத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிர்க்கட்சியாக இருந்த கொம்யூனிஸ்ட்டுகள் அடுத்து அதிகாரத்துக்கு வந்து மதவாதப் போலிகளை வீழ்த்தி உழைப்பாளர் ஆட்சியை மலர்விப்பர் என நம்ப ஏதுக்கள் பல இருந்தன.<br />
அவ்வாறு உழைப்பு அதிகார பீடமேற இயலாமற் போனாலும் மத ஏமாற்றுக் கும்பலை வீழ்த்தித் தள்ளிவிடுகிறோம் என்ற நாத்திகவாதத் திராவிடக் கட்சிகளே அறுபதுகளின் கடைக்கூறிலிருந்து இன்றுவரை ஆட்சியில் இருக்கின்றன. அதன் பலவீனங்களை உட்செரித்தபடி இந்துத்துவ சக்திகள் வேட்டி சால்வையுடன் மேற்கிளம்பி வருகின்றனர். நாத்திகவாதம் பெரும் முழக்கத்துடன் ஏறுதசையிலிருந்த அறுபது-எழுபதுகளிலேயே கிருபானந்தவாரியார் முதல் பித்துக்குளி முருகதாஸ் வரை மற்றொரு பக்தி இயக்கத்தை அரங்கேற்றியிருந்தனர். பெரியாரின் பின் அணிதிரண்ட பல பகுத்தறிவு ஆர்வலர்களுங்கூட அந்தப் பக்திப் பரவசத்தில் கரைந்தவாறேதான் மாற்று அரசியலுக்கு வழிசமைத்தனர். பிராமணிய ஆத்திகத்தைக் கல்வி-வேலைவாய்ப்பு-பதவி உயர்வு எனும் தளங்களில் தகர்ப்பதற்கு இந்த திராவிட அரசியல் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தமையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதான், அந்த எண்ணத்துடன் பகுத்தறிவு அணியில் திரண்டவர்கள் எல்லாம் நாத்திகவாத விழிப்புணர்வில் எழுச்சி கண்டுவிட்டவர்கள் என்ற கணிப்பில்தான் தவறிருந்தது. மக்கள் தெளிவாகவே திராவிட அரசியலையும் மதத்தையும் வேறுபடுத்தியபடிதான்!<br />
இன்றுங்கூட மதவாத சக்திகள் இந்திய மத்திய அரசில் அரங்கேறியவுடன் இந்துத்துவப் பாஸிஸவாதத்தை நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டுவர முயலுவது அவர்களது வீழ்ச்சிக்கு அடிகோலுவதாகவே அமையும். தீவிர மதவாதிகள் தலைமையில் இந்த அரசியல் மாற்றம் நடந்துவிடவில்லை, அவர்களும் பிராமண மேட்டிமைகளும் அடக்கிவாசிக்கும்போது தேனீர்க்கடை நடாத்திய இடைச்சாதி உழைப்பாளி என்ற படிமத்தோடுதான் புதிய தலைமை கட்டமைக்கப்பட்டு மாற்றத்தை சாதிக்க இயலுமாயிற்று. அதுவும் அதிகாரத்திலிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இமாலயத்துத் தவறுகளும் ஊழல்களும் இழைத்துத் தூக்கியெறியப்பட்டாக வேண்டும் என்ற உச்ச எதிர்பார்ப்பின் கட்டம் ஏற்படுத்திய அவதியால் வாய்த்தது. இருப்பினும் மக்களின் மத உணர்வையும் தேசியப் பற்றையும் களமாக வைத்து மதச்சிறுபான்மையினருக்கு எதிராகப் பாசிச அரசியலை வளர்க்க இருக்கும் வாய்ப்பு முழு நாட்டையும் சர்வாதிகார ஆட்சிக்கு ஆட்படுத்த இயலும் என்பதைப் புறந்தள்ளிவிட இயலாது.<br />
பாசிசம் என்பது பெருமுதலாளிவர்க்கம் அல்லது ஏகபோக மூலதனம் பழைய ஜனநாயகப் பாணியில் அதிகாரத்தை முன்னெடுக்கவியலாத நெருக்கடிச் சூழலின் அரசியல் வெளிப்பாடு என்று மட்டுமே வரையறுத்துவிட இயலாது, இது ஒருவகையில் மார்க்சியத்தை வர்க்கவாதப் பார்வையாக முடக்கிய கோளாறின் பேறானது. லாரன்ஸ் பிரிட் போன்ற அரசியிலறிஞர்கள் ஜெர்மனி முதல் இந்தோனேசியாவரை செயற்பட்ட பாசிசம் குறித்து ஆய்வு செய்து அதன் அடிப்படைப் பண்புகளை வெளிப்படுத்pயிருந்தனர். லாரன்ஸ் பிரிட் பாசிசத்தின் 14 அம்சங்கள் எனக்காட்டியிருந்தமையில் வலிய தேசியவாதம், இன-மதச்சிறுபான்மையினர் எதிரிகளாகக் கட்டமைக்கப்படல், பால் நிலை (ஆண்) மேலாதிக்க, ஊடகப் பயன்பாடும் ஜனநாயக மறுப்பும், மத உணர்வைப் பயன்படுத்தல் என்ற களவாய்ப்புகளைக் காட்டியுள்ளார், மனித உரிமை மீறல், இராணுவ மேலாதிக்கம், அதிகார மேட்டுக்குடிகள் உலகமயமாதலில் ஒன்றுபட உள்ள வாய்ப்பு, தொழிலாளர் உரிமைகள் மறுப்பு, அறிவாளிகளும் கலைஞர்களும் உயிர்ப்புடன் செயலாற்ற இயலாத நிலையை ஏற்படுத்தல், ஊழல்களும் அயோக்கியத் தனங்களும் வௌ;வேறு வடிவங்களில் அரங்கேறல், மோசடித் தேர்தல்கள் வாயிலாக மக்களின் ஒப்புதலைப் பறைசாற்றுதல் என்பனவும் அந்தப் பதினான்கு அம்சங்களினுள் அடக்கம்.<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNgGCbcKW8Iyr9ZJJ_S5ArSmGn1T4rQiDpU8U3dAVhogvGtCSjrizKs1Xb-Wb3d0U9MvI_fQ9Y752fp7CFw8YSV97Sb1dJpb6rbVvhC4M8SdwVie1HPAkAxGfEDEXyE7wtfrBDswgpGPcM/s1600/appa44.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNgGCbcKW8Iyr9ZJJ_S5ArSmGn1T4rQiDpU8U3dAVhogvGtCSjrizKs1Xb-Wb3d0U9MvI_fQ9Y752fp7CFw8YSV97Sb1dJpb6rbVvhC4M8SdwVie1HPAkAxGfEDEXyE7wtfrBDswgpGPcM/s1600/appa44.jpg" height="320" width="159" /></a>ஆக, வர்க்க இயங்காற்றலுக்கு அப்பால் பால்நிலை-இனக்குழும-மத-தேசிய மேலாதிக்க உணர்வுகள் அரசியல் செல்நெறியில் தீர்மானகரமான பாத்திரத்தை வகிப்பது கவனிப்புக்குரியது. இறுதியில் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் தகர்த்து பொதுவுடைமையைச் சாத்தியமாக்குவதன் வாயிலாக மட்டுமே இத்தகைய அவலங்களுக்கு முடிவுகட்ட இயலும், அதனைப் பாட்டாளிவர்க்க அரசியல் இயக்கமே சாத்தியமாக்கவல்லது. அந்தவகைப் பாட்டாளிவர்க்க நோக்கில் மேலாதிக்கவாத அதிகாரங்களைத் தகர்த்து புதிய பாதையை வகுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?<br />
நவீன சமூக உருவாக்கத்தில் முதலாளித்துவம் மதத்தின் இடத்தை மொழிக்கு வழங்கிவிட்டமையால் நாத்திகத்தை முன்னிறுத்தி உழைக்கும் மக்களை அணிதிரட்டிவிட இயலும் என்ற பழைய பாணியைக் கைவிட நிர்ப்பந்திக்கப்படுகிறோம். மதம் இவ்வகையில் முக்கியத்துவத்தை இழந்து வருவதாகக் கருதிய போதிலும் ஏற்றத்தாழ்வைப் பேணுவதற்கு மதம் மனஒப்புதல் ஏற்படுத்தித்தரும் காரணத்தால் நாத்திகப் பிரசாரத்துக்கு அவசியமுள்ளது என்ற கருத்தும் வலுமையோடு இருந்தது. கடவுள் மறுப்பை ஏற்புடையதாக்கி பகுத்தறிவைப் பரப்பினால் மட்டுமே மக்கள் வாழ்வு சுபீட்சம் பெறும் என்பதாக நாத்திகவாதிகள் இயங்கியது போல மார்க்சியர்களின் நாத்திகக் கோட்பாடு இருந்ததில்லை.<br />
ஏற்றத்தாழ்வு நிதர்சனமாகிப் பலர் உழைத்து அவல வாழ்வில் உழல, அவர்களைச் சுரண்டி வாழ்ந்தோர் ஆடம்பரமான உலலாசங்களில் திழைக்க இயலுமானதாகிய குறித்த வரலாற்றுச் சூழலிலேயே மதம் தோற்றம் பெற்றது. கடவுளின் பேரால் இந்த அநீதி மறைக்கப்பட்டது. இவ்வாறு ஒர கடவுள் முன்னிறுத்தப்பட்டமை ஒரு சில மதவாதிகளின் சதி வேலையல்ல. 'வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், கடவுள் உண்டு எனும் கருத்து சில தத்துவஞானிகள் அல்லது சிந்தனையாளர்களால் வலிந்து புகுத்தப்பட்டதோ அல்லது மனித உணர்வு நிலையின் தவிர்க்க முடியாத பிற்சேர்க்கையோ அன்று, திண்ணமான பொருளாயதச் சூழல்களின் கீழ் மனித உணர்வில் தோன்றியதே அக்கருத்து, அப் பொருளாயதச் சூழல்கள் அடியோடு மாறும்போது அக்கருத்தும் பட்டுப்போகும்' என்பார் 'இந்திய நாத்திகம்' நூலாசிரியர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா (ப.304)<br />
'வர்க்கங்களாகப் பிளவுபட்ட சமூகத்தைப் பராமரிக்க முற்றிலும் புதியதோர் ஏற்பாடு அவசியப்பட்டது' என்கிறவகையில் அரசு உழைக்கும் பெரும்பான்மையினர்க்கு எதிராக சுரண்டுவோர் சார்பாக வன்முறையைப் பிரயோகிக்கும் கருவியான கதையை அவர் காட்டியிருந்தார். அந்த அரசு சமூகத்துக்கு வெளியே இருந்து திணிக்கப்பட்டதல்ல, சமூகத்தின் வளர்ச்சிக்கட்டத்தில் உள்ளிருந்தே தோன்றி வளர்ந்த ஒன்றுதான். வெறும் வன்முறையால் எப்போதும் அடக்கிவைத்திருந்துவிட இயலாது என்கிறபோது மன ஒப்புதலுடன் தமது அவல வாழ்வை ஏற்க வகை செய்யும் மதமும் அவசியப்பட்டது. மதம் தன்னளவில் இத்தகைய ஏற்பினைச் செய்யும் அதேவேளை வேண்டியபோது வன்முறையைப் பிரயோகிக்க அவசியமான கருவியாகிய அரசைப் பாதுகாக்கும் கருத்தியல்களையும் வழங்குகிறது. இவ்வகையில் மதம் 'உடல் தாண்டியது ஆன்மீகக் கருவியாக' செயற்படும் அதேவேளை, துயர்மிகு வாழ்வின் தாங்கவியலாச் சுமைகளைத் தாங்குவதற்கான 'ஆற்றல்மிகு வலியடக்கியாகவும்' திகழ்கிறது. (தேவி பிரசாத் சட்டோபாத்யாய, பக்.308-309).<br />
இவ்வகையில் மதம்பற்றிய பார்வையை அறிவியல் பூர்வமாக அணுகியபோதிலும் இந்தியச் சூழலில் அதன் பிரயோகத்தில் பல இடர்பாடுகள் இருந்தன. குறிப்பாக மேலே பார்த்தவாறு 'வர்க்கப் பிளவுபட்ட' சமூகமான ஐரோப்பாவில் பார்ப்பதைப் போன்றதாக சாதிவாழ் முறையுடைய நமது சூழல் இல்லை. பிராமணியச்சதி இங்கே வர்க்கங்களை மறைத்து சாதிகளாக்கி இல்லாத 'இந்துசமயம்' என்பதாக ஒன்றைச் சித்திரித்து மக்களை ஏமாற்றுகிறது என்றவகையில் ஐரோப்பிய சமூகத்தில் மதம் பற்றிப் பேசப்பட்டவற்றை இந்து மதம் என்பதற்கும் பொருத்திவிடக் கூடாது என்ற எச்சரிக்கைகளும் விடப்படுகிறது.<br />
இந்து மதம் இல்லாத ஒன்றா? இது குறித்து ந.முத்துமோகன் 'இந்து மதம்: சில புதிர்களும் புரிதல்களும்' என்ற தலைப்பிலான கட்டுரையில் (புது விசை -41) விரிவாக அலசியுள்ளார். மதம் குறித்த அக்கறைகள் இந்திய மக்களுக்கு இருந்ததில்லை, குல வழிபாடுகள் சார்ந்து பன்மைக் கோட்பாடுகள், நம்பிக்கைகள், சடங்காசாரங்கள் நிலவிய சூழலில் ஆங்கிலேயராட்சிக்காலமே இத்தகைய முறைகளையுடைய (கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற தமக்குரிய செமட்டிக் மதங்களாயில்லாத – சிலபோது பௌத்தம், சமணத்தை விலக்கியதான-அனைவரையும்) இந்து சமயத்தவர் என வரையறுத்தனர். இது வேதம் -வேதாந்தத்தை மூல நூல்களாகக் கொண்டிருக்கும், கர்மவினை-மறுபிறப்பு-முத்தி குறித்த நம்பிக்கையுடையது, ஆன்மீகவாதப் பற்றுடையது, சாதியமைப்பை அடிப்படையாகக் கொண்டது என்பன ஐரோப்பிய புரிதல். இவ்வகையில் ஐரோப்பியச் சிந்தனை முறையால் விளங்கிக் கொள்ளப்பட்ட வகையில் இந்தியச் சமூகமோ அதன் சமய வாழ்முறையோ அமையவில்லை என முத்துமோகன் காட்டியுள்ளார். 'இன்றைய இந்து மதம் என்ற கட்டுமானம் காலனிய மற்றும் இந்திய தேசிய அரசியல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகி வருகிறது. இந்து மதம் என்ற காலனிய ஒற்றை வடிவத்தில் மத அடிப்படைகளைவிட அரசியல் அதிகார அடிப்படைகளே அதிகமாக அமைந்துள்ளன' என்றபோதிலும், 'இன்றைய இந்து மதத்திற்கு முந்தியகால வரலாற்றோடு தொடர்புகள் இல்லாமல் இல்லை. ஆயின் அவை ஒன்றைப்படையானவை அல்ல. அவை பலதரப்பட்டவை. அது வேதங்களோடும் வேதாந்தத்தோடும் மட்டும் தொடர்புகொண்டதல்ல. அது சிந்து வெளியோடும் தொடர்புகொண்டது, அது பக்தியோடும் புராணங்களோடும் தொடர்பு கொண்டது, அது தாந்திரிகத்தோடும் தொடர்பு கொண்டது' என்பார் முத்துமோகன் (புதுவிசை -41, ப.28).<br />
சிந்துவெளி, வேதம், வேதாந்தம், பக்திக் கோட்பாடு, புராணமரவு, தாந்திரிகம் என்ற பல மதக்கூறுகளின் ஒன்றிப்பையுடைய ஒரு மாதமாக ஆக்கப்பட்ட-ஆகிவிட்ட இந்து சமயம் என்பதை ஐயப்பாட்டுடன் ஏற்க வேண்டியிருப்பதான ஆதங்கம் அக்கட்டுரையில் உண்டு. இவற்றுக்குள் உள்ள ஊடாட்டம் போன்று 'யூத மதம், கிறித்தவம், இஸ்லாம் ஆகியவை கூட தமக்குள் ஏராளமான தொடர்புகளைக் கொண்ட மதங்கள் தாம், அதற்காக அவற்றை ஒரே மதம் என்றா வழங்குகிறோம் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது' என்பார் முத்துமோகன்.<br />
இதன் காரணமாக அக்கட்டுரையை இந்த முத்தாய்ப்புடன் அவர் நிறைவு செய்வார்: 'பன்மீயம் என்பதையே இந்து மதம் குறித்த கடைசிச் சொல்லாக நாம் இங்கு முன்வைக்கவில்லை. அது ஒரு தற்காலிக நிலைப்பாடாக இருக்கலாம். ஆயின் காலனிய, நவீன இந்து மதம் குறித்த சில விவாதங்களையே இங்கு முன்வைத்துள்ளோம். இந்து மதம் குறித்து பல வேளைகளில் நாம் எதுவும் பேசாமல் மௌனம் சாதித்து வருகிறோம். அது சரியாக இருக்காது. பேசி விவாதிப்பதற்கான அழைப்பே இது.' (புதுவிசை -41, ப028).<br />
கறாராக இதுதான் இந்துமதம் எனச் சொல்லாமல் ஏன் பல மறுப்புகளை முன்வைத்து அவற்றையெல்லாம் கடந்து இந்து மதம் பற்றி விவாதிக்க வேண்டி உள்ளது என்று கூறுவேண்டி இருப்பது மேற்படி கட்டுரையில் இருக்கும் பிரச்சினை அல்ல, இந்த விவகாரம் பல குழப்பங்களுடன் கூடியதாயுள்ளது என்பதே காரணம். எது இந்து சமயம் என்பது தெளிவாக்குவதற்கு சிரமம் உடைய விவகாரம் தான். 'பண்டைய கால இந்தியா' எனும் நூல் இந்து சமயம் உருவாகிய காலம் வரையான வரலாற்றைப் பேசுபொருளாக உடையது. காலனியவாதம் வரையறுத்த இந்து சமயத்தை வாய்ப்பாக்கி அதன் அடித்தளத்தை ஆதாரமாக்கிக் கொண்ட இந்தியத் தேசியவாதம் ஆரிய வர்க்கம் பற்றியும், குப்தப் பேரரசர் காலத்தில் இந்து சமயம் மறுமலர்ச்சி கண்டமை பற்றியும் புளகாங்கிதம் அடைந்தமையையும் கேள்விக்குட்படுத்தி உண்மை நிலவரத்தை விளக்குவதாக டி.என்.ஜாவின் நூல் அமைந்துள்ளது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
குப்தர் காலத்தை இந்து மதத்தின் பொற்காலம் எனக் கொண்டாடுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைவது முன்னதாக பிராமண மதம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பௌத்த-சமண மதங்கள் எழுச்சியடைந்தபோது காணாமல் போய்விடும் நிலை நிலவி, மீண்டெழ இயலுமாயிருந்தது குப்தர் காலத்தில் என்பதால் ஆகும். 'தத்துவக் கருத்துக்களின் வளர்ச்சியில் குப்தர்கள் காலம் ஒரு மைல் கல்லாக இருந்திருக்கலாம்' (ஜா,ப.203) எனக்கூறும் டி.என்.ஜா இந்து மறுமலர்ச்சி என்ற கருத்தை மறுப்பார். 'வைணவம் மற்றும் சைவம் ஆகியவற்றுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வந்ததற்கும் மத மறுமலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருப்பதாகப் பொருள் அல்ல. இந்த இரு மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் முந்தைய காலத்தைச் சேர்ந்தவை. இப்போது நிலப்பிரபுத்துவ நிலைமைகள் தோன்றிக் கொண்டிருந்த ஒரு சூழலில் அவை கூடுதலாக மக்களை ஈர்த்தன. இந்து என்கிற சொல்லைப் பயன்படுத்துவதும் தவறானது. குப்தர்கள் காலத்திற்குப் பின்னர் அது இந்தியாவில் வாழும் மக்களைக் குறிப்பதற்காக அராபியர்களால்தான் முதலில் பயன்படுத்தப்பட்டது. பண்டை இந்தியர்கள் தங்களை எப்போதுமே இந்துக்கள் என்று எண்ணிக் கொண்டதில்லை. இந்து மறுமலர்ச்சி என்று வெகுவாகத் தம்பட்டம் அடிக்கப்பட்டது உண்மையில் மறுமலர்ச்சியே அல்ல, அது இந்து மறுமலர்ச்சியாகவும் இருக்க முடியாது' என்பார் ஜா (மேலது, ப.213).<br />
'பிராமணிய மதப் பிரிவுகளிலேயே வைணவம்தான் குப்த ஆட்சியாளர்களின் ஆதரவால் மிகப் பிரபலமடைந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அது பரவியது, கடல் கடந்து தென்கிழக்கு ஆசியாவிற்கும் பயணித்தது. செல்வத்தின் தெய்வமான ஸ்ரீலட்சுமி விஷ்ணுவுடன் இணைந்ததானது புதிய மதத்திற்கு கவுரவத்தைத் தந்தது. வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் மத்தியில் ஸ்ரீலட்சுமி முன்னர் பிரபலமடைந்திருந்ததானது புதிய மதம் சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களின் மத்தியில் பரவுவதற்கு உதவியது. விஷ்ணு வழிபாடு சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்தது' என ஜா கூறும்போது (ப.201) வட இந்தியாவில் சைவம் முக்கியத்துவம் பெறாமையை (அதற்கான காரணங்களை முன்னதாக விளக்கியவாறு) மனங்கொள்கிறார், இதே நிலையைச் சைவம் தமிழகத்தில் ஏறத்தாழச் சமகாலத்தில் பெற்றுக் கொண்டதுபற்றி அவர் கவனங்கொள்ளத் தவறவில்லை. பிரச்சினை 'புதிய மதம்' என்ற வடிவத்தை இவ்விரு சமயங்களும் கி.பி 4ம் நூற்றாண்டைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டமையை அழுத்தியுரைக்க அவர் தவறுவதில்தானுள்ளது. அனைத்துத் தரப்பினராலும் ஏற்கப்பட்ட பண்பு மாற்றத்தைத் தவறவிடும் வகையில் அந்த மாற்றத்துக்கான ('மறுமலர்ச்சிக்கான') அடிப்படை முன்னரே இருந்தது என்கிறார் (அது மறுமலர்ச்சியல்ல புதிய மதத்தின் தோற்றம் எனக்கண்டு காட்டியிருக்க வேண்டும்).<br />
முன்னர் இருந்தது பிராமண மதத்தின் பல்வேறு பிரிவுகள், கி.பி 4ம் நூற்றாண்டின் பின்னரான அனைத்து மக்களையும் ஆட்கொண்ட வைணவம், சைவம், சாக்தம் போன்றன பண்பு மாற்றம் பெற்ற புதிய மதங்கள், நிலப்பிரபுத்துவ சமூக முறைக்கு அவசியப்பட்ட மதவடிவம். முன்னர் பிராமண மதப்பிரிவுகளோ பௌத்தமோ சமணமோ அனைத்து மக்களின் ஏற்புக்கு அவாக்கொண்டதில்லை, நிலம் படைத்தவர் (கிழார்கள்-நிலப்பிரபுத்துவப் பிரிவினரல்ல), வணிகர் போன்ற ஆதிக்க சக்திகளையும் அரசையும் தம்பக்கம் ஈர்ப்பதே அன்றைக்குப் போதுமானது. நிலவுடைமைச் சமூகம் பண்ணையடிமைகள், கைத்தொழிலாளர், வணிகர்கள் என அனைத்துப் பிரிவினரையும் தமதாட்சிக்கு உட்படுத்தும் அவசியம் ஏற்பட்டபோது தோற்றம்பெறும் வைணவம், சைவம் என்பன முற்றிலும் புதிய மதங்களாகும். நிலப்பிரபுத்துவத்துக்கான முழுமுதற் கடவுளாக விஷ்ணு, சிவன் மாற்றப்படுவதற்கான முன்னோடிவடிவம் மஹாயான பௌத்தத்தின் வாயிலாக புத்தரில் ஏற்படுத்தப்பட்டது. அந்தத் தத்துவத்தையும் கடவுள் கோட்பாடுகளையும் இந்தப் புதிய சமயங்கள் கையேற்று வளர்த்தன. சாத வாழ்முறைக்கு அதிகப் பொருத்தப்பாட்டுடன் இப்புதிய மதங்கள் தோறியதன்பேறாக நிலப்பிரபுத்துவ சமயமாக பௌத்தம் இந்தியாவில் நிலைக்க முடியாதபோது, குறுகிய வடிவில் வணிகர்களால் மட்டும் பின்பற்றப்பட்ட மதமாக சமணம் நீடித்து இருக்க இயலுமாயிற்று.<br />
சைவம்-வைணவம் போன்ற இப்புதிய மதங்கள் தம்மை 'இந்து சமயம்' எனப் பெயரிட அவசியமற்றவகையில் சனாதன தர்மம், வைதீக நெறி என்பதாக முந்திய தொடர்புகளை அடியொற்றி தம்மை அழைத்ததுண்டு. வேறெவரோ இட்டபெயர் நிலைத்தமையால் ஒரே மதமாக இணைவுகாணும் தேவையேற்படும்போது பொதுப்பெயர்கொள்ள முன்னர் முனைந்ததில்லை எனப் பொருளில்லை. பௌத்தம்-சமயத்துக்கு எதிராகப் போராடியபோதும், பின்னர் இஸ்லாம், கிறித்தவத்தை முகங்கொண்ட போதும் அவை தமக்குள் ஐக்கியப்பட்டுப் போராடத் தவறியதில்லை. அதற்கேற்ப மாமன், மச்சான் உறவுகொண்டனவாய் அக்கடவுள் திகழ்ந்தனர். அருணகிரிநாதன், குமரகுருபரர் போன்ற தமிழகத்தின் இரண்டாம் பக்திப்பேரியக்க ஆளுமைகள் சிவனையோ விஷ்ணுவையோ அல்லாமல் முருகனை பாடற்தலைவனாகக் கொண்டமைக்கு வைணவ ஆட்சியாளர்கட்கும் சைவப்பெரும்பான்மை மக்களுக்கும் இணக்கம் ஏற்படுத்தும் தேவையும் சார்ந்தது என்பதைக் காணலாம் (சிவனின் மகன் முருகன் விஷ்ணுவின் மருமகன், சைவத்தைப் பொறுத்தவரை சிவனின் மூர்த்தமாயே முருகனைக் காணும் மரபும் உண்டு).<br />
யூத, கிறித்தவ, இஸ்லாம் மதங்களுக்குள் உள்ள தொடர்பிலிருந்து சைவம், வைணவம், சாக்தம் போன்ற வைதீக நெறிகளுக்கான தொடர்பு வேறுபட்டது. செமிட்டிக் மதங்களின் பைபிளின் பழைய ஏற்பாடு (யூத), புதிய ஏற்பாடு (கிறித்தவம்) என்பவற்றில் இறைதூதர்களான மோஸஸ், ஜேசு ஆகியோரை முந்திய நபிகளாக (மூஸா, ஈஸா) ஏற்கும் முகமது நபி வாயிலாக இறக்கப்பட்ட குர்ரான் சொல்லவரும் அம்சம் கவனிப்புக்குரியது. இறைவன் நபிகள் வாயிலாக தந்த தனது நெறிகளை மக்கள் சிதைத்து வருகிற நிலையில் புதிய நபிகள் அவசியப்பட்டனர், குர்ரான் அவ்வாறு வழங்கப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம். ஆக, மூன்;று மதங்களும் தத்தமக்கான மூல நூல்கள், இறை நேசர் அல்லது தூதர், பாதுகாத்துப் பரப்பச் சபைகள் என்பவற்றை, தனித்தனியே கொண்டிருப்பன. வைதிக நெறிகள் அனைத்துமே வேதம், வேதாந்தத்தையும் ஆறு தரிசனங்கள் எனும் தத்துவங்களையும் பொதுவாகக் கொள்கின்றன. குறித்த இறைதூதர் (நேசர்), சபை என்பதன்றி பலநூறு பக்தர்களும் கோயில்களும் பொதுவாக இருப்பது சனாதன நெறிகளுக்கு இயல்பு என்கிறவகையில் இந்து மதம் எனும் தனி வடிவமும் அதனுள் பன்மைத்துவத்துக்கான பல வடிவங்களும் இருக்க இயலுமாயுள்ளது.<br />
இவ்வாறு இந்து சமயத்துக்கு ஒரு மத வடிவத்தை வழங்கும் சமூக சக்தியாக அதன் புனிதச் சாதியான பிராமணர் திகழ்கின்றனர். அவர்கள் மட்டுமே கற்கவும் ஓதவும் உரிமை பெற்ற வேதங்கள் பெறும் இடத்தை அவர்கள் கடவுளுக்கு கூடத் தரத் தயாராக மாட்டார்கள். அதன் பேறாக இந்து சமயத்தின் ஆறு தரிசனங்களில் நான்கு கடவுள் மறுப்பு (நாத்திக) நிலைப்பாட்டுக்குரியன, பொதுவாக இந்தியத்தத்துவங்கள் அனைத்தையும் சொல்கிறபோது தேவி பிரசாத் சட்டோபாத்யாய கூறுவார்' நமது முக்கியமான தத்துவங்களுள் வேதாந்ததும் (அதுவுங்கூட ஓரளவுக்கே எனலாம்) நியாய-வைசேசிகமும்-குறிப்பாக பிற்கால நியாய-வைசேசிகமும்-மட்டுமே ஆத்திகம் சார்ந்தவை, இதற்கு மாறானவை பவுத்தம், சமணம், பூர்வ-பீமாம்சம், சாங்கியம், லோகாயதம் மற்றும் ஆதி நியாய-வைசேசிகம் ஆகியன, அவையனைத்தும் தீவிர நாததிக வயமானவை. ஆக, இந்திய ஞானத்தில் நாத்திகத்திற்குள்ள ஆகப்பெரும் முக்கியத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்க விரும்பினால் அதைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல்வேறு இந்தியத் தத்துவ ஆசான்களைப் புறந்தள்ளியாக வேண்டும்' என்பதாக (தேவி பிரசாத் சட்டோபாத்யாய, ப.39).<br />
சாதி வாழ்முறையைப் பேணுவதை முதன்மையாக்கும்போது கடவுள் அப்படியொன்றும் முக்கியமில்லை என்பதன் வெளிப்பாடே இந்துமதத்தின் ஆறு தரிசனங்களில் நான்கு நாத்திகக் கோட்பாட்டுக்குரியதாக அமையக் காரணமாகிறது. வர்க்கப் பிளவுற்ற ஐரோப்பிய சமூகப் பார்வையில் இந்து சமயத்தை விளங்கிக்கொள்ள இயலாது என்பது போன்றே அங்குள்ள நாத்திகத்துக்கும் இந்திய நாத்திகத்துக்கும் இடையேயான வேறுபாடு அமைகிறது. இந்தியர்களுக்கு மத விவகாரம் முக்கியத்துவமிக்கதாக இருந்ததில்லையெனக் கட்டுரை ஆரம்பத்தில் கூறிய விடயத்தை இங்கு மீட்டுப்பார்க்க இயலும். வர்க்கப் பிளவடைந்த சமூகத்தை மதத்தின் வாயிலாகவே கட்டிறுக்கமாக்க வேண்டியிருந்தது. இங்கே சாதிவாழ் முறைக்கு நெறிப்படுத்தும் மார்க்கம் அவசியப்பட்டதேயல்லாமல் ஒரு மத வடிவத்துக்குள் கட்டமைக்கும் அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை.<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCAA5Ms0f-6EP47WBdyhjScgLX_UgXEv8Vnw77WGpKVqFPX_kBlrUFFrT8WCmI47TXfyE8sU4MRdd5kLs8locqmL_kxfx5TD4h4uzl_Cf_UQqTQ6NQAKi5tyr-KrOnnWIR6HqtMovuLgYk/s1600/appa22.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCAA5Ms0f-6EP47WBdyhjScgLX_UgXEv8Vnw77WGpKVqFPX_kBlrUFFrT8WCmI47TXfyE8sU4MRdd5kLs8locqmL_kxfx5TD4h4uzl_Cf_UQqTQ6NQAKi5tyr-KrOnnWIR6HqtMovuLgYk/s1600/appa22.jpg" height="219" width="320" /></a>நிலப்பிரபுத்துவ அமைப்புக்கான ஒரு கடவுள் (பரம்பொருள்) அவசியப்பட்டபோது சிவன், விஷ்ணு அவசியப்பட்டது போல முந்திய பிராமண மதத்தில் பேசப்பட்ட தேவர்-தேவதைகள்-கடவுளர்கள் என்போர் மத நிலைப்பட்ட கடவுள் கோட்பாட்டுக்கு உரியன அல்ல. வேத இலக்கியத்தில் கூறப்பட்ட அத்தகைய கடவுளர் என்பன இயற்கை வடிவங்களை இவ்வுலக வாழ்வுத் தேவைகளுக்காக வசியப்படுத்த வழிபடும் முறை சார்ந்து குறியீடாக்கப்பட்டமையால் மீமாம்சம் அதையொட்டிய சடங்குகளை முன்னிறுத்தியபோது கடவுள் கோட்பாட்டை நிராகரித்து தர்க்கம் புரிய இயலுமாயிற்று. 'கடவுளையும், வேத தெய்வங்களையும் பற்றிய மீமாம்ச நாத்திகத்தின் அணுகுமுறை இதுதான்: முதலாவது-அதாவது கடவுள் என்பது-வெறும் கடடுக்கதை, வேத தெய்வங்கள் வெறும் வார்த்தைகள், அதே சமயம், வேதங்களின் பால் மீமாம்சகர் கொண்டிருந்த அதிகபட்ச ஈடுபாடே அவர்களை இத்தகைய நிலையை நோக்கித் தள்ளியது. வேறுவிதமாய்ச் சொல்வதெனில் ஒரு-கடவுள் மற்றும் பல தெய்வக் கோட்பாடுகளை அவர்கள் ஒதுக்கித் தள்ளியதற்கு வேதங்களின் பால் அவர்கள் கொண்டிருந்த ஈடுபாடுதான்-அல்லது இன்னும் சரியாய்ச் சொல்வதெனில் அவர்கள் அவற்றைப் புரிந்துகொண்ட விதந்தான் காரணம்' என்பார் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா (ப.214).<br />
இவ்வகையில் பிராமண மதமாக இருந்தகாலத்தில் நாத்திக நிலைப்பாட்டுடன் இருந்தது போன்று நிலப்பிரபுத்துவ காலத்தில் மீமாம்சத்தால் பேச இயலவில்லை. மூலவரான ஜைமினியின் கோட்பாட்டை 17ம் நூற்றாண்டில் விளக்கிய கந்த தேவர் எனும் மீமாம்சகர் 'இவ்வாறு ஜைமினியின் தத்துவசாரம் (என்னால்) விளக்கப்பட்டுள்ளது. அவற்றை (என்) வாயால் சொன்னதாலேயே என் வார்த்தைகள் தீட்டாகிவிட்டன, எனவே, இறைவனின் அருளை இறைஞ்சினால் மட்டுமே எனக்கு மீட்சிகிட்டும்' எனக் கூறவேண்டியிருந்தமையைத் தேவி பிரசாத் காட்டியுள்ளார் (பக்.214-215). ஒரு பரம்பொருட் கோட்பாட்டின் அவசியத்தை உணர்ந்த நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் பிராமணத் தத்துவநெறியில் ஏற்படும் இந்த மாற்றம் கவனிப்புக்குரியது (நியாய-வைசேசிகத்தைப் பொறுத்தவரை அணுக்கோட்பாட்டின் இயக்கம் அதன் பேறான உலகப் பன்மைத்துவ தோற்றம் வளர்ச்சி என்பதற்கான தர்க்க அடிப்படையின் காரணமாகவே கடவுள் அவசியப்பட்டிருந்தது, அதுவும் தொடக்கிவைக்கிற அளவில்-பின்னால் நிலப்பிரபுத்துவக் கட்டத்தில் அந்தக் கடவுளும் எல்லாம் வல்லவரானார் எனக் காட்டியிருந்தார் தேவி பிரசாத்).<br />
இத்தகைய ஆய்வுமுறைக்குள் மீண்டும் மீண்டும் 'வர்க்கம்' பற்றியே பேசப்படுகிறபோது அடிப்படை வேறுபாடான சாதிவாழ்முறை ஏற்படுத்தும் தனித்துவக் குணாம்சம் அவர்களால் பார்க்கப்படாமலே போகிறது. ஏற்றத்தாழ்வுச் சமூக உருவாக்கத்துகு;கு முந்திய இயற்கை வழிபாட்டின் வசியப்படுத்தும் மந்திரசக்தி சார்ந்த நம்பிக்கை மீமாம்சகரிடம் தொடர்ந்து இருந்தமை குறித்துக் கூறும்போது தேவி பிரசாத் இவ்வாறு கூறுவார்: 'இவையனைத்தும் பூர்வ மீமாம்சகர் வர்க்கங்களுக்கு முற்பட்ட ஆதி சமூகத்தினர் என்பதற்கோ அல்லது அவர்கள் ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்தின் பிரசாரகர் என்பதற்கோ உரியதான சான்றுகள் இல்லை, மாறாக வேதகால மக்களின் வளர்ச்சியுடன் அவர்களின் ஆதிகால வேள்விகளும் (யாகங்களும்) சில பாதகமான அம்சங்களைத் தம்முடன் சேர்த்துக்கொண்டன. பிற்கால வர்க்க நலனுடன் இவ் வேள்விகள் பின்னிப் பிணைந்தன. மீமாம்சகரே கூட வர்க்க நலனின் மிகவும் அக்கறை கொண்டிருந்தனர். குறிப்பாக, ஆதி மற்றும் மத்திய கால வேதியரின் வர்க்க நலனில் மிகுந்த விழிப்புடன் இருந்தனர். அதே சமயம் இறந்த காலத்தின் மீது அவர்களுக்கு இருந்த அளப்பரிய பற்று காரணமாகத் தமது முன்னோரின் மாய மந்திரச் சடங்குகளின் அடிப்படை அனுமானத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டதுடன் அவற்றைப் பிற்கால தத்துவத்தின் மொழியில் ஆதரிக்கவும் விரும்பினர்' (தேவி பிரசாத்., பக்.316-317). இங்கு வர்க்க நலன் என்பது சாதி நலன் என்பதோடு இணைத்துப் பார்க்க அவசியமுடையதாகும்.<br />
நமது வரலாறு எழுது முறையிலேயே இந்தக் குறைபாடு இருந்து வருகிறது. 'பண்டைய கால இந்திய வரலாறு: ஒரு வரலாற்றுச் சித்திரம்' என்ற வரலாற்று நூலிலும் 'கிராமங்களிலும் நகரங்களிலும் புதிய பணக்கார வர்க்கத்தின் தோற்றம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது, அவை மேலும் ரத்த உறவு, சமத்துவம் ஆகிய இனக்குழுக் கொள்கைகளை ஒழித்துக்கட்டின' என்று எழுதப்பட்டுள்ளது. சமத்துவம் அற்றுப்போய் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டபோதிலும் இரத்த உறவைப் பேணும் சாதிமுறை இன்றுவரை தொடர்வதை மறுப்பவரல்ல டி.என்.ஜா. மேற்படி வசனத்துடன் தொடங்கிய பந்தி இவ்வாறு முடிந்திருந்தது: 'பல்வேறு வடிவிலான சமூக ஒதுக்கல்கள் வளர்ந்தபோதிலும், எழுத்தறிவு பெற்ற பிராமணிய சமூக அமைப்பிற்கும், எழுத்தறிவுக்கு முந்திய, எழுத்தறிவு பெறாத மக்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவு இந்திய வரலாறு முழுவதும் தொடர்ந்தது, அது இந்திய சமுதாயத்தின் இன்றையநிலைக்குக் காரணமாகவும் இருந்துள்ளது (டி.என்.ஜா, ப.82). இத்தகை நீடிப்பு இரத்த உறவுத் தொடர்புபேணும் சாதிவாழ்முறை தொடர்வதன் பேறானது என்பது தெளிவு.<br />
சாதி ஏற்றத்தாழ்வு தொடங்கிய பின்னர் வந்தவர்கள் மற்றும் புதிதாக உள்வாங்கப்பட்டும் இனமரபுக் குழுவினர் சாதிகளாக்கப்பட்டமையை ஜா காட்டியுள்ளார். 'ஹூணர்கள் மற்றும் அவர்களைத் தொடர்ந்து குர்ஜார்களின் வரத்து சத்திரிய சாதிகளின் எண்ணிக்கையை பெருக்கியது, இவர்கள் ராஜபுத்திரர்களாக சத்திரிய சாதியில் சேர்ந்தனர். சூத்திர சாதிகள் மற்றும் தீண்டத்தகாத சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்குப் பெரும் காரணம் வனப் பழங்குடியினர் நிலைபெற்றுவிட்ட வர்ண சமுதாயத்திற்குள் உள்வாங்கிக் கொள்ளப்பட்டதாகும். பெரும்பாலும் கைவினைஞர்களின் கில்டுகளும் சாதிகளாக மாற்றப்பட்டன. நிலம் அல்லது நில வருவாய் கைமாற்றப்பட்டதனால் காயஸ்தர்கள் (எழுதித் தரும் தொழில் புரிவோர்) என்கிற புதிய சாதி உருவாவதற்கு வழிவகுத்தது என்று கூறப்படுகின்றது, அவர்கள் எழுதித் தருவோர் என்ற முறையில் பிராமணர்களின் ஏகபோக நிலையை வலுவிழக்கச் செய்தனர். அதைத் தொடர்ந்து வந்த பிராமணிய நூல்களில் அவர்கள் அடிக்கடி இழிவாகச் சித்திரிக்கப்பட்டதற்கு இதுவே காரணமாகும். வட இந்திய கிராமப் புறங்களில் கிராமப் பெரியவர்கள் மற்றும் தலைவர்கள் (அயாயவவயள) என்கிற புதிய வர்க்கம் தோன்றியது, நில மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். பின்னர் அவர்களும் ஒரு சாதியாக இறுகிப் போனார்கள்' என்பார் எ.என்.ஜா(ப.196).<br />
இருப்பினும் ஏற்றத்தாழ்வுத் தொடக்கம் பற்றிப் பேசும்போது இன மரபுக்குழுச் சிதைவு வர்க்கத் தோற்றம் என்பது போன்ற வர்க்கவாதப்பார்வைக் கோளாறுகளுக்கு இடமளிக்கிறார் ஜா (ப.82) மற்றும் பக்.105-106). தமிழகத்தின் விவசாய எழுச்சிக்கு முந்திய வணிகம் என்பதை (உணர்வுபூர்வமாகக் கண்டுகொள்ளாமலே) குறிப்பிடும் ஜா திணைகள் பரஸ்பரம் சார்புடன் இருந்தமையையும் மருதத்திணை மேலாதிக்கம் தொடங்குவதையும் சுட்டிக்காட்டியபோதிலும் (பக்.149-150) சாதிவாழ்முறைத் தொடக்கத்துக்கு அந்த வரலாறு வெளிச்சமூட்டுவதைக் காணத்தவறுகிறார். சமூகவியல் நோக்கில் திணைக்கோட்பாடு பற்றிப் பேசிய சிவத்தம்பியும் கூட இதனைக் கண்டு காட்டத் தவறியிருந்தார். வர்க்கவாதப் பார்வை ஏற்படுத்தும் தோற்ற மயக்கம் இதன் காரணியாய் அமைகிறது.<br />
வர்க்க அமைப்பு மாற்றம் ஏற்படும் போது எந்தச்சாதி அதிகாரத்தை வெற்றிகொள்கிறது என்பதே கவனிப்புக்குரியது. பௌத்த-சமணர்களால் புனிதப்படுத்தப்பட்ட வைசிய சாதிகளைத் தகர்த்து நிலப்பிரபுத்துவ சாதிகள் அதிகார்தைப் பெறும்போது, பிராமணர்களால் அந்தச்சாதிகள் புதினம் கற்பிக்கப்ட்டன. இது வட இந்தியாவில் பக்திக் கோட்பாட்டுடன் தொடங்கும்போது தமிழகத்தில் பக்திப் பேரியக்கமாக முன்னெடுக்கப்பட்டதைக் கைலாசபதி காட்டியுள்ளார். இந்த வர்க்க அமைப்பு மாற்றத்தில் வெள்ளாளர் அதிகாரத்தைக் கையகப்படுத்தியிருந்தமையையும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார் (கைலாசபதி, அடியும் முடியும், பக்.267-268).<br />
நவீன வரலாற்றில் பெரியார் நாத்திகத்தை நோக்கி நகர்ந்த வரலாறும் கவனிப்புக்குரியது, ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையுடன் இருந்த அவர், கல்வி-வேலைவாய்ப்பு-சமூகத் தலைமை என்பவற்றில் இருந்த பிராமண ஆதிக்கத்தைத் தகர்க்க முனைந்தபோது இந்து சமயம் வலுமையோடு அவர்களைக் காத்து நிற்பதைக் கண்டார். அதன் பேறாகவே மதத்தகர்ப்பு முன்னெடுக்கப்படாமல் பிராமணர்களின் ஆதிக்கத்தைத் தகர்க்கவியலாது என்று கண்டு நாத்திகவாதப் பிரசாரத்தில் முனைப்புக்காட்டினார்.<br />
ஆயினும் பிராமண எதிர்ப்பென்பது இன்னொரு வடிவில் சாதியவாதமாகவே மாறிவிட்டுள்ளதை இன்று காண்கிறோம். மார்க்சிய நிலையில் அணுகும் தேவி பிரசாத், டி.என்.ஜா போன்றார்களும் பௌத்த-சமணத்தை முற்போக்கானது எனக் காண்பதும், பிராமணியம் என்பதை எப்போதும் பழைமைவாதம் எனப் பார்ப்பதும் என்ற தவறுகளுக்கு ஆட்பட்டிருந்தனர். உண்மையில் கி.மு 6ம் நூற்றாண்டில் முற்போக்குப் பாத்திரம் வகித்த பௌத்தமும் சமணமும் கி.பி 4ம் நூற்றாண்டில் பிற்போக்கை பிரதிநிதித்துவப்படுத்தின, புதிய சமூக மாற்றத்துக்கு புதிய சிந்தனைகளோடு பிராமணர்களின் முற்போக்கு அணியினர் தலைமையேற்று தொடக்கிவைத்த இந்து சமயம் கி.பி 4-6ம் நூற்றாண்டுகளில் முற்போக்குப் பாத்திரத்தை வகித்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் பிராமணிய எதிர்ப்பில் பெரியாரிடம் முற்போக்குக் குணாம்சம் உள்ளது, வெறும் பிராமண எதிர்ப்பாகக் குறுக்கப்படும் நாத்திகவாதம் சாதியம் பேணும் பிற்போக்குப் பண்புடையது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhn-2RejsI65h1f3y2zkMvu7IRs6jGLUa3ab7hCa1rwDy7HWlyFptRAGWOUIYRtVnvrM_fuLKg-1I3yXAwaU4oDPEH0JR1KTkdF4EgDJNmURtwW1_yW5M0iFKzjMlg1Jxe0LkjlB_P9Kf3G/s1600/appa7+thumb+up.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhn-2RejsI65h1f3y2zkMvu7IRs6jGLUa3ab7hCa1rwDy7HWlyFptRAGWOUIYRtVnvrM_fuLKg-1I3yXAwaU4oDPEH0JR1KTkdF4EgDJNmURtwW1_yW5M0iFKzjMlg1Jxe0LkjlB_P9Kf3G/s1600/appa7+thumb+up.jpg" height="200" width="151" /></a></div>
பழைமை பேண் பிராமணரை ஒருபுறம் ஒதுக்கியபடி சமூக மாற்றத்துக்கான புதிய சிந்தனைகளை வரித்து வளர்ந்ததிலேயே பிராமணியம் நிலைத்து வர இயலுமாகியுள்ளது. தவிர, இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தில் நல-பிராமணியமாக தொடர்பூடகத்துறை உலகுதழுவி முழுமை பெற்றிருக்கிறது, இதில் பிராமணர்கள் மட்டும் அடங்கவில்லை என்பதை அறிவோம். பிராமணியம் அடித்தளம்-மேற்கட்டுமானம் என இரு தரப்பிலும் இயங்கியது போலவே பண்பாட்டுத் தொழிற்சாலை இரு பண்பையும் கொண்டுள்ளது. பத்திரிகை, சஞ்சிகை, சினிமா, தொலைக்காட்சி, இலத்திரனியல் ஊடகம் என்பதை தொழிற்துறைகளாயும் கருத்தியல் புனைவாக்கிகளாயும் இருந்து நல-பிராமணியமாகச் செயற்படுதல் குறித்து மேலும ஆய்வுகளை முன்னெடுக்க அவசியமுள்ளது. -<span style="background-color: white; color: #222222; font-family: arial;"> </span><span style="background-color: white; font-family: arial;"><b><span style="color: #cc0000;">ந.இரவீந்திரன்</span></b></span><br />
<div>
<br /></div>
</div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-71852124989367144392014-01-24T00:07:00.000-08:002014-01-24T00:07:18.148-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="background: white; line-height: 21.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in; mso-outline-level: 2;">
<b><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 18.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">A Gun and A Ring (</span></b><b><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 18.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்) -(கனடா )</span></b><b><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 18.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 11.5pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span style="color: #898f9c; font-family: "Helvetica","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">October
19, 2013 at 12:18pm<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">எ கன் அன்ட் எ</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">ரிங் (ஒரு துப்பாக்கியும் மோதிரமும்)</span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif;"><span style="font-size: xx-small;">
-ந-இரவீந்<span lang="TA" style="font-family: Latha, sans-serif;">திரன்</span><span style="font-family: Helvetica, sans-serif;"> </span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span></span></div>
<div class="separator" style="clear: both; font-size: 10.5pt; text-align: center;">
<br /></div>
<div style="font-size: 10.5pt;">
<br /></div>
<div class="separator" style="clear: both; font-size: 10.5pt; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkiNFsuqDFClBpGcspA7PUf7y0Ze6JRSRscDTRUtvAAF3gZMfRTyMU-dl97y1sAgNjG_2SaNKpq0SFHkEvCSUqoheGGHEpR7OIyxGLUp-oSgkYRf3gpyM5jZlbsBC5EK1UagXI1URtI1nZ/s1600/gun+and+ring.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkiNFsuqDFClBpGcspA7PUf7y0Ze6JRSRscDTRUtvAAF3gZMfRTyMU-dl97y1sAgNjG_2SaNKpq0SFHkEvCSUqoheGGHEpR7OIyxGLUp-oSgkYRf3gpyM5jZlbsBC5EK1UagXI1URtI1nZ/s1600/gun+and+ring.jpg" height="316" width="640" /></a></div>
<br /><br />
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">கதை</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">,</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">திரைக்கதை</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">, </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">இயக்கம் - </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">லெனின்</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">எம்</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">. </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">சிவம்</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> -</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">தயாரிப்பாளர் </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">வஷ்னு</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">முரளி</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">இசையமைப்பு - </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">பிரவின்</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">மணி</span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">ஒளிப்பதிவு </span><span lang="TA" style="background-color: transparent; color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">சுரேஸ்</span><span lang="TA" style="background-color: transparent; color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="background-color: transparent; color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">ரோகின</span><span lang="TA" style="background-color: transparent; color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">்</span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"><span style="font-family: Helvetica, sans-serif; font-size: x-small;"> </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: x-small;">படத்தொகுப்பு</span> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> பிராஸ் லிங்கம் </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">நடிப்பு </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">ஜான் </span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">Berri</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> -</span><span lang="TA" style="background-color: transparent; color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt;">டேவிட்</span><span lang="TA" style="background-color: transparent; color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt;"> </span><span lang="TA" style="background-color: transparent; color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt;">பி</span><span lang="TA" style="background-color: transparent; color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt;"> </span><span lang="TA" style="background-color: transparent; color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt;">ஜார்ஜ்</span><span lang="TA" style="background-color: transparent; color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt;">-</span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="background-color: transparent; color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">ஜி</span><span lang="TA" style="background-color: transparent; color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">- </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span style="color: #333333; font-family: Helvetica, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">ஆர்தர்</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">சிமியோனின்</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> –</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">சுதன்
மகாலிங்கம்</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">-</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">சேகர்</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">-</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> தேனுகா</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> <span lang="TA">கந்தசாமி</span></span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">கால நேரம் -(104
</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">நிமிடங்கள்</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> )<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; margin-bottom: 0.0001pt;">
</div>
<div class="MsoNormal" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> 4கனடாவிலிருந்து வெளியேறும் இறுதி நாளில் மாலைப் பொழுதில் (மன்ற ஒன்று
கூடலுக்கு முன்னதாக) ஒரு திரைப்படத்தை நான் பார்த்து அது குறித்த விமர்சனத்தைக்
கூற வேண்டுமென நண்பர் சேகர் கேட்டுக் கொண்டார். "எ கன் அன்ட் ரிங்" என்ற
அந்த சினிமாவை எழுதி இயக்கியிருந்த லெனின் எம்.சிவம் தனது இல்லத் திரையில் அதனைக்
காட்சிப்படுத்தியிருந்தார். விரைவில் கனடாவில் திரையிடப்பட உள்ள அதனை முன்னதாகப்
பார்க்க இயலுமானதர்க்கு நண்பர்களுக்கு நன்றி சொல்வது அவசியம். ஏற்கனவே இது
சீனாவின் சங்காய் நகரில் (</span><span style="color: #333333; font-family: Helvetica, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">2013
</span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">ஆண்டு </span><span style="color: #333333; font-family: Helvetica, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">June 19 ) </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">போட்டிக்காக காண்பிக்கப்பட்ட தமிழர்களின்
முதலாவது திரைப்படம்.</span><span style="color: #333333; font-family: Helvetica, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">112
</span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">நாடுகள்</span><span style="color: #333333; font-family: Helvetica, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">, </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">பிராந்தியங்களிலிருந்து போட்டிப்
பிரிவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட </span><span style="color: #333333; font-family: Helvetica, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">1655 </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">திரைப்படங்களிலிருந்து </span><span style="color: #333333; font-family: Helvetica, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">12 </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">படங்கள் மட்டுமே போட்டிக்குத் தேர்வாகியுள்ளன
.இது தெரிவு செய்யப் பட்டமையே இதன் தகுதிக்கான சான்றாக அமைகிறது. அவற்றுள் ருசியத்
திரைப்படம் விருதைத் தட்டிச் சென்ற போதிலும் இது பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.
பார்க்கும் எவரும் பாராட்ட முன்வரும் படைப்பாகவே இது அமைந்துள்ளது. </span><span lang="TA" style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">. </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">இத்திரைப்ப</span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">டத்தை</span><span style="color: #333333; font-family: Helvetica, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> 1999 </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">திரைப்படத்தை இயக்கிய லெனின் எம்.சிவம் எழுதி
இயக்கியிருந்தார்.</span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> சரியான கதைத் தேர்வு உரிய வடிவப் பொருத்தத்துடன் வெளிப்பாடு எய்தியமையால்
இந்தத் தகுதிப்பாட்டை எட்டியுள்ளது. எமது வழக்கமான தமிழ்ச் சினிமாவிலிருந்து
வேறுபட்டு உண்மையில் சினிமா மொழி எவ்வகையில் அமைதல் அவசியமோ அவ்வகையில் இது
படைப்பாக்கப்பட்டுள்ளது. தமிழில் இத்தன்மையான சினிமாக்கள் மிக மிகக் குறைவு. அதன்
காரணமாக இதனை எடுத்த எடுப்பில் எமது ரசனைக்குரியதாக்குவதில் சிரமம் இருக்கலாம்.
அதனோடு ஒன்றித்துப் பயணிக்கும்போது நல்ல சினிமாவை அனுபவித்த இன்பத்தைப்
பெறவியலும். நேர்கோட்டுப் பாதையில் கதை சொல்வதாயில்லாமல் பார்வையாளரை
சிந்தனைவயப்பட்ட உடன் பயணியாக அழைத்துச் செல்லும் வகையில் காட்சித் தொகுப்புகளைக்
கட்டமைத்துச் செல்கிறது இவ் நாடக திரைப்படம்.</span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2SOJIp9bzMHE6KRB5EyIoPFomQaDEBWFcskqLMkbyd04lYFi7UjD3rMZPugcIXFdaFQ4wVnAIw5PT2L12U8Wvu6HSI9LHG7CHQlyUXYwbJe6tu5Vo8VnqTbS2om9kxsgVg9tnY-iUsEry/s1600/3hCENS_GunRingScene0923_Content.jpg" imageanchor="1" style="background-color: transparent; clear: right; float: right; font-family: Latha, sans-serif; font-size: 13.63636302947998px; margin-bottom: 1em; margin-left: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2SOJIp9bzMHE6KRB5EyIoPFomQaDEBWFcskqLMkbyd04lYFi7UjD3rMZPugcIXFdaFQ4wVnAIw5PT2L12U8Wvu6HSI9LHG7CHQlyUXYwbJe6tu5Vo8VnqTbS2om9kxsgVg9tnY-iUsEry/s1600/3hCENS_GunRingScene0923_Content.jpg" height="197" width="320" /></a><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;"> </span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;"> இந்திய மண்ணில் தளம் அமைத்துப் பல இயக்கங்கள்
செயற்பட்ட எண்பதுகளின் ஒரு காட்சிப்படிமத்துடன் சினிமா தொடக்கம் பெறுகிறது.
இயக்கத்திலிருந்து தப்பியோட முனைந்த நண்பர்கள் குறித்த தகவலை விசாரிப்பாளர்
அறிந்திருப்பதாக நம்பி உண்மைகளைக் கக்கிய ஒரு போராளி வெளியேற
அனுமதிக்கப்படுகிறான். சில ஆண்டுகளின்பின் (சமகாலத்தில்) அவன் கனடாவில் தனது மனைவி
இன்னொருவனோடு வாழ சென்றது குறித்து அவர்களோடு தர்க்கப்படுவதில் அடுத்த
காட்சிப்படிமம் தொடங்கும். அவள் திருமண மோதிரத்தைக் கழற்றி மூஞ்சியில்
விட்டெரிந்து இனிமேல் தொந்தரவு செய்துகொண்டு வரவேண்டாம் என எச்சரிப்பதோடு அடுத்த
காட்சிப்படிமம் தொடரும். பின்னரான காட்சிகளை இங்கே என்னாலும் அதே ஒழுங்கில் தர
இயலாது</span><span style="color: #333333; font-family: Helvetica, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">;
</span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">அது
அவசியமும் இல்லை. இன்றைய கனடா மண்ணின் சில நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக
வருகின்றன. ஒர்கனில் ஈடுபாடின்றி அல்லாடிக்கொண்டிருக்கும் இளைஞன் ஒருவனிடம் அவனது
தந்தை வந்து அவனது நண்பன் பொதுத் தோட்டத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்திருப்பதான
செய்தியைக் கூறுவார். உணர்வற்றவகையில் கேட்டு</span><span style="color: #333333; font-family: Helvetica, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">, </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">தொடர்ந்து ஒர்கனில் விரலை தவழவிடுகிரவனின்
முகத்தில் ஒரு சோகமும் எதிர்பார்த்தது போன்ற பிரதிபலிப்பும் இருக்கும். இறுதியில்
இவன் அந்த நண்பனின் தந்தையிடம் வந்து</span><span style="color: #333333; font-family: Helvetica, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">, </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">அது தற்கொலையல்ல</span><span style="color: #333333; font-family: Helvetica, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">, </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt; line-height: 15pt;">தனது தந்தை மேற்கொண்ட கொலை நடவடிக்கை
என்பதைக் கூறும்போது அவனது கையில் நண்பனின் தந்தை வழங்கும் துப்பாக்கி(நீயே உன்
தந்தையைத் தண்டித்துக்கொள் என்பதாக). இடையில் அமைந்த காட்சிப் படிமங்களைத் தாண்டி
இதை நான் இங்கே கூறுகிறேன். படம் பார்த்துமுடிக்கும்போது எமக்குள்ளே ஓடும்
எமக்கேயான சினிமாவானது காட்சிகளை ஒன்றிணைத்து விசாலித்த வாழ்க்கை அனுபவங்களைக்
கட்டமைத்துக்கொள்ளும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.</span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHpoAW0p5u7VV196m506GyoceBYGg4wkujzpBU17Go-sI7m1Y9dlXrHgf7IRitN-_IoDr83RZDMjjj_cEHqVZZHPkat3zA-Q4D2T2Fz0TdDjgWeL82fgioWbnL3_Nkxev4cIeigZmB1hJX/s1600/download.jpg" imageanchor="1" style="clear: left; float: left; font-family: Latha, sans-serif; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHpoAW0p5u7VV196m506GyoceBYGg4wkujzpBU17Go-sI7m1Y9dlXrHgf7IRitN-_IoDr83RZDMjjj_cEHqVZZHPkat3zA-Q4D2T2Fz0TdDjgWeL82fgioWbnL3_Nkxev4cIeigZmB1hJX/s1600/download.jpg" /></a><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">நண்பனின் தந்தை வழங்கிய துப்பாக்கி அவரைச் சுடுவதற்காக முன்னாள்(மாற்று
இயக்கப் போராளி) கொண்டுவந்திருந்ததாகும். தன்னை விட்டு விலகிய மனைவியையும் புதிய
கணவனையும் கொல்வேன் என ஆரம்பத்தில் கூறிப் போனவன் பின்னால் துப்பாக்கியைத் தேடிப்
போனபோது அதற்காகவே தேடுவதாக எண்ணியிருந்தோம். முடிவில்தான்</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">, </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">இடையில் மறைக் காட்சியில் இந்த
தந்தையாகியுள்ள முன்னாள் விசாரிப்பாளரை அவன் கண்டுகொண்டதை அறிவோம். அவன் தேடிய
துப்பாக்கி கிடைக்காமல்</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">,
</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">ஆகாயத்திலிருந்து
விழுந்த(கடவுளே தந்ததாக அவன் கருதும் துப்பாக்கி) விசாரிப்பாளனைக் கொல்வதே நியாயம்
என உணர வைத்திருந்தது. பொல்லால் அடித்தே கொல்கிற அவனது தாக்குதலுக்கு உள்ளான தனது
உடல்நிலை காரணமாயே தனது மனைவி தன்னை நீங்கியதாக அவன் முடிவு செய்கிறான்.
மேலிருந்து விழுகிற துப்பாக்கி தனியே விளையாடும் தமிழ்ச் சிறுமியைப் பாலியல்
வல்லுறவுக்காலாக்கிக் கொல்லும் கயவன் ஒருவனின் கையிருந்து நழுவி விழுந்ததாகும்.
அந்தக் கயவனைத் துரத்திக் கொல்லும் ஆங்கில காவலன் காதல் தோல்வியில் கழற்றி வீசிய
மோதிரம் யுத்த பூமியிலிருந்து போன தமிழ்ப் பெண்ணின் விரலுக்கு ஆபிரிக்க கறுப்பின
அகதியால் காதல் அடையாளமாக அணிவிக்கப்படுவது தொடர்பில் இன்னொரு கதையும் அங்கங்கே
காட்சிப்படிமன்களாய் அவ்வப்போது ஊடறுத்து வந்தது. இன்றைய வாழ்நிலையில் கனடாத்
தமிழரின் இரண்டக மனத்தை வெளிப்படுத்துவதும்</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">, </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">இனம் கடந்து போர்ச் சூழல் ஏற்படுத்தும்
ஒத்துணர்வு அதே பாதிப்பை உணர்ந்தவரிடமே சாத்தியம் என்பதை வெளிப்படுத்துவதையும்
காட்டுவதாக இது அமைந்தது.</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">போர்ச் சூழலில் பாதிப்புற்ற பெண்ணைத் திருமணம் செய்வதாய் அழைத்தவன் பின்னடித்த
நிலையிலேயே ஆபிரிக்க யுத்த பூமியோன்றிலிருந்து வந்த இளைஞன் மீது காதல் கொள்கிறாள்
தமிழ் யுவதி. மனம் மாறி ஏற்கிறேன் எனவரும் கனடாத் தமிழரிடம் அவள் கூறும்
வார்த்தைகள் இத்திரைக் காவியத்தின் அதியுச்சச் செய்தியாகும். வெறும் தமிழ் உணர்வு
என்பது மட்டுமே இணைவை சாத்தியமாக்கிவிடாது</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">, </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">யுத்த அவல உணர்வைக் கனடாத் தமிழரால் முழுதாக
உணர்ந்துவிட இயலாது-வாழ்ந்து அனுபவித்தவருக்கே இயலுமானது என்பது
உணர்த்தப்படுகிறது. ஆக</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">,
</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">ஈழத்
தமிழ்த் தேசியர்</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">,
</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">கனடாத்
தமிழினத்தவர் என்பவரிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு கொள்ள எந்த வடிவில் முயல
வேண்டும் என்ற தேடலை மேற்கொள்ள இத்திரைப் பிரதி தூண்டுதலை வழங்குகிறது. இப்பேசு
பொருளுக்குப் பாத்திரங்கள் வாயிலாக உயிரூட்டிய நடிகர்கள் அனைவருமே மிகைத்தன்மை
அற்ற அவசியப்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்கள். பாத்திரத் தேர்வுக்கும்</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">, </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Helvetica;">இயல்பான நடிப்பை வெளிக் கொண்டுவந்த
பாங்குக்கும் இயக்குனர் தனியே பாராட்டப்பட வேண்டியராகிறார். வெறும் இனவாதத்துக்கு
அப்பால் வர்க்க-தேசிய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெறும் மார்க்கத்தைத் தேட
சினிமா ஊடகம் வாயிலாக வழிப்படுத்தும் இந்தத் திரைப்படம் கதை சொல்லல் என்பதற்கும்
அப்பால் திரை மொழி வெளிப்பாட்டிலும் வெற்றிபெற்றுள்ளது. தமிழ்ச் சினிமா இன்னொரு
தளத்தில் புதிய பரிமாணத்துடன் மேற்கிளம்புவதை லெனின் எம்.சிவம் சாத்தியப்படுத்தி
உள்ளமைக்காக பாராட்டப்பட வேண்டியவர்.</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-35506294011284054782013-12-06T09:20:00.004-08:002013-12-06T09:20:55.265-08:00பேராசிரியர் கைலாசபதி 31வது நினைவு ஆண்டு . <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="aboveUnitContent" style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px; margin-bottom: 15px; margin-top: 15px;">
<div class="userContentWrapper">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://m.ak.fbcdn.net/sphotos-d.ak/hphotos-ak-ash4/p480x480/1463155_542762312476779_185085030_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img alt="Photo: பேராசிரியர் கைலாசபதி 31வது நினைவு ஆண்டு .
(5-4-1933 -- 6-12-1982 )
எம்மோடு இருந்து வரலாற்றுப் போக்கை முன்னுணர்ந்து கூறி ஆற்றுப்படுத்த இடமற்றுப்போய் முப்பத்தொரு வருடங்கள் கடந்துவிட்டன.ஆயினும் தீர்க்கதரிசனத்தோடு அவர் கண்டுகாட்டியவாறு நிகழ்வுகள் நடந்தேறி ஒரு வட்டம் நிறைவாகியுள்ளது.அப்போது,1978 இலிருந்து மறைவுவரை(1982) அன்றைய கூட்டமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற மிதவாத அமைப்பு, தேர்தல் வெற்றிக்காகவும் சுரண்டல் கும்பலைப் பேணவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையில் மக்களை ஏமாற்றுவதாக உள்ளது என்பதை மாதந்தோறும் "செம்பதாகையில்" பத்தி எழுத்தில் அம்பலப்படுத்தி வந்தார் கைலாஸ்.
அந்த எழுத்துக்கள் நூலுருப்பெற்றால் இன்று மிதவாத அமைப்பான கூட்டமைப்பு மீண்டும் நிலைமையைத் தன் கட்டுக்குள் கொண்டுவர எடுக்கும் தந்திரோபாயங்களின் தலைகீழ் கூத்தைக் காண வழி கிடைக்கும்.அன்று இவர்கள் இஸ்ற்றேலியர்போலத் தமிழர் தமக்கான ஈழத்தைப் பெறுவர் என மேடைகளில் முழங்கியதெல்லாம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்கும் ஒரே நோக்கத்துக்காகவே;இன்று மேலதிகமாக மாகாண சபையும் கிடைத்துள்ளது.மிதவாதிகளை நிராகரித்துக்கொண்டு இளைஞர் இயக்கங்கள் மார்க்சியத்தேடலை மேற்கொண்டபோது கைலாஸ் தமிழ்த் தேசியம் ஆரோக்கியமான பாதையில் முன்னேறும் எனக் கருதினார்.
அவரது மறைவின்பின்னர்,மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தீவிரவாதம்போலத் தோற்றம் காட்டும்வகையில் ஆயுதம் ஏந்திய மிதவாதிகள் தமிழ்த் தேசியத் தலைமையைக் கைப்பற்றி இறுதியில் கழித்தல் பெறுபேறில் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டுள்ளனர்.ஆயினும் மிதவாதம் பத்திரமாக மீண்டும் பாராளுமன்ற ஆசன அரசியலை முன்னெடுக்க இயலுமாகியுள்ளது.ஆயுதம் ஏந்துவதே தீவிரவாதம் ஆகிவிடாது;கூட்டணியின் மிதவாத அரசியலையே புலிகளின் ஆயுதமும் பேசியது.அவர்களால் துரோகிகளாக்கப்பட்ட மார்க்சியத் தேடல் இளைஞர்களிடம் தவறுகள் இருந்த போதிலும் தீவிர வாதத்தோடு ஒரு தீர்வுக்கான மார்க்கத்தைக் கண்டடைய முயன்றிருப்பார்கள்.
இப்போது அடைந்தால் ஈழம் மட்டுமே என்ற "தீவிரவாதம்"(இது உண்மையில் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிக்கான வெற்றுக் கோசம் என்பதை உணராத மிதவாதத்தின் விடலைப்பருவக் கோளாறன்றி வேறேதுமில்லை).எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவரப்படலாம் என்பதே இன்றைய மிதவாதிகள் முன்னுள்ள சவால்.அதனை எமது மேலாதிக்க சக்திகளான பௌத்த-சிங்களப் பேரினவாதத்தை எதிர்ப்பதான இனவாதக் கூச்சலைப் போட்டவாறே,அவர்களோடு கள்ளக் கூட்டமைத்து(இரு தரப்பும் மக்களைப் பிரிக்க இனவாதத்தைக் கக்கியவாறே தமக்குள் உறவைப் பேணிவருகின்றனர்) ஒரு தீர்வை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதன் வாயிலாக முடிவுக்குக் கொண்டுவர முயல்கின்றனர்..இதனை இலங்கை முழுவதையும் கபளீகரம் செய்துள்ள இந்தியா வெற்றிகரமாக இயக்கி வருகிறது.இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்மீது கருத்தியல் ஆக்கிரமிப்பும் செய்து, மோசமாக சுரண்டியும்வருகிற தமிழக சுரண்டல் கும்பல் விளங்கிக்கொள்ளாததுபோல நடித்தவாறு, எம்மீது அக்கறை உடையவர்போல் பிரிவினைக்காக இன்னும் போராடுமாறு எம்மை உசுப்பேத்துவதுதான் உலகப் பெரும் அயோக்கியத்தனம்.
சாதி என்றால் ஆதிக்கம்புரியும் கூட்டமும்,ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் சாதிகளும் என்பதுபோலவே தேசம் என்பது மூலதன வாய்ப்போடு மேலாதிக்கம்புரியும் தேசமும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்களும் என்பதே நிதர்சனமாகும்.இந்தியா(அதனுள் இருந்து தமிழகம்) மேலாதிக்க-ஒடுக்கும் தேசம்;இலங்கை முழுவதும்,தமிழ்த் தேசியமும் அவர்களால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்கள்.அவ்வாறன்றி தேசங்கள் தமக்குள் சம உரிமையோடு ஊடாட வேண்டுமெனில் சர்வதேசவாதத்தை முன்னெடுக்கும் சோசலிச மார்க்கத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.இதனையே கைலாஸ் தனது "செம்பதாகை"பத்தி எழுத்தில் மேற்கொண்டு வந்தார்.அவ்வாறு அவரைத் தொடர்ந்து அரசியல் எழுத்தில் ஈடுபடுத்துவதில் தோழர் கே.ஏ.சுப்பிரமனியம் முதன்மைப் பாத்திரம் வகித்தார்.அவரது 24வது நினைவு நளான 27.11.2013இல் என் குறிப்பைப் பதிவிடாத காரணத்தால் கைலாசின் 31வது நினைவு நாளில் அந்த இரு சமூகப் போராளிகளுக்கும் புரட்சிகர வணக்கத்தை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.நீங்கள் முன்னெடுத்த பாதையில் இன்னுமின்னும் பல நூறு இளைஞர்கள் இணைகிறார்கள் என்ற மகிழ்வான செய்தியை இன்றைய நினைவுகூரலின்போது தெரிவிக்க முடிவது ஓரளவு .நிறைவைத் தருகிறது. தொடர்வோம்!!" border="0" class="img" src="https://m.ak.fbcdn.net/sphotos-d.ak/hphotos-ak-ash4/p480x480/1463155_542762312476779_185085030_n.jpg" style="border: 0px; min-height: 100%; position: relative;" /></a></div>
<div class="_wk" style="font-size: 13px; line-height: 18px;">
<span class="userContent">பேராசிரியர் கைலாசபதி 31வது நினைவு ஆண்டு .<br />(5-4-1933 -- 6-12-1982 )</span></div>
<div class="_wk" style="font-size: 13px; line-height: 18px;">
<span class="userContent"><br />எம்மோடு இருந்து வரலாற்றுப் போக்கை முன்னுணர்ந்து கூறி ஆற்றுப்படுத்த இடமற்றுப்போய் முப்பத்தொரு வருடங்கள் கடந்துவிட்டன.ஆயினும் தீர்க்கதரிசனத்தோடு அவர் கண்டுகாட்டியவாறு நிகழ<span class="text_exposed_show" style="display: inline;">்வுகள் நடந்தேறி ஒரு வட்டம் நிறைவாகியுள்ளது.அப்போது,1978 இலிருந்து மறைவுவரை(1982) அன்றைய கூட்டமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற மிதவாத அமைப்பு, தேர்தல் வெற்றிக்காகவும் சுரண்டல் கும்பலைப் பேணவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையில் மக்களை ஏமாற்றுவதாக உள்ளது என்பதை மாதந்தோறும் "செம்பதாகையில்" பத்தி எழுத்தில் அம்பலப்படுத்தி வந்தார் கைலாஸ்.<br />அந்த எழுத்துக்கள் நூலுருப்பெற்றால் இன்று மிதவாத அமைப்பான கூட்டமைப்பு மீண்டும் நிலைமையைத் தன் கட்டுக்குள் கொண்டுவர எடுக்கும் தந்திரோபாயங்களின் தலைகீழ் கூத்தைக் காண வழி கிடைக்கும்.அன்று இவர்கள் இஸ்ற்றேலியர்போலத் தமிழர் தமக்கான ஈழத்தைப் பெறுவர் என மேடைகளில் முழங்கியதெல்லாம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்கும் ஒரே நோக்கத்துக்காகவே;இன்று மேலதிகமாக மாகாண சபையும் கிடைத்துள்ளது.மிதவாதிகளை நிராகரித்துக்கொண்டு இளைஞர் இயக்கங்கள் மார்க்சியத்தேடலை மேற்கொண்டபோது கைலாஸ் தமிழ்த் தேசியம் ஆரோக்கியமான பாதையில் முன்னேறும் எனக் கருதினார்.<br />அவரது மறைவின்பின்னர்,மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தீவிரவாதம்போலத் தோற்றம் காட்டும்வகையில் ஆயுதம் ஏந்திய மிதவாதிகள் தமிழ்த் தேசியத் தலைமையைக் கைப்பற்றி இறுதியில் கழித்தல் பெறுபேறில் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டுள்ளனர். ஆயினும் மிதவாதம் பத்திரமாக மீண்டும் பாராளுமன்ற ஆசன அரசியலை முன்னெடுக்க இயலுமாகியுள்ளது.ஆயுதம் ஏந்துவதே தீவிரவாதம் ஆகிவிடாது;கூட்டணியின் மிதவாத அரசியலையே புலிகளின் ஆயுதமும் பேசியது.அவர்களால் துரோகிகளாக்கப்பட்ட மார்க்சியத் தேடல் இளைஞர்களிடம் தவறுகள் இருந்த போதிலும் தீவிர வாதத்தோடு ஒரு தீர்வுக்கான மார்க்கத்தைக் கண்டடைய முயன்றிருப்பார்கள்.<br />இப்போது அடைந்தால் ஈழம் மட்டுமே என்ற "தீவிரவாதம்"(இது உண்மையில் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிக்கான வெற்றுக் கோசம் என்பதை உணராத மிதவாதத்தின் விடலைப்பருவக் கோளாறன்றி வேறேதுமில்லை).எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவரப்படலாம் என்பதே இன்றைய மிதவாதிகள் முன்னுள்ள சவால்.அதனை எமது மேலாதிக்க சக்திகளான பௌத்த-சிங்களப் பேரினவாதத்தை எதிர்ப்பதான இனவாதக் கூச்சலைப் போட்டவாறே,அவர்களோடு கள்ளக் கூட்டமைத்து(இரு தரப்பும் மக்களைப் பிரிக்க இனவாதத்தைக் கக்கியவாறே தமக்குள் உறவைப் பேணிவருகின்றனர்) ஒரு தீர்வை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதன் வாயிலாக முடிவுக்குக் கொண்டுவர முயல்கின்றனர்..இதனை இலங்கை முழுவதையும் கபளீகரம் செய்துள்ள இந்தியா வெற்றிகரமாக இயக்கி வருகிறது.இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்மீது கருத்தியல் ஆக்கிரமிப்பும் செய்து, மோசமாக சுரண்டியும்வருகிற தமிழக சுரண்டல் கும்பல் விளங்கிக்கொள்ளாததுபோல நடித்தவாறு, எம்மீது அக்கறை உடையவர்போல் பிரிவினைக்காக இன்னும் போராடுமாறு எம்மை உசுப்பேத்துவதுதான் உலகப் பெரும் அயோக்கியத்தனம்.<br />சாதி என்றால் ஆதிக்கம்புரியும் கூட்டமும்,ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் சாதிகளும் என்பதுபோலவே தேசம் என்பது மூலதன வாய்ப்போடு மேலாதிக்கம்புரியும் தேசமும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்களும் என்பதே நிதர்சனமாகும்.இந்தியா(அதனுள் இருந்து தமிழகம்) மேலாதிக்க-ஒடுக்கும் தேசம்;இலங்கை முழுவதும்,தமிழ்த் தேசியமும் அவர்களால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்கள்.அவ்வாறன்றி தேசங்கள் தமக்குள் சம உரிமையோடு ஊடாட வேண்டுமெனில் சர்வதேசவாதத்தை முன்னெடுக்கும் சோசலிச மார்க்கத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.இதனையே கைலாஸ் தனது "செம்பதாகை"பத்தி எழுத்தில் மேற்கொண்டு வந்தார்.அவ்வாறு அவரைத் தொடர்ந்து அரசியல் எழுத்தில் ஈடுபடுத்துவதில் தோழர் கே.ஏ.சுப்பிரமனியம் முதன்மைப் பாத்திரம் வகித்தார்.அவரது 24வது நினைவு நளான 27.11.2013இல் என் குறிப்பைப் பதிவிடாத காரணத்தால் கைலாசின் 31வது நினைவு நாளில் அந்த இரு சமூகப் போராளிகளுக்கும் புரட்சிகர வணக்கத்தை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.நீங்கள் முன்னெடுத்த பாதையில் இன்னுமின்னும் பல நூறு இளைஞர்கள் இணைகிறார்கள் என்ற மகிழ்வான செய்தியை இன்றைய நினைவுகூரலின்போது தெரிவிக்க முடிவது ஓரளவு .நிறைவைத் தருகிறது. தொடர்வோம்!!</span></span></div>
</div>
</div>
<div class="photoUnit clearfix" style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px; margin: 0px -12px; position: relative; zoom: 1;">
<div class="_53s uiScaledThumb photo photoWidth1" data-ft="{"tn":"E"}" data-gt="{"fbid":"542762312476779"}" style="float: left; position: relative;">
<a ajaxify="https://www.facebook.com/photo.php?fbid=542762312476779&set=a.263331313753215.64380.100002290445134&type=1&relevant_count=1&src=https%3A%2F%2Fm.ak.fbcdn.net%2Fsphotos-d.ak%2Fhphotos-ak-ash4%2F1463155_542762312476779_185085030_n.jpg&size=136%2C270&theater&source=9" class="_6i9" href="https://www.facebook.com/photo.php?fbid=542762312476779&set=a.263331313753215.64380.100002290445134&type=1&relevant_count=1" rel="theater" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><div class="uiScaledImageContainer photoWrap uiScaledImageCentered" style="background-color: #f2f2f2; height: 270px; margin-left: 3px; overflow: hidden; position: relative; text-align: center; width: 504px;">
</div>
</a></div>
</div>
</div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-80994757815468631502013-08-12T22:22:00.001-07:002013-08-12T22:22:46.728-07:00அனுபவப் பகிர்வு !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="aboveUnitContent" style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 10.909090995788574px; line-height: 12.727272033691406px; margin-bottom: 15px; margin-top: 15px;">
<div class="userContentWrapper">
<div class="_wk" style="font-size: 13px; line-height: 18px;">
<span class="userContent"><div class="text_exposed_root text_exposed" id="id_5209c1a23f05e3251440293" style="display: inline;">
மீண்டும் நீண்டகாலம் உரையாடலில் ஈடுபடாதமை குறித்த வருத்தம் தெரிவிப்போடு, பேசுவதற்கு நிறையவேயுள்ள நிலையில் இந்தப் பதிவு. ஜூலை மாதம் கனடா-அமெரிக்கா பயணம் முடித்துத் திரும்பிய அனுபவப் பகிர்வை பதிவிட எண்ணியிருந்தும் இயலவில்லை. உடன் மட்டக்களப்பு <span class="text_exposed_show" style="display: inline;">சென்று மாமாங்கத்தில் இடம்பெற்ற கூத்துகளைக் கண்டதோடு, கிழக்குப் பல்கலைக் கழக கருத்தாடல் ஒன்றிலும், நண்பர் ஜெயசங்கரின் அழைப்பின் பேரில் சென்று கலந்து கொண்டேன்; அதுகுறித்தும் நிறையப் பேச வேண்டும். முன்னதாக இவற்றைப் பொதுமைப்படுத்தி எனக்குள் எழும் உணர்வுபற்றி.<br />மட்டக்களப்பில் எமது பாரம்பரியக் கூத்துக்கலையை எவ்வாறு கையாள்வது என்ற விவாதம் வலுவடைந்து வருகிறது. பல்கலைக் கழக நாடகத்துறை ஜெயசங்கர் தலைமையில் கிராமங்கள் தோறும் சென்று, அவற்றை பாதுகாத்துக் கையேற்று மீளுருவாக்கி ஏனைய பகுதிகளுக்கு எடுத்து வர, பேராசிரியர் மௌனகுரு அவற்றை ஆய்வுகூட மயப்படுத்துகையை மேற்கொள்கிறார். பின்னதை என்னால் பார்க்க இயலவில்லை. அவர்களது விவாதம் குறித்து முழுமையாக பதிவிடுவதாயின் அந்தத் தரப்பையும் அறிவது அவசியம்; அவர் பின்னர் வருமாறு அழைத்தார்.<br />இப்போதும் கூத்துகள் குறித்து இங்கு பேச்சில்லை(பின்னால் விரிவாக உரையாடுவோம்-அதற்கான அவசியம் உள்ளது). இருதரப்பும் வெளியே இருந்து நிதி உதவுவது வாயிலாக கூத்தினை நவீன உலகுக்கு எடுத்துவருகின்றன. இந்த வெளி நிதி என்கிற வடிவத்தில் எமது புலம் பெயர் தமிழர்(பு.பெ.த.) எவ்வகையில் உதவலாம் என்பதே இங்கு பேசித் தீர்க்கவேண்டிய விவகாரம். அது ஒரு அமர்வில் முடிவு காணவியலாத சங்கதி எனினும் இன்று தொடங்க ஏற்றதாக அமைகின்றது. அதற்கான உடனடிக் காரணம், யூலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 41வது இலக்கியச் சந்திப்புத் தொடர்பில் நண்பர் ஒருவர் கூறிய கருத்தாகும். அது அரச சார்பில் நடப்பதாக கூறியோர் கருத்தையும், நிராகரிக்கவேண்டும் என்ற குரலையும் தன்னால் ஏற்கவியலவில்லை என்றார் அவர். பிரதானமாக முப்பது வருடங்கள் பேசவியலாது இருந்த சமாச்சாரங்கள் பேசப்படவேண்டும் என்பதாலேயே தான் கலந்து கொண்டதாக கூறினார்.<br />இருதரப்புசார்பையும் கடந்த நிலையில் தனது அவதானம் அந்தச் சந்திப்பு அரச சார்பு நிகழ்வாக இல்லை என்பதே. ஏற்பாட்டாளர்களில் ஒருதரப்பிடம் அவ்வாறான ஒரு நிலைப்பாடு இருந்திருந்தாலும்கூட அதற்கு இடமளிக்கப்படவில்லை. சுதந்திரமாக தமிழ்த் தேசியப்பிரச்சனை உட்பட பல்வேறு விவகாரங்கள் பேசுபொருட்களாக அமைய இயலுமாயிற்று. குறிப்பாக குடும்ப ஆதிக்கம் என்பதற்கு இடமிருக்கவில்லை. அப்படி சில தலையீடுகள் முளைவிடும்போதே சபை அதை நிராகரித்து இயல்பான ஓட்டத்தை உத்தரவாதப்படுத்தத் தடையிருக்கவில்லை.<br />மிகப்பிரதான அம்சம், மலையகம்-முஸ்லிம்கள்-சிங்களத்தரப்பு என்பன சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு தத்தமது காத்திரமான கருத்துகளை வெளியிட இயலுமாக இருந்தது என்பதுதான் என அந்த நண்பர் வலியுறுத்தியிருந்தார். யாழ்ப்பாண மையவாதத்தைத் தகர்த்துக்கொண்டு, அனைத்துத் தேசிய இனங்களது உரிமைகளைச் சமத்துவ நிலையில் அணுக ஏற்ற களமாக அமைந்தமை கவனிப்புக்குரியது.<br />இன்னொரு விடயமும் வலியுறுத்தப்பட்டது; பு.பெ.த.சமூகம் எமது விவகாரங்களில் தலையிடாதிருப்பது அவசியம் என்பதே அது. புலப்பெயர்வில் வளமான வாழ்வைப் பெறும் ஒருதரப்பு இன்னமும் இங்கே பிச்சைக்காரன் புண்போல பிரச்சனையை வைத்துக்கொள்ள முயல்வதற்கு எதிரான குரலே அது. மற்றப்படி, பிரச்சனைத் தீர்வுக்கு நாங்கள் என்ன செய்யலாம் என்ற தேடலோடு இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களை அவமானப்படுத்துவது அவரது நோக்கமில்லை. தலையீட்டை நிறுத்திக்கொண்டு எமது உரையாடலுக்கு இடமளிக்கப்பட்டது எனத் திருப்தி தெரிவிப்பதில் இந்த வேறுபடுத்தலைக் காண இயலும். இது முக்கியத்துவமுள்ளது.<br />பு.பெ.த.வின் இலக்கியச் சந்திப்பு மேற்கில் சுதந்திரமாக நடந்துவந்த ஒன்று. அதனை இங்கே கொண்டுவரும்போது தவிர்க்கவியலாத கேள்விகள் எழுந்தன. புலம்பெயர்ந்த எமது சந்திப்பை ஏன் புலத்திலேயே நிகழ்த்தவேண்டும்? தவிர, இங்கு இயல்பான வாழ்வு சாத்தியம் எனக் காட்டும் முயற்சியா இது? இவற்றுக்கான பதில்கள் இங்கே கிடைத்துள்ளன. இங்கே எமது உரிமைகளை வென்றெடுக்க ஒவ்வொரு தரப்பும் முயன்றவாறே இயல்பான வாழ்வில் இருந்துகொண்டுதான் உள்ளோம். புலப்பெயர்வாளர் ஏன் இங்கே சந்திக்க வேண்டும் என்பதற்கும் இதிலே பதில் உள்ளது. நாம் எமக்கான வாழ்வைக் கட்டமைப்பதற்கு குறுக்கீடு விழைக்காமல் எம்மை விளங்கிக்கொள்ள அவர்களுக்கு இந்தச் சந்திப்பு உதவுகிறது. எமது வாழ்க்கைப் போராட்டத்துக்கு இடையூறின்றி உதவ இயன்றதை அவர்கள் செய்ய இயலுமே அன்றி, நாம் இதைத்தான் செய்ய வேண்டும் என்ற எந்த முடிவுகளையும் எம்மீது திணிக்க முயலக்கூடாது.<br />கனடா தென்னையில் இந்த மாட்டை ஏன் கட்டவேண்டும் என்ற கேள்வி எழலாம். அங்கே இப்போது ஒரு சிறுபான்மைச் சமூகமாக தம்மை நிலைநிறுத்திப் பாராளுமன்ற உறுப்பினரையும் பெற்றுள்ள பு.பெ.த. சமூகம் இங்குள்ள தொப்பூழ்கொடி உறவுகளுக்கு என்ன செய்யலாம் என்ற கேள்விகளோடு உள்ளது. "தாய் வீடு" இதழுக்கு வழங்கிய செவ்வியில், உங்கள் உதவியில் 10 வீதம் மட்டுமே உங்கள் விருப்பத்தீர்வுக்கு வந்தடைகிறது, பெரும்பகுதி கனடா பெருச்சாளிகளுக்கும் இங்குள்ள பெருச்சாளிகளுக்குமே போய்ச் சேர்கிறது என்றேன். சரியான வழியில் 20 வீதத்தை இங்கு அனுப்பிக்கொண்டு, மீதத்தை அங்கே கனடாத் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு விருத்திக்கு அவசியமான பணிகளுக்கு பயன்படுத்துங்கள் என்றேன். அதுதான் கோயில் கொண்டாட்டங்களும், சினிமா நாயக-நாயகி ஆட்டங்களும் அங்கே களைகட்டுகிறதே என்கிறீர்களா; அதுதான் பிரச்சனை. எங்களை இன்னும் மோசமாக பண்பாட்டு ஆக்கிரமிப்பில் சுரண்டும் கூட்டத்தின் எடுபிடிகளாய் இருந்தவாறு இங்கு குட்டையைக் குழப்பும் கபடகாரச் சினிமா-கோயில் பண்பாட்டு மோகங்களிலிருந்து மீண்டு சரியான பண்பாட்டைக் கட்டமைக்கும் தேவைக்கு அங்கேயும் பெரும்பகுதி பொருளாதாரம் வேண்டியுள்ளது. மிகக் கடும் உழைப்பு வாயிலாகவே தமக்கான வளமான வாழ்வை அவர்கள் வென்றிருக்கிறார்கள். அதனை அவமாவதற்கு இடமளிக்காத புதிய பண்பாட்டைக் கட்டமைக்க அவர்களது உழைப்பின் ஒருபகுதி செலவிடப்பட இயலும்.<br />இதை அங்கே நான் சொன்னது சரிதானா என்ற கேள்வி என்னைக் குடைந்துகொண்டிருந்தது. சரிதான் என்பதை மட்டக்களப்பும் யாழ்ப்பாணமும் உணர்த்திநின்றன. கிராமங்களில் கூத்து மக்களால் அவர்களுக்கான இயல்பான வாழ்வின் தேவையின் வெளிப்பாடு; 'வெளியே' இருந்து செல்லும் நிதிக்கு ஒரு வரையறை உள்ளது. அவ்வாறே பு.பெ.த. சமூகம் 20 வீதப் பங்களிப்பின் ஒருபகுதியாக 41வது இலக்கியச் சந்திப்பை யாழ்மண்ணில் ஆரோக்கியமாக நடத்திச் சென்றிருக்கிறார்கள்(புலப்பெயர்வில் புதுவாழ்வு கண்ட முதன்மைக் களத்துக்கு சென்றதன் காரணமாக என்னால் இதில் கலந்துகொள்ள இயலாமல் போனது வருத்தமே). இன்னும் நாலைந்து சந்திப்புகளை உங்களது தேசங்களில் நடத்தியபின் மீண்டும் இங்கே வாருங்கள். வடக்கில் சந்தித்தோம், இனி கிழக்கு-மலையகம்-தெற்கு-மேற்கு என இலங்கை மண்ணின் தமிழ் பேசும் பல்வேறு களங்களிலுமிருந்து உரையாட அவசியமுள்ளது. நானும் உங்கள் மண்ணில்(கனடாவில்) கற்றுக்கொண்டதைப் பதிவிடுவேன். தொடர்வோம்.</span></div>
</span></div>
</div>
</div>
<div class="photoUnit clearfix" style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 10.909090995788574px; line-height: 12.727272033691406px; margin: 0px -12px; position: relative; zoom: 1;">
<div class="_53s uiScaledThumb photo photoWidth1" data-ft="{"tn":"E"}" data-gt="{"fbid":"489294424490235"}" style="float: left; position: relative;">
<a ajaxify="https://www.facebook.com/photo.php?fbid=489294424490235&set=a.263331313753215.64380.100002290445134&type=1&relevant_count=1&src=https%3A%2F%2Fm.ak.fbcdn.net%2Fsphotos-c.ak%2Fhphotos-ak-prn1%2F1016419_489294424490235_629902205_n.jpg&size=400%2C532&theater&source=9" class="_6i9" href="https://www.facebook.com/photo.php?fbid=489294424490235&set=a.263331313753215.64380.100002290445134&type=1&relevant_count=1" rel="theater" saprocessedanchor="true" style="color: #3b5998; cursor: pointer;"><div class="uiScaledImageContainer photoWrap" style="height: 378px; margin-left: 3px; overflow: hidden; position: relative; width: 504px;">
<img alt="Photo: மீண்டும் நீண்டகாலம் உரையாடலில் ஈடுபடாதமை குறித்த வருத்தம் தெரிவிப்போடு, பேசுவதற்கு நிறையவேயுள்ள நிலையில் இந்தப் பதிவு. ஜூலை மாதம் கனடா-அமெரிக்கா பயணம் முடித்துத் திரும்பிய அனுபவப் பகிர்வை பதிவிட எண்ணியிருந்தும் இயலவில்லை. உடன் மட்டக்களப்பு சென்று மாமாங்கத்தில் இடம்பெற்ற கூத்துகளைக் கண்டதோடு, கிழக்குப் பல்கலைக் கழக கருத்தாடல் ஒன்றிலும், நண்பர் ஜெயசங்கரின் அழைப்பின் பேரில் சென்று கலந்து கொண்டேன்; அதுகுறித்தும் நிறையப் பேச வேண்டும். முன்னதாக இவற்றைப் பொதுமைப்படுத்தி எனக்குள் எழும் உணர்வுபற்றி.
மட்டக்களப்பில் எமது பாரம்பரியக் கூத்துக்கலையை எவ்வாறு கையாள்வது என்ற விவாதம் வலுவடைந்து வருகிறது. பல்கலைக் கழக நாடகத்துறை ஜெயசங்கர் தலைமையில் கிராமங்கள் தோறும் சென்று, அவற்றை பாதுகாத்துக் கையேற்று மீளுருவாக்கி ஏனைய பகுதிகளுக்கு எடுத்து வர, பேராசிரியர் மௌனகுரு அவற்றை ஆய்வுகூட மயப்படுத்துகையை மேற்கொள்கிறார். பின்னதை என்னால் பார்க்க இயலவில்லை. அவர்களது விவாதம் குறித்து முழுமையாக பதிவிடுவதாயின் அந்தத் தரப்பையும் அறிவது அவசியம்; அவர் பின்னர் வருமாறு அழைத்தார்.
இப்போதும் கூத்துகள் குறித்து இங்கு பேச்சில்லை(பின்னால் விரிவாக உரையாடுவோம்-அதற்கான அவசியம் உள்ளது). இருதரப்பும் வெளியே இருந்து நிதி உதவுவது வாயிலாக கூத்தினை நவீன உலகுக்கு எடுத்துவருகின்றன. இந்த வெளி நிதி என்கிற வடிவத்தில் எமது புலம் பெயர் தமிழர்(பு.பெ.த.) எவ்வகையில் உதவலாம் என்பதே இங்கு பேசித் தீர்க்கவேண்டிய விவகாரம். அது ஒரு அமர்வில் முடிவு காணவியலாத சங்கதி எனினும் இன்று தொடங்க ஏற்றதாக அமைகின்றது. அதற்கான உடனடிக் காரணம், யூலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 41வது இலக்கியச் சந்திப்புத் தொடர்பில் நண்பர் ஒருவர் கூறிய கருத்தாகும். அது அரச சார்பில் நடப்பதாக கூறியோர் கருத்தையும், நிராகரிக்கவேண்டும் என்ற குரலையும் தன்னால் ஏற்கவியலவில்லை என்றார் அவர். பிரதானமாக முப்பது வருடங்கள் பேசவியலாது இருந்த சமாச்சாரங்கள் பேசப்படவேண்டும் என்பதாலேயே தான் கலந்து கொண்டதாக கூறினார்.
இருதரப்புசார்பையும் கடந்த நிலையில் தனது அவதானம் அந்தச் சந்திப்பு அரச சார்பு நிகழ்வாக இல்லை என்பதே. ஏற்பாட்டாளர்களில் ஒருதரப்பிடம் அவ்வாறான ஒரு நிலைப்பாடு இருந்திருந்தாலும்கூட அதற்கு இடமளிக்கப்படவில்லை. சுதந்திரமாக தமிழ்த் தேசியப்பிரச்சனை உட்பட பல்வேறு விவகாரங்கள் பேசுபொருட்களாக அமைய இயலுமாயிற்று. குறிப்பாக குடும்ப ஆதிக்கம் என்பதற்கு இடமிருக்கவில்லை. அப்படி சில தலையீடுகள் முளைவிடும்போதே சபை அதை நிராகரித்து இயல்பான ஓட்டத்தை உத்தரவாதப்படுத்தத் தடையிருக்கவில்லை.
மிகப்பிரதான அம்சம், மலையகம்-முஸ்லிம்கள்-சிங்களத்தரப்பு என்பன சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு தத்தமது காத்திரமான கருத்துகளை வெளியிட இயலுமாக இருந்தது என்பதுதான் என அந்த நண்பர் வலியுறுத்தியிருந்தார். யாழ்ப்பாண மையவாதத்தைத் தகர்த்துக்கொண்டு, அனைத்துத் தேசிய இனங்களது உரிமைகளைச் சமத்துவ நிலையில் அணுக ஏற்ற களமாக அமைந்தமை கவனிப்புக்குரியது.
இன்னொரு விடயமும் வலியுறுத்தப்பட்டது; பு.பெ.த.சமூகம் எமது விவகாரங்களில் தலையிடாதிருப்பது அவசியம் என்பதே அது. புலப்பெயர்வில் வளமான வாழ்வைப் பெறும் ஒருதரப்பு இன்னமும் இங்கே பிச்சைக்காரன் புண்போல பிரச்சனையை வைத்துக்கொள்ள முயல்வதற்கு எதிரான குரலே அது. மற்றப்படி, பிரச்சனைத் தீர்வுக்கு நாங்கள் என்ன செய்யலாம் என்ற தேடலோடு இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களை அவமானப்படுத்துவது அவரது நோக்கமில்லை. தலையீட்டை நிறுத்திக்கொண்டு எமது உரையாடலுக்கு இடமளிக்கப்பட்டது எனத் திருப்தி தெரிவிப்பதில் இந்த வேறுபடுத்தலைக் காண இயலும். இது முக்கியத்துவமுள்ளது.
பு.பெ.த.வின் இலக்கியச் சந்திப்பு மேற்கில் சுதந்திரமாக நடந்துவந்த ஒன்று. அதனை இங்கே கொண்டுவரும்போது தவிர்க்கவியலாத கேள்விகள் எழுந்தன. புலம்பெயர்ந்த எமது சந்திப்பை ஏன் புலத்திலேயே நிகழ்த்தவேண்டும்? தவிர, இங்கு இயல்பான வாழ்வு சாத்தியம் எனக் காட்டும் முயற்சியா இது? இவற்றுக்கான பதில்கள் இங்கே கிடைத்துள்ளன. இங்கே எமது உரிமைகளை வென்றெடுக்க ஒவ்வொரு தரப்பும் முயன்றவாறே இயல்பான வாழ்வில் இருந்துகொண்டுதான் உள்ளோம். புலப்பெயர்வாளர் ஏன் இங்கே சந்திக்க வேண்டும் என்பதற்கும் இதிலே பதில் உள்ளது. நாம் எமக்கான வாழ்வைக் கட்டமைப்பதற்கு குறுக்கீடு விழைக்காமல் எம்மை விளங்கிக்கொள்ள அவர்களுக்கு இந்தச் சந்திப்பு உதவுகிறது. எமது வாழ்க்கைப் போராட்டத்துக்கு இடையூறின்றி உதவ இயன்றதை அவர்கள் செய்ய இயலுமே அன்றி, நாம் இதைத்தான் செய்ய வேண்டும் என்ற எந்த முடிவுகளையும் எம்மீது திணிக்க முயலக்கூடாது.
கனடா தென்னையில் இந்த மாட்டை ஏன் கட்டவேண்டும் என்ற கேள்வி எழலாம். அங்கே இப்போது ஒரு சிறுபான்மைச் சமூகமாக தம்மை நிலைநிறுத்திப் பாராளுமன்ற உறுப்பினரையும் பெற்றுள்ள பு.பெ.த. சமூகம் இங்குள்ள தொப்பூழ்கொடி உறவுகளுக்கு என்ன செய்யலாம் என்ற கேள்விகளோடு உள்ளது. "தாய் வீடு" இதழுக்கு வழங்கிய செவ்வியில், உங்கள் உதவியில் 10 வீதம் மட்டுமே உங்கள் விருப்பத்தீர்வுக்கு வந்தடைகிறது, பெரும்பகுதி கனடா பெருச்சாளிகளுக்கும் இங்குள்ள பெருச்சாளிகளுக்குமே போய்ச் சேர்கிறது என்றேன். சரியான வழியில் 20 வீதத்தை இங்கு அனுப்பிக்கொண்டு, மீதத்தை அங்கே கனடாத் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு விருத்திக்கு அவசியமான பணிகளுக்கு பயன்படுத்துங்கள் என்றேன். அதுதான் கோயில் கொண்டாட்டங்களும், சினிமா நாயக-நாயகி ஆட்டங்களும் அங்கே களைகட்டுகிறதே என்கிறீர்களா; அதுதான் பிரச்சனை. எங்களை இன்னும் மோசமாக பண்பாட்டு ஆக்கிரமிப்பில் சுரண்டும் கூட்டத்தின் எடுபிடிகளாய் இருந்தவாறு இங்கு குட்டையைக் குழப்பும் கபடகாரச் சினிமா-கோயில் பண்பாட்டு மோகங்களிலிருந்து மீண்டு சரியான பண்பாட்டைக் கட்டமைக்கும் தேவைக்கு அங்கேயும் பெரும்பகுதி பொருளாதாரம் வேண்டியுள்ளது. மிகக் கடும் உழைப்பு வாயிலாகவே தமக்கான வளமான வாழ்வை அவர்கள் வென்றிருக்கிறார்கள். அதனை அவமாவதற்கு இடமளிக்காத புதிய பண்பாட்டைக் கட்டமைக்க அவர்களது உழைப்பின் ஒருபகுதி செலவிடப்பட இயலும்.
இதை அங்கே நான் சொன்னது சரிதானா என்ற கேள்வி என்னைக் குடைந்துகொண்டிருந்தது. சரிதான் என்பதை மட்டக்களப்பும் யாழ்ப்பாணமும் உணர்த்திநின்றன. கிராமங்களில் கூத்து மக்களால் அவர்களுக்கான இயல்பான வாழ்வின் தேவையின் வெளிப்பாடு; 'வெளியே' இருந்து செல்லும் நிதிக்கு ஒரு வரையறை உள்ளது. அவ்வாறே பு.பெ.த. சமூகம் 20 வீதப் பங்களிப்பின் ஒருபகுதியாக 41வது இலக்கியச் சந்திப்பை யாழ்மண்ணில் ஆரோக்கியமாக நடத்திச் சென்றிருக்கிறார்கள்(புலப்பெயர்வில் புதுவாழ்வு கண்ட முதன்மைக் களத்துக்கு சென்றதன் காரணமாக என்னால் இதில் கலந்துகொள்ள இயலாமல் போனது வருத்தமே). இன்னும் நாலைந்து சந்திப்புகளை உங்களது தேசங்களில் நடத்தியபின் மீண்டும் இங்கே வாருங்கள். வடக்கில் சந்தித்தோம், இனி கிழக்கு-மலையகம்-தெற்கு-மேற்கு என இலங்கை மண்ணின் தமிழ் பேசும் பல்வேறு களங்களிலுமிருந்து உரையாட அவசியமுள்ளது. நானும் உங்கள் மண்ணில்(கனடாவில்) கற்றுக்கொண்டதைப் பதிவிடுவேன். தொடர்வோம்." class="scaledImageFitWidth img" height="671" src="https://m.ak.fbcdn.net/sphotos-c.ak/hphotos-ak-prn1/p480x480/1016419_489294424490235_629902205_n.jpg" style="border: 0px; height: auto; min-height: 100%; position: relative; top: -32px; width: 503.991455078125px;" width="504" /></div>
</a></div>
</div>
</div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-75075500747588435212013-08-12T22:19:00.002-07:002013-08-12T22:19:38.059-07:00சர்வதேசவாதம் தேசியம் இனத்தேசியம் சாதியம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
<strong>சர்வதேசவாதம் தேசியம் இனத்தேசியம் சாதியம்</strong>. <em>-ந.இரவீந்திரன்</em></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
<span class="photo photo_left" style="clear: left; float: left; max-width: 180px; padding: 2px 10px 5px 0px;"><img alt="" class="photo_img img" src="https://m.ak.fbcdn.net/photos-g.ak/hphotos-ak-prn2/1175344_489680357784975_693849956_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 580px; padding: 0px;" title="" /></span> உலகச் சமூகம் தமிழினத்தேசியத்துக்கு விமோசனம் பெற்றுத்தரும்வகையில் அரசியல் முன்னெடுப்பை தமிழ்த் தலைமைகள் மேற்கொள்ளும் சூழல். புலம்பெயர் ஈழத்தேசியச் சிந்தனையாளர்களில் ஒருபிரிவினர் இந்தத் தலைமைகள் வடக்கையும் இழக்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றம் சாட்டுவதற்கு உள்ளூர் செயற்பாட்டுக்கு அழுத்தம் கொடுக்காதிருப்பது காரணம் எனக் காட்டுவதை விட்டு, உள்ளூர் வேலையில் சாதிச்சங்க முன்னெடுப்பில் துணைபோவதனைக் காரணமாகக் காட்டுகின்றனர். இங்கு(தளத்தில்) என்ன செய்யப்பட வேண்டும், புலம்பெயர் அக்கறையாளர்கள் என்ன செய்வதால் தமிழ் மக்களுக்கான விடுதலை சாத்தியமாகும் என்ற தேடலுக்கு உரிய சரியான கருத்தியல் தேடலை மேற்கொள்ள அவசியம் ஏற்பட்டுள்ளமையை இந்தப் பின்னணி எடுத்துக்காட்டுகிறது. அத்தகைய கருத்தியல் குறித்த ஒரு தேடலாக இந்தக் கட்டுரை அமைகிறது. 'உலகச்சமூகம்' என்பதே இன்றைய பிரதான பேசுபொருள்களாக இருந்தபோதிலும் சர்வதேசவாதம் என்பதை முன்னிறுத்தியமை இந்தக் கருத்தியலுக்கான அடிப்படை நோக்கு சார்ந்தாகும்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
எண்பதுகளின் பின் ஊடகங்கள் வாயிலாக பெரிதும் பேசப்பட்டு ஏற்புடைமையாக்கப்பட்டது 'உலக சமூகம்' என்ற கருத்தியல். முன்னதாக 'சர்வதேச' உணர்வு என்பது கவனிப்புக்குரியதாக இருந்த கருத்தியல். அதனைத் தலைகீழ் மாற்றத்துக்குரியதாக்கிய உலகமயமாதலின் கையூட்டில்தான் ஊடகங்கள் உலகசமூகம் பற்றிப் பேசின. அனைத்து தேசங்களது சுயாதிபத்தியத்தை மதித்து சமநோக்குடன் அணுகும் சர்வதேசவாதம் பட்டாளிவர்க்க சிந்தனைமுறைக்குரியது. சோசலிசமுகாம் இன்னமும் ஏதோவொரு வகையில் செயற்பட்ட சூழலில் சர்வதேச உணர்வு அடிப்படையில் பிற நாடுகளில் தலையிடாது, சமத்துவ உறவுகொள்ளல் பற்றி பாட்டாளிவர்க்க சர்வதேசவாதம் எண்பதாம் ஆண்டுகள்வரை பேசுபொருளாக இருந்தது. தேசிய இனப்பிரச்சனையில் சோசலிச நாட்டம் அப்போது இனத்தேசியங்களிடையே முனைப்படைந்திருந்தது. மாறாக, உலகமயமாதல் உலகநாடுகளை ஒரு கிராமம்போல ஆக்கியதால் உருவாகும் 'உலகச்சமூகம்' என்ற முறைமையைப் பேசியவாறு பிறநாடுகளினுள் தமது விருப்புகளை திணிக்க உலகமுதலாளித்துவம் முனைந்தது. இவ்வகையில் பல்தேசமூலதன ஊடுருவலைச் சாத்தியமாக்கும் அரசியல் மாற்றத் தலையீடுகள் உடையதாக உலகச் சமநிலை மாற்றப்பட்டது. அமரிக்க மேலாதிக்கத் தலைமையில் பல்தேசக் கம்பனிகள் அனைத்து நாடுகளையும் தமது சுரண்டலுக்கான வேட்டைக்காடாக்கின. அதற்கு உதவும்வகையிலும் ஆயுதவியாபாரத்தைப் பெருக்குவதற்காகவும் தேசங்களின் உள்விவகாரங்களையும், அயல்நாடுகளது பிரச்சனைகளையும் யுத்தசம்காரம் செய்யவைக்க ஏற்றதான வாய்ப்பையேற்படுத்தும் கருத்தியல் மாற்றம் இதன்போது ஏற்பட்டது என்பது கவனிப்புக்குரியது. இதன்பேறாக, தேசிய இனப்பிரச்சனை சோசலிச நாட்டங்கொள்வதைவிடவும் அமரிக்க மேலாதிக்கவாதத்துக்கு உதவுவது என்பதாய் மாற்றம்பெற்றது. அந்தவகையறா உலகசமூகம் பற்றியதாயில்லாமல், மக்கள் விடுதலை நலன்சார்ந்த சர்வதேசவாதம் குறித்தே இங்கு பேசுவோம்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
<span class="photo photo_right" style="clear: right; float: right; max-width: 180px; padding: 2px 0px 5px 10px;"><img alt="" class="photo_img img" src="https://m.ak.fbcdn.net/photos-a.ak/hphotos-ak-ash3/1175415_489680237784987_1057239572_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 580px; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
உலகளாவிய பிரச்சனைகளிலிருந்து எமது உள்ளூர்ப் போராட்டம் விலகியதாயில்லை. நாம் ஜெனீவாவுக்கு போவது தவிர்க்கவியலாதது; அங்கு முன்னெடுக்கும் அரசியல் எத்தகைய பெறுபேறைத் தருகிறது? அனேகமாக இப்போது தமிழ்த்தலைமைகளுக்கு வெளிநாட்டுக் காவடியெடுப்புக்கு அரசு தரப்பு இரகசிய வாய்ப்புக் கொடுக்க அவசியம் ஏற்பட்டுள்ளது. ஜெனீவாவில் இவர்கள் நின்றபோது இங்கே மின்சாரக் கட்டண உயர்வுக்கான அவசியம், பஸ்க்கட்டணம் உயர்த்தப்பட வேண்டியிருத்தல் பற்றியெல்லாம் பேசப்பட்டது. முன்னர் இதுபோலுள்ளதில் பத்துவிழுக்காடு உயர்வு பற்றிப் பேசினாலேயே கிளர்ந்தெழும் சிங்கள மக்கள் மௌனம் காத்தார்கள். புலிகளை அழித்த அரசுக்கு சோதனையேற்படுத்தி, மீண்டும் புலியைப் புலம்பெயர் நாடுகளிலிருந்து இறக்குமதிசெய்வதற்கான ஆபத்தை ஜெனீவாவூடாக மேற்கொள்ளும் சூழலில் விலையேற்றத்தை சகிக்க வேண்டியதுதான் என அவர்கள் கருதினார்கள். மரம் அமைதியாயிருக்க இடமளிக்காமல் கட்சிகள் தமது ஆட்சிபெறலுக்கான புயலாக்குவதற்கு விலையேற்றங்களை எடுப்பது காரணமாக இந்த வெளிநாட்டுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டியதுதான். இருக்கவேயிருக்கிறது கொமன்வெல்த் மாநாடு. இதுசார்ந்து தமிழ்த் தலைவர்களை அந்த இரகசியக் கரங்கள் அனுப்பலாம். இருதரப்பு மக்கள் விரோத இனவாதத் தலைமைகள் தமக்குள் கூட்டமைத்து மக்களுக்கு விரோதமாக எப்போதும் இவ்வகையிலேயே இயங்கிவந்துள்ளனர்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
இதனைக் கண்டுகொள்ளாமல் சாதிச்சங்கம் தோன்றுவதில் உள்ள இரகசிய உறவையே துப்பறிந்து கண்டுகொள்கிறார்கள். தமிழ்த் தேசியத்துக்கு தூய இலட்சியம் இருக்கும் நிலையில் இந்தமாதிரியான விலையேற்றம் மாதிரியான சில்லறை விவகாரங்களில் மினைக்கெடலாமா? இந்த விவகாரங்களுக்காக போராடவேண்டியுள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் வறுமையிலுள்ள மக்கள் இன-மத-சாதி பேதங்களைக் கடந்து ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதில் மட்டுமே அவர்களது குறி முழுவதும். ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிச்சங்கங்களில் அணிதிரட்டப்பட்டு அரசுக்கு துணைபோவதாக அக்கறைப்படுகிறவர்கள் அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளின் நிறைவுக்கு ஏதாவது செய்யத் தயாரா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும். அதெல்லாம் ஈழம் வந்தபின் பார்ப்போம் என்று நிலாக்காட்டுவதில் வித்தகர்கள் இவர்கள். 'சிங்கள' அரசு ஜெனீவாவைக் காட்டி சிங்கள மக்களின் வயிற்றில் அடிப்பதைப் போலவே இவர்களது 'தமிழ்' ஆட்சியும் இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
இப்படிச் சொல்வதால் ஒடுக்கப்பட்ட மக்கள் சிங்களப் பேரினவாத அரசுக்கு சாதகமாக இயங்குவதோடு, தமிழினத்தேசியத்துக்கு விரோதமாக செயற்பட வேண்டும் என்று சொல்லவரவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விசேட பிரச்சனைகள் உள்ளமையைத் தமிழினத்தேசியர்கள் விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றே கோருகிறோம். ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதை இனிமேல் 'தலித்மக்கள்' என்று அழைக்கவேண்டும் என்பதற்கு எதிர்ப்புக்குரல் கொடுப்பது முதல் அவர்களது பல்வேறு கோரிக்கைகளையும் விருப்பங்களையும் அபிப்பிராயங்களையும் நிராகரித்தும் எதிர்த்தும் கண்டுகொள்ளாதிருந்தும் வருகிற ஆதிக்க சாதிநலன் பேணுவோர், தலித் மக்கள் சாதியாக அணி திரள்வதைக் கண்டிக்க அருகதையற்றவர்களாவர் (ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதைக் கட்டுரையில் இனித் தலித்மக்கள் என்றே சுட்டுவோம்). சாதிய இழிவுபடுத்தல்களுக்கு முடிவுகட்ட உருப்படியான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் தமிழ்த்தேசியம் என்றவுடனே எல்லோரும் ஒன்றுபட்டிருப்பதான பொய்த்தோற்றத்தை ஏற்படுத்திவிட இயலாது. தமிழினத் தேசியத்துக்கு விரோதம் கொள்ளாமலே இலங்கை அரசுடன் தமது கோரிக்கைகள் நலங்கள் ஆகியவற்றுக்காக தொடர்பாடும் உரிமை தலித் மக்களுக்கு உண்டு. தமிழினத் தேசியம் அதனை அங்கீகரித்து, அவர்களது கோரிக்ககளைத் தாமும் அரவணைத்து செல்வதுசார்ந்த உரையாடல்களை அவர்களோடு மேற்கொள்ள வேண்டும்; அதைவிடுத்து ஆண்ட பரம்பரை அகம்பாவத்துடன் 'துரோகி' முத்திரை குத்தக் கிளம்பக்கூடாது.<span class="photo photo_left" style="clear: left; float: left; max-width: 180px; padding: 2px 10px 5px 0px;"><img alt="" class="photo_img img" src="https://m.ak.fbcdn.net/photos-h.ak/hphotos-ak-ash3/1174532_489680834451594_2054531220_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 580px; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
அதெப்படி தலித் மக்களுக்கு அவ்வாறான தனித்துவ அடையாளத்தைக் கொடுக்க இயலும்? அவர்களும் தமிழ் மக்களுக்குள் அடங்குகிறவர்கள் தானே எனக் கேட்பதை உணர இயலுகிறது; ஆயினும், அவர்கள் தம்மைச் சமத்துவமாக நடத்த வேண்டும், கோயிலினுள் சென்று வழிபட வேண்டும் என்கிற எந்தவொரு கோரிக்கைக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடாத்தியே ஒவ்வொன்றாகப் பெற்றெடுத்து வருகிறார்கள். இன்று சாதிய இழிவுகள் பல ஒழிக்கப்பட்டுள்ளது என்றால், ஆயுதம் ஏந்திப் போராடிய அறுபதாம் ஆண்டுகளின் வரலாறுவரை சென்றே அவை சாதிக்கப்பட்டன. இன்றும் அவர்கள் 'அந்தப்பக்கம்' என்றே உயர்சாதியினரால் சுட்டப்படும் அடையாளம் முதல் பல்வேறு வேறுபாடுகளுக்குள் ஆட்படுத்தப்பட்டே வைக்கப்பட்டுள்ளனர். "அவையவையை வைக்கிற இடத்திலை வைக்கவேணும்" என்ற புகழ்பூத்த வாசகம் அடிப்படையில் சாதி உணர்வு சார்ந்தது என்பதையும், அது இன்னமும் ஒழிந்து போய்விடவில்லை என்பதையும் அறிவோம். சாதியொழிப்பு என்று சாதிச்சங்கம் சேர்வதால்தான் சாதி நீடிக்கிறது என்பவர்கள் உருப்படியாக சாதிகளிடையே புனிதம்-தீட்டு சார்ந்த கருத்தியல் இருப்பு முழுமைக்கும் எதிராகக் காத்திரமான பண்பாட்டு இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு தமிழ்த் தேசியம் செய்யும் பட்சத்தில் எவரும் சாதிச்சங்கத்தில் சேரப்போவதில்லையே.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
இவ்வகையில் தலித் மக்களுக்கான தனித்துவக் கோரிக்கைகள் என்பவை இன்று நேற்று ஏற்பட்டனவல்ல. இந்திய விடுதலைப் போராட்டத்தில் சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் வட்டமேசை மாநாடு நடந்தபோது அம்பேத்கர் தலித்மக்களின் பிரதிநிதியாகக் குரல் கொடுப்பதை எதிர்த்த காந்தி, தலித்மக்களுக்கும் தானே பிரதிநிதி என்று வீம்புக்கு நின்றார். அம்பேத்கரது இரட்டை வாக்குரிமைக் கோரிக்கை அங்கே வெற்றிபெற்றது. தனக்கு தீராத அவமானத்தைத் தேடிய சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை காந்தி நடாத்தி, அம்பேத்கரின் அக்கோரிக்கையைக் கைவிடச் செய்யவேண்டியிருந்தது. ஆயினும் அனைத்துத் தலித் மக்களின் தலைவர் அம்பேத்கர் என்ற உண்மை வலியுறுத்தப்படுவதைக் காந்தியால் இல்லாதாக்க இயலவில்லை.<span class="photo photo_right" style="clear: right; float: right; max-width: 180px; padding: 2px 0px 5px 10px;"><img alt="" class="photo_img img" src="https://m.ak.fbcdn.net/photos-b.ak/hphotos-ak-ash3/1174884_489680901118254_1122987408_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 580px; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
இரட்டைவாக்குரிமை அனுமதிக்கப்பட்டால் சாதியேற்றத்தாழ்வுகள் ஒழிந்துபோயிருக்கும் என்றில்லை என்றபோதிலும், தலித் மக்கள் இன்னும் வலிமையாகப் போராட வேண்டும் எனும் உண்மையைக் காந்தியின் நிலைப்பாடு முதல் இன்றைய ஆதிக்க சாதித் தேசியர்கள் வரை உணர்த்துவர் என்பதற்கான வரலாற்று உண்மையாகப் பதிவாகியுள்ளது. தாராளவாத அரைப் பிராமணத் தேசியத்தைத் தலைமைதாங்கிய காந்தியே இத்தகைய வரலாற்றுத்தவறை இழைத்தார் எனில், நாகரிகப் போலி வேச வெள்ளாள ஆதிக்கத் தமிழ்த் தேசியம் பேசுவோர் தலித்துகளுக்கு எதிராக எத்தகைய சூழ்ச்சிகளை மேற்கொள்வர் என்பதைச் சொல்லத்தேவையில்லை. என்ன இருந்தாலும் காந்தி 'ஹரிஜனம்' என்ற மகுடம் சூட்டி, ஆலயப் பிரவேசப் போராட்டங்களை நடாத்தி, சாதியாதிக்க சக்திகளுக்கு தீராத தலையிடியை ஏற்படுத்தி, தலித் மக்களையும் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வத்தோடு ஈடுபட வாய்ப்பளித்தவர்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
அன்றைய வரலாற்றுச் செல்நெறியின் பிரதான போக்காக ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியா விடுதலை பெறுவது உடனடி அவசியப் பணி என்கிற வகையில் காந்தியின் தலைமையில் தலித் மக்களில் பெரும்பான்மையினர் நாற்பதுகளில் அணிதிரண்டபோது அம்பேத்கர் தனிமைப்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டது. சுதந்திர இந்தியா காந்தியையும் பொய்யாக்கிய நிலையில் அம்பேத்கர் மிகப்பெரும் தலித் தலைவர் ஆவது தொடரும் வரலாற்றுத் தேவையாக ஆனது. இது கவனிப்புக்குரிய வரலாற்றுப் படிப்பினை. தேசியம் தலித் கோரிக்கைகளை உள்வாங்கும்போது எதிர்த் தேசியம் இடைநிறுத்தப்பட இயலும்; அவ்வகையில் தலித்தேசியக் கோரிக்கை உள்ளிட்ட பிராமணல்லாத ஏனைய சாதித் தேசியங்களது கோரிக்கைகளையும் கையேற்ற காந்தி-நேரு ஆகியோரின் தாராளவாத அரைப் பிராமணியத் தேசியம் தலைமையேற்று இந்திய சுதந்திரத்தை சாத்தியமாக்க இயலுமாயிற்று.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
பிராமணர் எனும் சமூக வர்க்கம் இந்தியா முழுமைக்குமான ஒரே சமூக சக்தி என்கிறவகையில் இவ்வகையிலான இந்தியத் தேசியம் (நாட்டுத் தேசியம்) நிதர்சனமானபோது தமிழ்நாட்டுக்கான (அன்றைய நிலையில் திராவிட நாடு என முன்வைக்கப்பட்டு, நடைமுறையூடாக தமிழினத் தேசியத்துக்கான) கோரிக்கை வரலாற்றுத் தேவையாக எழுச்சிகொண்டது. பிராமணிய எதிர்ப்பாக முனைப்படைந்த இந்த அணி தமிழ் ஆதிக்க சாதிகளது நலன் பேணுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதிலும் தலித்தேசியக் குரல்களையும் இடைச் சாதிகளது குரல்களையும் முன்னெடுப்பவர்களாகக் காட்டிக்கொண்ட வகையில் பரந்த ஐக்கியமுன்னணியைக் கட்டியெழுப்பினர். அறுபதுகளின் பிற்கூறில் ஆட்சிய வென்றெடுத்து தொடர்ச்சியாக ஆட்சியாளர்களாக விளங்கியபோது எண்பதுகளில் இடைச் சாதியினர் அதிகாரத்தை வெற்றிகொள்ளும் வகையில் தி.மு.க. பிளவுற்றது. இடைச்சாதியினர் ஆதிக்கம் தலித்துகளுக்கு எதிரான போக்கை வெளிப்படுத்திய நிலையில், அம்பேத்கர் நூற்றாண்டும் வந்த தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து தலித் இயக்கம் தமிழகத்தில் எழுச்சி கொண்டது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
இலங்கையில் ஆங்கிலமயப்பட்ட கொவியா-வெள்ளாளக் கூட்டு ஆட்சிப்பங்கேற்ற நிலையில் ஏகாதிபத்தியம் சாதிய முரணையன்றி இன முரணைப் பிரித்தாளும் நோக்கத்துக்கான முரணாக வடிவமைத்த அரசியல் அரங்கில் சிங்கள-தமிழ்-முஸ்லிம் முரண் முனைப்படையலாயிற்று. சாதிவாதம் மேலாதிக்க சக்திக்குரியதாகாத நிலையில் சாதிமுரண் கூர்மையாக இருந்த யாழ்ப்பாணத்தில் முற்போக்கு செயற்பாட்டாளர்களான அனைத்து சாதியினரும் சாதியத்துக்கு எதிரான கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுத்தனர். இந்த அவசியப்பணியில் தலித் அணிக்கான அமைப்பின் அவசியம் உணரப்பட்டு 'சிறுபான்மைத் தமிழர் மகாசபை' கட்டியெழுப்பப்பட்டது. அது தொடங்கிய நாற்பதுகளிலிருந்து கொம்யூனிஸ்ட் கட்சி தனது ஊழியர்கள் அங்கு செயற்பட ஆற்றுப்படுத்தியிருந்தது. அந்தவகையில் வெறும் சாதிவாத அமைப்பாக இல்லாமல் சமூக மாற்றத்துக்கான வலுவான அமைப்பாக அதனால் பங்களிக்க முடிந்தது. ஐம்பதுகளில்ருந்து, கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான எம்.சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கிய போது வர்க்கப்பார்வையில் சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டது. சிற்சில சாதியப் பிளவுகள் வெளிப்பட்டபோதிலும் பிரதான போக்கு தலித் தேசியம் எதிர்த்தேசியமாகப் பிளவுறாமல் சாதியெதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்க முடிந்தது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
அறுபதுகளில் இன்னும் கூர்மையான போராட்டங்களைச் சாதியத்துக்கு எதிராக முன்னெடுக்க ஏற்றதாக வரலாறு வளர்ச்சியுற்றநிலையில் அனைத்து சாதியினரும் அணிதிரண்ட அமைப்பான 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்' தோற்றம்பெற்றது. இவ்வாறு தலித் தேசியம் முழு இலங்கைத் தேசியத்தின் ஜனநாயக சக்திகள் அனைத்தையும் ஐக்கியப்படுத்திக்கொண்டு சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை இயக்கப்படுத்தியபோது, அதனுடன் ஐக்கியப்பட்டு தனது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடியிருக்க வேண்டிய தமிழ்த்தேசியம் எதிர்ப்பு நிலையை எடுத்துக்கொண்டது. அவ்வாறு பிளவுபடுத்திய தமிழ்த் தேசியம் பிரிவினையை முன்வைத்து பாரிய அழிவுகளை ஏற்படுத்திக்கொண்ட அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளாமல் இன்றும் அதே வரலாற்றுத் தவறுகளை மேற்கொள்ள முற்படுகிறார்கள். இன்றைய நிலையில் சிங்கள முற்போக்கு சக்திகள் உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளோடும் ஐக்கியப்பட்டு தமிழ்த்தேசியம் தனது சுயநிர்ணயத்துக்காகப் போராட வேண்டும். சிங்களப் பேரினவாதம் எதிர்க்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை; அதற்காக சிங்கள மக்கள் எல்லோருமே எதிரிகளல்ல. தம்மையும் வஞ்சிக்கும் பேரினவாதிகளுக்கு எதிராக சிங்கள மக்கள் போராட ஏற்றதாக தமிழ்த்தேசியத்தின் நடைமுறை அமையவேண்டும்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
மாறாக மேலாதிக்க சக்திகளுக்கு ஊடுருவலுக்கான வாய்ப்பாகப் பிரிவினைக் கோரிக்கையோடு சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைப்போமாயின் மேலும் அழிவுகளைச் சந்திப்போம். இதுவரையான தவறான அரசியல் மற்றும் யுத்தங்கள் கிழக்கை தமிழர்கள் பெரும்பான்மை எனும் இடத்திலிருந்து கைவிடுவதற்கு வழிகோலியது. இதனால் சிங்களத் தேசியம் வென்றதான மாயை சிங்கள மக்களைப் பேரினவாத சக்திகளுக்கு உடன்பட்டுப்போக வழியேற்படுத்தியபோதிலும், வளர்ந்துவரும் சமூக-பொருளாதாரப் பிரச்சனைகள் அதிகாரம்செலுத்தும் பேரினவாதக்கும்பலுடன் சிங்கள மக்கள் முரண்படுவதிலிருந்து தடுக்கும்வகையில் நீண்டகாலம் உதவப்போவதில்லை. முப்பதுவருட யுத்தசன்னதத்தை வளர்த்த இந்தியா (இதற்காக அர்ப்பணிப்போடு போராடிய சக்திகளின் பங்களிப்பு அந்த இந்திய மேலாதிக்க நோக்கத்துக்கான இரையாகும் வகையில்) பயன்படுத்திக்கொண்ட பின்னர் பதினாறுக்கு மேற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக இலங்கையை இந்தியா அடிமைகொண்டுள்ளது. ஆக, இலங்கையினுள் சிங்களப் பேரினவாதம் ஏனைய தேசிய இனங்களை அடக்கி மேலாதிக்கம் செய்யும் அதேகாலத்தில் இந்திய மேலாதிக்கத்தால் முழு நாடும் ஆட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்துக் கொண்டு சிங்களத் தேசிய முற்போக்கு சக்திகள் செயற்படுவதற்கு முன்வரவேண்டும். தமிழ்த் தேசியம் தலித்தேசிய நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு அதன் கோரிக்கைகளையும் அபிலாஷைகளையும் மதித்தவாறு செயற்படுகிற அதேவேளை, இலங்கைத் தேசியத்தின் நிதர்சனத்தை ஏற்றவாறு பிரிந்து செல்வதல்லாத சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும். இவை குறித்து இரட்டைத் தேசியம் குறித்த பல கட்டுரைகளிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.<span class="photo photo_left" style="clear: left; float: left; max-width: 180px; padding: 2px 10px 5px 0px;"><img alt="" class="photo_img img" src="https://m.ak.fbcdn.net/photos-c.ak/hphotos-ak-prn2/969428_489680951118249_182880480_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 580px; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
சர்வதேச உணர்வுடன் மக்கள் விடுதலை எனும் இலக்கு சார்ந்ததாக இலங்கைத் தேசியம் அனைத்து தேசிய இனங்களையும் சமத்துவமாக நடாத்துவதுபோன்றே சாதிய ஒடுக்குமுறையின் அனைத்துவடிவங்களையும் தகர்க்கும் இலட்சியத்தோடு தமிழினத் தேசியத்தின் சுயநிர்ணயப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கைத் தேசியத்தினின்றும் வேறுபடுத்தித் தனிநாடாக ஆக்கும் எத்தனம் மேலாதிக்க சக்திகளுக்கு உதவுவதாகிவிடும் என்பதான அதே பொருளில், தமிழினத் தேசியத்தைப் பலவீனப்படுத்தாதவகையில் தலித் தேசியக் கோரிக்கைகளும் செயற்பாடுகளும் அமையவேண்டும் என்பதை வலியுறுத்துவோம். சிங்கள முற்போக்கு சக்திகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும்போது பிரிவினைவாதம் வலுப்படுவது போலவே, இடதுசாரித் தமிழ்த் தேசியர்கள் தலித் தேசியத்தை நிராகரிக்கும்போது தலித்தியவாதம்(சாதிவாதம்) மேலோங்க வழியேற்படுத்துகிறார்கள் (ஆதிக்க சாதிக்கான 'ஆத்மீகப்' போலி முகமூடி அணிந்த சாதிவாதம் எப்படி முகங்கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தலித் விடுதலையாளர்கள் அறிவர்; ஆயினும் இந்த முற்போக்காளராய் முன்வந்து 'சாதிபேதம் இல்லாதொழிந்த பின்னும் நீங்கள் ஏன் சாதிபற்றிப் பேசுகிறீர்கள்' என்கிற நட்புசக்திகளிடமிருந்து காக்கத்தான் எந்தக்கடவுளும் முன்வருகிறார்களில்லை). இரட்டைத் தேசியக் கோட்பாடு எமக்கான செயற்பாட்டுக் கருத்தியல் என்கிறவகையில் இப்பிரச்சனை குறித்து விளக்கம்பெற உதவ இயலும்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
இந்தக்கட்டுரையின் பேசுபொருளுக்கு அமைவாக இரட்டைத் தேசியக் கோட்பாடு தொடர்பான ஐந்து அம்சங்களைச் சுருக்கமாக முன்வைப்பது அவசியமாயுள்ளது. அவை:</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
<span class="fbUnderline" style="text-decoration: underline;"><strong>1 </strong></span><strong> -</strong>சமூக வர்க்க ஆதிக்கமும் கருத்தியலும்-</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
ஐரோப்பாவில் போல வர்க்கப்பிளவுற்ற சமூக அமைப்பல்ல எம்முடையது. விவசாய வாய்ப்புப் பெற்ற மருதத் திணைக்குரிய இனமரபுக்குழுக்கள் ஆதிக்க சாதியான வெள்ளாளராக தம்மை ஆக்கி வெல்லப்பட்ட இனமரபுக்குழுக்களை இடைச்சாதிகளாயும் தலித்துக்களாயும் ஆக்கிக்கொண்ட சமூகமுறைமை எமக்கானது. இதற்கு ஏற்புடையவர்களாக்க வலுவான கருத்தியல் அவசியம் என்கிறவகையில் பிராமணர் என்கிற சாதி அவசியப்பட்டது. இந்தியா முழுமைக்குமான ஒவ்வொரு பிரதேசங்களிலும் மேலாதிக்கம்பெற்ற சாதியென வெள்ளாளர், நாயர், நாயுடு (இலங்கையில் கொவியா) என வெவ்வேறு சாதிகள் இருந்தபோதிலும் கருத்தியலுக்கான சாதியான பிராமணர் முழு இந்தியாவுக்குமானவர்களாக இருக்க முடிந்தது (இலங்கையில் ஆட்சியாளர்களுடன் பிராமணர் இருந்தபோதிலும் ஒரு சமூக சக்தியாக ஆதிக்கம் பெற இயலவில்லை; பௌத்தத்துக்கு நேரடியாக பிராமணர் பங்களிப்பு இருந்ததைக் கடந்து பௌத்த இலக்கியங்கள் வாயிலாக சாதிவாழ்முறை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது). சாதி ஏற்றத் தாழ்வுடன் ஆதிக்கசாதியின் உடைமையாளர்கள் பிறரைச் சுரண்ட ஏற்ற கருத்தியலை முன்வைக்கும் பிராமணியம், அமைப்பு மாற்றங்களுக்கு ஏற்றதாக மாறுபடும் கருத்தியல்களையும் காலந்தோறும் வடிவமைத்து வந்துள்ளது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
<span class="fbUnderline" style="text-decoration: underline;"><strong>2.</strong></span> சமூகமாற்றத்துக்கு பண்பாட்டுப்புரட்சி-</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
கருத்தியல் வாயிலாக மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்கிற சமூக வர்க்கமான ஆளும் சாதியை வீழ்த்திப் புதிய உற்பத்திமுறைக்கான மற்றொரு சாதி ஆதிக்கத்தை வென்றெடுக்க வேண்டுமாயின் கருத்தியல் மாற்றத்தை முன்னதாக ஏற்படுத்த வேண்டும். மூவேந்தர் ஆட்சி சாத்தியப்பட்ட வீரயுக உடமையாளர்களான கிழார்கள் தமது ஆதிக்கத்தோடு பிராமண ஆதிக்கத்துக்கும் வழியேற்படுத்தினர். பிராமணியத்தை வீழ்த்தி வைசியர்களைப் புனிதர்களாய்க் காட்டிய பௌத்த சமண எழுச்சி அறநெறிக்காலத்தை சாத்தியமாக்கியது. பக்திப்பேரியக்கம் வெள்ளாளரைப் புனிதப்படுத்தும் கருத்தியலுடன் பிராமணியத்தை வளர்த்து பண்பாட்டு புரட்சியை முன்னெடுத்து நிலப்பிரபுத்துவ அமைப்பு வெற்றிகொள்ளப்பட்டது. முதலாளித்துவ மாற்றியமைத்தலிலும் காந்தியின் ஆன்மீக வடிவம் பெற்ற போராட்ட முறைகள் முதல் தமித்தேசியத்துக்கான தி.மு.க.வின் பண்பாட்டு இயக்கங்கள் வரையானவை கவனங்கொள்ளப்பட வேண்டியன.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
<strong><span class="fbUnderline" style="text-decoration: underline;">3. </span></strong>ஏகாதிபத்தியம் - ஒடுக்கப்பட்ட தேசம்:</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
நவீன முதலாளித்துவ வரலாறு இருபதாம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய அமைப்பை நிதர்சனமாக்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சியினால் சோசலிசம் வென்றெடுக்கப்படலாம் என மார்க்ஸ் நம்பியதைப் புதிய அமைப்பு முறை வளர்த்தெடுத்து சிந்திக்குமாறு கோரியது. ஒடுக்கப்பட்ட தேசங்களை ஐக்கியப்படுத்திய ருஸ்யப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு அப்பால் ஏனையவை அனைத்தும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட தேசங்களின் புரட்சி வாயிலாகவே சோசலிசம் கட்டியெழுப்பப்பட்ட நிதர்சனத்தைக் கவனம்கொள்ள வேண்டும். சமூக வர்க்கமாக ஒடுக்கி சுரண்டலை மேற்கொண்டு சமூக மாற்றங்களைக் கண்டுவந்த எமது அனுபவங்களிலிருந்து இதற்கான கோட்பாட்டு உருவாக்கம் சாத்தியமாக இயலும். இரட்டைத் தேசியக் கோட்பாட்டின் விரிவாக்கம் இதற்குரியது எனக் காணலாம். இதுகுறித்துப் பின்னால் பார்க்கலாம். ஒருவிடயம் மட்டும் இங்கு வலியுறுத்த அவசியமுள்ளது. ஏகாதிபத்தியம் என்பது மூலதனத்தை ஏற்றுமதி செய்து ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சுரண்டுவதாக உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னர் ஒடுக்கப்பட்ட சாதிகளை ஒடுக்கிய ஆதிக்க சாதிகள் பிராமணியம் என்கிற பண்பாட்டு ஏகாதிபத்தியமாகும் வரலாறு எம்மத்தியில் முன்னரே நடந்தேறியது. தேசிய வாழ்முறை இன்றைய முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறைக்கான அரசியல் வடிவம் என்றபோதிலும் சாதிமுறையில் வெளிப்பட்ட இந்தப்பண்பு சாதிகளை முந்திய வடிவத்துக்குரிய தேசியமாகக் கொள்ள இயலும் என்பதை மறுக்க இயலாது. வேறுவார்த்தைகளில், சாதிகள் ஒவ்வொன்றும் ஒருவகையில் தேசம் போன்ற அமைப்பை நவீன வரலாற்றில் வடிவம் பெற இடமுள்ளதாக கூறலாம். இந்தச் சாதித் தேசம் பௌதிகவடிவிலான நிலத் தொடர்பு உடையதல்ல என்றபோதிலும், சாதியமனம் எனும் அரூபமான 'நிலத்' தொடர்பைக்கொண்டுள்ளது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
<span class="photo photo_right" style="clear: right; float: right; max-width: 180px; padding: 2px 0px 5px 10px;"><img alt="" class="photo_img img" src="https://m.ak.fbcdn.net/photos-e.ak/hphotos-ak-prn1/1094827_489681021118242_1263302729_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 580px; padding: 0px;" title="" /></span><span class="fbUnderline" style="text-decoration: underline;"><strong>4.</strong></span> புதிய பண்பாடு-</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும்போது ஆதிக்க சாதிகள் தலைமையேற்கும் நிலையில் தலித் கோரிக்கை (அம்பேத்கர்) அல்லது பிராந்திய ஆளும் சாதித் தேசியம் (பெரியார்) என்பன முறையே வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் எதிர்த் தேசியமாக இயங்க நிர்ப்பந்திக்கப்பட்டன. அம்பேத்காரியம், பெரியாரியம் என்பன அத்தகைய எதிர்த்தேசியங்களாகும். பாட்டாளி வர்க்க நோக்கில் முன்னெடுக்கப்படும் மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் புதியபண்பாடு எனும் வடிவம் கொள்ளும். ஆதிக்கசாதித்தேசியம் மரபு சார்ந்த பண்பாட்டியத்தை முன்னெடுக்கும்போது பிராமணிய எதிர்ப்புடையன எதிர்ப்பண்பாட்டியத்தை முன்னிறுத்தின. இது மரபுப் பண்பாட்டை முழுமையாக நிராகரிக்கும் நிலைப்பாடு. ஆதிக்க எதிர்ப்பு இதன் அடிப்படையாக இருந்தபோதிலும் பிற மேலாதிக்கத்துக்கு விட்டுக்கொடுக்க வாய்ப்பாக சொந்த வேர்களைத் தகர்க்கும் தவறு இதன்பால் உண்டு. புதிய பண்பாட்டியம் ஆதிக்க எதிர்ப்பில் எதிர்ப்பண்பாட்டியக் கூறை உள்வாங்கும் அதேவேளை, அவசியமான மக்கள் பங்கேற்பு சர்ந்த மரபுப்பண்பாட்டின் ஏற்புடையவற்றைக் கையேற்கும். அனைத்துவகை மேலாதிக்கங்களையும் முறியடித்து முழுமையான விடுதலையைச் சாத்தியமாக்குவது புதியபண்பாட்டியம்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
<strong><span class="fbUnderline" style="text-decoration: underline;">5. </span></strong>மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்-</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
தேசவிடுதலையூடாக சோசலிசத்தை வென்றெடுக்கிற வரலாற்றுக்கட்டத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை மாஒ சேதுங் சிந்தனை மக்கள் ஜனநாயக சவாதிகாரம் என விருத்தி செய்து பிரயோகித்தது. ஆயினும் தொடர்ந்த வரலாற்றுப்போக்கின் நெருக்கடியில் ஒருபின்வாங்கல் நேர்ந்துள்ளது. இதனை தேசியவிடுதலை வாயிலாக சோசலிசத்தை வெற்றிகொள்ளல் எனும் புதிய மார்க்சியக் கட்டத்துக்குரிய கோட்பாட்டு நிலையில் மீளக் கட்டமைப்பது அவசியமாகும்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
ஆக, மேலாதிக்கம் ஏகாதிபத்தியம் என்பவற்றுக்கு எதிராக நாட்டுத்தேசியம் சோசலிசத்தை வென்றெடுக்கும் இலக்கோடு மக்களை அணிதிரட்ட வாய்ப்புண்டு. அதற்கான கருத்தியல் அடிப்படையில் எமக்கான கோட்பாட்டை வகுக்கவேண்டும். அதன்போது ஒவ்வொரு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும் கவனம்கொள்ளப்பட வேண்டும். இந்த இனத்தேசியங்களின் மத்தியில் பண்பாட்டு ஏகாதிபத்தியத்துக்கு ஆட்பட்ட சாதித் தேசியங்களது சுயநிர்ணயம் அதற்குரிய வடிவத்தில் அங்கீகரிக்கப்படுவது அவசியம்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 20px;">
2013-நன்றி குவர்னிக்கா</div>
<div>
<br /></div>
</div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-75376267384744073162013-01-29T23:51:00.001-08:002013-01-29T23:51:10.459-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj87kK3Zx3iDyG6ZA6GhPENfYJMs5Fn5EYtIJClKfLXOrjKIpZUnlvPL98jiPikFJOTd-w32dx_UPfCqokwE_-Lks7QM3iEid81BasJgalpwSM5imxRPof31Pmx3vx4hsjZ6A1gigZ3Cmkd/s1600/tn.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="242" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj87kK3Zx3iDyG6ZA6GhPENfYJMs5Fn5EYtIJClKfLXOrjKIpZUnlvPL98jiPikFJOTd-w32dx_UPfCqokwE_-Lks7QM3iEid81BasJgalpwSM5imxRPof31Pmx3vx4hsjZ6A1gigZ3Cmkd/s320/tn.jpg" width="320" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHU03n2oEiLAcjIU6fsukouHkCpeZ5xY4x24NaQJOhjlrEK-nrx5bNMvSyqm6yklt4uyUOi7sjyHXZAm-5v2gAo_w4s2o-p7XZeQpo3VD55V3D0Z5HVDkwPL1CDF-nEhxyKLVHU8tTrmTp/s1600/399330_523233321034452_1715520294_n.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHU03n2oEiLAcjIU6fsukouHkCpeZ5xY4x24NaQJOhjlrEK-nrx5bNMvSyqm6yklt4uyUOi7sjyHXZAm-5v2gAo_w4s2o-p7XZeQpo3VD55V3D0Z5HVDkwPL1CDF-nEhxyKLVHU8tTrmTp/s320/399330_523233321034452_1715520294_n.jpg" width="240" /></a><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
இறுதி யுத்தம்… முள்ளிவாய்க்கால்… முள்வேலி முகாம்<br />
<br />
<br />
<br />
யோ.கர்ணனின் “சேகுவேரா இருந்த வீடு” ஒரு எனும் சிறுகதைத் தொகுதி குறித்து விமர்சனக் கருத்துரை ஒன்றை முன்வைக்க முயலும்போது அவருடனான உரையாடல் தருணங்கள் இடைவெட்டுவதைத் தவிர்க்க இயலாதோ என்று சந்தேகம் எழுகிறது. படைப்பு ஒன்றை, ஆசிரியர் பற்றிய முன்னனுமானங்கள் ஏதுமின்றி அணுகுவது அவசியம் என்பது பெரும்பாலும் சரியானதுதான். இந்தப் பதிவைக் கூடியவரை ஆசிரியரைக் கடந்து சிறுகதைகளை மட்டுமே முன்னிறுத்தி அலசுவதற்கு முயல்வேன். பிரதி வெளிப்படுத்தும் ஆசிரியர் அறிமுகத்தோடு உரையாடலைத் தொடங்கலாம்.<br />
தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக மற்றும் தார்மீக அடித்தளத்தை பலப்படுத்துவதோடு, தமிழர்களின் மீட்சிக்குத் தேவையான அனைத்துலக அங்கீகாரத்தைத் துரிதப்படுத்த யோ.கர்ணன் போன்றவர்களது முழுமையான யுத்தசாட்சியமே விஞ்ஞானபூர்வமானதாகவும், அனைத்துலக கவர்ச்சிமிக்கதாகவும் அமையும் எனக்கூறும் நிலாந்தன் இவ்வாறு கூறியிருந்தார்: “கர்ணன் நாலாங்கட்ட ஈழப்போரின் யுத்த சாட்சிகளில் ஒருவர். நாலாங்கட்ட ஈழப்போர் உயிருள்ள வெளிச்சாட்சிகள் இன்றி நடத்தி முடிக்கப்பட்டது. சக்திமிக்க அரசுகளின் சற்றலைற் கமராக்களைத் தவிர வேறெந்த வெளிச்சாட்சிகளும் அங்கீகரிக்கவில்லை. மற்றவையெல்லாம் யுத்தகளத்தில் நின்ற உட்சாட்சிகளே. இதில் ஒரு தரப்பு வெற்றிக்களிப்பினால் தன்னிலை மறந்து தனது செயல்களைத் தானே தனது கைபேசி கமராக்களால் பதிந்து வைத்திருக்கிறது. மற்றத்தரப்பு தியாகிகளும், கைதிகளும், அகதிகளும் ஆகியது. இவர்களின் மத்தியிலிருந்தே கர்ணன் உருவாகினார். பெரும்போக்காகவுள்ள யுத்தசாட்சியத்திலிருந்தும் அவர் துலக்கமாக விலகிச் செல்கிறார். ஆனால், ஒரு முழுமையான யுத்தசாட்சியம் என்று வரும்போது அதன் தவிர்க்கவியலாத ஒரு கூறாக அவர் காணப்படுகிறார்.”<br />
மேற்படி நிலாந்தனின் குறிப்பு நூலின் பின்னட்டையில் இடம்பெற்றுள்ளது. வடலி வெளியீடான இந்நூல் ஆசிரியர்-படைப்பாக்கம் குறித்து இத்தகவலை மட்டுமே தந்துள்ளது. மற்றும்படி நேரடியாகவே சிறுகதைகளுக்குள் பிரவேசிக்க ஏற்றதாகவே நூல் உள்ளது. என்வரையில், கர்ணனைச் சந்திப்பதற்கு முன்னரே அவரது சிறுகதைகளை அவ்வப்போது வெளியான சஞ்சிகைகளில் படித்தபோது, கள அனுபவங்களோடு எழுதப்பட்டது குறித்த தகவலையும் இணைத்து வாசித்திருக்கிறேன். வெளிச்சாட்சிகள் இறுதி யுத்தத்தில் இடம்பெற அனுமதிக்கப்படாதது பேரினவாத ஆட்சியாளர் கைங்கரியம் என்றால், கள அனுபவங்கள் மக்கள் நலநாட்டத்தோடு வெளிவர ஏற்ற சாட்சிகள் இல்லாது ஆக்கப்பட்டது, தலைமையேற்ற சக்தியின் பாசிச நிலைப்பாட்டுடன் தொடர்புடையது. தமிழ்த் தேசியம் என்பதாக ஆதிக்கவாத நோக்கு மட்டுமே பேசுபொருளாக உள்ள ஈழத் தமிழ்ச் சூழலில் மக்கள் விடுதலை உணர்வோடு இணைந்த தேசிய இனத்துக்கான சுயநிர்ணயக் கோரிக்கையைக் கேட்பது அருந்தல். அத்தகைய மிகக் குறைவாயே உள்ள குரலில் ஒன்றாக கர்ணனின் இந்தச் ‘சாட்சியம்’ அமைந்துள்ளது.<br />
கள அனுபவங்கள் என்ற பேரில் வலதுசாரிப் பிற்போக்கு நிலைப்பட்ட பதிவுகள் வெளிப்படும் தமிழ்ப் பாசிசம் ஆளும்போது அதற்குத் துதிபாடி பேரினவாதம் மேலாண்மை பெற்ற நிலையில் புலிகளை வரிக்குவரி தாக்கும் அனுபவமீட்புகளும் வந்தபடிதான். வைத்தால் கூந்தல், அடித்தால் மொட்டை என்றில்லாமல் உண்மையான விடுதலை நாட்டத்தோடு போராட்டத்தில் இணைந்து, திசை கெட்டழியும் போக்கில் செயற்பாடுகள் தறிகெட்டுப்போவதைக் கண்டு ஆதங்கப்பட்டு, வீழ்ச்சியை மறுமதிப்பீடு செய்ய முனையும் மனப்பாங்கு கைவரப்பெற்ற படைப்புள்ளம் ஒன்றே சரியான ஆக்கங்களை வெளிப்படுத்த இயலும்.<br />
இந்தச் சமகாலத்தில் இத்தகைய ஆரோக்கியமான விமர்சன நிலைப்பட்ட வேறொரு சிறுகதைத் தொகுதி மற்றும் நாவல் என இரு படைப்பாளிகளைப் படிக்க முடிந்துள்ளது. அவைகுறித்து பேசுமுன்னர் கர்ணன் பற்றிப் பேச அவசியம் உள்ளது. மிக நெருக்கமான அனுபவ எல்லையைத் தொட்டமையும் மக்கள் விடுதலைத் திசைமார்க்கத்தில் தனது கருத்தியலை விருத்தி செய்யும் போக்கில் முன்னேறுவதையும் இவரிடம் அதிகமாக காண இயலுமாயுள்ளமையால் இவரது “சேகுவேரா இருந்த வீடு” எனும் சிறுகதைத் தொகுப்புக் குறித்து சில வார்த்தைகள். இந்தத் தலைப்புக் கதை ‘தோழர்களை’ போராளிகளாக தமிழ்த் தேசிய வரலாறு பெற்றிருந்த இருபத்தேழு வருடங்களுக்கு முந்திய வாழ்க்கை பெற்றுவந்த மாற்றங்களைக் கூறுவது. தம்பி சேகுவேரா என்ற பேரோடு இயக்கமானதால் இழந்த வீட்டை இறுதிவரை மீட்கமுடியாத அண்ணனின் குடும்பம் படும் பாடுகள் அந்தக்கதை. சீதனமாக அந்த வீட்டைப் பெறவேண்டியவள் காணாமல் போவது எமது வரலாற்றின் குறியீடுமாகும்.<br />
அந்தக் கதையை அடுத்து இடம்பெறும் “ஐயனின் எஸ்.எல்.ஆர்.” தோழர்களில் ஒரு பிரிவு அரசு சார்பு இயக்கமாக சமாதான காலத்தில் யாழ் மண்ணில் இருந்த சூழலுக்குரியது. முன்னர் புலிப் போராளியைக் காதலித்து, இதே இயக்கத்தால் கைதுசெய்து ‘வைத்திருக்கப்பட்டு’ விடுதலையான பின் வெளிநாடு சென்று 15 ஆண்டுகளின் பின், இந்தச் சமாதான காலத்தில் ஊர்வந்த பெண், ‘தோழர்’ போராளியோடு உரையாடுவது உச்சக் கட்டம். அந்தத் தோழர் தனது தலைமை திருமணமே செய்யாது மக்களுக்காக வாழ்வது பற்றிப் பேசும்போது அவள் சொல்வாள், நான் மட்டும் அப்போது அபோஸன் செய்யாதுபோனால் உன் தலைவரின் வாரிசு என் வயிற்றில் வளர்ந்திருக்கும் என்று. கால ஓட்டத்தில் போராட்டப் போக்கு மாற்றங்களின் நிதர்சனத்தை உள்ளவாறே சொல்லிச் செல்வதற்கு அப்பால், அரசியலற்று எரிந்த கட்சி – எரியாத கட்சி என்கிற மனப்பாங்கில் புலிகளால் விரட்டப்பட்டு அரசோடு இணைய நிர்ப்பந்திக்கப்பட்ட இயக்கத்தை ‘ஒட்டுக்குழு’ என அடையாளப்படுத்த முற்படுகிறவர்களிலிருந்து வேறுபடுகிற அதேவேளை, அவர்களின் புனிதப்படுத்தல் முயற்சியையும் இவ்வகையில் அம்பலப்படுத்துகிறார் இக்கதைசொல்லி.<br />
அதேவேளை போராட்டத்தின் அனைத்தையுமே புனிதப்படுத்தும் தூய தமிழீழத் தேசியர்களின் மாயக்கற்பனைகளையும் தகர்த்து யதார்த்த இருப்பை உள்ளது உள்ளபடி, இரத்தமும் சதையுமாகக் காட்டுகிறார். சேறும் சகதியும், வேர்வையும் வெறுப்புகளும், வாழத்துடிக்கும் அவதிகளும் மரண ஓலங்களும், இலட்சிய உந்துதலும் காட்டிக்கொடுப்புகளும் என அனைத்துப் பக்கங்களையும் உண்மை மனிதர்களின் முகங்கள் வாயிலாகவே காட்டிச் செல்கிறது “சேகுவேரா இருந்த வீடு”. மேற்குறித்த இரு கதைகளையும் அடுத்ததும், இறுதிக்கதையுமான “இரண்டாவது தலைவர்” எனும் சிறுகதை இது தொடர்பில் கவனிப்புக்குரியது. இயக்கத்தில் இரண்டாவது தலைவர் யார் என நச்சரித்த இளம் போராளி, அரசியல் ‘மாஸ்ட்டரால்’ கடுமையாக எச்சரிக்கப்படுவான். அவன் கடற்போராளியாகி உயர்நிலை அடைந்தபோதும் இரண்டாம் தலைவர் பற்றிய கேள்விகளோடுதான் தாய்லாந்து ஆயுதக்கொள்வனவுக்குச் சென்ற காலத்தில் சர்வதேசத்தொடர்பில் இயங்கும் கே.பி. என்ற இரண்டாம் தலைவரைச் சந்திக்கிறான். எல்லாம் முடிந்து புனர்வாழ்வு பெற்று இராணுவத்திலிருந்து வெளியேறிய நாளில் வந்து வாழ்த்துத் தெரிவித்த அடையாளம் மறந்த அதே இரண்டாம் தலைவரை அறியும்போது அவன் மட்டுமன்றி வாசக உள்ளங்களும் அதிர்ச்சிக்குள்ளாகும்.<br />
ஆதிக்கவாத தமிழ்த் தேசியத்தின் இன்னொரு முகம் இது. கே.பி. என்கிற தனியாளின் ‘துரோகம்’, அல்லது அதை அம்பலப்படுத்த அவசியமற்ற காலப்பொருத்தமற்ற கதைசொல்லியின் முயற்சி என்கிற குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், அரசியலற்ற வெறும் யுத்த சன்னதத்தின் அவல முடிவு இது என்பதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு விருப்பமற்று, நாம் விரும்பாத விடயம் உண்மையேயாயினும் நாம் கவனங்கொள்ளப்போவதில்லை என்கிற எமது பொதுப்புத்தி பட்டும் தெளியாத மனப்பாங்கைக் காட்டுவது. ஈழப்போராட்டம் முழுமையிலுமே இத்தகைய தீக்கோழி மனோபாவம் எம்மிடம் செயற்பட்டதன் பேறு இன்றைய அவல முடிவுக்குக் காரணம் என்பதை உணர்வது அவசியம். இந்த மனக்கோளாறுடன் கர்ணனின் கதைகளைப் படிப்பவர்கள் அசூசைக்குள்ளாவது தவிர்க்க இயலாததே. உண்மையைக் காண அச்சமற்று, கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்துக்கான மார்க்கத்தைக் கண்டறிய முயல்கிறவர்களுக்கு இக்கதைத் தொகுதி மிகப் பெரும் பொக்கிசமாய்த் தெரியும். சிறிய நிலப்பரப்பில் சிக்குண்டு கொடுக்குப்பிடிக்குளிருந்து மீழத்துடித்த இறுதிக்கணத்தில் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் தவிப்புகளும், மனிதம் பேண முயலும் கணங்களும், இலட்சியப்பற்றும் எனப் பல்வேறு தருணங்கள் இங்கு பேசுபொருளாகியுள்ளன.<br />
“திரும்பி வந்தவன்” என்கிற முதல் கதை, இயக்கத்துக்குப் போய், இறுதிக்கட்டத்தையும் கண்டு புனர்வாழ்வுபெற்றுத்திரும்பிய போராளிக்கு திருமணப் பேச்சின் சலனம் தனது ஆண்மைச் சாத்தியத்தைப் பயிற்சிபெற வழிப்படுத்துவதைக் கூறுகிறது. வவுனியாவில் அதன்பொருட்டுவந்த பாலியல் தொழிலாளிப் பெண், தனது தாயை அத்தொழில் காரணமாக இயக்கப் போராளியாக இருந்தபோது அவன் மரணதண்டனைக்குள்ளாக்கியதைக் கூறி, விட்டுவிடுபடி கேட்டுக்கொண்டதில் அதிர்ச்சிக்குள்ளாவதைக் காட்டும். மூன்றாவது கதை, “திரும்பி வந்தவள்”. ஆணாதிக்க சமூகத்தில் அந்தப் போராளிக்கு இருந்த வாய்ப்புக்கு நேர்மாறாக அமைந்துள்ளது திரும்பி வந்தவளின் கதை. அவளைக் காதலித்தவன், லண்டனில் புலிக்கொடி ஏந்திச் சர்வதேசங்களுக்கு எல்லாம் காட்டும் போராட்டத்தை முன்னணியில் நின்று நிகழ்த்தியபோதிலும், இயக்கத்திலும் இராணுவ முகாமிலும் இருந்தவளைத் திருமணம் செய்ய முன்வராததைக் கண்ணீரோடு ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதைக் காட்டும். அவளது கண்ணீர், லண்டன் போராட்டத்தின் பத்திரிகைப் படத்திலுள்ள புலிக்கொடியைக் கரைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பேப்பருடனுள்ள அவளது உணர்வுகளை முழுதாகப் புரிந்து கொள்ளும் சிறுவன் பார்வையில் நகரும் கதை, அண்ணன் அவளை ஏற்க மறுக்கும் நிதர்சனம் குறித்த விளக்கம் முழுமை பெறாத தவிப்பைக் காட்டுவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண் ஒடுக்குமுறையின் அடிப்படை தொடர்வதைக் கேள்விக்குள்ளாக்குவதாக இருகதைகளும் அமைந்துள்ளன.<br />
“தமிழ்க் கதை” அகதிமுகாம் அவலத்தை மட்டுமல்லாமல், இனக் குரோதத்துக்கு அப்பாலான தந்தையாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் பதிலடியைக் காட்டும்; தாயின் மரணம், தெரியாத சிறுமியின் மரணம் என்ற கொடூரங்களோடு இருப்பிடம் திரும்புகிறவனை “அரிசி” கிழையும் அக்காவின் இருப்பு நாட்டம் வாழ்க்கைக்கு அழைப்பதாக அமையும். “கதைகதையாம் காரணமாம்” விசாரணையாளரிடம் பொய் சொல்ல நிர்ப்பந்திக்கப்படும் போராளியைக் காட்டும். “வேதாளத்திற்குச் சொன்ன கதை” அத்தகைய விசாரணையில் புதைக்கப்பட்ட இயக்கப் பணத்தைப் பங்குபோடக் கேட்கும் தேசபக்த விசாரணையாளனைக் காட்டுவது. “சீட்டாட்டம்” அரசியலற்ற இயக்க வங்குரோத்தைப் பொதுமகன் பார்வையில் காட்டும். “சோசலிசம்” அதை இன்னொரு வடிவில் பேசும். “பாவமன்னிப்பு” சகபோராளிகளைக் காக்கத் தன்னை அர்ப்பணித்த உயர் பண்பாளனைக் காட்டும். “பாலையடிச் சித்தர்” வாய்ச் சவடால் வீரரின் சரணடைவையும், போராளியின் நிதர்சனத்துக்கு திரும்பும் நிர்ப்பந்தங்களையும் பேசும்.<br />
பதின்மூன்று கதைகளில் இரண்டு தவிர்ந்து ஏனையவை இறுதி யுத்தத்தையும் முள்ளிவாய்க்காலையும் முள்ளுவேலி முகாமையும் புனர்வாழ்வையும் அவற்றுக்குள்ளான மாட்டுப்படலையுமே பேசுகின்றன. போராளியாக இருந்து இவற்றுக்குள் உள்வாங்கப்படுவதைக் காட்டுவது சொந்த அனுபவ எல்லைக்குட்படுவதால் இயல்பாயமைவதாய் விளங்கத்தக்கது. மாறாக, போராளிகளை மக்கள் முகங்கொண்டவாறும், மக்கள் இறுதியுத்த தருணங்களை அனுபவித்த வகைமையும் இயல்புகுன்றாமல் சித்திரிக்கப்பட்டமை விதந்துரைக்கத்தக்க வகையில் வடிக்கப்பட்டுள்ளது. அதீத இலட்சியம் பேசியவர், இயக்கத்துக்கு ஆள் பிடித்தவர் எல்லாம் எந்தக் கூச்சநாச்சமுமின்றி சரணடையப் போவதைக் கண்டு அதிர்வுக்குள்ளாகும் போராளிகளின் செத்துப்போகாத போர்க்குணம் ஆங்காங்கே பதிவாகியுள்ளது. “இப்ப இவர் சாவதால் என்ன ஆகிவிடப் போகிறது” எனக் கணவன் உயிரைக் காக்க போராளியிடம் இரந்து நிற்கும் மனைவி, மரணப் பிடிக்குள் தவித்து ‘காப்பாற்றுங்கோ’ என்ற பெண் குரலில் தன் வாழ்வையும் தொடர நிர்ப்பந்திக்கப்படும் போராளி, தவிர்க்க இயலாமல் போர்க்குணம்மிக்கவரும் “விரும்பாமலே இயக்கத்துக்கு உள்வாங்கப்பட்டோம்” என விசாரணையில் ஒப்பிப்பது என்ற தருணங்கள் உயிர்ப்போடு வடிக்கப்பட்டுள்ளன. வறட்டுத்தனமான தந்தையை வஞ்சிக்கும் வகையில் இயக்கமெனக் கணவன் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்ட பெண் சிங்களப் படையினரோடு உறவாடுவது வெறும் அதிர்ச்சிப் பாத்திரம் மட்டுமல்ல, அவதிவாழ்வின் இன்னொரு மறுபாதி.<br />
எரிந்த கட்சி – எரியாத கட்சி (போலியான மக்கள் ஆதரவைப் பெற புலிப் புகழ் பாடுவது, வஞ்சிக்கப்பட்டோமே என்ற கோபத்தில் புலி எதிர்ப்பை மட்டும் பேசுவது) என்ற ஏதாயினும் ஓர் ஒருமுனைவாதத் தவறுக்கு ஆட்படாது, வரலாற்றுச் செல்நெறியின் மிகப்பிரதான கணத்துக்கான பல்வேறு தருணங்களைக் கர்ணன் அற்புதமாகக் கலைத்துவப் படுத்தியுள்ளார். இவை சிறுகதைகள் என்ற போதிலும், பல்வேறு பாத்திரங்கள், வேறுபட்ட குணாம்சங்கள், எதிர்-எதிர் நலன் என்பன பேசு பொருளாக அமைகையில், குறித்த களமும் காலமும் காட்டப்படும் வகையில் நாவலுக்குரிய வாசிப்பு அனுபவத்துக்கு நெருங்கிவர வாய்ப்பைத் தருகிறது. இருப்பினும் நாவல் ஒன்றில் இவை ஒருங்கமைக்கப் படும்போது விரிந்த அனுபவச் செழுமையும் தேடலும் தெளிவும் சாத்தியமாகும். கர்ணனின் கருத்தியல் தெளிவைக் காணும்போது அவரால் அத்தகைய நாவல் ஒன்றைத் தர இயலும் என்றே தோன்றுகிறது. தருவார் என்றே நம்புவோம். அதற்கான புறச் சூழலை எமது பண்பாட்டு நகர்வு ஏற்படுத்துமா, குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் குறுகிய மனப்பாங்கால் எதிர்நிலையை ஏற்படுத்துவோமா என்ற கேள்வியும் எழாமலில்லை. எமது பங்குக்கு குறுங்குழு வாதங்களைத் தகர்த்துப் புதிய பண்பாட்டுத் தளத்தை வலுப்படுத்த இச்சவாலை முகங்கொடுக்க ஏற்ற களமாகவும் ஆக்கிக் கொள்ளலாமல்லவா? ஆக்குவோம்!<br />
ந.இரவீந்திரன்<br />
எதுவரை -இதழ் 08<br />
</div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-20263012066767935732013-01-02T21:27:00.003-08:002013-01-02T21:27:48.096-08:00 கலந்துரையாடல் -இனி அவன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOxDdDA3-2_IDN8xOLW46U_D6Ef-U3s7oRiATixzVCCxim5exS2enFIiwGlpkqEptV0UQkUxm3FsZ-qfSt0sjp5shzIi9wceAwR0qqn9GYnp5eRCyirZbc5WDPGEw9qWNIJAd36umvm7nB/s1600/16626_295388240582673_1245451847_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOxDdDA3-2_IDN8xOLW46U_D6Ef-U3s7oRiATixzVCCxim5exS2enFIiwGlpkqEptV0UQkUxm3FsZ-qfSt0sjp5shzIi9wceAwR0qqn9GYnp5eRCyirZbc5WDPGEw9qWNIJAd36umvm7nB/s640/16626_295388240582673_1245451847_n.jpg" width="392" /></a></div>
<br />
கடந்த முழுமதி(போயா) தினமான 27.12.2012 இல் கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் காலை பயனுள்ள கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. திரைப்பட இயக்குனரான அசோக ஹந்தகமா மூன்று திரைப்படங்கள் இயக்கியிருக்கிறார். இது எனது சந்திரன் (This is My Moon - 2001), இந்த வழியால் வாருங்கள் ( Come Along This Way - 2002) மற்றும் <b>இனி அவன் </b>( Him, Here After - 2012) போன்றன..அசோக்க ஹந்தகம இயக்கத்தில் வெளியாகியிருந்த "இனி அவன்" தமிழ்த் திரைப்படம் குறித்த கருத்துப் பரிமாற்றத்துக்கான அமர்வு அது. ச.சிவகுருநாதன், அனோமா இராஜகருணா (சினிமா நெறியாளர்) ஆகியோர் ஏற்பாட்டாளர்கள். நிகழ்ச்சி தமிழிலும் சிங்களத்திலும் உரைமாற்றம் செய்யப்படும் எனக்குறிப்பிட்டவாறே கணிசமாக இரு மொழியினரும் கலந்துகொண்டனர்(இந்நிகழ்வுக்குரிய கனதியில்). சமகாலத் தமிழின் கணிப்புக்குரிய மூத்த திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் தலைமையில் மிக ஆரோக்கியமாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.<br />
முன்னதாக அசோக்க ஹந்தகம இத்திரைப்படத்தை எடுத்த சூழலை விளக்கினார். சிங்களத்தில் ஏற்கனவே தான் முன்னெடுத்த சினிமா-நாடக-தொலைக்காட்சித்தொடர் என்பன வாயிலாக எதிர்னோக்கிய கண்டன விமர்சனங்களைக் கூறினார். இலங்கை சிங்களவர்களுக்கு பௌத்தத்தைப் பாதுகாக்க புத்தரால் பணிக்கப்பட்ட புண்ணியபூமி என்ற ஐதீகத்தைப் பாலூட்டும் பருவம் முதல் ஊட்டி, சமகால அரசியல் முன்னெடுப்புகளினூடே ஏனைய இனத்தவர்களால் அதற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என வளர்க்கப்பட்டு வருகிறவர்களிடம், மாற்று உரையாடலை முன்னெடுக்கும்போது எதிர்கொள்ளக்கூடிய இடர்ப்பாடே இது. இது பல்லின-பல்கலாசார நாடு என்பதை உணர்த்த முற்படுகிறவர்களே ஓரங்கட்டப்படுகையில், ஏனைய இனங்களுக்கான சுயநிர்ணயம் பற்றிப்பேச முனைவது தற்கொலைக்கு சமன் என்பதைச் சொல்லத்தேவையில்லை. அதன்பேறாக காத்திரமான முறையில் சுயநிர்ணயம் குறித்த உரையாடல் அங்கு இன்னமும் சாத்தியமற்றுள்ளது. அதனை ஏற்படுத்துவதற்கு முன் தேவையாக ஏனைய சிறு தேசிய இனங்களோடு உரையாடுவது அவசியமே.<br />
எம்மிடம் உள்ள இனவாதம் அங்குள்ள இனவாதிகளை வலுப்படுத்தி, சிங்கள மக்களுக்கு நிதர்சன நிலையை விளக்க எந்த முயற்சியையும் எடுக்க இயலாத நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் தமிழர் மத்தியிலுள்ள இன்றைய சமூகப் பிரச்சனைகளில் எமக்குள்ளேயான ஏமாற்றும் சுரண்டலும் கபடங்களும் இனங்காட்டப்பட்டு, அவை மோதித் தகர்க்கப்படுவது ஊடாகவே ஏனைய அரசியல் நகர்வை நாட இயலும் என உணர்த்த முற்படுவதாக இந்தப் படைப்பாக்கம் அமைந்துள்ளது. முன்னாள் போராளி இயல்பு வாழ்வை அவாவியபோதிலும், அயல்சமூகமும் சமூகவிரோத சக்திகளும் அதற்கு இடம்தராத நெருக்கடி பேசுபொருள். அவனது முன்னாள் காதலி இயக்கத்துக்கு உள்வாங்கப்படாதிருக்க படுகிளவனுக்கு மணமுடிக்கப்பட்டவள்; அவசர மணாளன் ஒருநாள் உறவில் பிள்ளையைக் கையில் கொடுத்துவிட்டு மரணித்ததால், இப்போது அவனால் ஏற்கக்கூடிய நிலையில். அவனைத் தனது கள்ளக்கடத்தலுக்கு பயன்படுத்தமுனையும் சமூகவிரோதக் கனவான், பாதிப்புகள் பலவற்றைக் கண்ட பெண், போராட்டத்தை வைத்து வெளிநாட்டு வாழ்க்கைச் சுகபோகங்களையும் கண்டு இங்குள்ள வாய்ப்புகளையும் பெற முயலும் பச்சோந்தியாயுள்ள முன்னாள்போரளியின் பழைய சகபாடி என்போர் கதையின் ஏனைய பிரதான பாத்திரங்கள்.<br />
நாயகனின் மனைவியாகிய பெண் இயல்பு வாழ்வுக்கு மாறுவதில் பெரிதாக எந்தப் பிரச்சினைகளையும் கொண்டிருக்கவில்லை; கொடுமைகளுக்காளான மற்றப் பெண் இன்னமும் வறுமையோடு. அவளது கணவனின் செக்குறுட்டி வேலைதான் இவனுக்கு கைமாறியது. அதனாலே தன் வாழ்வுக்கு இவன் பதில் சொல்ல வேண்டும் என இவனை நெருக்க, இவனோடு சமூக விரோதக் கும்பலின் அனைத்துவகைச் சுரண்டலுக்கும் உள்ளாகிறாள். மேற்படி கருத்தாடலில், இப்பெண்ணைக் காட்டுவது வாயிலாக தமிழ்ப் பெண்களெல்லாம் சோரம்போய் வாழ முற்படுபவர்கள் எனக் காட்ட முற்படுகிறீர்களா எனக் கேட்கப்பட்டமை ஆச்சரியமாக இருந்தது. வகைமாதிரிப் பாத்திரங்களில் உள்ள அளவில் இது காட்டப்பட்டதில் எந்தத் தப்புமில்லை.<br />
அவ்வாறே முன்னாள் போராளியான நாயகன் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியூடாக, சிங்களப் பேரினவாத சக்திகள் முன்னிறுத்தும் மீண்டும் புலி அச்சுறுத்தல் வரலாம் என்பதை நியாயப்படுத்த முயல்கிறீர்களா என்றெழுப்பப்பட்ட கேள்வியும் நியாயமானதாய்ப்படவில்லை. கூடியவரை இயல்பு வாழ்வை அவாவி, அதற்கு சொந்தச் சமூகமே தடையாகும்போது அந்தத் துப்பாக்கியைத் தன் சொந்தத் தேவைக்காக எடுக்க முற்படுவது மட்டுமே காட்டப்பட்டது. சமூக விரோத நடத்தைக்கு உள்ளாக்கப்படுகையிலும் அதனை அவன் நினைவுகொள்ளவில்லை. வேறு எந்த அரசியல் உரையாடல்களும் பேசப்படவில்லை. தமிழ் மக்கள் இந்த அரசியல் பிரச்சனையை முற்றாகக் கைவிட்டு இயல்பு வாழ்வை முழு அளவில் விரும்புகையில் எதிர்நோக்கும் பிரச்சனையே பேசப்படுகிறது. ஒருவகையில் இனப்பிரச்சனையின் இருப்புக்கான அடிப்படையைச் சிங்கள முற்போக்கு சக்திகள் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள் என்ற குறைபாடுதான் இங்கே வெளிப்படுகிறதே அல்லாமல், மீண்டும் ஆயுதம் ஏந்தும் பயங்கரவாதம் எழலாம் என்ற எந்த அடையாளமும் காட்சிப்பட்டிருக்கவில்லை.<br />
தமிழ் முற்போக்கு சக்திகளும் இப்பிரச்சனைகளைச் சந்தேகக் கண்ணோட்டத்தோடு அணுகுவதையே இது காட்டியுள்ளது. நாம் எம்மத்தியிலான பிற்போக்கு வலதுசாரி பாசிச இனவாதிகளிடமிருந்து தமிழ்மக்களை மீட்டு, சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணயத்துக்காகப் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். அதுகுறித்த முழுமையான புரிதல் கொள்ளாதபோதிலும் அதனைப் புரிந்துகொண்டு அதனைச் சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய சிங்கள முற்போக்கு சக்திகள் மேற்கிளம்பிவருகின்றமையை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியுள்ளது. மாறுபட்ட அபிப்பிராயங்கள் தமிழ்-முஸ்லிம்-சிங்கள கருத்தியலாளர்கள் கொண்டிருந்தபோதும், ஆரோக்கியமான கருத்தாடலில் பொதுநோக்கில் ஒன்றுபடக் களம் உள்ளது என்பதை இந்தக்கருத்தாடல் எடுத்துக்காட்டியிருந்தது. தலைமையேற்ற கே.எஸ்.சிவகுமாரன் இதுகுறித்து நியாயமான பெருமிதம் தெரிவித்துக் கொண்டார். அவரும் ஏற்பாட்டளரான சிவகுருநாதனும் இதன்பொருட்டுப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.<b> நடிகர்கள் : இத்திரைப்படத்தில் இலங்கை நடிகர்களான நிரஞ்சனி சண்முகராஜா, ராஜ கணேசன், மால்கம் மசோடோ, போனிபாஸ் தைரியநாதன், தங்கேஸ்வரி தைரியநாதன், சுபாஷின் பாலசுப்ரமணியம் உட்பட பலர் நடித்துள்ளனர்.இயக்கம் - திரைக்கதை : அசோகா ஹந்தகமா. ஒளிப்பதிவு : சன்னா தேசப்ரியா இசை : கபிலா பூகாலராச்சி.</b><br />
இந்தப் புதிய வருடம் இனவாதங்களைக் கடந்து தீர்வை எட்ட முயலும் சக்திகளுக்கான களத்தைத் திறந்துவைத்துள்ளது என்பதற்கு கட்டியம் கூறிய நிகழ்வாக இதனைக் கருதலாம். புதிய தொடக்கமாக, இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற புத்தூக்கத்துடன் இந்தக் களத்தில், புதிய வருடத்தில் முன்னேறுவோம்.<br />
<u> </u><br />
<br />
*** படைப்பு தன்னளவில் எதை வெளிப்பட்டுத்துகிறது என்பதே முக்கியத்துவமுடையது; அதை எந்த நோக்கத்துக்காக வெளிப்படுத்த முயன்றார் படைப்பாளி என்பதைவிடவும். அவரது நோக்கத்தை மீறி தவறான வெளிப்பாட்டுக்கு இடமுண்டு. இதனை அக்கருத்தாடலின் போது எனது கருத்தாகக் கூறியிருந்தேன். எத்தனை அழிவுகளையும் கடந்து எம்முன் உள்ள சவால்களை முகம்கொண்டு வாழ்ந்தாக வேண்டும் என்ற கருப்பொருள், தெரியப்பட்ட திரைக்கதையின் தவறுகளால் பார்வையாளரிடம் வெற்றிபெற இயலாது போகும் என்பதற்கு "இனி அவன்" எடுத்துக்காட்டாகியுள்ளது. அந்தத் தவறை மீறித் தமிழ்த் தேசியவாத உணர்வு ஏற்படுத்தும்(அல்லது சிங்களப் பார்வையில் தவறாக சித்திரிக்கப் படுகிறது என்ற புரிதலில்) விமர்சனமாக முன்வைக்கப்பட்ட இரு கருத்து நிலைகள் (ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்பன குறித்தவை) பொருத்தமற்றன என்பதை மேலே குறிப்பிட்டேன். இலங்கையில் தமிழ்-முஸ்லிம்-சிங்கள இனவாத சக்திகள் சம அளவான தவறுகளை விதைத்து முப்பது ஆண்டுகள் இரத்தம் சிந்தியுள்ளோம். அழிவும் மூன்று (சம்பந்தமற்றிருந்த மலையக மற்றும் சிறுபான்மை) இனங்கள் அனைத்துக்கும் சம அளவில் ஏற்பட்டுள்ளன. தவறுக்கு ஒரு இனத்தை மட்டும் குற்றம் கூற முடியாதது போன்றே, பாதிப்பும் எமக்கு மட்டுமே அதிகம் என்றும் எந்த இனத்தவரும் சொல்லிவிட இயலாது. இனவாதத்தைக் கடத்தல் தொடர்பிலான படைப்பாக்கத்தில் ஒரே வடிவம் பொருத்தமற்றது. இதுகுறித்து அன்றைய கருத்தாடலில் நான் கூறிய கருத்து சரியாக வெளிப்படாமல் போயுள்ளது. அங்கே பின்னர் வெளிப்பட்ட கருத்திலிருந்தும், இங்கே ரஞ்சகுமார் கருத்தும் இதனை உணர்த்துகிறது. சிங்கள இனவாதத்தை எதிர்க்கையில், ஏனைய இனங்களுக்கான சுயநிர்ணயத்தை வலியுறுத்தத் தவறியிருந்தாலும் குற்றம்காண இடமிராது. அதுவே தமிழ் இனவாதத்தை அம்பலப்படுத்துகையில், பேரினவாதத்தால் ஒடுக்கப்படுவதைக் கவனம் கொள்ளாமல் தனித்துத் தமிழ் இனவாதத் தவறை மட்டும் சித்திரித்தால் பாரதூரமான தவறேற்பட இடமுண்டு. இதுவே "இனி அவனில்" ஏற்பட்டது. இதனைச் சிங்களப் படைப்பாளி என்றில்லாமல் தமிழ்ப் படைப்பாளி செய்திருப்பினும் குறைபாடக இனங்காணப்பட்டிருக்கும். இதுவே முஸ்லிம்கள் குறித்துப் பேசும்போது அவர்கள் இரு பேரினவாதங்களால் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற பின்னணி இல்லாது காட்டின் மிகப்பெரும் தவறாகும் என்பதை நாம் ஏற்றாக வேண்டும். புள்ளி ஒன்றாக இருப்பினும் வந்தடையும் திசைகள் வேறாக உள்ளதைக் கவனம்கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்த வருகிறேன். அன்று மட்டுமில்லாமல், இங்கே நீங்கள் உற்சாகமாக வெளிப்படுத்தும் உணர்வுநிலையும் இனவாதங்கள் கடந்து விடுதலைத் திசைமார்க்கத்தில் முன்னேற எம்மத்தியில் ஆர்வம் வலுத்துவருவதைக் காட்டுகிறது. புதிய தளத்தில் சந்திப்போம்.<br />
<br />
*** இன்றைய பொதுப்போக்கில் வெற்றிபெற்ற பேரினவாதம் தனது ஆதிக்க மேலாண்மையை அனைத்துத் தளங்களிலும் வெளிப்படுத்துகிறது என்பது உண்மையே. ஆயினும் அதனை ஏற்கமறுத்து, அதற்கெதிராக தனது படைப்புகளை வெளிப்படுத்தும் அசோக்க ஹந்தகம தமிழில் பேசிய (கமரா வாயிலாக காட்டிய) காட்சிப்படிமங்களில் இருந்த தவறுக்கு அப்பால்போய், அனைத்தையும் பேரினவாத நோக்கு என வாசிப்பது தவறல்லவா? அன்றைய கருத்துப்பரிமாறலில் இந்தக் குறைபாட்டுடனான பார்வை வெளிப்பாடு இருந்தபோதிலும், உணர்ச்சிவசப்பட்ட இனவாத வக்கிரம் இருக்கவில்லை. அதற்கான அடிப்படைக் காரணமே, ஹந்தகம பேரினவாதத்துக்கு எதிராக உள்ள படைப்பாளி என்பதுதான். அவர்மீதான சந்தேகம்(படைப்பாக்கம் பற்றிய எதிர் விமர்சனம்) எல்லை கடந்து போகவில்லை என்றவகையில், அந்தப்பொருளே அதிகம் பேசப்பட்டாலும், இனவாதம் கடந்த உரையாடல் களம் அது என்பது முதன்மை பெறுகிறது. Ranjakumar Somapala S ரஞ்சகுமார், ஏனைய பேரினவாதிகளோடு ஹந்தகமவை ஒரே வரிசையில் வைக்கும்படி உங்களைத் தூண்டும் விமர்சனங்களுக்கு நீங்கள் ஆட்பட்டுள்ளீர்கள்; என்வரையில் இத்திரைப்படத்தில் சில விமர்சனங்கள் இருந்தபோதிலும் நிராகரிக்கக்கூடாதது என்பதற்காகவே இப்பதிவுகள். ஏதோ ஒருவடிவில் ஏதோ ஒருவடிவில் நீங்களே படத்தைப் பார்த்தால் என் கருத்தை ஏற்பீர்கள்.<br />
<br /></div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-40504572949148364422012-12-22T09:11:00.002-08:002012-12-22T09:11:32.581-08:00முன்னோடி ஆளுமைகள் குறித்து சில ..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<h2 class="uiHeaderTitle">
<div>
</div>
</h2>
</div>
<span><div>
<a href="http://m.ak.fbcdn.net/photos-a.ak/hphotos-ak-ash3/154399_389785961107749_1242650980_a.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img alt="" border="0" class="photo_img img" height="200" src="http://m.ak.fbcdn.net/photos-a.ak/hphotos-ak-ash3/154399_389785961107749_1242650980_a.jpg" width="157" /></a><span class="photo_left"></span> <span style="font-family: "Helvetica Neue",Arial,Helvetica,sans-serif; font-size: xx-small;"> - ந இரவீந்திரன் </span>-<br />
சென்ற வாரம் ஞாயிறு அன்று(16.12.2012) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் லெனின்
மதிவானத்தின் 'ஊற்றுக்களும் ஓட்டங்களும்(மீனாட்சி அம்மாள் முதல்
மார்க்சிம் கோர்க்கி வரை)' எனும் நூல் மூத்த படைப்பாளி தெளிவத்தை ஜோசப்பின்
தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்த நிகழ்வு குறித்து பேசுவதற்கு
நிறைய உண்டு. அது குறித்து பின்னால்.<br />
நூல்வெளியீட்டில் வௌ;வேறு நிகழ்வுகளோடு, எனது ஆய்வுரையும்
இடம்பெற்றிருந்தது. அந்த எனது உரையில் ஏற்பட்ட கருத்துபேதம் தொடர்பாக இங்கு
உரையாடுவது அவசியம் எனக் கருதுகிறேன். எனது கருத்து தெளிவுபடுத்தப்பட
வேண்டியுள்ளமை, நண்பர்களது தப்பபிப்பிராயத்தைப் போக்குவது தொடர்பிலானது
என்பதோடு எமது சமகாலப் போக்குத் தொடர்பில் அவசியப்படும் விவாதப் பொருள்
என்பதினாலும் ஆகும்.<br />
மேற்படி நூலில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் குறித்த
கட்டுரைகள் இரண்டு உள்ளன் நூலின் பெரும்பகுதி அவர்களது கருத்துகளை
முன்னிறுத்தி லெனின் மதிவானம் தனது கருத்துகளை வெளிப்படுத்துவதாகவும்
அமைந்திருந்தது. நூல் அச்சுக்குப் போவதற்கு முன் சிவத்தம்பி அவர்களது
கருத்துகள் தொடர்பில் எனது வேறுபாட்டை மதியிடம் கூறியிருந்தேன். அவருக்கும்
பேராசிரியர் மீது அடிப்படையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் நூலில் அவரை
முன்னிறுத்தும் விடயங்களில் அதனளவுக்கு அவர்மேல் தனக்குள்ள மரியாதையை மதி
கூறியிருந்தார். குறிப்பாக மலையகத்தை ஆளுமையுடன் எழுச்சிகொள்ளச் செய்ய அவர்
ஆற்றிய பங்களிப்பில் மிகுந்த மதிப்புணர்வைக் கொண்டிருப்பது தெரிந்தது.<br />
அந்த நியாயத்தை ஏற்றுக் கொண்டதால், அவரது கருத்து நூலில் ஏற்படுத்தும்
வேறுபட்ட பார்வை என்பதை அப்போதைக்கு அழுத்தாதிருந்தேன். இப்போது ஆய்வுரை என
வந்தபோது அதனைச் சொல்லாதிருக்க இயலவில்லை. எப்படி சர்ச்சைக்காகவே ஏதும்
கருத்தை முன்வைப்பதில்லையோ,அவ்வாறே விரும்பப்பட மாட்டது என்பதற்காக சொல்ல
வேண்டியதைச் சொல்லாதிருந்ததில்லை என்றவகையில் அன்று அதுகுறித்துப்
பேசியிருந்தேன். எனது உரையை முழுமையாக பதிவு செய்கிறபோது அதன் விபரத்தைக்
காண இயலும். இங்கு சுருக்கமாக் சோசலிச யதார்த்தவாதம் சோசலிச நாடுகளில்
பேசப்பட்டிருக்க வேண்டியது, நாங்கள் இங்கே முன்வைத்திருக்கக் கூடாது என்று
பின்னாலே சிவத்தம்பி பேசியிருந்தபோதிலும், முன்னதாக அதுசார்ந்து அவர்
வெளிப்படுத்திய கருத்து அடிப்படையில் மதி சிறுகதைகள் தொடர்பில் கூறியுள்ள
கருத்தில் எனக்கு வேறுபட்ட அபிப்பிராயம் உள்ளது என்றேன். இயற்பண்புவாதம்,
யதார்த்தவாதம் தொடர்பான வரையறைகளோடு கைலாசபதி முன்னிறுத்திய பார்வையே
சரியானது எனக் கருதுவதையும் கூறியிருந்தேன்.<br />
<span class="photo_right"></span><br />
<a href="http://m.ak.fbcdn.net/photos-d.ak/hphotos-ak-ash3/12195_389786177774394_822293722_a.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img alt="" border="0" class="photo_img img" src="http://m.ak.fbcdn.net/photos-d.ak/hphotos-ak-ash3/12195_389786177774394_822293722_a.jpg" /></a>கூடவே, பேராசிரியர் சிவத்தம்பி எவ்வளவு பெறுமதியான பங்களிப்பை
வழங்கியுள்ளாரோ, அவ்வளவுக்குக் குளறுபடிகளையும் பண்ணி வைத்துள்ளார்
என்றேன். இந்தக் கருத்தே நண்பர்களிடையே அபிப்பிராயபேதத்தை
ஏற்படுத்தியிருந்தது. இப்படிச் சொல்லமுடியுமா, அவர் எவ்வளவு பெரிய ஆளுமை,
இது அவரைக் கொச்சைப்படுத்துவது போன்றல்லவா இருக்கிறது என்பதாக
விவாதிக்கப்பட்டுள்ளது. என்னோடு நேரடியாக உரையாட இயலாததால், மதியுடன் இது
தொடர்பாக நண்பர்கள் வருத்தப்பட்டுள்ளனர். இந்த விமர்சனத்துக்கு அப்பால்
எனக்கு சிவத்தம்பி மீது இருக்க அவசியமான மதிப்புணர்வு உள்ளமையையும், அவரோடு
நான் பல சந்தர்ப்பங்களில் அளவளாவியதையும் (பெரும்பாலான சந்தர்ப்பங்களில்
இருவரும் ஒன்றாகச் சென்று சந்தித்துள்ளோம்) லெனின் மதிவானம்
விளக்கியிருக்கிறார்.<br />
இதனை அவர் விட்டுக்கொடுத்திருக்க இயலாது; சில நாட்களுக்கு முன்னர்தான்
சிவத்தம்பியை மதிக்கத் தக்க ஒரு மார்க்சியர் என என் அபிப்பிராயத்தை
மதியிடம் கூறியிருந்தேன். அது இன்னொரு எமது மகத்தான ஆளுமை தொடர்பில் வந்த
விவாதத்துடன் சம்பந்தப்பட்டது. தோழர் சண்முதாசன் புரட்சிகரக் கொம்யூனிஸ்ட்
இயக்கத்தின் மகத்தான ஒரு பெரும் தலைவர். அவர் இயங்கியல்-பொருள் முதல்வாத
அடிப்படையில் இயங்கியவர் என்ற வகையில் விமர்சனங்களுக்கு அச்சப்பட
அவசியமில்லாதவர்; அவ்வாறே வழிபாட்டையும் ஏற்க மறுப்பவர். அவர் வறட்டுவாத
நிலைப்பாட்டிலிருந்து மூன்றுலகக் கோட்பாட்டை கையாண்டவிதமும், சுயநிர்ணய
உரிமையை ஏற்க மறுத்தமையும் காரணமாக 1978 இல் கட்சியில் ஒரு பிளவு
ஏற்பட்டமையை லெனின் மதிவானம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டபோது, 'அதெப்பிடி
சண் பற்றி இப்படிச் சொல்லலாகும்...உமக்கு சண்ணும் மார்க்சியவாதி,
சிவத்தம்பியும் மார்க்சியவாதியா' என்பது போன்ற குரலில் மறுப்புரைகள்
வெளிப்பட்டன.<br />
இந்த வழிபாட்டு அபிப்பிராயம், அடிப்படையில் தமது தவறான நிலைப்பாட்டை
நியாயப்படுத்தும் முயற்சியே அல்லாமல், சண்ணுக்கு மதிப்புச் சேர்ப்பதல்ல.
நாங்கள் சண் மீது விமர்சனத்தை முன்வைக்கும் அதேவேளை, இவர்களையும் விட
அதிகமாயே சண்மீதான அபிமானங்கொண்டுள்ளோம். அவர் முன்னெடுத்த சோசலிச சமூக
உருவாக்கத்துக்கான போராட்டத்தின் இன்றைய திசைமார்க்கத்தைக் கண்டறியக்
கருத்தியல் தளத்தில் போராடுகிறோம் என்ற வகையில் சண்மீதான எமது மதிப்புணர்வு
பொருளுள்ளது. இவர்கள் தமது வலது சாரித் தமிழ்த் தேசியத்துக்கு அனுசரணையாக
சண்ணைக் குறுகத் தறிக்க முயல்வது உண்மையில் வேடிக்கையான ஒன்று. சிவத்தம்பி
மார்க்சிய நோக்கில் தமிழர் பண்பாட்டுச் செல்நெறியை ஆய்வு செய்து மகத்தான
பங்களிப்பை வழங்கியுள்ளார்; அதேவேளை, வலதுசாரித் திரிபு வாதத்துக்கு
ஆட்பட்டு இழைத்த தவறுகளை விமர்சனத்துக்குள்ளாக்குகிறோம். அவ்வாறே சாதியத்
தகர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட உழைக்கும் மக்களது பல்வேறு
போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய பாட்டாளி வர்க்கத் தலைவரான சண்முகதாசன்,
இடது திரிபுவாத நிலப்பாட்டைக் கொண்டிருந்த சந்தர்ப்பங்களையும்
விமர்சனத்துக்குள்ளாக்குகிறோம். இருவரும் வேறுபட்ட தளங்களில் பங்களிப்பை
நல்கியவர்கள். பங்களிப்பின் அளவிலும் பண்பிலும், அவ்வாறே விமர்சன
அம்சங்களின் குணாம்சங்களிலும் வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், தத்தம்
தளங்களில் மார்க்சியத்துக்கு ஆற்றிய பணியின் காரணமாக இருவரையும்
மதிக்கிறோம் என்பதால், அவர்களில் எவருக்குமோ, அல்லது எமக்கோ தீட்டு ஏதும்
பட்டுவிடப் போவதில்லை.<br />
அந்தவகையில், சிவத்தம்பியை நான் கொச்சைப்படுத்துவேன் என்றிருக்க இயலாது
என மதியால் அடித்துச் சொல்ல இயலுமாயிற்று. இருவரையும் மதிப்பது குற்ற
விமர்சனத்துக்குரியதில்லை என்று ஓரிரு வாரங்களின் முன்னர் கூறியிருந்தேனே?
இந்தக் கருத்துபேதம் ஏற்பட மற்றொரு காரணம், தமிழ்த் தேசியத்தை நான்
ஏற்காமையால், சிவத்தம்பி ஏற்றமையைத் தாக்குகிறேன் என்ற நினைப்பு.<br />
இதனையும் மறுப்பதில் சிரமம் இருக்கவில்லை. அவர் வலதுசாரிப் பிற்போக்கு
தமிழ்த்தேசியத் தலைமையை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்; அதை
விமர்சனத்துக்கு உள்ளாக்குவதில் நண்பர்கள் உடன்பாடு கொண்டனர்.
தமிழ்த்தேசியம் சுயநிர்ணயத்துக்காக போராட அவசியம் உள்ளதைக் கூறும் அதேவேளை,
அதைப் பலப்படுத்தும் வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்துவத் தேசிய
அபிலாசைகளை இனங்கண்டு, அதன் கோரிக்ககளை உட்படுத்த வேண்டும் எனும் இரட்டைத்
தேசியக் கோட்பாட்டை பற்றி லெனின் மதிவானம் கூறியபோது அந்த நண்பர்கள் அது
குறித்து அறிந்திருக்கவில்லை என்பது தெரிந்தது. அத்தகைய வடிவில் தமிழ்த்
தேசிய ஏற்பு எமக்கு உள்ளமைய அறிந்த நிலையில் கருத்து வேறுபாடு தற்போதைக்கு
தீர்க்கப்பட்டுள்ளது.<br />
<a href="http://m.ak.fbcdn.net/photos-f.ak/hphotos-ak-ash3/547608_389786347774377_2045845603_a.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img alt="" border="0" class="photo_img img" src="http://m.ak.fbcdn.net/photos-f.ak/hphotos-ak-ash3/547608_389786347774377_2045845603_a.jpg" /></a><span class="photo_left"></span>
இங்கு பிரதான விடயம், எமது முன்னோடிகளை எப்படி உள்வாங்கப் போகிறோம்
என்பதுதான். மேற்படி உரையின் தொடக்கத்திலேயே, நாம் கலை-இலக்கிய-பண்பாட்டுத்
தளத்தில் அதிக உடன்பாட்டோடு தொடரும் கைலாசபதியின் விமர்சனங்களில் கருத்து
மாறுபாடு கொண்டிருந்த இடத்தைச் சொல்லியிருந்தேன். அது எவருக்கும் கொச்சைப்
படுத்துவதாகப்படாது; அவரை வழிபாடு செய்கிறோம் என்பவர்களுக்கு, அட அவர்மீதே
விமர்சனத்தை வைக்கிறார்களே என்றுதான் படும். வேறு ஆளுமைகளில்
விமர்சனத்துக்கான இடம் அதிகம் என்பதற்காக அவர்களை நிராகரிக்கிறோம் என எண்ண
வேண்டியதில்லை. இப்போது பரந்த ஐக்கிய முன்னணியாக புதிய பாணி வேலை முறை
ஒன்று தேவையாகியுள்ளது. அதன் புரிதலோடு, ஆளுமைகள் சார்ந்து கட்சிகட்டி
மோதுவதை விடுத்து, ஒவ்வொருவரது பங்களிப்பையும் கையேற்று வளர்க்கும்
அதேவேளை, விமர்சனம்-சுய விமர்சனம் என்ற கையாளுகையோடு ஆரோக்கியமான
விவாதங்களை முன்னெடுப்போம். மாஒ சொன்னவாறு பத்து வீதம் மார்க்சியத்தை
முன்னெடுக்கிறவரோடும் ஐக்கியப்பட ஏற்ற வாய்ப்பைக் கண்டறிவோம் - அதற்காக
விமர்சனத்தைக் கைவிட வேண்டியதில்லை. ஒன்றுபடும் நோக்கோடு விமர்சனப்
போராட்டத்தை முன்னெடுத்து, முன்னிலும் வலுவான ஒற்றுமையைக்
கட்டியெழுப்புவோம்.<br />
மக்கள் போராட்டங்களில் மகத்தான வெற்றிகள் சாத்தியப்பட்டன. ஒக்டோபர் 21
எழுச்சி மார்க்கம் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. அந்த அனுபவங்களை
உள்வாங்கி எமக்கான கோட்பாட்டு உருவாக்கத்தைக் கட்டமைப்போம்.
தோல்விகளிலிருந்தும் பெறுமதிமிக்க படிப்பினைகளைப் பெறுவோம். இதன் வாயிலாக,
போராட்டம் - தோல்வி - மீண்டும் போராட்டம் - தோல்வி - மீண்டும் போராட்டம்,
வெற்றிவரை எனும் வரலாற்றுச் செல்நெறியைத் தொடர்வோம்.</div>
</span></div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-67205528761175860562012-12-11T22:08:00.001-08:002012-12-11T23:35:32.369-08:00தமிழ் ஆய்வில் மார்க்சியத் திறனாய்வு எதிர்நோக்கும் பிரச்சனைகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0ONQ_RVMz6GRc8l-C8tPSlvtihYJoEfrf7sQ4Ifb7-qQcrcRO_EKPJ5s3Cm6Q91u29-z0xnWQQSl0cYQotDv44e6Im8LnUhp7imA0EJNifwTbVK4REPr-DKJyxIgCGtYUDRO-JP7LPTUl/s1600/marx.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0ONQ_RVMz6GRc8l-C8tPSlvtihYJoEfrf7sQ4Ifb7-qQcrcRO_EKPJ5s3Cm6Q91u29-z0xnWQQSl0cYQotDv44e6Im8LnUhp7imA0EJNifwTbVK4REPr-DKJyxIgCGtYUDRO-JP7LPTUl/s200/marx.jpg" width="160" /></a></div>
<h4 style="text-align: left;">
<b><u><span style="color: red;">தமிழ் ஆய்வில் மார்க்சியத் திறனாய்வு எதிர்நோக்கும் பிரச்சனைகள்</span></u></b><span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;"> </span><span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: xx-small;"> -ந.இரவீந்திரன்</span></h4>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இங்கு எமது பிரதான பேசுபொருள் தமிழில் மார்க்சியத் திறனாய்வு எதிர்நோக்கும் சவால்கள் எனும்வகையில், அதற்கான வரலாற்றோட்டத்தை மிகச் சுருக்கமாகப் பார்த்து, இன்று முகங்கொள்ளும் பிரச்சனைகளை(அது கண்ணோட்டம் சார்ந்தது எனும்வகையில் அதனை) விரிவாகப் பார்ப்பது உகந்தது. மார்க்சியத் திறனாய்வு தமிழியலுக்கு வழங்கிய பங்களிப்பை முதல் பகுதி பேசும். இரண்டாம் பகுதியில் இந்தச் செல்நெறிக்கான நெருக்கடியை அலசுவோம். பிரச்சனைகளும், அதன் பேறான இடர்ப்பாடுகளிலிருந்து மீளக் கண்டடைந்து வரிக்கவேண்டிய பார்வைத் தெளிவும், அதன்வழியேயான செயற்பாட்டு வடிவமும் குறித்து இறுதியில் அலசுவோம்.</div>
<div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<span style="color: #222222;"> </span><b><u><span style="color: red;"> -1-</span></u></b></div>
<div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<b><u><span style="color: red;">சாதனைகள்</span></u></b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
உண்மையில் மார்க்சிய ஆய்வுகள் தமிழியலில் பெறும் முக்கியத்துவத்துடன் ஒப்பிடும்போது மார்க்சிய நோக்கிலான விமரிசனங்கள் போதிய அளவு இல்லை எனும் குற்றச்சாட்டு கவனிப்புக்குரியது. இங்கு ஆய்வைக்காட்டிலும் விமரிசனமே அதிக அக்கறைக்குரியது. அதேவேளை, விமரிசனப் பார்வைக்கு உதவிய வகையில் மார்க்சிய ஆய்வுக்கண்ணோட்டமும் கவனிப்புக்குரியது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
தொ.மு.சி.ரகுனாதன், முத்தையா, வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரது மார்க்சியத் திறனாய்வு பிரயோகிக்கப்படுவதற்கு முன்னர் இலக்கியத்தை ரசனை அடிப்படையில் அணுகுவதே திறனாய்வாகக் கொள்ளப்பட்டது. அதற்கு அமைவாகக் கொண்டு கூட்டிப் பொருள் கூறுவதும் இதன்பாற்பட்டதாய் இருந்தது. ரசிகமணி டி.கே.சிதம்பரனார் முதல் ரசிகமணி கனகசெந்திநாதன் வரை இவ்வகைத் திறனாய்வில் கைதேர்ந்தவர்களாய் இருந்தனர். பழம்பெரும் இலக்கியப் பனுவல்களை மட்டுமன்றி நவீன படைப்புகளையுங்கூட அவற்றின் ரசனையை அடிப்படையாகக் கொண்டு அளவிடுவதோடு அமைதிகொள்வது இவர்களுக்குப் போதுமானதாக அமைந்தது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இத்தகைய ரசனை மோகம் அன்று மேலோங்கிவந்த ஆதிக்கசக்திகளது இந்தியத் தேசியத்தை ஏற்புடையதாக்குவதாக அமைந்தது. இதனை முறியடிக்கும் எதிர்த்தேசிய மனப்பாங்கோடு எழுச்சியுற்ற திராவிட அரசியலும் மாற்றுப் பிரதிகளைத் திராவிட உணர்வோடு முன்வைப்பதாக அமைந்ததேயன்றி ரசனை மனப்பாங்கைக் கடந்து புதிய தளங்களுக்கு விரிவாக்கம்கொள்ள இயலவில்லை. முந்தியவர்களுக்கு கம்பராமாயணம் பிரதான பிரதியெனில் திராவிடர் இயக்கம் சிலப்பதிகாரத்தை முன்னணிக்குரிய படைப்பாக நிறுத்தியது. இவர்கள் போற்றும் நவீன படைப்புகளும் அடுக்கு மொழிகளுடன் அலங்கார நடையைப் போற்றுமளவுக்கு சமூகப் பிரச்சனைகளுக்கோ பெறுமானங்களுக்கோ அதிக அழுத்தம் கொடுத்ததில்லை(ஒப்பீட்டுரீதியி<wbr></wbr>ல் பிராமணத் தேசியத்தைவிட திராவிடத் தேசியம் சமூக ஊடாட்டங்களை அதிகமாய் வெளிப்படுத்தியிருந்ததை வலியுறுத்துவது அவசியம்).</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இத்தகைய போக்குகள் நிலவிய சூழலில் தொ.மு.சி.ரகுநாதன், முத்தையா, வானமாமலை போன்றோர் சிலம்பின் பின்புலத்தையும் - கம்பராமாயணம் இலங்கையைச் சோழர் ஆக்கிரமித்திருந்த காலப்படைப்பாக எவ்வாறு வெளிப்படக் காணலாம் என்பதையும் பட்டவர்த்தனமாய்க் காட்டுகிறவர்களாக இருந்தனர். பழம்பெரும் படைப்புகளையும் நவீன ஆக்கங்களையும் அவையவற்றுக்கான சமூகப் பின்புலத்தோடும் வரலாற்றுக்கட்டங்களோடும் இணைத்துப்பார்க்கும் ஆய்வு முறையியலை இந்த மார்க்சியத் திறனாய்வாளர்கள் முன்வைத்தனர். இதன்பேறாக நெசவுத் தொழிலாளர்களது வாழ்வையும் போராட்டங்களையும் பேசும் தோ.மு.சி.யின் "பஞ்சும் பசியும்" எனும் தொழிலாளி வர்க்க முதல் நாவல் தோன்ற இயலுமாயிற்று.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
தமிழகத்தில் பிராமணத்தேசியம், திராவிடத்தேசியம் என்பவற்றின் வெளிப்பாடான ரசனைத் திறனாய்வுகளின் போதாமைகளை வர்க்கப்பார்வையில் மார்க்சியத் திறனாய்வாளர்கள் இவ்வகையில் வெளிப்படுத்தியபோது இளைய தலைமுறையினர் அதன்பால் ஈர்க்கப்பட்டு புதிய செல்நெறியொன்று வளர ஏதுவாயிற்று; இருப்பினும், வரலாற்றின் எழுச்சி நிலையில் இந்தியத் தேசியம்(பிராமணத் தேசியம்), தமிழ்த்தேசியம்(திராவிடத்தேசி<wbr></wbr>யம்) என்பனவே காணப்பட்டன. இதனோடு ஒப்பிடும்போது ஐம்பதாம் ஆண்டுகளில் இலங்கையில் தோற்றம்பெற்று வளர்ந்த மார்க்சியத் திறனாய்வு தமிழியலின் பிரதான செல்நெறியாக இங்கு வெளிப்பட்டது என்பது கவனிப்புக்குரியது. இதன் விமர்சன-ஆய்வியல் ஆளுமைகளாக வெளிக்கிளம்பிய கைலாசபதியும் சிவத்தம்பியும் தமிழகத்திலும்கூட முதன்மைக் கணிப்புக்குரியவர்களாய்த் துலங்கினர்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
எந்தவொரு படைப்பையும் எந்தவகை(மதத்துக்குரிய பிராமணத்தேசிய அல்லது தமிழ்த்தாய் வணக்கத்துக்கான திராவிடத்தேசியப்) புனிதங்களுக்குள் மட்டுப்படுத்திப் பார்க்காமல் பாட்டாளிவர்க்க உலக நோக்கில் பகுத்தாராய்ந்து அதன் சமூக உள்ளடக்கங்களை வெளிக்கொணர்வதாக மார்க்சியத் திறனாய்வு அமைந்தது. தமிழரின் முதற் பொற்காலம் எனத் திராவிடரியக்கம் புளகாகிதங்கொண்ட சங்க இலக்கியம் என்பது, தீயிடலும் கொலைகளும் மலிந்து ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் ஏற்றத்தாழ்வுச் சமூக முறை தோற்றம் பெற்ற படைப்பு வெளிப்பாடு எனக் காட்டினர் மார்க்சியத் திறனாய்வாளர்கள். பக்திப் பரவசத்துக்குரியது எனப் பிராமணத்தேசியம் கொண்டாடிய திருமுறைகளும் பிரபந்தங்களும் நிலப்பிரபுத்துவம் ஆதிக்கம்பெறப் போராடிய சமூகமாற்ற அரசியல் பண்பாட்டு இயக்கத்தின் இலக்கிய வெளிப்பாடுகள் எனக்காட்டினர்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPcCvnnGyAYIHEZzI04vwoBZaDBf2gHRfchSHtWoxiXfhInRc_GtxDXFDaFboniKXWOrr_LWPQNf-j2UInUYWf1blN5IhcK90PioOkTFqpETdcu5WephQm15OYp1AE2usVUh8jw08ghi-7/s1600/images-horz.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPcCvnnGyAYIHEZzI04vwoBZaDBf2gHRfchSHtWoxiXfhInRc_GtxDXFDaFboniKXWOrr_LWPQNf-j2UInUYWf1blN5IhcK90PioOkTFqpETdcu5WephQm15OYp1AE2usVUh8jw08ghi-7/s320/images-horz.jpg" width="320" /></a>பாரதி முதல் வானம்பாடிகள் வரையானோர், சோமசுந்தரப் புலவர் முதல் முருகயன் வரையானோர் தேசிய உணர்வோடு நவீன இலக்கிய வெளிப்பாட்டை வழங்கியவாறினை- பாரதிதாசன் முதல் மஹாகவிவரை தமிழ்த் தேசியத்தை முற்போக்கு அடையாளங்களுடன் வெளிப்படுத்த முனையும்போது தேசியவாத முடக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களையும் மார்க்சியத் திறனாய்வு வெளிச்சம் போட்டுக்காட்டியிருந்தது. இந்த விமரிசனப் பட்டைதீட்டல் வாயிலாக மக்கள் இலக்கியம் விருத்திபெறுவதற்கு அடிகோலினர்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இலங்கையில் ஐம்பதாம் ஆண்டுகளில் எழுச்சிபெற்ற முற்போக்கு இலக்கிய இயக்கம் தமிழ்ப் படைப்புலகத்துக்குப் புதிய பரிமாணங்களை வழங்குவதற்கு இந்த மார்க்சியத் திறனாய்வு பெரும் பங்களிப்பை நல்கியுள்ளது. மார்க்சியர்கள் வெறும் வர்க்கம் பற்றி மட்டுமே அக்கறை கொள்வர் என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கும் வகையில் சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை மார்க்சியர்கள் தலைமையேற்று இங்கே நடாத்தியுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் சிறுபான்மைத் தமிழர் மஹாசபை என ஒரே அமைப்பாக்கம் கொள்ளலும், சாதியத் தகர்ப்பை இலட்சியமாகக் கொள்ளத்தக்க ஆதிக்க சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் அங்கம் பெறத்தக்க தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமும் இங்கே உருவாக இயலுமாயிற்று. இதற்கும் சரி, எந்தவொரு சாதியும் எதிராகக் கருதப்படாமல் சாதியம் தகர்க்கப்படுவதே இலட்சியம் என வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களை முன்னெடுக்க இயலுமானதற்கும் சரி மார்க்சிய வழிகாட்டலே இங்கு அடிப்படையாக அமைந்தது என்பது அழுத்தியுரைக்க அவசியமான ஒன்று. சாதியவாதம் தலைதூக்காமைக்கு அதன் பாட்டாளிவர்க்க உலக நோக்கே அடிப்படைக் காரணமானது(அத்தகைய பார்வையற்று இந்தியாவில் பெரியாரியமும் அம்பேத்கரியமும் செயற்பட்டபோது, சாதிமுறைமையை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகத்தவறினர்; சாதியத்தைப் புரிந்துகொள்வதற்கு அவை பங்களிப்பை நல்கியபோதிலும், இந்த எல்லைப்பாட்டுடன் சாதியொழிப்புக்காக முனைந்தபோது) பிராமணியத்தை எதிரியாக முன்னிறுத்தவும், தவிர்க்கவியலாதவகையில் பிராமணர்கள் எதிரிகளாகப் பார்க்கப்படும் நிர்ப்பந்தம் நடைமுறையில் நிதர்சனமாயிற்று. ஆகவும் ஒவ்வொரு சாதியும் அருகிலுள்ள மற்றொரு சாதியை எதிரியாகக் காணும் நிலை ஏற்பட்டது. இதன்பேறாக, சாதியத் தகர்ப்புக் குறிக்கோள் திசைமாறிச் சாதியம் வலுப்பெறவே பெரியாரியமும் அம்பேத்கரியமும் வழிகோலின).</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
சாதியத் தகர்ப்புக்கான போராட்டங்களை இங்கே படைப்பாக்கம் செய்கையில் சாதியவாதம் மேற்கிளம்புமாயின் அதையுங்கூட மார்க்சியத் திறனாய்வு தோலுரித்துக் காட்டத் தவறியதில்லை. "பஞ்சமர்" முதல் "பஞ்சகோணங்கள்" நாவல்கள்வரை டானியல் படைப்பு முயற்சிகளில் சாதியவாதம் தலைதூக்குகிறது எனும் விமரிசனத்தை மார்க்சிய விமரிசகர்கள் முன்வைத்தனர். சாதியத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட அனுபவங்களை ஒரு கொம்யூனிஸ்ட்டாக அவர்களோடு பங்கேற்று வாழ்ந்து இயங்கிப் பட்டறிவு பெற்றவன் என்கிறவகையில் பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டத்தில் நாவல்களாக எழுதுகிறேனேயல்லாமல் சாதியவாத அடிப்படையில் அல்ல என மீண்டும் மீண்டும் டானியல் வலியுறுத்தத் தவறவில்லை. இருப்பினும் இந்த விமரிசனங்களில் உண்மையில்லாமலும் இல்லை; அதனை மனங்கொண்டு எவ்வகையிலும் சாதியவாதம் தலைதூக்காதவகையில் தனது சொந்தக்கிராமத்தின் சமூக அசைவியக்கப்போக்கை "கானல்" எனும் நாவலாக டானியல் படைப்பாக்கித் தந்தமையை அவதானிக்கலாம். அவரது உன்னத பங்களிப்பாக அந்த நாவல் அமைந்துள்ளது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இலங்கையில் இவ்வகையில் மார்க்சியத்துக்கான பரிமாணத்தை ஏற்படுத்தித் தந்த அந்த இயங்காற்றலுக்குரிய இலங்கை மார்க்சியர்கள் பின்னர் பிரதான செல்நெறியாக வளர்ந்த தமிழினத் தேசியம் பற்றிய புரிதலின்றி இருந்தனர். தமிழகத்தில் சாதியத்துக்கு எதிரான போராட்டம் இங்குபோல் பிரதான நிலையில் கவனிக்கப்பட்டதில்லை. இதன்பேறாக இங்கே இனத்தேசியமும், அங்கே தலித்தியமும்(சாதித்தேசியமும்) மார்க்சிய இயக்கங்களுக்கு சவாலாக மாறி, எண்பதுகளின் புதிய எழுச்சிகள் மார்க்சியத்தைக் கேள்விக்குள்ளாக்குவனவாக அமைந்தன.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
மரபுப்பிடிக்குள் கட்டுப்பட்டு பழைமை பேணும் பாரம்பையத்தில் மூழ்கியிருந்த தமிழ்ச் சமூகத்தையும் இலக்கியத்தையும் அதிர்வுக்குள்ளாக்கிய மார்க்சிய இயக்கம் இவ்வகையில் "பழைமையாகும்" நிலை எண்பதுகளைத் தொடர்ந்த செல்நெறியாக ஆனது; தலித்தியம், இனத்தேசியம், பெண்ணியம் என்பன எண்பதுகளைத் தொடர்ந்து பிரதான பேசுபொருள்களாயின. அறுபதாம் ஆண்டுகளில் பழைமைவாதத்துக்கு எதிரான மரபுப் போராட்டமும் தேசிய இலக்கியமும் பிரதான இலக்கிய விவாதப் பொருள்களாகும். இதன்பேறாக வாழ்வோடு சம்பந்தமின்றி இயற்கை எழிலைப் பாடுபொருளாகக்கொள்வதும் ரசனை மனப்பாங்கில் திழைப்பதும் தகர்க்கப்பட்டு, வாழும் சொந்த மக்களைப் பேசுபொருளாக்கும் படைப்பாக்கங்கள் எழுச்சிபெற்றன. பொதுப்படையான இலக்கியம் என்பதைக் கடந்து பிரதேசிய இலக்கியங்கள் - மண்வாசனைப் படைப்பாக்கங்கள் தோற்றம்பெற்றன. இதைச் சாதித்த மார்க்சிய இயக்கமும் புதிய போக்குகளின் வீச்சில் தன்னைப் புடமிடுவது அவசியமாயிற்று.</div>
<div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<span style="color: #222222;"> </span><span style="color: red;"><b> <u> 2</u></b></span></div>
<div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<span style="color: red;"><b> நெருக்கடி</b></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
எண்பதாம் ஆண்டுகளில் இலங்கையிலும் தமிழகத்திலும் மட்டுமல்ல, உலக அளவிலேயே மார்க்சிய இயக்கம் நெருக்கடியை முகங்கொண்டது. அறுபதுகளின் இறுதிக்கூறில் பிரான்சின் மாணவர் போராட்டங்கள், பாட்டாளி வர்க்கமல்லாத தலைமைச் சக்திகள் பற்றிப் பேசுகிற நிலையை உருவாக்கிற்று. அதற்கான நீடிப்பில் இங்கே, வர்க்கங்கள் பற்றிப் பேசுவது பொருளற்றது - இனத்தேசியம், தலித்தியம், பெண்ணியம் போன்றன பற்றியே இலக்கியங்களும் விமரிசகர்களும் சமூக இயக்கங்களும் கவனங்கொள்ள அவசியமேற்பட்டுள்ளது என வலியுறுத்தப்பட்டது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
எமது சமூக அமைப்பில் சாதிமுறை பெறும் முக்கியத்துவத்தை(கோட்பாட்டு அளவிலன்றி நடைமுறையிலேனும்) விளங்கிக்கொண்ட இலங்கையில் இனத்தேசியம் கவனிக்கப்படாமையும், தமிழகத்தில் சாதி இழிவுகளுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படாமையும் மார்க்சிய இயக்கங்களில் இருந்த தவறென்பதை ஏற்கனவே கண்டுள்ளோம். இதன்பேறாக, இங்கே இனத்தேசியம் யுத்த்மாக பரிணமித்தமையும் - தமிழகத்தில் தலித்தியவாதம் சாதி மோதல்களையும் சாதிக்கட்சிகளை வளர்த்தமையும் எத்தகைய வளர்ச்சிகளை ஏற்படுத்தின? முன்னர் மூன்று தசாப்தங்கள் மார்க்சியத் திறனாய்வு ஏற்படுத்திய சாதனைகளுடன் ஒப்பிடக்கூடியவாறு இதற்குரிய மூன்று தசாப்தங்களில் எதுவும் எட்டப்படவில்லை; மட்டுமல்லாமல் தோல்விகளும் பின்னடைவுகளுமே ஏற்பட்டன. இலங்கையில் யுத்தத்தின் தோல்வி வெளிப்படையானது. அவ்வாறே தமிழகத்திலும் தலித்தியம் தோல்வியுற்றமை குறித்து தலித் சிந்தனையாளர்களே இன்று விமரிசிக்க முற்பட்டுள்ளனர். தலித்தியத்தினால் குறைந்தபட்சம் தலித் சாதிகளையேனும் ஐக்கியப்படுத்த இயலவில்லை, ஓரடிகூட முன்னேற்றம் ஏற்படவில்லை, மதவாத-இனவாத சக்திகளோடு தலித் கட்சிகள் கூட்டமைப்பதைத் தடுக்க இயலவில்லை என்ற விமரிசனங்கள் தலித் சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுகிறது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இலங்கையில் நாற்பதாம் ஆண்டுகளில் இருந்தே ஒடுக்கப்பட்ட(தலித்) மக்கள் மார்க்சிய வழிகாட்டலுடன் ஒரே அமைப்பாக ஒன்றிணைய இயலுமானதோடு, மதவாத இனவாத சக்திகள் எவற்றுக்கும் விட்டுக்கொடுக்காமல் மக்கள் விடுதலை என்ற இலக்கோடு அவை இயங்க முடிந்தமைக்கு வர்க்கப் பார்வை சிறப்பான பங்களிப்பை நல்கியிருக்கிறது. அதேவேளை இந்த நோக்குடன், வர்க்க இருப்பு-வர்க்கப்பிரச்சனை என்பவற்றைக் கடந்து, சாதி-தேசம் என்பவற்றின் இருப்பு இன்னொருவகையானது, அவ்வாறே பெண் ஒடுக்குமுறை வர்க்க பேதங்களுடன் மேலதிகமாயுள்ள இன்னொரு பரிமாணத்துக்குரியது என்பவற்றைக் காணத்தவறுகிற அவலம் இங்கும் நேர்ந்தது. மார்க்சிய இயங்கியல்- பொருள்முதல்வாதச் சிந்தனைமுறை என்பதை மறந்து ஏதோ சில முடிந்த முடிவான பெறுமானங்கள் மார்க்சியத்திடம் உண்டு என்ற தவறான முன்முடிவு காரணமாக எமது சமூக நிதர்சனங்களைச் சரியாக இனங்காண இயலாத தடைகள் எம்மிடம் உண்டு.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
வர்க்கப்போராட்டம் ஏடறிந்த வரலாறு முழுமையிலும் இருந்துள்ளது; இதனை, இழப்பதற்கு எதுவுமற்றதான பாட்டாளி வர்க்கம் முடிவுக்குக் கொண்டுவரும். பெரும்பான்மையினரான பாட்டாளிகளின் உழைப்பால் பெருகிய மூலதன விருத்தியே முதலாளித்துவத்தின் அபார வளர்ச்சிக்கு அடிப்படை; அந்தவகையில், சமூகத்தால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திசாதனங்கள் ஒருசில முதலாளிகளால் அபகரிக்கப்பட்டுள்ள முறையற்ற சமூக நியதி இன்று நிலவுகிறது - அதனைத் தகர்த்து, சமூகப் படைப்பான உற்பத்திசாதனங்களைச் சமூகத்துக்குரியதாக்கும் பணியையே அரசுடைமையாக்கும் செயற்பாடு வாயிலாக பாட்டாளிவர்க்க அரசு நிறைவு செய்யவுள்ளது. சுரண்டல் நிலவிய காலம் முழுமையும், மிகச் சிறுபான்மையினரான சுரண்டலாளர்கள் மிகப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களை ஒடுக்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட கருவியே அரசு; அதனைத் தலைகீழாக்கி, சுரண்டலாளர்களான மிகச் சிறுபான்மையினரைப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்கள் சார்பாக ஒடுக்கும் அரை-அரசை நடைமுறையாக்கி, சுரண்டல் முடிவுக்கு வருகிறவரை பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தைப் பிரயோகித்து, பூரண பொதுவுடைமை சாத்தியமானதும் அரசு உலர்ந்து உதிர்ந்துபோக வகைசெய்து, மண்ணில் நல்ல வண்ணம் மாந்தர்கள் பரஸ்பர புரிந்துணர்வோடும் நல்லிணக்கங்களோடும் வாழ ஏற்றதான வர்க்கபேத ஒழிப்பு முயற்சியே பாட்டாளிவர்க்க முன்னணிப் படையான கொம்யூனிஸ்ட் கட்சியின் பணி என்பது மார்க்சியத்தின் அடிப்படை. தனது பங்களிப்பு எது என்பதைக் குறித்து மார்க்ஸ் பேசும்போது இதனை வலியுறுத்தியுள்ளார்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
ஆயினும், தொடர்ந்த ஆய்வு முயற்சிகளில்(குறிப்பாக, மூலதனம் பற்றிய ஆழமான தேடலில்) வர்க்கப் பிளவுறாத சமூக முறை குறித்து அவர் கண்டு காட்டியுள்ளார். ஐரோப்பாவில் இனமரபுக்குழுக்கள் வர்க்கங்களாகப் பிளவுற்று ஏற்றத்தாழ்வுச் சுரண்டல் சமூக அமைப்பாக்கம் நடந்தேறியது; அவ்வாறன்றி ஆசியாவில், முன்னேறிய இனமரபுக்குழுக்கள் மலாண்மை பெற்று சுரண்டுவதற்கு ஏற்றதாக ஏனைய இன மரபுக்குழுக்கள் ஒடுக்கப்பட்டன; அதன்பேறானதே சாதிகள் என்பது மார்க்ஸ் எடுத்துக்காட்டியிருந்த உண்மை. வேறு சந்தர்ப்பங்களில் ஆசிய உற்பத்திமுறையின் தனித்துவப் பண்புகள் குறித்துப் பேசியுள்ளார். ஆசியாவில் மதங்கள் பெறும் முக்கியத்துவம் குறித்தும், முகமது நபியால் மதம் வாயிலாக சமூகமாற்றம் ஒன்றைச் சாதிக்க இயலுமாயிருந்தது எப்படி எனும் கேள்வியையும் எழுப்பி, அதுகுறித்து ஆய்வு செய்யவேண்டுமென மார்க்ஸ் வலியுறுத்தியிருந்தார்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இவற்றைத் தொடர்புபடுத்தி ஆய்வு செய்யும் அவகாசம் மார்க்சுக்கு அமையவில்லை. வர்க்கப்பிளவடைந்து,கூர்மையான அரசியல் புரட்சிகளூடாக சமூகமாற்றங்களைச் சாத்தியமாக்கி வந்த ஐரோப்பாவில் புத்திய சமூக சக்தியான பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தைச் சாதியமாக்கும் வாய்ப்பு இன்னும் இருந்தநிலையில், வர்க்கங்கள் குறித்தும் - அரசியல் புரட்சிகள் பற்றியும் மென்மேலும் ஆய்வுகளை விருத்தி செய்ய வேண்டியிருந்தமையால், சாதிகள் குறித்தோ மதங்கள் வாயிலாக(பண்பாட்டுப் புரட்சியூடாக) சமூக மாற்றச் சாத்தியம் குறித்தோ ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள இயலாமற்போயிற்று. அவரது எதிர்பார்ப்புக்கு அமைவாக ருஸ்யப்புரட்சி சாத்தியமாகியிருந்த போதிலும் அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுமையையும் பாட்டாளிவர்க்கப் புரட்சி சோசலிசமாக மாற்றும் என்ற எதிவுகூறல் நிகழவில்லை.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQZY9mcXc17ZsT18pq9oj3gVu7tcJsQIclkeIJyyN5gDbFLC9I6pl3VbFA6p7jbDMMB3hFabkaBpW_yZ3CABYhTlhSozkrOYNTx7S3kcBCBJMexkaJnubSxN5oLRko2SICeOPJKPUnCrC_/s1600/REVOLUCIONRUSA1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="283" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQZY9mcXc17ZsT18pq9oj3gVu7tcJsQIclkeIJyyN5gDbFLC9I6pl3VbFA6p7jbDMMB3hFabkaBpW_yZ3CABYhTlhSozkrOYNTx7S3kcBCBJMexkaJnubSxN5oLRko2SICeOPJKPUnCrC_/s320/REVOLUCIONRUSA1.jpg" width="320" /></a>பாட்டாளிவர்க்கப் புரட்சி ஐரோப்பாவில் சுரண்டலை ஒழித்துக்கட்டும்போது குடியேற்ற நாடுகள் விடுதலை பெற்று அங்கும் சோசலிசத்துக்கான வாய்ப்பிருப்பதைக் கூறிய அதேவேளை, முன்னதாக அந்தக் குடியேற்ற நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள் வெற்றியீட்டத்தக்க சாத்தியத்தையும் மார்க்ஸ் கூறியிருந்தார். இருப்பினும், ஏகாதிபத்திய வளர்ச்சி ஏற்பட்டு லெனினிசப் பரிணமிப்பைப் பெற்ற நிலையில் தேசிய விடுதலைப் புரட்சிகள் நேரடியாக சோசலிசக் கட்டுமானங்களை ஏற்படுத்த இயலும் என்ற முன்முடிவை லெனின் வெளிப்படுத்தக்கூடியதாக இருந்த வளர்ச்சி நிலையை மார்க்ஸ் காண இயலவில்லை. அந்தவகையில் மார்க்சியத்தின் அடிப்படை கோசமாக "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்பது அமைய, அதன்பரிணமிப்பான லெனினிசம் "உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்" எனப் புதிய சூழல் மாற்றத்தில் சமூக மாற்ற சக்தியாக பாட்டாளிவர்க்கப் புரட்சியோடு தேசிய விடுதலைப் புரட்சியையும் இணைத்துக்காண வகையேற்பட்டது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
தேசவிடுதலைப் போராட்டம் வாயிலாக சோசலிசத்தைக் கட்டமைக்கும் நம்பிக்கையோடு 1945 இல் முதல் சுதந்திரப் பிரகடனத்தை ஹோசிமின் தலைமையில் வியட்நாம் பாட்டாளிவர்க்க முன்னணிப்படை முன்மொழிந்தது; தொடர்ந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளால் வியட்நாம் சிக்கல்களை எதிர்நோக்கியபோது 1949 இன் மக்கள் சீனப் பிரகடனம் பல சாதனைகளை எட்ட வாய்ப்பளித்தது. உலகின் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட சோசலிச சீனாவும், உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பையுடையதும் முதலாவது சோசலிச நாடுமாகிய சோவியத் யூனியனும் கோட்பாட்டுப் பிளவுற்று அறுபதுகளின் நடுக்கூறிலிருந்து சோசலிச முகாம் இருமுகப்பட்டபோது மார்க்சியம் ஆரொக்கியமான வளர்ச்சியை எட்டுவதற்குமாறாக, எரிந்த கட்சி-எரியாத கட்சி விவாதத்துக்குள் மாட்டுப்பட்டுப் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேர்ந்தது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
உண்மையில் மார்க்சியத்துக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக சோவியத்-சீனப் பிளவு அமைந்தது. சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சி வலது திரிபுவாதத்தை முன்னிறுத்தியபோது அதற்கு எதிராக மார்க்சிய-லெனினிசத்தைப் பாதுகாக்கும் கோட்பாட்டு விவாதத்தை முன்னிறுத்திய சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி காலவோட்டத்தில் அதிதீவிர அதிதீவிர இடதுசாரித் திரிபுவாதத்தைச் சரிவைச் சந்தித்தது. உலகநாடுகள் எங்கும் பாராளுமன்றம் வாயிலாக சோசலிசத்தை வென்றெடுத்தல் அல்லது வன்முறை வழிபாடு எனப் புரட்சிகர சக்திகள் பிளவுண்டு போயின. சோவியத் சார்பு-சீன சார்பு என்பன விகாரப்பட்டு ஒவ்வொருவரும் ருஸ்யப் புரட்சி அல்லது சீனப் புரட்சி பற்றிய வியாக்கியானங்களில் கைதேர்ந்தவர்களாக ஆகினரேயல்லாமல், தத்தமது நாட்டு புறநிலை மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சிகள் பற்றி ஆராய்வதில் அக்கறையற்றவர்களாயினர்; அந்த நாடுகள்போல இங்கில்லையே என்ற பிலாக்கணம் வேறு. சொந்தச் சமூக சக்திகள் பற்றிய புரிதலின்றி, ஏற்கனவே நடந்தேறிய அந்த நாடுகளின் புரட்சிகள் குறித்து வித்துவக் காய்ச்சல் விவாதம் புரிவோரால் தமது சொந்த நாடுகளில் சமூக மாற்றப் புரட்சியை எவ்வாறு முன்னெடுக்க இயலும்? ஓரளவுக்கு சாத்தியப்பட்ட சில நாடுகளின் சாதனைகளையும் அந்த நாடுகளின் விவாதமும் போட்டாபோட்டியும் முடக்கிப்போட்டது. இன்று தென்னமரிக்க நாடுகளின் மார்க்சிய அணிகள் இப்பின்னடைவிலிருந்து மீண்டு புதிய வளர்ச்சிகளை எட்டும் நம்பிக்கை ஒளிக்கீற்றுகளைக் காட்டி நிற்கின்றன. தவிர, மார்க்சியத்திலிருந்து விலகி முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் படுமோசமான பின்னடைவுகளையே தந்த அனுபவம் காரணமாக, மீண்டும் மார்க்சிய-லெனினிசத்தைச் சரியான புரிதலுடன் கற்றுக்கொண்டு தத்தமது நாட்டு நிதர்சன நிலைமைகளுக்கு ஏற்ப அதனை எவ்வாறு பிரயோகிப்பது எனும் தேடலுக்குரிய ஆரோக்கியமான நிலை உலகெங்கும் இன்று ஏற்பட்டுவரக் காண்கிறோம்.</div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;"> </span><b style="font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;"><u><span style="color: red;"> -3-</span></u></b><br />
<div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<b><u><span style="color: red;"> பிரச்சனைகளும் தீர்வுகளும்</span></u></b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
மார்க்சியத்தை மிகுந்த பற்றுதியுடன் கையேற்று, இயலுமான தளங்களில் பல்வேறு போராட்டங்களை நடாத்தி வீறுமிக்க போர்க்குணத்தையும் அர்ப்பணிப்புகளையும் வெளிப்படுத்தியதன் வாயிலாக செழுமைமிக்க வரலாற்று அனுபவங்களை இலங்கை, இந்தியா போன்ற எமது நாடுகளின் மார்க்சிய முன்னோடிகள் எமக்கு வழங்கிச்சென்றுள்ளார்கள். அதன் இணை வளர்ச்சியாகப் புலமைத் தளத்திலும் இலக்கியக் களத்திலும் மார்க்சியத் திறனாய்வு ஆரோக்கியமான வளர்ச்சி நிலைகளைச் சாத்தியமாக்கியிருக்கிறது. குறிப்பாக, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சாதியத் தகர்ப்புப் போராட்ட அனுபவங்கள் எமது சமூக அமைப்பைப் புரிந்துகொள்வதில் இரட்டைத் தேசியக் கோட்பாட்டை முன்னிறுத்தியுள்ளது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
சாதிப்பிரச்சனை அடிப்படையில் தேசியப் பிரச்சனை எனக் கைலாசபதி காட்டியிருந்தார். தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம் என்றவர்கள் அந்தச் சாதியப் பிரச்சனைக்கு எதிர்முகம் காட்டியபோது எமது தேசியம் ஆளும் சாதியினதும் ஒடுக்கப்பட்ட சாதியினதும் எனப் பிளவுபட்டிருக்கும் யதார்த்தத்தை உணர்த்தியது. ஈழத் தமிழ்த் தேசிய முன்னெடுப்பு ஆளும் சாதித் தேசியமாக(யாழ் வெள்ளாளத் தேசியமாக) வடிவம் பெற்றமையால் ஐக்கியப்படுத்த வேண்டியவர்களைப் பகைவர்களாக்கிக்கொண்டு, இறுதியில் அவலமான முடிவைச் சந்திக்க நேர்ந்தது. இந்த வரலாற்றுப் படிப்பினையின் பேறானதே இரட்டைத் தேசியக் கோட்பாடு.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இந்த அனுபவத்தோடு இந்திய சுதந்திரப் போராட்ட கால வரலாற்றை மீட்டுப்பார்க்கலாம். இந்திய கொங்கிரஸ் கட்சி உதயமானபோது, அதனைப் பிராமண தேசியமாய் ஜோதிராவ் புலேயும் அயோத்திதாசரும் அடையாளப்படுத்தியமையை இரட்டைத் தேசியக் கோட்பாட்டின் அடிப்படையில் புரிந்துகொள்ள முடியும். முப்பதாம் ஆண்டுகளில் அம்பேத்கர் முன்னெடுத்த தலித் அரசியலையும் பெரியாரின் திராவிடரியக்கத்தையும் எதிர்த் தேசியமாக விளங்கிக்கொள்வோம். இவ்வகையில் முன்னெடுக்கப்படும் இரட்டைத் தேசியக் கோட்பாடு ஆரோக்கியமான விவாதப் பொருளாக இன்று ஆகியுள்ளபோதும் நடைமுறைப் பிரயோகத்துக்கான சக்தியெனும் வகையில் மார்க்சியக் கட்சிகள் இதனைப் பாராமுகமாக ஒதுக்கிவைத்து மார்க்ஸ், லெனின், மாஓ சேதுங் போன்றோரது வசனங்களைப் பாராயணம் செய்வதிலேயே காலங்களிப்பதைக் காண்கிறோம்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzcPK6rIjsDm2qTeiMpC_BCXzUJxG7AKecHT4p_L_VpZrPsWLjb0_53VR2k9MCKy-cUJu_78Ano4691gGtxZ_czwAHP6fNX-pu2uM_-hrn2O1Tzaj928itGfSYnH4jUgA-oHHGoMCRXuCE/s1600/tumblr_leecv3Pf1Z1qap9gno1_400.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="151" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzcPK6rIjsDm2qTeiMpC_BCXzUJxG7AKecHT4p_L_VpZrPsWLjb0_53VR2k9MCKy-cUJu_78Ano4691gGtxZ_czwAHP6fNX-pu2uM_-hrn2O1Tzaj928itGfSYnH4jUgA-oHHGoMCRXuCE/s320/tumblr_leecv3Pf1Z1qap9gno1_400.jpg" width="320" /></a>வர்க்கப்பிளவடைந்த ஐரோப்பாவின் தேசியக் கட்டமைப்பைப் போலன்றிச் சாதிச் சமூகத்தில் தேசியம் பிளவடைந்துள்ளது என்பதை மார்க்சிய மூலவர்கள் எழுதிவைத்துவிட்டு போகவில்லைத்தான்; புனிதநூலில் கண்டுள்ளவாறு ஒழுகுவதற்கு மார்க்சியம் இன்னுமொரு மதமல்ல. மார்க்ஸ், லெனின் போன்றோரது வசனங்களில் நேரடியாக இல்லாத போதிலும் மார்க்சியச் சிந்தனை முறை எமது சமூகங்களில் ஆதிக்க சாதி-ஒடுக்கப்பட்ட சாதித்தேசியங்களாகப் பிளவுபட்ட யதார்த்த நிலையைக் கண்டுணர வழிப்படுத்தி, இரட்டைத் தேசியக் கோட்பாட்டை வந்தடைய ஆற்றுப்படுத்துவதாய் அமைந்துள்ளது. ஆசிய உற்பத்திமுறை என்பது இனமரபுக்குழு மேலாண்மையால் சுரண்டலைச் சாத்தியமாக்கி சாதி அமைப்புத் தோற்றம்பெற்றதன் பேறு என மார்க்ஸ் கண்டு காட்டியபோதே, வர்க்க ஒடுக்குமுறை மட்டுமன்றி சமூக வர்க்கமாக ஒடுக்கப்படுதலும் மற்றொரு நியதி என வெளிப்படுத்தியிருந்தார். சமூக வர்க்கமாய்ச் சுரண்டப்படுகின்ற ஒடுக்கப்படும் தேசம் விடுதலைப் போராட்ட வெற்றிவாயிலாக சோசலிசப் புரட்சியை சாத்தியமாக்க இயலும் என லெனின் காட்டியபோது எமது சமூக அமைப்புச் செல்நெறிகளைப் புரிந்துகொள்ளும் இன்னுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
மார்க்ஸ் ஆய்வுக்குட்படுத்த விரும்பிய முகமது நபி குறித்த பிரச்சனை, சாதியச் சமூகத்தில் காணப்படும் இனமரபுக்குழுத் தொடர்ச்சியானது தமக்கேயுரித்தான பண்பாட்டுக் கோலங்களில் சாதிக்குச் சாதி வேறுபாடு நிலவுதல் மற்றும் பண்பாட்டு நீடிப்பு நிலவுகிற காரணத்தால் ஆசிய உற்பத்திமுறை எனும் வேறுபட்ட கட்டமைப்பு பண்பாட்டுப் புரட்சிகள் வாயிலாகவே சாத்தியமாகும் சமூக அமைப்பு மாற்றங்களுக்கான வேறுபட்ட புரட்சியின் வடிவம் ஒன்று பற்றிக் கருத்துரைக்க வழிகோலியிருக்கும். அந்த முடிவினை மார்க்ஸ் கூறாதபோதிலும், அவர் எழுப்பிய வினாவும் தொடக்கிவைத்த சிந்தனை முறைமையும் எமக்கான சமூக மாற்ற வடிவம் பண்பாட்டுப் புரட்சி வகைப்பட்டது என நாம் கண்டடைய வழிப்படுத்துகிறது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
அரசியல் தீவிரத்துடன் இயங்கும் கட்சி அணிகள் கிரேக்க-ரோம் புரட்சியிலிருந்து பிரான்சிய-ருஸ்ய-சீனப் புரட்சிகள் வரையானவை குறித்த கற்றலுக்கு அழுத்தங்கொடுக்கும் அவசியம் ஏற்படுத்தியுள்ள தோற்ற மயக்கம் காரணமாக வர்க்க இருப்பை மட்டுமே பார்த்து சாதியமைப்பின் பிரத்தியேகத் தன்மை குறித்தும், இதன் மாற்றியமைத்தலுக்கு பண்பாட்டுப் புரட்சி அவசியம் என்பதையும் காண இயலாதவர்களாயுள்ளனர். புலமைத் தளத்திலும் பண்பாட்டுக்களங்களிலும் இயங்குவோருக்கு அத்தோற்றமயக்கத்திலிருந்து மீண்டு எமது நிதர்சனத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகம். அவ்வாறு விளக்கம்பெற்று புதிய மார்க்கத்தை வகுத்துக் காத்திரமான செயலாற்றலைச் சாத்தியமாக்கி ஏற்படும் அதிர்வினால் கட்சிகளும் தோற்றமயக்கப் பின்னடைவைத் தகர்த்துக்கொண்டு புதிய வரலாறு படைக்கும் ஆற்றல் கைவரப்பெற இயலும்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
மார்க்சியக் கருத்தியல் உயிர் எனில், அதன்வழிநின்று சமூகமாற்றத்தை வென்றெடுக்கும் கட்சி அமைப்பு உடலாகும். புத்தூக்கம் பெறும் உயிர்த்துடிப்பு இல்லையெனில் உடல் செத்த பிணமாகும், அல்லது அந்நிலை நோக்கிச் செல்லும் நோய்க்கூறுக்குரியதாகும். அந்தவகையில், சேடமிழுக்கும் நோய்க்கூறுடன் வறட்டுச் சுலோகங்களைப் பாராயணம் செய்வோரை உயிர்த்துடிப்புமிக்க புதிய வளர்ச்சிக்கு இட்டுவர ஏற்ற பண்பாட்டு இயக்கங்கள் இங்கே உடனடி அவசியமாகும்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">கட்சி அமைப்புத் தொடர்பில் மார்க்சியத்துக்கு புது இரத்தம் பாய்ச்சும் தென்னமெரிக்க மார்க்சியர்கள் ஆரோக்கியமான விவாதங்களை முன்வைத்து, ஏற்ற புதிய மாற்றங்களையும் சாத்தியமாக்கி வருகின்றனர். ஜாரிஸ ருஸ்யாவின் கொடுங்கோலாட்சிச் சூழலில் வடிவமைக்கப்பட்ட கட்சி வடிவம், குறைந்தபட்ச ஜனநாயகம் நிலவும் காலத்தில் அப்படியே பின்பற்றத்தக்கதல்ல என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பண்பாட்டுப் புரட்சியைப் பிரதான வடிவமாகக் கொண்டுள்ள எமது சூழலுக்கு அமைவான கட்சி அமைப்புக் குறித்து எமக்கு மேலும் விரிவான ஆய்வுகள் அவசியமாகும். அதனை நடைமுறை அனுபவம் வாயிலாகக் கண்டறிய ஏற்றதாக, சாத்தியமான புதிய பண்பாட்டுத் தளங்களைக் கட்டமைக்க ஏற்ற காலம் முழுதாய்க் கனிந்துள்ளது.</span><span style="color: black; font-family: arial;"><span style="font-size: xx-small;">ஜீவநதி 2012</span></span></div>
<div class="yj6qo ajU" style="background-color: white; color: #222222; cursor: pointer; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px; margin: 2px 0px 0px; outline: none; padding: 10px 0px; width: 22px;">
<div aria-label="Show trimmed content" class="ajR" data-tooltip="Show trimmed content" id=":3d" role="button" style="background-color: #f1f1f1; border: 1px solid rgb(221, 221, 221); clear: both; line-height: 6px; outline: none; position: relative; width: 20px;" tabindex="0">
<img class="ajT" src="https://mail.google.com/mail/ca/u/0/images/cleardot.gif" style="background-image: url(https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/ellipsis.png); background-position: initial initial; background-repeat: no-repeat no-repeat; height: 8px; opacity: 0.3; width: 20px;" /></div>
</div>
</div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-7154860629261944982012-12-05T09:02:00.000-08:002012-12-05T18:06:50.665-08:00முற்போக்கு இலக்கியத்துக்கு கைலாசபதியின் பங்களிப்பு:<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="background-color: white; font-family: arial, sans-serif;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-RqJ6e6fpvACzCW_TIV5LAcx0sPWXbC_Sq5I_Cfmn2jaRYsy_eZngLZsmYnaY45xc_jrbplvlaMdeT7mTLXZ-g6UO6G2NpYk_rmdeac7YGf4UDS8mGWhN9wxu722RR94hJp0kZSQNddPC/s1600/kailaas-ravi.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="195" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-RqJ6e6fpvACzCW_TIV5LAcx0sPWXbC_Sq5I_Cfmn2jaRYsy_eZngLZsmYnaY45xc_jrbplvlaMdeT7mTLXZ-g6UO6G2NpYk_rmdeac7YGf4UDS8mGWhN9wxu722RR94hJp0kZSQNddPC/s320/kailaas-ravi.jpg" width="320" /></a><b><u><span style="color: red;">முற்போக்கு இலக்கியத்துக்கு கைலாசபதியின் பங்களிப்பு:</span></u></b><span style="color: #222222;"> </span></div>
<br />
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<b> -ந. இரவீந்திரன் -</b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இன்று(06.12.2012) பேராசிரியர் க.கைலாசபதியின் 30வது நினைவுதினம். அவர்(05.04.1933-06.12.1982) முற்போக்கு இலக்கிய இயக்கம் எழுச்சியுறத்தொடங்கிய 1953இலிருந்து தனது முற்போக்கு சமூக-இலக்கிய-அரசியல் செயற்பாட்டில் முனைப்பாக இயங்கி, அதன் வீறுமிக்க பங்களிப்புகளில் கருத்தியல்-நடைமுறைத் திசை மார்க்கத்துக்கு உன்னத வழிகாட்டலை ஏனைய முன்னோடிகளோடு வழங்கி, மாற்றுச் செல்நெறி எழுச்சியுறத் தொடங்கியபோது தனது இதய இயக்கத்தை நிறுத்திக்கொண்டவர்; மறைவின் பின்னரும் வழிகாட்டும் வகையில் வலுவான கருத்தியல் அடித்தளத்தை இடும்வகையில் அக்களத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்யும் தலைமகனாக விளங்கியவர். வெறும் பல்கலைக்கழக பேராசிரியர் என்பதற்கு அப்பாலான அவரது சமூகமாற்றச் செல்நெறிக்கான ஆய்வுப்பங்களிப்பும், அதன் செயல்வேகத்துக்கு உந்துதல் வளங்கிய ஆளுமைகளோடு கொண்டிருந்த இரத்தமும் தசையுமான உயிர்ப்பான தொடர்பாடலினாலும் தொடர்ந்தும் வாழ்ந்துகொண்டிருப்பவர்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
அவரது மறைவை அடுத்து மேற்கிளம்பிய இனத்தேசிய இயக்காற்றல் போரியல் இலக்கியத்தை வளங்கி 2009 உடன் மாற்றுக்கட்டத்தை அடைந்தது. அடுத்துள்ள இந்த மூன்று வருடங்களில் மீளாய்வுகளும் மீட்சிக்கான தேர்வுகள் எவ்வகையில் அமையலாம் என்பதான தேடலும் வலுப்பட்டு வருகிறது. ஆக்கபூர்வமாக அது மக்கள் விடுதலைச் செல்நெறியில் முன்னேறுவதற்கு மாறாக அனைத்து பிரிவினர் மத்தியிலும் இனக்குரோதங்கள் திட்டமிட்டே வளர்க்கப்படும் இன்றைய சூழலில், அந்த மூன்று தசாப்தங்களாக இனபேதங்கடந்து ஒன்றுபட்ட போராட்டங்கள்வாயிலாக அனைத்துப் பிரச்சனைகளின் தீர்வுக்காகப் போரடிய அனுபவங்களை கைலாசின் வாழ்வும் பங்களிப்பும் ஊடாகக் கண்டுகொள்ள இயலும்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
சென்ற நூற்றாண்டின் முப்பதாம் ஆண்டுகளில் பாசிசம் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக வலுவடைந்து வந்தபோது நாடுகள் தமது தேசிய சுயநிர்ணயத்தைப் பாதுகாக்கவும் அல்லது வென்றெடுக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டன. தத்தமது வரலாற்று போக்கின் நிலைக்கு அமைவாக வடிவமைக்கப்பட்ட தேசிய வரம்புக்கு உட்பட்ட தேசிய இனங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு ஜனநாயக அரசியல் கட்டமைப்பை வென்றெடுக்கவும் பேணவும் ஏற்ற முற்போ க்கு இயக்கங்கள் பல்வேறு வடிவங்களில் உலக நாடுகள் பலவற்றிலும் எழுச்சியுற்றன. இந்தியா இவ்வகையில் கட்டமைத்த செயலாற்றல் தமிழகத்தில் முற்போக்கு இலக்கிய அமைப்பு தோற்றம் பெற வழிகோலியது(முற்போக்கு கலை இலக்கிய அமைப்பாக்கம் தமிழகத்தில் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது). இலங்கையில் ஐம்பதுகள் தேசிய விழிப்புணர்வு எழுச்சியை எட்டிய சூழலில் சிங்கள இலக்கியமும் முற்போக்கு கருத்தியலை உள்வாங்கி வெளிப்பட்டபோதிலும், தமிழ் மொழிமூலக் களத்திலேயே "முற்போக்கு எழுத்தாளர் சங்கம்" உதயமானது என்பது கவனிப்புக்குரியது. பல்கலைக்கழக மாணவராக இருந்த நிலையில் மு.எ.ச. இல் இணைந்த கைலாஸ் தொடர்ந்து தீவிர பங்களிப்பை வளங்கிய வகையில் அதன் கருத்தியல் செல்நெறிமீது அதிக தாக்கம் செலுத்துகிறவராக அமைந்தார்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இங்கு தேசிய இலக்கிய எழுச்சி பாரதியை முன்னிறுத்தியதாக அமைந்தபோது, எமது மண்ணுக்குரிய பண்பாட்டுத் தேசியத்தை முன்னெடுத்த நாவலரையும், அனைத்துத் தளங்களிலும் முற்போக்கு உணர்வுகளை வெளிப்படுத்திய ஆன்மீக செயற்பாட்டாளரான விபுலாநந்தரையும் முன்னிலைப்படுத்தியிருந்தமை கவனிப்புக்குரியது. கைலாசின் ஆய்வியல் பன்மைத்தளத்தோடு தமிழர் சமூக-பண்பாட்டு-அரசியல் வரலாற்று வளர்ச்சிப் போக்குகளை வெளிப்படுத்த வாய்ப்புப் பெற்றமை இதன்பேறாகும். நாவலரின் கருத்தியலில் சாதியம் தாக்கம் செலுத்துவது அந்தக்கால நிதர்சனத்தைப் பொருத்த ஒன்றெனப் புரிந்துகொண்டு, அவர் அன்றைய மாற்றப்போக்குக்கு பங்களிப்பாளராக இருந்த முற்போக்கு ஆளுமை என்பதை காணத்தவறுகிறவர்கள், வரலாற்று வளர்ச்சிகளையும் விளங்கிக்கொள்ள இயலாதவர்கள்; தமது சமூக இருப்பை மக்கள் விடுத்தலைத் திசை மார்க்கத்துக்கு அமைவாக மாற்றியமைக்கவும் இயலாதவர்கள். கைலாசின் பார்வை வீச்சு வலுவோடு அமைந்தமையாலேயே தனது காலத்தேவையாக சாதியத் தகர்ப்பு அமைந்துள்ளமையைக் கண்டு அதற்கு அவசியமான ஆய்வு வெளிப்பாடுகளைத் தர ஏற்றதாக இருந்தது. </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
சாதித்தகர்ப்புப் போரட்டம் தேசியத்தின் பிரதான வடிவமாக அமைந்த அன்றைய சூழலில் தமிழினத் தேசியம் அந்த முற்போக்கு செல்நெறிக்கு எதிராக இயங்கியது; இலங்கைத் தேசியம் எனும் நாட்டுத்தேசிய வடிவத்தில் ஜனநாயக உணர்வுடைய ஆளும் சாதிப் பிரிவினர், முஸ்லிம்-சிங்கள மக்கள் என்ற பரந்துபட்ட ஐக்கியமுன்னணி கட்டியெழுப்பப் பட்டு, விரல்விட்டெண்ணக்கூடிய சாதிவெறியர்களைத் தனிப்படுத்திக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட முற்போக்கு இயக்கச் செல்நெறி பெரும் சாதனைகளை நிகழ்த்தியது. முற்போக்கு உணர்வோடு இவற்றை ஆதரிக்க வேண்டியிருந்த தமிழினத்தேசியத்தை ஏற்றவர்கள் தொடர்ந்து முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் பங்களிக்க இயலாதவர்களாய், அழகியல்வாதத்துள் அல்லது மார்க்சியத்தைக் கடப்பதில் முடங்க நேர்ந்தது(மு.தளையசிங்கம், மஹாகவி, வ.அ.இராசரத்தினம், கனகசெந்திநாதன் போன்றோர் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள்).</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYsvs4vNn9uLl3vqs7mRRquiW6TiOoTWDQtA2xLkFgbaYENiPn8U8vPOQe0WFK80IyqFU68n0dTuX9KdQkxLEq7KEdQS-hlAyuidHeQ-_pSEm-6csyJdq_wdrZfO5xl7Wqa6mnsmCln2t4/s1600/ListeningProfKailasapathy.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYsvs4vNn9uLl3vqs7mRRquiW6TiOoTWDQtA2xLkFgbaYENiPn8U8vPOQe0WFK80IyqFU68n0dTuX9KdQkxLEq7KEdQS-hlAyuidHeQ-_pSEm-6csyJdq_wdrZfO5xl7Wqa6mnsmCln2t4/s1600/ListeningProfKailasapathy.JPG" /></a>இவ்வகையில் அழகியல்வாதத்தை வரித்து, மக்கள் போராட்ட நிதர்சனங்களையும் அவற்றின்பேறான மாற்றங்களையும் கலை-இலக்கிய வடிவப்படுத்த இயலாதவர்கள் யதார்த்தவாதத்தை வரிக்க முடியாமல் இயற்பண்புவாத ஆக்கங்களையே தரவல்லவர்களாயினர். இவ்வகையில் இயற்பண்புவாத வகைப்பட்ட சிறுகதைகள் முப்பதாம் நாற்பதாம் ஆண்டுகளிலேயே படைக்கப்பட்டமையை வைத்து, முற்போக்கு இயக்க எழுச்சிக்கு முன்னரே 'மண்வாசனை இலக்கியம்' தோன்றிவிட்டது என்போருண்டு. உண்மையில் மண்வாசனை இலக்கியம் என்பதன் வாயிலாக முற்போக்கு இயக்கம் முன்னெடுத்த புதிய கலை-இலக்கியச் செல்நெறி, தேசிய இலக்கியம் எனக் கைலாசபதியால் கோட்பாட்டு உருவாக்கம் செய்யப்பட்டு வளங்கப்பட்டபோது இருப்பை வெறுமனே சித்தரிப்பதற்கப்பால், ஊடறுத்து உள்ளிருப்புகளையும்- மக்கள் விடுதலைத் திசைவழியில் அதன் வளர்ச்சிப் போக்கை ஆற்றுப்படுத்திப் போராட்டங்களை முன்னெடுக்கும் சாத்தியங்களையும் கண்டறிந்து, செயலுருப்படுத்தி, அந்த அனுபவ வெளிப்பாடுகளாக அமைய வேண்டியது என வலியுறுத்தப்பட்ட ஒன்றாகும்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
மாற்றத்துக்காக நடந்த கொலைகளும் அழிவுகளும் நிறைந்த யுத்தங்களில் அல்லது அதன்போது மக்கள் நலன் பக்கம் நின்ற களப் பங்களிப்போடுதான் எமது முதல் இலக்கியமான சங்ககாலப் படைப்புகள் எனப்படும் வீரயுகப் பாடல்கள் படைக்கப்பட்டன என்பதனைத் தனது கலாநிதிப் பட்டப்பேற்றுக்கான ஆய்வேட்டில் கண்டு காட்டிய கைலாஸ், தொடர்ந்தும் அதுசார்ந்த பல்வேறு கட்டுரைகளில் அச்சிந்தனையை வளர்த்தெடுத்துத் தந்துள்ளார். பக்திப்பேரியக்கத்தில் வணிக சார்பு அரசை எதிர்த்துப் போராடி நிலப்பிரபுத்துவ அமைப்பு மாற்றத்தை வென்றெடுக்கும் சமூகமாற்ற இயங்காற்றல் தேவாரம்-திருவாசகம் என்ற இலக்கிய வடிவம் பெற்றமையை அவர் காட்டியுள்ளமை தமிழியலுக்கான மிகப்பெரும் பங்களிப்பாகும். இந்த இலக்கிய மாற்ற எழுச்சியில் அன்றைய மக்கள் இலக்கிய வடிவங்கள் உள்வாங்கி விருத்திசெய்யப்பட்டுள்ளமையை அவர் இதன்போது காட்டத்தவறவில்லை.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<span style="font-size: 13.333333969116211px;">வரலாற்று வளர்ச்சிப்போக்கில் செவ்வியல் இலக்கியத்தை அப்படியே கையேற்பதாக அல்லாமல் தமதுகாலத்து மக்கள் இலக்கியத்தை உள்வாங்கி, புதிய பரிணமிப்புக்கு உள்ளாக்கும் படைப்பாளிகளே ஆற்றல்மிக்கவர்களாய் விளங்கிவந்தமையை இவ்வகையில் கைலாஸ் காட்டியுள்ளார். இருப்பை மாற்றிப் புதிய வரலாற்றுச் செல்நெறியை அவர்கள் தொடக்குவதற்கு அமைவாக பேசுபொருளையும் மாற்றுகிற வகையில் இலக்கிய வடிவத்திலும் மாற்றம் ஏற்படக் காரணமாவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கூறில் நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஏற்பட்ட அதிர்வும் புதிய மத்தியதர வர்க்கத் தோற்றமும் காரணமாக இலக்கியப் பேசுபொருளும் வடிவமும் மாற்றம் பெறவேண்டியதாயிருந்தது. நாவல் இவ்வகையில் தோன்றியது.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இன்றைய பன்மைத்துவப் பிரச்சனைகளை இலக்கியமயப்படுத்த நாவலே சிறப்பான வடிவம் என்பார் கைலாஸ். ஆயினும் முப்பதுகளில் சிறுகதை பிரதான வடிவம் ஆனது. தொடர்ந்து பாரம்பரியமாக ஆற்றலோடு இருந்த கவிதையும் அதிர்வுக்குள்ளாகிப் புதுக்கவிதை என்ற நவீனத்துவக் கோலம் பூண்டது. இது நெருக்கடிச் சூழலின் வெளிப்பாடு என்பார். காந்தியம், பெரியாரியம் என்பன மக்களை வீதிகளில் இறக்கி மாற்றத்துக்கான வரலாறு படைக்கும் போராட்டங்கள் வலுப்பட்டபோது, அவற்றை இலக்கியமயப்படுத்த விரும்பாத சாதிய-வர்க்க சக்திகளுக்கு பிரச்சனைகளைப் பெரிதும் பேசுபொருளாக்கவேண்டியில்லாத இந்த வடிவங்கள் புகலிடமாகின. இவர்கள் இயற்பண்புவாத ஆக்கங்களைத் தந்தபோது, மக்கள் இலக்கிய கர்த்தாக்கள் சமூகப் பிரச்சனைகளையும் மக்கள் போராட்டங்களையும் இலக்கியமாக்கினர். "பஞ்சும் பசியும்" நாவலைத் தந்த தொ.மு.சி. முதல், அந்தப்போக்கு அறுபதுகளில் ஈழத்தில் முனைப்புற்றபோது மேற்கிளம்பிய ஈழத்துப் படைப்பாளிகளான இளங்கீரன், செ.கணேசலிங்கன், டானியல் போன்றோர் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள். இதன்போது சிறுகதை, புதுக்கவிதை என்பனவும் யதார்த்தவாத வடிவில் புத்தாக்கம் பெற்றுப் பல்வேறு படைப்பாளிகளால் வெளிப்படுத்தப்பட்டன. ஆயினும் மக்கள் எதிர்கொள்ளும் முரண்கள், அவற்றைத் தீர்க்க முன்னெடுக்கவேண்டியுள்ள மார்க்கங்கள் என்ற பல்வகைப் பேசுபொருட்களை அலச ஏற்றது நாவல் என்கிற வடிவமே எனும் கைலாசின் கருத்துப் புறந்தள்ள இயலாத ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
முற்போக்கு இலக்கியம் தொழிலாளர், விவசாயிகள், மத்தியதர வர்க்கத்தினர் ஆகியோரது போராட்டங்களை மட்டும் பேசுவதாக இல்லாமல், சாதியத் தகர்ப்புப் போராட்டங்களையும் பேச முற்பட்டபோது, சாதிமுறையின் நிதர்சனங்களை வரலாற்று அடிப்படையில் ஆய்வுசெய்து வெளிப்படுத்தி எமக்கான மார்க்சியப் பிரயோக வடிவத்தை இனங்காண ஆற்றுப்படுத்தியவர் கைலாஸ். பக்திப்பேரியக்கத்துடன் வெறும் நிலப்பிரபுத்துவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது எனக்கூறாமல், நிலவுடமை வர்க்க சாதியான வெள்ளாளர் ஆதிக்கம் பெற்றமையைக் கண்டுகாட்டியவர்; அந்த மேலாண்மையின் இலக்கிய வடிவமாக "பெரிய புராணம்" வெள்ளாளரான சேக்கிழாரால் தரப்பட்டமையயும், ஆதிக்க உயர் தத்துவமாக சைவ சித்தாந்தத்தை வெள்ளாளரான மெய்கண்டதேவர் தந்தமையையும் காட்டியுள்ளார். இடைக்காலத்தில் சாதிப் பிரச்சனை சமயப் பிரச்சனையாகக் காட்டப்பட்டு வரப்பட்ட போதிலும், இன்று வர்க்க-தேசியப் பிரச்சனையாகப் புரிதல் கொள்ளப்பட்டு கலை-இலக்கிய ஆக்கம் கொள்ளப்பட வேண்டும் என்பார் கைலாஸ். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இவ்வாறு சாதித் தகர்ப்புப் போராட்டம் ஈழத்தில் அறுபதுகளில் முதன்மைப் பேசுபொருளான நிலையில் வரலாற்றுப்போக்கில் சாதியம் தோன்றி வளர்ந்து இன்றைய இருப்பை வந்தடைந்தமையை அவர் காட்டியிருந்தது போலவே, ஈழத்து வரலாற்றுச் செல்நெறியின் பிரத்தியேகப் போக்குகளையும் ஆய்வுக்குட்படுத்தி வெளிப்படுத்தியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சுயந்திரப் பிரவேசம், அகராதி வெளிப்பட்டமை, விஞ்ஞானம் தமிழ் வாயிலாகப் புத்தகம் ஆனமை என்பவற்றத் தொடர்ந்து, பொதுசனத்தை நோக்கிய வசனநடை வலுப்பெற்று வந்தமை அவர் கவனிப்பில் பிரதான இடத்தை எடுத்திருந்தது. இவற்றின் பரிணமிப்பில் இருபதாம் நூற்றாண்டின் மத்திய கூறில் எழுச்சியுற்ற தேசியக் கருத்தியல் கைலாசபதியால் முன் கையெடுக்கப்பட்டமையைக் கண்டுள்ளோம்; தொடர்ந்து ஏ.ஜே.கனகரத்தினா, சிவத்தம்பி போன்றோரும் தேசிய இலக்கியக் கோட்பாடு தொடர்பில் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுத்திருந்தனர். முற்போக்கு இலக்கிய முன்னோடியான அ.ந.கந்தசாமி இவ்வகையில் தேசிய இலக்கியக் கோட்பாடு முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்டமை முக்கியத்துவமிக்க பங்களிப்பு என வலியுறுத்தியுள்ளமை கவனிப்புக்குரியது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4iU6a2gE-hoDCz24RO4zSbmns8FO-2rYm2_JxufHIzOTL-Wz-e4zbnWi-yPnj5M3Fgxshn4lxRNH_GVsMEjYMUsuOGJlWbxQb6VuxK0oh1Y8oy7ls5D705_rs7dS8THyVu-LzdBxvzSSn/s1600/SAM_0892.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4iU6a2gE-hoDCz24RO4zSbmns8FO-2rYm2_JxufHIzOTL-Wz-e4zbnWi-yPnj5M3Fgxshn4lxRNH_GVsMEjYMUsuOGJlWbxQb6VuxK0oh1Y8oy7ls5D705_rs7dS8THyVu-LzdBxvzSSn/s320/SAM_0892.JPG" width="271" /></a>இவ்வகையில் மகத்தான தொடக்கங்களும் பன்முகப் பங்களிப்புகளும் உடைய ஆளுமையான கைலாசபதியில் விமர்சனத்துக்கான விடயங்கள் இல்லை என்று கருத வேண்டியதில்லை. ஒப்பியலுக்கு முன்னுரிமை வழங்கியமை அவரது மகத்தான கொடை; அதையே அதீதப்படுத்தி நோக்கியபோது, தமிழின் தனித்துவச் செல்நெறி காரணமாக வர்க்கசார்பற்ற "திருக்குறள்" தோன்றமுடிந்தமையக் காணத்தவறியுள்ளார். நாட்டுத் தேசியத்தை மட்டும் கவனங்கொண்டு இனத் தேசியத்தைக் காணத்தவறியமையால், சிலப்பதிகாரம் குறித்து நியாயமான பார்வையை வெளிப்படுத்த இயலாதவரானார். அவரே காட்டியவாறு சாதிய வர்க்க ஏற்றத்தாழ்வு முறை நிலவும் எமது அமைப்பில் அமைப்பு மாற்றங்கள் பண்பாட்டுப் புரட்சி வாயிலாக நடந்தேறியுள்ளது(இந்த வசனத்தில் அவர் காட்டாதபோதிலும் அதற்குரிய எல்லைவரை கொண்டுவந்திருந்தார்); அதன் பேறாக கருத்தியல் களச் செயற்பாடு அவசியம் எனக்கண்டால், பாரதி ஆன்மீக நாத்திகராய் இருந்தார் எனக் கண்டிருக்க இயலும். அவ்வாறில்லாமல் பாரதியைச் சமய காரராகக் காண்பதில் அவருக்குள்ளேயே முரண் ஏற்படக் காண்போம். வரட்டுவாத நிலையில் பாரதியைப் பிற்போக்காளராக, அல்லது முழுமை பெறாத புரட்சியாளராகப் பலர் காட்ட முயன்றபோது கைலாஸ் முழுமையான புரட்சியாளராக காட்டியிருந்தார். அவ்வாறே திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவை தொடர்பில் மேற்கூறிய விமர்சனத்துக்குரிய அம்சங்கள் வெளிப்பட்டபோதும், அவரது நுண்மாண் நுழைபுலம் காரணமாக அவற்றுக்கான நியாயத் தீர்ப்புக்குரிய இடத்தின் எல்லையிலேயே அவர் வந்தமைவதைக் காண இயலும். இது அவர் மக்கள் இலக்கிய நிலைப்பாட்டாளர் என்பதன் பேறுமாகும்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
(இக்கட்டுரை பேராசிரியர் கைலாசபதியின் முப்பதாவது ஆண்டு நினைவு நாளை "முற்போக்கு கலை இலக்கிய மன்றம்" கொழும்பில் நீர்வைப் பொன்னையன் தலைமையில் நடாத்தியபோது சமர்ப்பிக்கப்பட்ட பேருரையின் சுருக்கமாகும். அன்றைய தினம் "முற்போக்கு இலக்கியத்துக்கு கைலாசபதியின் பங்களிப்பு" எனும் ந.இரவீந்திரன் எழுதிய நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. முற்போக்கு கலை இலக்கிய மன்றம் வெளியிட்டுள்ள இந்நூல் பூபாலசிங்கம் புத்தகசாலையின் பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. நூலின் முதல் பிரதியைத் திருமதி சர்வமங்களம் கைலாசபதி பெற்றுக்கொண்டார்).</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<br /></div>
</div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-48911534786342305932012-12-01T10:39:00.001-08:002012-12-01T11:04:00.315-08:00 தமிழினத் தேசியம், சாதியம், புதிய பண்பாட்டியம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTHmQoazdKbmhPwCRNwZ5Hz4kbxIRvc4K9ApG1AIXOHzH4EVWxTRhvNg7AwIdq5EevnvHsX4IjFJG6AG0z1IpRUKVbehk-nZr37Z1lbRoRkG0DpX63QjlDxf3d923Ruv6Zo07ns9xbg2pk/s1600/appa1.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTHmQoazdKbmhPwCRNwZ5Hz4kbxIRvc4K9ApG1AIXOHzH4EVWxTRhvNg7AwIdq5EevnvHsX4IjFJG6AG0z1IpRUKVbehk-nZr37Z1lbRoRkG0DpX63QjlDxf3d923Ruv6Zo07ns9xbg2pk/s320/appa1.jpg" width="217" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">கே ஏ சுப்பிரமணியம்</td></tr>
</tbody></table>
?மணியம் தோழர் ஏற்படுத்திய கருத்தியல்: தமிழினத் தேசியம், சாதியம், புதிய பண்பாட்டியம்<br />
முந்திய பதிவில் மூன்றுலகக் கோட்பாட்டு அடிப்படையில் எனக்கான கருத்தியலை வந்தடைய மணியம் தோழர் வழிப்படுத்தியிருந்தவாறினைத் தொடர்ந்து பேசுவதாகக் கூறியிருந்தேன். அந்த மூன்றுலகக் கோட்பாட்டில் இன்று எவரும் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. கட்சி இன்னும் மூன்றுலகக் கோட்பாட்டில் தொங்குகிறது என்ற அனாமதேயமான ஒரு குற்றச்சாட்டும், அதை எவரும் மறுக்க முன்வராமையும் ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு, மாயாவாத மார்க்சியம் - லெனினியம் - மாஒ சேதுங் சிந்தனை எனப் பேசுவது பொருளற்றது.<br />
முதலில் ஃபனான் புறக்கணிக்கப்பட்ட ஆபிரிக்காவை மூன்றாமுலகு எனக் குறிப்பிட்டார். பின்னர் மாஒ, ஒடுக்கப்படும் நாடுகள் அனைத்தையும் மூன்றாமுலக நாடுகள் என்றார். அதிகமாக வஞ்சிக்கப்பட்ட ஆபிரிக்க நாடுகளோடு கூடுதல் நெருக்கத்தைக் காட்டிய அதேவேளை ஏகாதிபத்திய நாடுகளால் சுரண்டப்படும் அனைத்து மூன்றாமுலக நாடுகளோடும் நெருக்கமான உறவை அவர் முதல்நிலைக்குரியதாகக் கட்டியெழுப்பினார். சங்கானையில் நடந்த கூட்டத்தில் நான் சண்முகதாசனிடம் மூன்று கேள்விகளை எழுதிக் கொடுத்ததையும், ஒரு பொடிப்பயல் எனப் புறந்தள்ளாமல் அவர் பதில் அளித்தமையையும் பற்றி பல சந்தர்ப்பங்களில் எழுதியுள்ளேன். அந்தக் கேள்விகளில் ஒன்று, "பிற்போக்கான சிறிமாஒ பண்டாரநாயக்க அரசுக்கு சீனா எப்படி 'பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபம்' கட்டித்தரலாம்" என்பதாகும். ஏகாதிபத்தியங்களால் சூறையாடப்படுவதில் இருந்து விடுபட ஓரளவில் இந்த உதவி பங்களிக்கலாம் என்பதை சண் விளக்கினார்.<br />
முன்னாள் ஏகாதிபத்திய நாடுகளும் மேலாதிக்க நாடுகளால் சுரண்டப்படுவதும், இவ்விரு தரப்புக்குமிடையேயான முரண்பாட்டை சரியாகக் கையாள்வது அவசியம் என்பதையும் மாஒ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அந்நாடுகளோடான உறவுகளில் அவர் வலியுறுத்திய கருத்துகள் அப்போதே "பீக்கிங் ரிவியூ" சஞ்சிகைகளில் வந்துள்ளன; இப்போது விடியல்-அலைகள் இணைந்து வெளியிட்டுள்ள "மாவோ- தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படைப்புகளின்" ஒன்பதாவது தொகுதியில் இவ்வகையில் உலக நாடுகளை வகைப்படுத்திக் காட்டிய மாஒவின் பார்வையைக் காணலாம்.<br />
மாஒவின் மறைவின் பின்னர் "மூன்றுலகக் கோட்பாடு" பேசுபொருளானபோது, அதுபற்றிய தனி நூல் வெளியானது. மேலாதிக்க நாடுகளான சோவியத் யூனியன், அமரிக்கா என்பவற்றைத் தனிமைப்படுத்துவது; மூன்றாமுலக நாடுகள் சுயசார்பில் தங்கியிருக்க உதவுவதால், பாதிப்புக்குள்ளாகும் இரண்டாம் உலக நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சி ஏற்பட வாய்ப்பான சூழலை ஏற்படுத்துவது என்பன இக்கோட்பாடு சார்ந்து விவாதத்தில் மேற்கிளம்பின. இவ்வகையில் முரண்பாட்டைக் கையாள்வது என்பது நாட்டினுள்ளே முன்னதாக மாஒ ஐம்பதுகளின் நடுக்கூறில் கோட்பாட்டுருவாக்கம் செய்த ஒன்று; முன்னதாக முரண்பாடு எனில் எதிர் நிலைக்கு உரியதாக மட்டுமே பார்க்கப்பட்டது. பிரதானமாக ஸ்டாலினும், தொடர்ந்தும் சோவியத் யூனியன் எப்போதுமே அவ்வாறுதான் கையாண்டிருந்தது. மக்கள் மத்தியிலான முரண்பாடு எதிரியுடனான முரண்பாட்டைக் கையாள்வதிலிருந்து வேறுபட்டது என மாஒ வலியுறுத்தி நடைமுறைப்படுத்தியமை மார்க்சியத்துக்கான பெரும் பங்களிப்பாகும்.<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUe2vZCoOcwLrm7W96146adUpQLQ9C0emjz8c2duRHGDrYWmBaBc3ZdPBnI7V5G_UVX8U54xmws3G1S4v5E876niqDDP2WX4sI5IVYkgn3qZuRpL_G4TCCiEpnkPuvT5rRluHl7VDpqWHL/s1600/Banda.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="164" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUe2vZCoOcwLrm7W96146adUpQLQ9C0emjz8c2duRHGDrYWmBaBc3ZdPBnI7V5G_UVX8U54xmws3G1S4v5E876niqDDP2WX4sI5IVYkgn3qZuRpL_G4TCCiEpnkPuvT5rRluHl7VDpqWHL/s320/Banda.jpg" width="320" /></a>இவ்வகையிலான மூன்றுலகக் கோட்பாட்டை சீன நூல் சார்ந்து மட்டுமல்லாமல் சுயமாக மணியம் தோழர் தானே தேடி நிறைய ஆதாரங்கள் வாயிலாக தனி ஆக்கம் ஒன்றையும் எழுதியிருந்தார். அது சண்ணுடனான சிறப்பு மாநாட்டில் வாசிக்கப்பட்டிருந்தது. மணியம் முன்னர் இருந்தே இந்தவகைக் கையாளலையே எமக்குரியதாக வடிவப்படுதித் தந்துவந்தமையால் இந்தக் கட்டம் அதிர்ச்சிக்குரியதாக இருக்கவில்லை; வடபிரதேசத்தின் மிகமிகப் பெரும்பான்மையினர் மூன்றாமுலகக் கோட்பாட்டை ஏற்றுப் புதிய கட்சியில் அணிதிரண்டமையிலேயே இதனைக் காண இயலும்.<br />
மக்கள் மத்தியிலான வேலையில் இவ்வகையிலான மூவகைப்படுத்தல் என்பதை மணியம் தோழர் எப்படிக் கையாண்டார் எனக்காட்டுவது இங்கு அவசியமானது. சாதியப் போராட்டம் முனைப்பட்ட நிலையில் நடந்த கொம்யூனிஸ்ட் கட்சி எட்டாவது மாநாட்டில், சண் " கருப்பினப் போராளிகள் வெள்ளையரைப் பெற்றோள் ஊற்றி எரிப்பதைப் போல வெள்ளாளரைப் பெற்றோல் ஊற்றி ஒடுக்கப்பட்ட சாதிப் போராளிகள் எரிக்கவேண்டும்" எனக் குறிப்பிட்டதைக் கூறும் மணியம், அப்படியென்றால் முதல் பெற்றோல் இவருக்கே அல்லவா வரும் என்பார். மார்க்சிய-முற்போக்கு-ஜனநாயக உணர்வுடைய ஏராளமான வெள்ளாளர்கள் சாதியப் போராட்டத்தை ஆதரித்தனர் மற்றும் பங்கெடுத்தனர். சாதியப் போராட்ட அனுபவங்களில் நடுநிலைச் சக்திகளை வென்றெடுக்கக் கையாண்ட நடைமுறைத் தந்திரோபாயங்கள் குறித்து நிறையக் கூறியுள்ளார். இதுகுறித்து "இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்" நூல் விரிவாகக் காட்டியுள்ளது.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicQX7LEJsT3z4uym1dvO1oMgbupDfmPrsmNeh4REANzt1tq7UM6zKcKUKAYO1lgimI1ThIq_ftiABSN63hU5sZji4qnsaRhFSzxm23f1d9nE__DhulTYibdJbiyJNOzz7ix1VyyIPzxjBL/s1600/l.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicQX7LEJsT3z4uym1dvO1oMgbupDfmPrsmNeh4REANzt1tq7UM6zKcKUKAYO1lgimI1ThIq_ftiABSN63hU5sZji4qnsaRhFSzxm23f1d9nE__DhulTYibdJbiyJNOzz7ix1VyyIPzxjBL/s320/l.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">என். சண்முகதாசன்,மாவோ </td></tr>
</tbody></table>
தமிழினத் தேசியப் பிரச்சனை தொடர்பிலும் இந்த மூன்றாம் (இடைநிலைச்) சக்திகளைக் கையாள்வதுபற்றிய வழிப்படுத்தலைச் சிறப்பாகக் காட்டியுள்ளார். நான் எப்போதும் அவரைச் சந்தித்து அன்றன்று செற்பட்டவாறினை அவரோடு அளவளாவுவதுண்டு; அவ்வாறு அவற்றைக் கூறுமாறு அவர் ஆக்கியிருந்தார். எல்லாவற்றையும் கேட்டு அவற்றின் மீதான விமர்சனத்தின் ஊடாகவே மார்க்சியத்தை அவர் கற்றுத்தந்தார். தமிழீழச் செயற்பாட்டாளர்களுடன் பெரும் விவாதங்களை நடாத்தி வெற்றிபெற்றதான மிதப்போடு என் தர்க்கத்திறனைச் சொன்ன இரண்டொரு சந்தர்ப்பங்களில், கண்டன விமர்சனத்தை முகங்கொண்டேன். மார்க்சிய அணிக்கு ஆகாயத்திலிருந்தா ஆட்கள் வருவர், இப்படி தமிழீழம் என இருப்பவர்கள்தானே வருவர்; இவர்களை விவாதத்தில் வெல்வதல்ல விடயம், வென்றெடுப்பது எப்படி என்பதே முக்கியம் என்பார். அதன்பின் பெரும்பாலும் விவாதித்து எவரையாவது வீழ்த்துவது என்பதைவிடவும், சரியான கருத்தை ஒருவர் வந்தடைய எவ்வாறு உதவலாம் என்பதிலேயே என் கவனம் இருந்தது. கருத்தாடல் நடுநிலைச் சக்திகளை வென்றெடுப்பதற்கானது என்ற புரிதல் புரட்சியாளருக்கு அவசியம். இல்லையேல் வென்றெடுக்க வேண்டியவர்களையும் எதிரியின் பக்கம் தள்ளும் கைங்கரியத்தையே செய்ய நேரும்.<br />
நான் கட்சிக்கு வரும் எழுபதுகளின் முற்பகுதி இன முரண் கூர்மையடைந்து வந்த காலகட்டம்; தரப்படுத்தலை முகங்கொண்ட இரண்டாம் வரிசை எனது. அந்தக் கடும் போட்டியை நிராகரித்து முதலில் இலக்கிய நாட்டத்திலும் தொடர்வளர்ச்சியில் மார்க்சிய அரசியலுக்கும் வந்தேன். அந்தவகையில் இனமுரண் குறித்த கேள்வி என் தலைமுறையில் கட்சியில் இணைந்த இளைஞர்களிடம் இருந்தது. அதனாலேயே இனவாதத்துக்கு எதிராக வர்க்கப் பார்வையில் அதிகம் புடமிடப்பட வேண்டியவர்களாக இருந்து அவ்வாறாக வடிவப்படுத்தப்பட்டவர்கள். அந்தப் புதிய வார்ப்பின் கவர்ச்சியில் தமிழ்த் தேசிய கருத்துடையவர்களோடு விவாதிக்கப் போய் மணியம் தோழரால் இவ்வகையில் நிதானப்படுத்தப்பட்ட நிலையில் "சுயநிர்ணய உரிமை என்றால் என்ன?" என்ற விரிவான கட்டுரையை எழுதியிருந்தேன். முன்னதாக இனப்பிரச்சனை தொடர்பான நாட்டம்-எதிர்க் கருத்தாடல்-நிதானப்பட்ட கருத்தியல் நிலை என்ற பரிமாணங்களோடு லெனின், ஸ்டாலின் சிந்தனைகளையும் சீன அனுபவங்களையும் எமது வரலாற்று நிதர்சனத்தையும் கவனம் கொண்டு அது எழுதப்பட்டது. அதனை எடுத்துச்சென்று பல்வேறு தரப்பினரிடம் காட்டிக் கருத்தறிந்து பெற்ற விமர்சனங்களை என்னிடம் கூறி, வேண்டிய திருத்தங்களைச் செய்வித்திருந்தார். கட்சிப் பத்திரிகையான "செம்பதாகை"யில் மூன்று இதழ்களில் தொடராக அது வந்திருந்தது. மார்க்சிய அடிப்படையில் முதல் முயற்சியாக சுயநிர்ணயம் பற்றிப் பேசிய கட்டுரை அது.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5v0HrhjFNBPBTAv7j01Ks6YLj8dPzlv0r421GlM8QpUUhIHucQR-tSJWhvnxISwjMkRsLM77bnVM28X-pEPdh2Ki4xSsn9sOeTCgc47vYEHR-qmzaOO-xTIbk2ztOVzaPsjFwXkEeYdFJ/s1600/DSC07809.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5v0HrhjFNBPBTAv7j01Ks6YLj8dPzlv0r421GlM8QpUUhIHucQR-tSJWhvnxISwjMkRsLM77bnVM28X-pEPdh2Ki4xSsn9sOeTCgc47vYEHR-qmzaOO-xTIbk2ztOVzaPsjFwXkEeYdFJ/s320/DSC07809.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">பீட்டர் கெனமன் ,சரத் முதடுவகம ,W .A .தர்மதாச ,K A சுப்பிரமணியம் </td></tr>
</tbody></table>
எந்த ஒரு முதல் முயற்சியும் சுத்த சுயம்புவாக அமைந்துவிடாமல், ஆக்கம் ஒன்றைப் பலரதும் பார்வைக்கு உள்ளாக்கி விமர்சனங்கள் அடிப்படையில் இறுதி வடிவப்படுத்துவதனை இதன்வாயிலாகக் கற்றுத்தந்தார். மாறுபட்ட கருத்தாளர்களின் கருத்துகளைக் கவனம் கொள்வது, இணைந்து வேலை செய்வது என்பவற்றையும் இதன் வாயிலாக அனுபவப்படுத்தியிருந்தார். மாஒ, 10 விழுக்காடே மார்க்சியராக உள்ளவரோடும் இணைந்து வேலை செய்யத்தெரிந்திருக்க வேண்டும் எனக் கூறியிருந்தார் என்பதை அடிக்கடி கூறுவார். மூன்றுலகக் கோட்பாட்டில் இது அடிப்படையானது. பிற்போக்காளர் மிகக் குறைந்தவர்களாக உள்ளபோது, நடுநிலயாளர்களாக மிகப் பெரும்பான்மையினர் இருந்து வென்றெடுக்கப்படவேண்டியிருப்பர் என்பதை மாஒ அடிக்கடி கூறியுள்ளார். ஆயினும் நடைமுறையில் தம்மைப் பெரும் புரட்சியாளர் எனக் காட்டும் பலரும் 70 விழுக்காடு மார்க்சியராய் உள்ளவரிலும் இருக்கும் 30 விழுக்காடு பிரச்சனையைப் பெரிதாக்கி விவாதித்து எதிரியாக்கிவிடும் வேலை முறையையே முன்னெடுக்கக் காண்கிறோம்.<br />
ஐக்கியம்-போராட்டம்-ஐக்கியம் என்ற வேலைப் பாணி பலருக்கும் பரிச்சயமற்றுள்ளது. என்வரையில் மூன்றுலகுக் கோட்பாட்டு அடிப்படையில் மார்க்சியத்தை நேசிக்கும் எவரையும் எதிரியாக்க இயலாது. அதற்காக இன்று அரசோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு மாதிரிக் கொம்யூனிஸ்ட் கட்சி இருப்பதைச் சாட்டாக்கி ஒருபோதும் அரசை ஆதரிக்கும் எந்த வேலையையும் நான் செய்ததில்லை. அரசை விடவும் தமிழ் மக்களது போராட்டம் பாஸிஸ சக்தியால் தலைமை தாங்கப்பட்ட போதிலும் எதிர்க்கக் கூடாதது என்ற மணியத்தாரின் வழிமுறையைப் பின்பற்றிவந்தேன். "ஆமை பிடிப்பார் மல்லாத்துவார், நாம சொன்னால் பாவம்" என்று புலிகள் தமக்கான அழிவைத் தாமே தேடுவர் என்பதை அவர் எப்போதும் கூறியதை மனங்கொண்டு செயற்பட்டுள்ளேன்; அதேவேளை வன்முறை வழிபாட்டில் புலிகளை நியாயப்படுத்துகிறவர்களுக்கு மாறாக, அவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளேன். கட்சி ஐ.தே.க. ஆட்சியிலிருந்து மாற்றம் ஏற்பட்டு சமாதான முன்னெடுப்பில் இயங்கிய போது சாகித்திய மண்டலக் குழுவுக்கு என் பெயரைக் கொடுத்திருந்தவகையில் குழுவில் பங்கேற்று, எப்போது விலகச் சொன்னதோ அப்போதே விலகினேன். அதேபோல கட்சி ஏதாயினும் அமைப்போடு தேவை அடிப்படையில் உதவிபெறும்போது, அதற்கு ஏற்ற பிரதி உபகாரங்களை என்னிடம் கேட்டபோது கட்சிக்குத் தெரியப்படுத்திக்கொண்டு ஏதாயினும் உதவியைச் செய்துள்ளேனே அல்லாமல் கட்சியை மீறி, எந்த ஒரு அமைப்புக்கும் ஆதரவாளனாக நான் இருந்ததில்லை.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgK_jrYNTchQIiBNZxSpHDAvpwTkzficmkqwDorLlX6af-ty6kYsQNDQ6Rq9-2XPLA1GVMOY4p8TPMEGa-TauyfrTwvkP390Zhdt_ihzcFHBrIO7CKoo0xq9L6fwJ7UtrhS7t-m-NAE0iS1/s1600/PB280635.JPG" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgK_jrYNTchQIiBNZxSpHDAvpwTkzficmkqwDorLlX6af-ty6kYsQNDQ6Rq9-2XPLA1GVMOY4p8TPMEGa-TauyfrTwvkP390Zhdt_ihzcFHBrIO7CKoo0xq9L6fwJ7UtrhS7t-m-NAE0iS1/s320/PB280635.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">கா .செந்தில்வேல் ,சோ .தேவராஜா ,இ .தம்பையா .</td></tr>
</tbody></table>
மணியம் தோழர் ஈழத்தேசிய நாட்டத்தோடு வந்த தமக்கு உதவியது பற்றி அசோக் குறிப்பிட்டிருக்கிறார்; முன்னர், அவர்களை எதிரியாகக் கொள்ளக்கூடாது என மணியம் தோழர் கூறிய ஒரு சந்தர்ப்பத்தில் நான் கோபத்தோடு "நீங்கள் கொம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலைமை தாங்குகிறீர்களா, அல்லது இந்த ஈழக்குழுக்களுக்குத் தலைமை தாங்குகிறீர்களா" எனக் கேட்டிருகிரேன். நிதானப்பட்ட நிலையில் ஐக்கியமுன்னணி வேலைமுறையை அவரிடமிருந்து கற்கவேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்டு செயற்பட்டுள்ளேன். வலதுசாரிப் பிற்போக்கு பாசிசத் தலைமையில் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதும், அதற்கு எதிராக செயற்பட்டதில்லை; விமர்சனத்தை முன்னெடுத்துள்ளேன், இடதுசாரித்தமிழ்த் தேசியம் ஐக்கியப்படத்தக்கது என்ற போதிலும், மார்க்சியர் என்கிற நிலையில் இலங்கைத் தேசியத்தினுள் பிரிந்து செல்லும் உரிமை இல்லாத சியநிர்ணயத் தீர்வை அடைய வேண்டும் ஏற 1982 இல் எழுதிய கருத்தோடு தான் இன்றும் உள்ளேன்.<br />
என்னுடைய ஆய்வில் அதே 82இல் பாரதி வந்தபோது அவரது கருத்தியல் சார்ந்து பாரதியை அணுகிய நான் புதிய முடிவை வெளிப்படுத்தினேன். அதனைத் தனி நூலாக்க வேண்டும் எனக் கைலாஸ் கூறியிருந்தார். அதையறிந்த மணியத்தார் பாரதியியலில் ஆழக்கால் பதிக்கச் சொன்னார். சாதி-தேசியம்-பாரதியம் என்பன எனது பிரதான ஆய்வுக்களமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவரது கருத்தியலோடு இக்களங்களில் முப்பது வருடங்களாக செயற்பட்டதன்பேறே இரட்டைத் தேசியம், பண்பாட்டுப்புரட்சி வாயிலாக எமக்கான சமூக மாற்றம் என்பவற்றுக்கான கோட்பாடுகளாகும். இது எமது பிரத்தியேகக் களத்தில் அவசியப்பட்ட போராட்டங்களை கட்சி அனுசரணையோடு முன்னெடுக்க அவர் முன் கையெடுப்பதில் சக தோழர்களையும் மக்களையும் வென்றெடுத்த அவரது வேலைப் பாணியின் திரண்ட வெளிப்பாடு. இதற்கு நான் எழுத்து வடிவம் கொடுத்த போதிலும் முழுதாக கே.ஏ.சுப்பிரமணியத்தின் செயற்பாடு-சிந்தனை என்பனவே இரட்டைத் தேசியக் கோட்பாடு; பல்வேறு தோழர்கள், கோட்பாட்டு நடைமுறைத் தவறுகள் பலவற்றைக் கொண்டிருந்த போதிலும் ஆளுமைமிக்க தலைமையை வழங்கிய தோழர் சண்முகதாசன் போன்றோருக்கும் இதுசார்ந்த பங்களிப்பு உண்டு.<br />
<div>
<br /></div>
</div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-19513114652557323052012-11-26T09:09:00.003-08:002012-11-26T09:09:46.610-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF_rXUDog371kwAureXeXpEBMrCVdZW5EYPZ1mYF-jbEGHNnFFLYNUI9v0ew3Tad5GL9kgJy_dwt_P0Haqg33ziACOcPWfQ-f5CRpVh0jcim8QEFDVv3E9afjK5xWckGnuIAkp5y0cOVBr/s1600/kesi_subramaniyam.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF_rXUDog371kwAureXeXpEBMrCVdZW5EYPZ1mYF-jbEGHNnFFLYNUI9v0ew3Tad5GL9kgJy_dwt_P0Haqg33ziACOcPWfQ-f5CRpVh0jcim8QEFDVv3E9afjK5xWckGnuIAkp5y0cOVBr/s320/kesi_subramaniyam.jpg" width="246" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தோழர் மணியம் </td></tr>
</tbody></table>
<br />
<br />
<br />
<br />
<br />
<b><u><span style="color: red;">நவம்பர் 27 இல் பதிவாகும் ஒக்டோபர் 21</span></u></b><br />
<b><u><br /></u></b>
முந்திய சந்திப்பில் ஒக்டோபர் 21 எழுச்சி குறித்த பதிவொன்று பேசுபொருளாயிருந்தது. வேறு பல வேலைகளின் காரணமாக இடையில் எமது உரையாடல் தடைப்பட்டிருந்தது. மீண்டும் முக்கியத்துவம்பெறும் திகதியொன்றில் இந்தச் சந்திப்பு. தமக்கு ஊட்டமளிக்கும் எதிர் இனவாதம் ஒன்றை அவாவும் இனவாத சக்திகளுக்கு இந்த நாள் வேறு பொருள்தரும். மக்கள் விரோதமாக முனைப்படைந்த அந்த 'கார்த்திகைக் கொடுங்கனவு' வரலாற்று ஏட்டிலிருந்து விரைவில் மறக்கப்பட்டதாகிவிடும்(தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய பல்வேறு அமைப்புகளின் போராளிகளோடு விடுதலைப் புலிகள் அமைப்பில் போராடியவர்களும் ஒட்டுமொத்தமாக மாவீரர்களாக நினைவுகூரப்பட வேண்டும்; அது பாசிச வழிப்படுத்திய ஒரு பிற்போக்குத் தலைவரின் பிறந்த நாளாக இருக்கப்போவதில்லை). மாறாக, மக்கள் விடுதலையை நேசிக்கும் பொதுவுடமைவாதிகளுக்கு இந்தத்தினம் புரட்சிகர உணர்வை புத்தாக்கம் செய்யத் தூண்டுவதாக இருக்கும். ஒக்டோபர் 21 எழுச்சியை நினைக்கும் போதெல்லாம் கிளர்ச்சியூட்டும் முக்கியத்துவம்மிக்க ஆளுமையான கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களது இதயத் துடிப்பு அடங்கிய நாள் 1989 இன் நொவெம்பர் 27 ஆகும்.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJR4QxeP3J0QNbI61JirFiFJp_FFHh2e7r-Q8OJC0U2GnVKk5cNcnPn32bhWW8B7WfEkcYMgx7nPL-ClVorYOTcFxWSsyqrz0XRclYp7VLvP6qi2Ii2Sj-igu0QBMyhxG9Gi8dsYwvbjVq/s1600/DSC07738.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJR4QxeP3J0QNbI61JirFiFJp_FFHh2e7r-Q8OJC0U2GnVKk5cNcnPn32bhWW8B7WfEkcYMgx7nPL-ClVorYOTcFxWSsyqrz0XRclYp7VLvP6qi2Ii2Sj-igu0QBMyhxG9Gi8dsYwvbjVq/s320/DSC07738.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">சண் ,மணியம் </td></tr>
</tbody></table>
இங்கு அவரோடான ஊடாட்டத்தில் இன்றைய சூழலில் மேற்கிளம்பும் நினைவலைகளைப் பேசிக்கொள்வோம். பத்துவருடங்களின் முன்னர் மணியம் தோழரின் மூத்த மகன் ஒரு விடயத்தைச் சொன்னார்; "அப்பா, சண் தலைமையிலிருந்து விலகியது தனது மிகப்பெரும் தவறு" என்று சொன்னதாக அவர்(சத்தியராசன்) கூறியபோது மிகுந்த கோபாவேசத்தோடு மறுப்பைத் தெரிவித்தேன். "வேறு வடிவத்தில் சொல்லியிருக்கக் கூடியதை இவ்வகையில் தவறாகப் பொருள்கொண்டு சொல்லாதீர்கள்" என்றேன். பின்னர் ராசன் விபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்தும் நாலைந்து வருடங்கள் கடந்தோடிய நிலையில் மணியம் தோழரின் இளைய மகன் சத்தியகீர்த்தியும் அதேவிடயத்தைச் சொன்னார்; முன்னதாக ராசன் சொன்னதை நான் மறுத்திருந்தது கீர்த்திக்குத் தெரியாது.<br />
இருவரும் ஒரேவிடயத்தைக் கூறிய நிலையில் அவர் இந்தப்பொருளில் கூறியிருக்க முடியாது எனத் தொடர்ந்து என்னால் கருத இயலவில்லை. பொதுவாகவே கொம்யூனிஸ்ட் கட்சி காலத்துக்குக் காலம் பிளவுபட்டு மக்களைவிட்டுத் தூரப்பட்டுப்போன தவறை இளைத்துவிட்டோம் என்று என்னோடும் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அந்தவகையில் தனது அரசியல் செயற்பாட்டு அனுபவங்களை "ஒரு கொம்யூனிஸ்ட்டின் சுயவிமர்சனம்" என்பதாக எழுதவேண்டும் எனக்கூறிக்கொண்டிருந்தார். எழுத முன்னர் அவரே 'காலம் ஆகினார்'. அந்தக் கடந்த காலத்தவறில் தனதுமான பங்கை சுயவிமர்சனமாக முன்வைக்கும் நினைவே சண் தன் அரசியல் அனுபவங்களை 'ஒரு அப்பழுக்கற்ற கொம்யூனிஸ்ட்டின்' வாழ்க்கை போல எழுதியிருந்த காரணத்தால்தான். சண் மீது மிகுந்த மதிப்பு அவருக்கு இருந்தபோதிலும், திரிபுவாதத்துக்கு எதிராக வீறுடன் முன்னேறிய புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் கட்சி பல பிளவுகளைச் சந்திக்க சண்ணே காரணமாக இருந்தார் என்பதைப் பல சந்தர்ப்பங்களிலும் அவர் கூறியிருக்கிறார்.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5GKe0U36ST5SH8K3BE5SZR0Rpo7iKkK60sJmsTwH0CQyybkvKpNujgNIs-Y8SWMREVDK7e8AV5AyF-V0pFMC29w3F67Ee2JjQZ17nC9WMP4PAUcjoay2PPMVxNzf4m0ZYCTB6chUpxMYV/s1600/DSC07737.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="176" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5GKe0U36ST5SH8K3BE5SZR0Rpo7iKkK60sJmsTwH0CQyybkvKpNujgNIs-Y8SWMREVDK7e8AV5AyF-V0pFMC29w3F67Ee2JjQZ17nC9WMP4PAUcjoay2PPMVxNzf4m0ZYCTB6chUpxMYV/s320/DSC07737.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மணியம்,டானியல்,சிவதாசன் </td></tr>
</tbody></table>
<br />
பிரேமலால், கார்த்திகேசன், வி.ஏ.கந்தசாமி ஆகியோர் 1972 இல் பிளவடைந்தபோது அவர்களது அரசியல் நிலைப்பாடு சரியாகவும் ஸ்தாபன அணுகுமுறை தவறாகவும் இருந்தது; தனது அரசியல் வறட்டுத்தனங்களை சுயவிமர்சனத்தோடு சண் ஏற்று ஜனநாயகப் பண்பைப் பேணியிருந்தால் அந்தப்பிளவைத் தவிர்த்திருக்க இயலும். அதன்பின்னராவது சண் வறட்டுவாதத்தைக் கைவிட்டு வெகுஜன அணிதிரட்டலுக்குரிய கட்சிக் கட்டமைப்பைப் பேணுவார் என்ற எதிர்பார்ப்புப் பொய்த்துப்போனது. தேசிய இனப்பிரச்சனை தொடர்பில் அவர் "தொழிலாளி" பத்திரிகைக்கும் பிரசுரங்களுக்கும் எழுதிய ஆக்கங்கள் பல தடவை விவாதத்துக்கு உட்பட்டது. தமிழினம் தேசிய இனமல்ல எனத் தொடர்ந்தும் எழுதி வந்தார்; தவிர்க்கவியலாதநிலையில் 'தேசிய இனமாக வளர்ந்து வருகிறது' என்று மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது.<br />
தேசிய இனமல்ல என்பதனூடாக சுயநிர்ணய உரிமையை மறுப்பதில் அவர் பிடிவாதமாக இருந்தது சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதுசார்ந்ததே; புறநிலை யதார்த்தம் குறித்த ஆய்வோ, ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றின் மறுக்கப்படும் உரிமைகள் குறித்தோ அவற்றை வென்றெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியோ எந்தத் தேடலும் அவருக்கு அவசியமற்றதாக இருந்தது.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisCxtHsg_NltG8fwifGNoxy2q-qW3W2UmYZmpeS5V-tFxF9vDvCQNDmEzCSrMQ8uPrZZNEofeLdOzy759-WPQru5ECf7hI7bZ4zc0gcgAZ9HGXFQYjp-vJZT-Y5hozjfMapfMo7SHBPTLo/s1600/DSC07747.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisCxtHsg_NltG8fwifGNoxy2q-qW3W2UmYZmpeS5V-tFxF9vDvCQNDmEzCSrMQ8uPrZZNEofeLdOzy759-WPQru5ECf7hI7bZ4zc0gcgAZ9HGXFQYjp-vJZT-Y5hozjfMapfMo7SHBPTLo/s320/DSC07747.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தர்மலிங்கம்,மணியம் </td></tr>
</tbody></table>
அத்தகைய சூழலில் மூன்றாமுலகக் கோட்பாடு விவாதத்துக்கு வந்தது. பல சந்தர்ப்பங்களில் மாஒ சேதுங் மூன்றுலகக் கோட்பாட்டு அணுகுமுறையில் நாட்டுக்கும் நாட்டுக்கும் - மக்களுக்கும் மக்களுக்கும் - கட்சிக்கும் கட்சிக்கும் - இடையிலான உறவை அணுகியமை பற்றிச் சண் அறியாதவரல்ல. தேசிய இனப்பிரச்சனையில் மக்கள் நலன் பற்றி எந்தத் தேடலும் அற்று இருந்தது போலவே, சர்வதேச விவகாரங்களில் நிதர்சனத்தைக் காணத்தவறி, தன்னைப் பெரும் புரட்சியாளராகக் காட்டும் அவதியில் மூன்றாம் உலகக் கோட்பாட்டுக்கு எதிராக கருத்துரைக்க முனைந்தார். முன்னர் இதுபோன்ற கருத்துப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் போலன்றி உட்கட்சிப் போராட்டமாக தொடர்ந்து விவாதித்து இறுதியில் சிறப்பு மாநாடு வரை போராட்டம் உச்சம்கண்டது. தமிழ் உறுப்பினர்களில் மிகமிகப் பெரும்பான்மையினர் மூன்றுலகக்கோட்பாட்டை ஏற்றனர்; ஓரிருவர் தவிர்ந்த ஏனைய சிங்கள உறுப்பினர்கள் சண் தலைமையைச் சரியென ஏற்றனர். ஆயினும், மூன்றுலகக் கோட்பாட்டை நிராகரிப்பதாக பகிரங்கப்படுதுவதில்லை என முடிவானது.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6TyIhuQ3eMEODXd-_XIbCM0YgoVQLai0LCzlsxPIlPoZglCL6WeZekdQTFIySF5liykFdmiJKRPLSiMsbd6Kie_aq6ma6F3mCw6FhzdHuAK4MPcVwOlT-xJC-av4eTPrxC2PZxC6Ht37z/s1600/DSC07739.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="211" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6TyIhuQ3eMEODXd-_XIbCM0YgoVQLai0LCzlsxPIlPoZglCL6WeZekdQTFIySF5liykFdmiJKRPLSiMsbd6Kie_aq6ma6F3mCw6FhzdHuAK4MPcVwOlT-xJC-av4eTPrxC2PZxC6Ht37z/s320/DSC07739.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">அமிர்தலிங்கம் ,மணியம் </td></tr>
</tbody></table>
தன்னிச்சையாக இயங்கும் தனது இயல்புப்பிரகாரம் கட்சி முடிவைமீறி சண் மூன்றுலகக் கோட்பாட்டைக் கட்சி எதிர்ப்பதாக அறிக்கைவிட்டார். இதன்பின்னரும் அவர் கூட்டு முடிவை முன்னெடுக்கும் புரட்சிகரக் கட்சிக்குத் தலைமை தாங்கத் தகுதியற்றவர் என்ற முடிவை எட்டிய நிலையிலேயே, அவரிலிருந்து வெளியேறி "இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (இடது)" உதயமானது. சண் தொடர்ந்து இயங்க இயலாத முடக்கத்துக்காளானார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. முன்னெப்போதும் இல்லா அளவில் இந்தப் பிளவு அவரைப் பெரிதும் பாதித்தது. மணியம் இப்படித் துரோகம் செய்துவிட்டாரே என ஆதங்கப்பட்டதும் மெய். கோட்பாட்டையும் நடைமுறையையும் மீறி ஒரு விசுவாசத்தை அவரால் எப்படி எதிர்பார்க்க இயலுமாயிற்று? உண்மையில் அப்படியொரு போர்க்குணமிக்க உறவுப்பிணைப்பு சண்-மணியம் இடையே இருந்தது. சாதித் தகர்ப்புப் போராட்டத்திலும் தொடர்ந்து கட்சியைக் கட்டிவளர்ப்பதிலும் மணியம் காட்டிய உறுதியிலேயே சண்ணின் தலைமை ஆட்டங்காணாமல் இருந்தது. நடைமுறை சார்ந்த பிரயோகத்தில் சண்ணுடைய வரட்டுவாதத்தை மீறிச் சரியான பிரயோகத்தை முன்னெடுக்க ஏற்றதாக செயற்படும் அதேவேளை, ஏனைய கோட்பாட்டு விவகாரங்களிலும், பிரசாரங்களிலும், பல்வேறு தொடர்பாடல்களிலும் சண்ணின் ஆளுமை கட்சிக்குப் பலமாக அமைவதை மணியம் புரிந்தவராயிருந்தார். அதுசார்ந்த உயர் மரியாதை சண் மீது அவருக்கு இருந்தது. இதன் காரணமாகவே மணியம் தனது எந்த வறட்டுத்தனத் தவறையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்தும் தன்னோடு இருப்பார் என நம்ப வைத்திருக்கிறது.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiq7UfEm8_V2tBUCOJ4BhAMXPz9LZXZfLBMo472nFPLksQy1qVn5i2DA28mcaA3d4evP57ZrIVc02UQZv05Ci8_4LVg7zpIcchQeQUD02TV85RiE9oUq_37aXvzbcxa8PiFyAvG5GfyPB3h/s1600/DSC07743.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="196" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiq7UfEm8_V2tBUCOJ4BhAMXPz9LZXZfLBMo472nFPLksQy1qVn5i2DA28mcaA3d4evP57ZrIVc02UQZv05Ci8_4LVg7zpIcchQeQUD02TV85RiE9oUq_37aXvzbcxa8PiFyAvG5GfyPB3h/s320/DSC07743.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மணியம் ,யோகநாதன் ,கதிரேசு </td></tr>
</tbody></table>
தனிப்பட்ட உறவைவிடவும் மக்கள் நலனுடைய புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதால் சண்ணிலிருந்து பிரிவது தவிர்க்க இயலாதது என்ற முடிவுக்கு வந்தார். அதிதீவிரப் புரட்சிகரச் சுலோகங்களை முன்வைத்து மக்களிலிருந்து பிரிந்துபோவதாயில்லாது 'மக்களிடமிருந்து மக்களுக்கு' எனும் மார்க்கத்தை இனி முன்னெடுக்க இயலும் எனக் கருதினார். அதற்கு அமைவாக கட்சிப் பெயரும் "புதிய ஜனநாயகக் கட்சி" என மாற்றப்பட்டது.<br />
இத்தகைய புதிய பாணி என்பது அடிப்படையில் மார்க்சிய-லெனினிய-மாஒ சேதுங் சிந்தனை மார்க்கத்துக்குரியதே. முரண்பாடு என்பதை எதிர்நிலைக்குரியதாக மட்டும் பார்ப்பதிலிருந்து நட்பு முரண்பாடு என்கிற ஒன்றை அறிமுகம்செய்த மாஒ, "மக்கள் மத்தியிலான முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது" என்பதையும் பேசியவர்; வலதுசாரிப் பிற்போக்காளார் மிகமிகச் சிறுபான்மையினர்-கொம்யூனிஸ்ட்டுகளும் சிறுபான்மையினரே; இடைநிலையில் உள்ளவர்களே மிகப் பெரும்பான்மையினர், அவர்களை வென்றெடுப்பது குறித்த மாஒ சேதுங் சிந்தனை வழிகாட்டல் மூன்றாமுலகக் கோட்பாட்டிலும் வெளிப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு சண்ணிலிருந்து வெளியேறியமை உதவிகரமானது எனக் கூறுவார்.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3hobzKnKjPEDeDPyczAaGkGrq_Jt5NILo3v8hhV_Z2TqOHKCMuRg9jVOx3lC6LabQNT9MQtSqw_P44iHERTKgAqInNr4jebUKDL82QiOtpdzBfhwaQLw3tKdsrmdVJ-URjeVXDa5KPfpa/s1600/SD2.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3hobzKnKjPEDeDPyczAaGkGrq_Jt5NILo3v8hhV_Z2TqOHKCMuRg9jVOx3lC6LabQNT9MQtSqw_P44iHERTKgAqInNr4jebUKDL82QiOtpdzBfhwaQLw3tKdsrmdVJ-URjeVXDa5KPfpa/s320/SD2.jpg" width="291" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">எஸ் டி பண்டரநாயக்க ,சண் ,மணியம் ,சிவதாசன் </td></tr>
</tbody></table>
<div style="text-align: left;">
ஆயினும் அவர் விரும்பிய புதிய பாணியிலான கட்சிக் கட்டமைப்பு வந்தமையவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்துள்ளது. அதனாலேயே ராசன், கீரு ஆகியோரிடம் சண்ணிலிருந்து விலகியது தவறு என்பதை அவர் கூறியிருக்கிறார். அவ்வாறானபோதும் என்னிடம் விலகலின் அவசியத்தை அவர் தொடர்ந்து நியாயப்படுத்தியமை என்பது அடிப்படையில் வறட்டுவாதம் கடந்த இத்தகைய சரியான பாட்டாளிவர்க்க கருத்தியலை நான் வந்தடைய வேண்டும் என அவர் கருதியமை கரணமாகும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்புதிய கருத்தியல் மற்றும் மூன்றுலகக் கோட்பாடு வாயிலாக அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டமை பற்றி அடுத்த சந்திப்பில்.</div>
<div style="text-align: left;">
(இங்கு இடம்பெற்றுள்ள படங்களில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த சிங்கள-தமிழ்த் தலைவர்களுடன் மணியம் இடம்பெற்றிருப்பதைக் காணலாம் .அன்றைய வெகுஜன மார்க்கம் சண்முகதாசனால் முடக்கப்படாத ஆரோக்கியமான சூழலின் பேறு இது. போராட்ட வெற்றிகளின் பின் தானே சரியான கோட்பாட்டில் தலைமை தாங்குவதான அகங்காரம் அவரிடம் ஏற்பட்ட பின்னரே வறட்டுவாதியானார் ).</div>
<br />
</div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-45899823134051778822012-10-21T01:29:00.003-07:002012-10-21T01:29:42.443-07:00ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கம்:<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;"><u><b><span style="color: red;">ஒக்டோபர்</span></b></u></span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;"><u><b><span style="color: red;"> 21 <span lang="TA">எழுச்சி
மார்க்கம்</span>: <span lang="TA">தொடரும் புரட்சிகர மரபுரிமை</span></span></b></u><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;"><u><b><span style="color: red;"><span lang="TA"><br /></span></span></b></u></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: x-small;">ந.இரவீந்திரன்</span></div>
<br />
<br />
<br />
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;"><span lang="TA"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip-qLy6R2spXoZr0U5zjbiaa9ueuw4f_gTinbbAY2ric4LUFejK2KVJ76l2LXq8AEZjU8W_C00GweTf4Ukk55Jz1uMv6WmeTQSogyXPx-g5XloZ4PT6UYcsD5Nb9xCsrYpZcnHUyA4qOar/s1600/n1206253.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip-qLy6R2spXoZr0U5zjbiaa9ueuw4f_gTinbbAY2ric4LUFejK2KVJ76l2LXq8AEZjU8W_C00GweTf4Ukk55Jz1uMv6WmeTQSogyXPx-g5XloZ4PT6UYcsD5Nb9xCsrYpZcnHUyA4qOar/s1600/n1206253.jpg" /></a><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">ஒக்டோபர்</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;"> 21 <span lang="TA">எழுச்சி
மார்க்கத்தைத் தொடரும் மரபுரிமையாகக் கூறுவது முற்றிலும் பொருத்தப்பாடுடையது</span>;
<span lang="TA">அதன்வழி நின்று தொடர்ந்து சிந்தித்துச் செயற்படுகிறவர்கள் நிறையவே உள்ளனர்</span>.
<span lang="TA">அவர்கள் ஒவ்வொருவரையும் மதித்தவண்ணமாக</span>, <span lang="TA">அந்த எழுச்சியின்
வழிகாட்டலில் வளர்த்தெடுக்கப்பட்டவன் என்கிறவகையில் என் பதிவை இங்கு அழுத்தமாக முன்வைக்க
அவசியமுள்ளது</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">அந்தமார்க்கத்தின் இரண்டாம்
சருக்கமாக அமையும்</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">
"<span lang="TA">புதிய பண்பாட்டுத் தளம்</span>" <span lang="TA">சென்ற வாரம்
அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது</span>; <span lang="TA">இன்றைய தினம் அதற்குரிய தனித்துவத்தோடு
நினைவுகூரப்பட வேண்டும் என்பதால் அவ்வாறு</span> 13<span lang="TA">ம் திகதியில் அது
தொடக்கம் பெற்றது</span>. <span lang="TA">தவிர</span>, <span lang="TA">கால வளர்ச்சியோடு
ஒக்டோபர்</span> 21 <span lang="TA">எழுச்சியின் இன்னொரு பரிணாமமாக அமைவது</span>
"<span lang="TA">புதிய பண்பாட்டுத் தளம்</span>". <span lang="TA">அன்று யாழ்ப்பாண
மண்ணில் புரையோடிப் போயிருந்த சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சி மார்க்கத்தின்
படிப்பினைகளை இன்று நாடு பூராவிலும் உள்ள</span>
<span lang="TA">ஒட்டுமொத்த அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டத்தில்
பிரயோகிக்க வேண்டியதாக உள்ளது</span>. <span lang="TA">அதன்பேறாக</span>, <span lang="TA">புதிய பண்பாட்டு வெகுஜன அமைப்புக்குரியதாக இன்றைய செயற்பாட்டுப் பாணி வளர்த்தெடுக்கப்பட
வேண்டியுள்ளது</span>. <span lang="TA">தொடர்ச்சியுடனான இந்தப் பரிணமிப்புக் கவனிப்புக்குரியது</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">"<span lang="TA">சாதிமுறை தகரட்டும்</span>;
<span lang="TA">சமத்துவ நீதி ஓங்கட்டும்</span>" <span lang="TA">என்ற பதாகையின்
கீழ்</span> 1966 <span lang="TA">ஒக்டோபர்</span> 21 <span lang="TA">அன்று அணிதிரண்ட
புதிய சக்தியுடன் எனது இணைவு சுவாரசியமிக்கது</span>; <span lang="TA">அப்போது நான் ஆறாம்
வகுப்பு மாணவன்</span>. <span lang="TA">அந்த ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கி மிகமோசமாக
சாதிவெறிப் போலீசாரால் தாக்கப்பட்டதோடு அம்மார்க்கத்தின் வழிப்படுத்தலுக்கு பிரதான
கருத்தியலாளராக இருந்தவரான கே</span>.<span lang="TA">ஏ</span>.<span lang="TA">சுப்பிரமணியம்
எனது ஊரிலும் இருந்துள்ளார்</span>. <span lang="TA">அப்போது அவரை நான் புரிந்து கொள்ளவோ
சந்திக்கவோ இயலுமாயிருக்கவில்லை</span>. <span lang="TA">தொடர்ந்து தேனீர்க்கடைப் பிரவேசம்</span>,
<span lang="TA">ஆலயப்பிரவேசப் போராட்டங்கள் என வலுப்பட்டு வந்த காலத்திலும்</span>
'<span lang="TA">ஏதோ பயங்கரவாத</span>' <span lang="TA">நடவடிக்கைகள் எங்கோ நடந்துகொண்டிருப்பதாகக்
கருதும் மாணவனாகவே நான்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">உச்சநிலையில் ஒரு சம்பவம்
என் ஊரோடும் தொடர்புபட்டபோது உயர்தர மாணவனாக இருந்தேன்</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">. <span lang="TA">மறுமலர்ச்சி
மன்றத்தில் சமூக அக்கறை கொள்ளும் முதல் அனுபவம் பெறும் செயற்பாடுகள் இருந்தபோதிலும்
சமூக மாற்றம் பற்றி எந்தப் புரிதல்களும் இருந்ததில்லை</span>. <span lang="TA">அப்போது
நிற்சாமத்தில் வெங்காயம் ஏற்றி விற்பனைக்கு பரிமாற்றும் சிறிய லொறி ஒன்றை வைத்திருந்த
எமது ஊரவரைப் பொலீசார் பயன்படுத்தி நல்லப்பு என்கிற சமூகப் போரளியைக் கொலை செய்திருந்தனர்</span>(<span lang="TA">வெங்காய லொறியைக் கண்டதும்</span>, <span lang="TA">ஏற்கனவே போராட்ட முனைப்பில்
தேடப்படுபவராய்த் தலைமறைவாக இருந்த தோழர் நல்லப்பு தெரிந்தவர்தானே என்ற நினைப்பில்
வெளிப்பட்டு வந்தார்</span>; <span lang="TA">வரக் கண்டதும்</span>, <span lang="TA">உள்ளே
பதுங்கி ஒழிந்திருந்த பொலீசார் குதித்து இறங்கித் துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்துக்
கொலைபாதகம் புரிந்தனர்</span>).<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">எங்கள் அளவில்</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">, <span lang="TA">ஒரு பயங்கரவாதியைக்
கொல்வதற்கு எம்மூரவர் துணை போயிருக்கிறார்</span>; <span lang="TA">சண்டியர்களான அவர்களால்
இவர் விரைவில் தீர்த்துக்கட்டப் படுவார் என்ற பேச்சுத்தான் இருந்தது</span>. <span lang="TA">அப்படி எதுவும் நடக்காததோடு</span>, <span lang="TA">சிறிய அடிதானும் விழவில்லை
என்பது அதிசயமாகப் பட்டதாயினும்</span>, <span lang="TA">சலனம் ஏதுமில்லாததால் விரைவில்
மறந்தும் போனோம்</span>(<span lang="TA">பின்னாலே கட்சிக்கு வந்தபோது அவர்களிடம் கேட்டேன்</span>;
<span lang="TA">அவர் அப்படிக் காட்டிக்கொடுத்தும் கூட எப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல்
இருந்தீர்கள் என்று</span>. '<span lang="TA">அவர் என்ன செய்வார் தோழர்</span>; <span lang="TA">வியாபார ஊடாட்டத்தைத் தெரிந்துகொண்ட பொலீஸ் அவரை வெருட்டிப் பயன்படுத்தியிருக்கிறது
என்பதைக் கட்சிக்கிளைக் கூட்டக் கலந்துரையாடலில் முடிவாய் அறிந்து கொண்டதால் அவருக்கு
எதிராக எதுவும் பண்ணுவதில்லை என்று முடிவு செய்ததோடு</span>, <span lang="TA">தொடர்ந்து
நட்பைப் பேணிவந்தோம்</span>' <span lang="TA">எனச் சொல்லக்கேட்டபோது உண்மையில் முன்னர்
இவர்கள் பற்றி எவ்வளவு தவறான புரிதல்களுடன் இருந்துள்ளேன் என்று வெட்கப்பட மட்டுமே
முடிந்தது</span>). <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">ஓரிரு வருடங்களில் மார்க்சியத்தைக்
கற்றுக்கொண்ட போதிலும் அவர்களோடு இணையும் நோக்கம் இருந்ததில்லை</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">; <span lang="TA">மார்க்சிய
வழிப்பட்டதாக அல்லாமல் வெறும் சாதியச் சண்டித்தனம் புரிந்தவர்கள் என்ற கருத்தே எங்களிடம்
இருந்தது</span>. <span lang="TA">சண் தலைமைக் கட்சி என வந்த போதிலுங்கூட</span>, <span lang="TA">முன்னர் தீவிரமாக இயங்கியவர்களாயினும் இப்போது இயக்கத்தில் இல்லை என்பதான நினைப்பேயிருந்தது</span>.
<span lang="TA">அப்படியொரு நாள்</span>, <span lang="TA">யாழ்</span>. <span lang="TA">நகர்
சென்று திரும்பிக்கொண்டிருந்தபோது</span>, <span lang="TA">சங்காணைச் சந்தைக்கருகே சண்முகதாசனின்
கூட்டம் ஒன்று நடப்பதைக் கண்டு அதனைச் செவிமடுக்கச் சென்றோம்</span>. <span lang="TA">அவரது உரை முடிந்ததும் மூன்று கேள்விகள் எழுதிக் கொடுத்தோம்</span>. <span lang="TA">திருப்திகரமான பதிலாக அமையவும் மகிழ்ந்துபோனோம்</span>. <span lang="TA">மேடையிலிருந்து
வந்தவரிடம் நேரே சென்று</span>, <span lang="TA">அருகிலுள்ள எங்களூரில் இதுபோன்ற கொள்கை
விளக்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்ற வேண்டும் எனக் கேட்டோம்</span>.<o:p></o:p></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5aTMznBG5eyuJwPKH0b2TtQ-OvVzs2qFFp2In5gStzEiIo4tkd3IVwoj0hUwQBHgu_Gpem4RBgyHEoyS74LTiPHU-kYrNoWu4vsMvd_T6wz-1Hc9IoiV6TxQO2hLdcef78F5yRQhV8Xyh/s1600/DSC07391.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="310" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5aTMznBG5eyuJwPKH0b2TtQ-OvVzs2qFFp2In5gStzEiIo4tkd3IVwoj0hUwQBHgu_Gpem4RBgyHEoyS74LTiPHU-kYrNoWu4vsMvd_T6wz-1Hc9IoiV6TxQO2hLdcef78F5yRQhV8Xyh/s320/DSC07391.jpg" width="320" /></a></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">கட்சி அமைப்பு</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">, <span lang="TA">செயற்பாட்டுப்
பாணி</span>, <span lang="TA">கட்டுப்பாடு என்பதெல்லாம் எங்களுக்கு எங்கே தெரிந்தது</span>.
<span lang="TA">சண் எங்கள் ஊரை அறிந்ததும் அருகில் நின்ற மணியம் தோழரைக் காட்டி</span>,
<span lang="TA">இவர் உங்கள் ஊரில் முன்னர் இருந்தார்</span>; <span lang="TA">இப்போது
தொல்புரத்தில் இருக்கிறார்</span>; <span lang="TA">அவரோடு தொடர்புகொண்டு மேற்கொண்டு
செய்யவேண்டியதை முடிவு செய்யுங்கள் என்றார்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">மணியந்தோழர் நெறிப்படுத்திய
வகையில் சங்கானைக் கிளையில் இணைந்து நாங்கள் செயற்பட்டபோது ஒக்டோபர் எழுச்சி மார்க்கப்
போராளிகளோடு இரத்தமும் சதையுமாக ஒன்றித்து சமூகமாற்ற இயங்காற்றல் குறித்த நடைமுறைக்
கற்றலைப் பெற இயலுமாயிற்று</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">தமிழ்த் தேசியப் போராட்டம்
உண்மையில் இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக அமைந்திருக்க வேண்டியது</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">. <span lang="TA">சாதியப்
பண்ணையடிமைத் தனத்துக்கு எதிரான போராட்டம் என்கிற வகையில் தேசியப் போராட்டத்தின் ஒரு
அங்கம் எனக் கொண்டு இதனை ஆதரிக்கும் மனப்பாங்கு தமிழ்த்தேசியர்களுக்கு இருக்கவில்லை</span>;
<span lang="TA">அவர்கள் உயர்சாதித் தேசியமாயே தமிழ்த் தேசியத்தை கட்டமைத்தார்கள் என்றவகையில்</span>,
<span lang="TA">சாதியத் தகர்ப்புப் போராட்டத்துக்கு எதிராகவே இயங்கினர்</span>. <span lang="TA">அந்த வலதுசாரிப் பிற்போக்குத் தலைமைக்கு எதிராகக் கிளர்ச்சியுற்று இடதுசாரித்
தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்க முனைந்தவர்களும் போதிய அளவு ஒக்டோபர்</span> 21 <span lang="TA">எழுச்சி மார்க்கத்தைக் கவனம்கொள்ளவில்லை</span>. <span lang="TA">ஆயினும் தொடர்
இயக்கம் வாய்த்திருப்பின் அவர்கள் கற்றுக்கொண்டு சரியான செல்நெறியை வகுத்திருக்க இயலும்</span>.
<span lang="TA">மாறாக வலதுசாரிப் பிற்போக்கு ஃபாசிசமே தொடர்ந்து ஆயுதப் போராட்டத் தலைமையையும்
கையகப் படுத்தியிருந்தமையால் மக்கள் விரோதப் போக்கே தொடரலாயிற்று</span>. <span lang="TA">ஆகவும்</span>, <span lang="TA">தமிழீழம் பெறுவது ஒன்றே இலட்சியம்</span>, <span lang="TA">இவ்வேளையில் சாதி முரண்கள் பற்றிப் பேச்செழக்கூடாது என்ற ஆணை பிறந்தது</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">இதனைச் சாதியச் சக்திகள்
நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாயினர்</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">. <span lang="TA">இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை
முன்வைப்பேன்</span>. <span lang="TA">வளக்கம்போல நிச்சாமத்திலுள்ள மூத்த தோழர் ஒருவரைச்
சந்திக்கப் போயிருந்தேன்</span>. <span lang="TA">அது</span> 90<span lang="TA">ம் ஆண்டு
என்பதாக நினைவு</span>. <span lang="TA">அந்தத் தோழர் மிகுந்த பதட்டமும் கோபமும் கொண்டிருந்தார்</span>.
<span lang="TA">நடந்ததைச் சொன்னார்</span>. <span lang="TA">தெரிந்த ஒரு உயர்சாதியினர்
மரணச் சடங்குக்கு அவர் சென்றிருக்கிறார்</span>. <span lang="TA">சுடலையில் இறுதிச் சடங்கு</span>.
<span lang="TA">ஒரு சாதிமான்</span> '<span lang="TA">அம்பட்டன் வா</span>, <span lang="TA">வண்ணான் வா</span>' <span lang="TA">என்று அறைகூவி தட்சணை கொடுத்துக்கொண்டிருக்கிறார்</span>.
<span lang="TA">இவருக்கோ தாங்க இயலாக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது</span>. <span lang="TA">மரணச் சடங்கு என்பதால் ஏறுக்கு மாறாக நடக்கக் கூடாது என்பதைவிடத் துப்பாக்கி
மட்டுமே சிந்திக்கவும் பேசவும் கூடிய காலம்</span>. '<span lang="TA">பள்ளன் வா</span>'
<span lang="TA">என்ற போது</span>, <span lang="TA">அங்கே சில வேலைகளைச் செய்தவரே அழைக்கப்படுகிறார்
என்பது தெரிந்திருந்தும் இவர் போகிறார்</span>. <span lang="TA">கூவியழைத்தவர் திகைத்துப்போகிறார்</span>.
<span lang="TA">இவர் மீது பயங்கலந்த மரியாதை அவருக்கு உண்டு</span>; <span lang="TA">எவ்வளவு
காட்த்திரமான சமூகப் போராளி இவர் என்பது அவருக்குத் தெரியும்</span>. '<span lang="TA">என்ன</span>, <span lang="TA">அண்ணை நீங்கள்</span>' <span lang="TA">என்று தடுமாறிய
போது</span>, '<span lang="TA">இல்லை</span>, <span lang="TA">நான் பள்ளன் தானே</span>,
<span lang="TA">தரவேண்டியதைத் தா</span>' <span lang="TA">என்றார்</span>. <span lang="TA">செய்வதறியாதவராகச் சில்லறைகளைக் கொடுத்தார்</span>. <span lang="TA">வாங்கிய
காசை வேகமாக நிலத்தில் மோதி அடித்து</span>, '<span lang="TA">இந்த மாதிரிச் சாதி இழிவுபடுத்தல்கள்
இருக்கக் கூடாது என்றதுக்காகத்தானே பத்துப் பதினைஞ்சு வருசங்களுக்கு முந்திவரை போராடின்னாங்கள்</span>;
<span lang="TA">இப்ப குளிர்விட்டுப்போய்த் திரும்பப் பழையபடி நடக்கலாம் எண்டு வாறீங்களோ</span>'
<span lang="TA">எனக்கூறிவிட்டு அவ்விடம்விட்டு அகன்றிருக்கிறார்</span>.<o:p></o:p></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHjnddy_-pc8W7RYnDUVlvP_sGTvVINg_SKqmyok3CIDW0r0iAbhDeIU2N2uLCtbv2ya6JfVAJ1fkGBqCQY3JuLkb2aPj5Q8Vna1igrbKTT_YwWeajpmHS6YVsyyBTmzLjNeGCF60ijJKJ/s1600/Temple-.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="198" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHjnddy_-pc8W7RYnDUVlvP_sGTvVINg_SKqmyok3CIDW0r0iAbhDeIU2N2uLCtbv2ya6JfVAJ1fkGBqCQY3JuLkb2aPj5Q8Vna1igrbKTT_YwWeajpmHS6YVsyyBTmzLjNeGCF60ijJKJ/s320/Temple-.jpg" width="320" /></a></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">எல்லாந்தான் முடிஞ்சுபோச்சே
எதற்கு இந்தப் பழைய கதை என்று முணுமுணுக்கும் சில முனகல்களும் காதில் விழத்தான் செய்கிறது</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt;">. <span lang="TA">வரலாற்றிலிருந்து
கற்பதற்கு தவறிய விளைவைச் சுட்டிக்காட்ட இதனைச் சொல்கிறோமேயல்லாமல்</span>, <span lang="TA">தோல்வியைக் குதூகலிக்க முனையவில்லை</span>. <span lang="TA">தமிழ்த் தேசியம்
மக்கள் நலனிலிருந்து வேறுபாட்டு ஆளும் சாதித் தேசியமானதால் இந்தப் பின்னடைவு என்பதை
விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும் என்கிற வகையில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசியக் குரலை
ஒடுக்கப்படும் ஏனைய தரப்பினரோடும் இணைத்து முன்னெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்</span>.
<span lang="TA">இதனையே</span> "<span lang="TA">புதிய பண்பாட்டுத் தளம்</span>"
<span lang="TA">முன்னெடுக்க உள்ளது</span>.<o:p></o:p></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpXlpq1CMctLVgJo22clHLGbqkH9wV4VikT9NkLYFOBonPVLJGEDSxWKsAj72afyDy4N9mSlOQtfbnju_iDAOQlP_oYGf5l2uOyi6lwT7wYNUPn-pwNOzCVsGujRzfureuf7khF_FGSUki/s1600/vm-11-27-ma-04.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="216" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpXlpq1CMctLVgJo22clHLGbqkH9wV4VikT9NkLYFOBonPVLJGEDSxWKsAj72afyDy4N9mSlOQtfbnju_iDAOQlP_oYGf5l2uOyi6lwT7wYNUPn-pwNOzCVsGujRzfureuf7khF_FGSUki/s320/vm-11-27-ma-04.jpg" width="320" /></a></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">இதனைக் கூறும்போது மக்கள் விடுதலை என வந்த</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">
1917 <span lang="TA">ஒக்டோபர் புரட்சியின் சோவியத் யூனியனும் இன்று காணாமல் போயிருக்கிறது
தானே என்ற கேள்வியும் எழாமல் போகாது</span>. <span lang="TA">அந்த ஒக்டோபர் புரட்சி மகத்தான
சாதனைகளில் முக்கால் நூற்றாண்டு நீடித்து விடுதலைக்காகப் போடாடும் சக்திகளுக்குக் கலங்கரை
விளக்காக விளங்கியது</span>. <span lang="TA">பின்னர் ஏன் சோவியத் யூனியன் தகர்ந்து போனது
என்பது இன்னொரு படிப்பினைக்கு உரியதும்</span>, <span lang="TA">தொடர்ந்து போராடும் சக்திகளுக்கு
மற்றொரு பாடத்தை வழங்குவதும் ஆகும்</span>. <span lang="TA">ஒக்டோபர் புரட்சியின் நேர்</span>-<span lang="TA">மற்றும் எதிர்ப் படிப்பினைகளையும் பார்க்க வேண்டும்தான்</span>; <span lang="TA">அடுத்த அமர்வில் அதுபற்றிப் தொடர்வோம் ....</span></span><o:p></o:p></div>
</div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-47876547691098664122012-10-20T23:35:00.001-07:002012-10-20T23:35:16.903-07:00சில நினைவுத் தடங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVlxDeIiLKMZqS5wyJ-BGmW5uAKCyI6vSu5F3bacxhS9MmAtDg1B1R6ckydIWJAqxZM7XbougpjWfEIwRxG8UxKqjRd_mkcAXTAPKEhyphenhyphenhRtaLo1anykzVN8j6ew0_xWGbDT99iILQI9H5n/s1600/dsc04361.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVlxDeIiLKMZqS5wyJ-BGmW5uAKCyI6vSu5F3bacxhS9MmAtDg1B1R6ckydIWJAqxZM7XbougpjWfEIwRxG8UxKqjRd_mkcAXTAPKEhyphenhyphenhRtaLo1anykzVN8j6ew0_xWGbDT99iILQI9H5n/s320/dsc04361.JPG" width="244" /></a></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px;">
கவிஞர் இ.முருகையன் : சில நினைவுத் தடங்கள்</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px;">
-<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small; line-height: 16px;">ந.இரவீந்திரன் </span><span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small; line-height: 16px;"> </span></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; margin-top: 10px;">
இது முருகையன் குறித்த ஆய்வு முயற்சியல்ல; விரிவான ஆய்வுக்கான தேவை உள்ள போதிலும், அவரைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் அவர் குறித்த சில நினைவுகளை மீட்பதே இக்கட்டுரையின் நோக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அவர் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து நெருக்கமாக செயற்பட்ட அவரது இறுதிக் காலத்தின் இரு தசாப்தங்களில் அவருடன் நெருங்கிப்பழக அமைந்த வாய்ப்பின் பேறாக இந்தப் பதிவினை வரைகிறேன்.<br />பேரவை 1974 இல் தொடங்கி "தாயகம்" சஞ்சிகையை வெளியிடத் தொடங்கியிருந்தது. ஆயினும் ஒரு வருடத்துக்கு மேல் "தாயகம்" வெளி வராதது மட்டுமின்றி பேரவையும் காத்திரமாக இயங்க இயலாத முடக்கம் ஏற்பட்டது. தோழர் சண்முகதாசன் தலைமையில் வரலாறு படைத்த புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் கட்சி, ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வரையறை கடந்து பிரசார முழக்கமாக்கிய நிலையில், வன்முறை வழிபாட்டுக்கு உரியதாக்கி, இடது திரிபு வாதத்துக்கு ஆட்பட்டது. அதன் பண்பாட்டு அணியாக தோன்றி இயங்கத் தொடங்கிய "தேசிய கலை இலக்கியப் பேரவை" இலும் இந்த இடது திரிபின் வெளிப்பாடு மேலெழவும், தொடர் முன்னேற்றம் தடைப்பட்டது. நெல்லியடி அம்பலத்தாடிகள், மட்டுவில் மோகனதாஸ் சன சமூக நிலையம் தொட்டு கொழும்பு அவைக்காற்றுக் கழகம் வரையான செயற்பாடுகளில் பேரவைக்குரியவர்கள் செயற்பட்டனரேயன்றி, பேரவை ஒன்றுபட்ட அமைப்பாக இயங்காது இருந்தது.<br />தவிர்க்கவியலாமல் 1978 இல் சண் தலைமையை நிராகரித்து "புதிய ஜன நாயக கட்சி" எனப்பின்னால் பெயர் பெற்ற பிளவடைந்த கட்சியுடன் தொடர் பயணத்தை தேசிய கலை இலக்கியப் பேரவை மேற்கொண்டது. வறட்டுவாத இறுக்கத்திலிருந்து மீண்டு வெகுயன மார்க்கத்தை வரித்து பேரவை இயங்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயற்படும் முனைப்பை கட்சி ஊக்கப்படுத்தியது. கட்சி செயலாளராக இருந்த கே.ஏ.சுப்பிரமணியம், இடையில் தொய்ந்திருந்த கைலாசபதி, முருகையன் போன்றோருடனான உறவைப் புதுப்பிப்பதில் நேரடியாக ஈடுபட்டிருந்தார். இவர்கள் இருவரும் பேரவையின் தொடர் வேலைகளுக்கான கலந்துரையாடல்களிலும் செயற்பாடுகளிலும் பற்றுறுதியுடன் ஈடுபட்டனர். அந்த நிலையில் பாரதி நூற்றாண்டுவிழா (1982) வந்தமைந்தது.<br />பதின்ரண்டு தலைப்புகளில் மாதம் ஒன்றாக பாரதி ஆய்வுகளை முன்னிறுத்திய கருத்தரங்கு திட்டமிடப்பட்டது; முதல் கூட்டம் முருகையன் உரையாக அமைந்தது. ஆய்வுக் கட்டுரைகள் "பாரதி ஆய்வுகள்" எனும் தலைப்புடன் நூலாக்கப்பட திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு ஆய்வையும் தாங்கி 1983 இலிருந்து "தாயகம்" சஞ்சிகையை வெளியிடுவதற்கும் எதிர்பார்ப்பிருந்தது. நினையாப்பிரகாரமாய் கைலாசபதி 82 டிசெம்பரில் மறைந்துவிட முழுப் பொறுப்பையும் முருகையன் ஏற்க நேர்ந்தது. அவரும் பூரண சம்மதத்துடன் பேரவைத் தலைவர் எனும் பதவி நிலையில் உறுதியுடன் செயற்பட்டார். முன்னதாக ஐம்பதுகளின் எழுச்சியுடன் தோன்றி வளர்ந்த "முற்போக்கு இலக்கிய இயக்கம்" தனது அர்த்தமிழந்து கிட்டத்தட்ட செயற்படாத கோமா நிலையில் இருந்தமையால் முழுமையாக பேரவைத் தலைவராக முருகையனால் இயங்க இயலுமாயிற்று.<br />"பாரதி ஆய்வுகள்" என்ற தலைப்பில் மறைந்த கைலாசபதியின் பாரதி குறித்த கட்டுரைகள் தொகுத்து வெளியிடப்பட்ட நிலையில் பேரவையின் பாரதி ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலுக்கு "பாரதி: பன்முகப் பார்வை" என்ற பெயரை முருகையன் சூட்டிக்கொண்டார். அது நூலுருப் பெறுமுன்னதாக அதற்கான ஒவ்வொரு கட்டுரைகளும் தாங்கி வெளியான "தாயகம்" சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் முருகையன் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். இக்காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகமுடிந்தது. இதன் போது ஒரு பண்பாட்டு இயக்கத்துக்கு தலைமை தாங்கும் அவரது ஆளுமையை இனங்காண இயலுமாயிற்று.<br />அவர் அப்போது யாழ். பல்கலைக் கழகத்தின் உதவிப் பதிவாளராக வந்துவிட்டமையால் இந்தப் பொறுப்பை சிரமமின்றி மேற்கொள்ள இயலுமாயிருந்தது. அதற்கேயான கூட்டம் தவிர்ந்த வேளைகளிலும் அவரைப் பல்கலைக் கழக பணிமனையில் சென்று சந்தித்து வேண்டிய உதவிகளைப் பெற்றுக்கொள்வோம். அவ்வேளைகளில் அவருடனான உரையாடல்கள் பலதும் பத்துமாக அமையும். ஒரு தடவை சிற்பக் கலை குறித்துக் கேட்டோம். முன்னர் வடிக்கப்பட்ட வடிவத்தை அப்படியே மரபு பிறலாமல் ஒருவர் புதிதாக செதுக்கும்போது, அது கலை ஆவதில்லை; புத்தாக்கத்துடன் ஒன்றை சிற்பி வடித்தால் மட்டுமே கலைஞனுக்குரிய பாத்திரத்தை வரிப்பவராவார் என்றார். எவ்வளவு செய் நேர்த்தியுடன் வடிக்கப்பட்டாலும் முன்னர் இருந்ததின் பிரதியெனில் தொழில் நுட்பத்தை வியக்கலாமே அல்லாமல் கலை எனக் கொண்டாட இயலாதென்பார். வடிவப் புதுமை குறித்து மட்டுமல்லாமல் பேசு பொருளின் புதுமை பற்றியும் அக்கறை கொள்வார் முருகையன்.<br />அவ்வாறு ஒரு தனி உரையாடலின் போது புதிது புனைதலின் அவசியத்தை வலியுறுத்திவிட்டு சொன்னார், இன்றைய தலைமுறையினரான நீங்கள் புதிய ஒன்றைப் படைத்து அதை ஆளுமையுடன் பிரகடனப்படுத்த இயலாது திண்டாடுகிறீர்கள் என்று. முற்போக்கு இலக்கிய எழுச்சியின் பிரதிநிதியான அவரிடம் அத்தகைய ஆளுமை பூரணமாய் அமைந்திருந்தது. ஒரு சம்பவத்தைக் கூறினார். தன்னுடைய கவிதை ஒன்றில் வந்த "கொச்சைத்" தமிழைச் சுட்டிக்காட்டி, இவற்றை தவிர்க்க வேண்டுமல்லவா என்பது அந்த நண்பரின் ஆதங்கம். முருகையன் அவருக்கு சொன்னார்,"அதை ஒரு ஆற்றல் மிக்க கவிஞர் கவிதையில் பாவித்திருப்பதால் இப்போது அது கொச்சைத் தமிழ் அல்ல, நல்ல சொல்தான்" என்று. "யார் அந்தக் கவிஞர்" என நண்பர் கேட்டபோது "கவிஞர் முருகையன்" எனப் பதில் கூறியதாக முருகையன் சொல்லிவிட்டு தனக்கேயுரிய முகம் மலர்ந்த சிரிப்பால் முற்றுப்புள்ளியிட்டார்.<br />படைப்பூக்கத்துடன் புத்தாக்கத்தை முன்னெடுக்கும் அவர் அதுபோன்றது எனக் கருதும் எதனையும் அங்கீகரித்துப் பங்கேற்கப் பின்னிற்பதில்லை. எண்பதுகளில் கம்பன் கழகம் ராமகாவியத்தை இலகுவில் மக்களிடம் எடுத்துச் செல்லும் விவாதம் உள்ளிட்ட அரங்க நிகழ்வுகளை நடாத்தியபோது, ஆரம்பத்தில் அவற்றில் பங்கேற்று வேடமிட்டு விவாதித்துள்ளார். கம்பராமாயணத்தை மக்கள் மயப்படுத்துவதாக அல்லாமல் பிற்போக்குவாத வியாபார உத்தியே மேலோங்கியுள்ளது என்ற பலரது கருத்தையும் ஏற்கவியலாமல் சிறிது காலம் அந்நிகழ்வுகளில் பங்கேற்றவர், எதிர்க் கருத்தாளர்களின் கூற்றுகளில் உண்மையிருப்பதை கண்டதும் தயக்கமின்றி பங்கேற்பதை நிறுத்திக் கொண்டார்.<br />இதுபோன்ற அவரது அவசர ஆதரவு நிலைப்பாடு ஒன்று அவரை மதிப்பீடு செய்வதில் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்ணூறுகளில் யுத்தம் கொடூரமாய் மக்களைக் காவுகொண்டிருந்த நிலையில் போராடும் விடுதலைப் புலிகளை வாழ்த்தி இரு கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார். இதை வைத்து அவரும், தேசிய கலை இலக்கியப் பேரவையும் புலிகளின் இலக்கியப் பிரதிநிதிகள் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதை மறுத்து பேரவை அறிக்கையிடுவதை முருகையன் ஆதரித்தார். வெகுஜன மார்க்கத்தில் பேரவை முன்னேறி வந்தபோதிலும், சண் காலத்து இடது திரிபுவாத முனைப்பாக்கம் கட்சியிலும் பேரவையிலும் ஏற்பட்டு வருவது மெய்யாயினும், மக்கள் போராட்டம் என்பதிலிருந்து பல காத தூரம் விலகிய புலிகளின் முன்னெடுப்புகளில் உடன்படாத விடயங்கள் அனேகம் இருந்தன. சில அம்சங்களை வன்முறை வழிபாட்டு இடது அதிதீவிரப் பண்பினால் ஆதரித்தமையினாலேயே விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்டதாகிவிடாது.<br />முன்னதாக எண்பதுகளில் மக்கள்மீது திணிக்கப்பட்ட யுத்த அனர்த்தக் கொடூரங்களுக்கு எதிரான பேரவைச் செயற்பாடுகளில் முருகையனின் படைப்பாக்கங்களிலூடாக வெளிப்பட்ட பேரினவாத எதிர்ப்புக் குரலுடன் தொடர்புபடுத்தி இதனைக் காண வேண்டும். "புது வரலாறும் நாமே படைப்போம்" என்ற பேரவை வெளியீடான ஒலிப் பேழை சிறப்புற அமைய ஏற்ற புதிய கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார். அக்கொடூரங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்ற ஆதங்கம் அவரிடமிருந்து வெளிப்பட்டதே அல்லாமல் மக்களைப் பிரிந்த போராட்டக்குழுவை ஆதரிப்பவராக கருத்துரைக்கவில்லை.<br />அதற்கு முன்னதாக எழுதிய "வெறியாட்டு" நாடகமும் மக்களை விழிப்பூட்டுவதாக வடிவமைக்கப்பட்டதே அல்லாமல் புலிகளை வக்காலத்து வாங்கியதாக அமையவில்லை எனக் காண இயலும். இந்த நாடகப் பிரதி வெளியிடப்பட்ட அதே அரங்கில் அவரது வரலாற்றுப் பொருள்முதல் வாத அடிப்படையில் விஞ்ஞான நோக்குடன் மனிதகுல தோற்ற வளர்ச்சியைக் கூறும் "அவன், அவள், அது" எனும் கவிதைக் குறுங்காவியமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நூலுக்கு, அப்போது விஞ்ஞான ஆசிரியராக இருந்த நான் விமர்சன உரை ஆற்றுவது பொருத்தமாய் இருக்கும் எனக்கூறியிருக்கிறார் முருகையன்; அதனை ஏற்பாடு செய்த நண்பர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமையால் எனக்கு "வெறியாட்டு" நூலுக்கான விமர்சனமே தரப்பட்டது. அந்த விமர்சன உரையைப் பின்னர் எழுத்துருவாக்கி "தாயகம்" சஞ்சிகையில் வெளியிட்டபோது அதற்கு மாற்றுக்கருத்து எதையும் வெளிப்படுத்தியதில்லை. மக்களைப் பிரிந்த இனவாத யுத்தம் குறித்த விமர்சனம் உடையாதாக அப்பிரதி மீதான எனது வாசிப்பு அமைந்திருந்தது. என்னுடைய விமர்சனம் நன்றாக இருந்ததாகவோ வேறெந்தக் கருத்துகளையோ அவர் சொல்லாததுடன் மற்ற நூலுக்கு நான் விமர்சன உரை ஆற்றியிருப்பின் பொருத்தமாய் இருந்திருக்கும் என்பதையே மீளவலியுறுத்தினார்.<br />முருகையன் ஐம்பதுகளில் மொழிப் பற்றுடன் தனது கவிதை எழுத்தாக்கத்தைத் தொடங்கியவர். ஐம்பதுகளின் பிற்கூறில் முனைப்படைந்து வளர்ந்த முற்போக்கு இயக்கத்துடன் இணைந்து சமூக நோக்குடனான மக்கள் விடுதலைக்கான படைப்பாக்கங்களை ஆக்கியளித்தார். என் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்தது , வாழ்த்துப் பாடி தலைமை தாங்கியது மட்டுமல்ல, எங்கள் வீடான "சத்திமனை" இல் யுத்த அனர்த்தங்களின் போது ஒரு மாதங்கள் தங்கி இருந்ததும் ,பரிமாறிய நினைவுகளும் என்றும் இனிமையானவை. அதன் மூலம் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பும் கிட்டியது. இறுதிக்காலத்தில் எவ்வகையிலும் இனவாதத்துக்கோ, மக்களைப் பிரிந்த வீர சாகசங்களுக்கோ துதிபாட அவர் முனைந்திருக்கவில்லை; மக்களை நேசிக்கும் மனப்பாங்குடன் போராட்டத்தை ஆதரிக்க முற்பட்டபோது ஒரு கவிக்குரிய அவசர கோலம் வெளிப்பட்டதாயினும் (அதுசார்ந்த விமர்சனத்துக்கு அப்பால்) என்றென்றும் மக்கள் கவியாகவே அவர் கொண்டாடப்படுவார்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; margin-top: 10px;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small; line-height: 16px;">( 23-04 -1935 - 27 -06 -2009).</span></div>
</div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-5670535000712760332012-10-20T23:17:00.000-07:002012-10-20T23:17:11.989-07:00இங்கிருந்து எங்கே? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="uiHeader uiHeaderBottomBorder mbm" style="background-color: white; border-bottom-color: rgb(170, 170, 170); border-bottom-style: solid; border-bottom-width: 1px; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 10.909090995788574px; line-height: 12.727272033691406px; margin-bottom: 10px; padding-bottom: 0.5em;">
<div class="clearfix uiHeaderTop" style="zoom: 1;">
<h2 class="uiHeaderTitle" style="color: #1c2a47; font-size: 16px; margin: 0px; outline: none; padding: 0px;">
இங்கிருந்து எங்கே? சமகாலம் -கடைசிப் பக்கம் ஐப்பசி -1 -2012</h2>
<div>
<br /></div>
<div>
-<span style="color: black; font-family: arial; font-size: x-small; line-height: normal;">ந இரவீந்திரன் </span></div>
<div>
<br /></div>
</div>
</div>
<div class="mbl notesBlogText clearfix" style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 10.909090995788574px; line-height: 1.5em; margin-bottom: 20px; word-wrap: break-word; zoom: 1;">
<div style="line-height: 1.5em;">
<span class="photo_left" style="clear: left; float: left; max-width: 180px; padding: 2px 10px 5px 0px;"><img alt="" class="photo_img img" src="http://photos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash3/68404_363503773735968_1499882638_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 493px; padding: 0px;" /></span></div>
<div style="line-height: 1.5em;">
இன்றைய நிலையில் ஒவ்வொரு தனி மனிதரும், சிலரோ பலரோ ஒன்று கூடியுள்ள குழுக்களும் அமைப்புகளும் எங்கிருக்கிறோம் என்பதுபற்றிய புரிதல் இல்லாமலே எதையெதையோ செய்த வண்ணமாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம்; எங்கே போகிறோம் என்று ஒரு எடுகோள் இருந்தாலும், எங்கிருந்து-எப்படிப் பயணிக்கிறோம் என்ற கரிசனையற்ற ஓட்டம் என்பதால், இடையிலேயே எங்குபோவது என்பதையும் மாற்ற நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.இந்த நெருக்கடிக்கு இன்று நடந்துகொண்டிருக்கிற பல்கலைக்கழக ஆசிரியர்களது போராட்டமே தலைசிறந்த எடுத்துக்காட்டு. கனக்கப் படித்த அந்தப் பேராசியர்களும் விரிவுரையாளர்களுமே எங்கிருந்து எங்கு நோக்கிப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம் என்ற புரிதல் இல்லாமல்தான் தொடங்கி இருக்கிறார்கள். தங்களது சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தொடங்கியவர்கள் இன்றுதான் பொதுக் கல்வியையும் கவனம்கொண்டு, கல்விக்குத் தேசிய வருமானத்தில் 6 வீதத்தை ஒதுக்கவேண்டும் என்ற முழக்கத்தை முன்னிறுத்துகிறார்கள். இந்த அடிப்படைக் கோரிக்கை ஆரம்பத்திலேயே அவர்களுக்குள் இருந்திருக்க இடமுண்டாயினும் இதனையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற புரிதல் அப்போது இல்லாமல் போயிற்று. தாமுண்டு தம் படாடோபமுண்டு என்ற நினைப்பு முன்னாலே வந்து கண்ணைக் கெடுத்துவிட்டது. மக்கள் பிரச்சனையின் பகுதியாகத் தங்கள் பிரச்சனையை அப்போது காணத்தவறினர்.அதனை உணர்த்தியது அரசு சார்பாளர்கள்தான்; நானும் பல்கலைக் கழகப் பேராசிரியர், லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறேன்- இந்தக் கோரிக்கையெல்லாம் தவறு, உண்மையில் பாடசாலை ஆசிரியர்களது சம்பளமே அதிகரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் ஊடகங்களில் ஊடாடவிடப்பட்டன. பின்னரே பொதுக்கல்விக் கோரிக்கை முன்னணிக்கு வந்தது. சரி, ஆசிரியர்கள் சம்பளக் கோரிக்கையை முன்வைத்தால் இந்தக் கனவான் குரல்கள் என்ன பேசும்? எத்தனை நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போரடியபோதெல்லாம் இவர்கள் எங்கே போனார்கள்? அதனை முறியடிக்க அதற்கு எதிராக எதை நிறுத்தலாம் என்று அரசுக்கு ஆலோசனை தேடிக்கொண்டு இருந்திருப்பார்கள்.ஒருவர்க்கு எதிராக மற்றவரை நிறுத்திப் பிரித்தாளும் சூழ்ச்சி பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு மட்டும் உரியதல்ல; ஆதிக்கசக்திகள் அனைத்தும் கையாளும் மலினப்பட்ட தந்திரோபாயந்தான். தற்போதைக்கு எமது அக்கறை எங்கிருந்து தொடங்குகிறோம் என்ற புரிதலின்மையால் ஏற்படும் இடர்ப்பாடு பற்றியது என்பதால் அது குறித்து அலசுவோம். இங்கிருக்கிறோம் எனும் புரிதலைத் தனி நபர் கண்டுகொள்ளாதிருப்பது ஆச்சரியப்படத் தக்கதல்ல; மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கப் போராடுகிறோம் என்று செயற்படுகிற அமைப்புகளேகூட பிரச்சனையின் மையம் எங்கிருக்கிறது என்ற அக்கறையற்று எதையாவது முன்வைத்துப் போராடிக்கொண்டு இருந்தால் போதும் எனக் கருதிக் கருமமாற்றிக்கொண்டு இருப்பதாகவே இன்றைய நிதர்சனம் உள்ளது. மக்கள் விடுதலைக்காக இயங்குகிறோம் என்ற அமைப்புகளேகூட இவ்வகையில் ஏனோதானோ என்றபோக்கில் செயற்படுவது இன்றைய துயரின் உச்சம் எனலாம். அவற்றின் தலைமை சக்திகள் மாறாத நிலைப்பாடுகளுக்குள் சிக்குப்பட்டுள்ளதும் புதிய மாற்றங்களைக் கண்டறிய இயலாமற் போவதற்குக் காரணமாயாகியுள்ளது. "மக்கள் சக்தியே வரலாற்றின் உந்து சக்தி" என்பவர்களும், அதன் அடிப்படை உண்மையைக் கண்டுகொள்ளாமல் தலைவர்களான தாமே வரலாற்றைப் படைப்பவர்கள் என மயங்கிவிடுவதால் தன்முனைப்பு மிகையாகி மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள மறுக்கிறவர்களாகிறார்கள். இது சிறிய கட்சிகளில் உள்ள நிலைமை மட்டுமல்ல, உலக வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த மகத்தான புரட்சிகளுக்குத் தலைமை தாங்கிய தலைவர்கள்கூட நெருக்கடியான சில சந்தர்ப்பங்களில் மக்கள் சக்திக்குமேல் தமது தலைமை ஆற்றல்மீது அதீத நம்பிக்கைகொண்டு செயற்பட்ட அனுபவங்கள் ஏற்கனவே வரலாற்றுத் தடங்களாயுள்ளன. பொதுமைப் புத்துலகம் படைப்பதில் மாபெரும் சாதனைகளை எட்டிய சோசலிச நாடுகளில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பல்வேறுகாரணங்களோடு தலைமையில் இருந்த இப்போக்கும் அடிப்படைக் காரணமாயிருந்தது. "படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில்" என்று ஒரு சொலவடை எம்மத்தியல் உண்டு; அதனை நினைவுபடுத்துவதாகவே, மக்கள் சக்தியே வரலாற்றைப் படைக்கிறது எனச் சொல்லிக்கொண்டு தலைவர்கள் மக்களை அணிதிரட்டி வென்றெடுத்த சில சாதனைகளுக்குத் தலைமை தாங்கியதைத் தமது மாபெரும் பங்களிப்பாய் மயங்கி செயற்படுவதிலும் காண்கிறோம். கூட்டுத் தலைமை மறுக்கப்பட்டு பெரும் சாதனைகளுக்குத் தலைமை தாங்கிய தானே சரியாகச் சிந்தித்துச் செயற்படுவதாக ஒரு தலைவர் எண்ணிக் கருமமாற்றும்போது நாட்டை முன்னேற்றத் தவறி, அவரை வழிபாடு செய்தவாறு மக்கள்மீது ஆதிக்கம் புரிய எத்தனிப்பவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறவராவார்.அவ்வாறு அல்லாது பல அல்லற்பாடுகளில் மக்களை ஆட்படுத்துகிற எமது தலைவர்களும் தமது 'சரியான' தலைமைப் பாத்திரம் பற்றிப் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தச் சோசலிச நாடுகளின் தலைவர்களாவது மகத்தான சாதனைகளோடு சிறிய பின்னடைவுகளுக்கும் காரணமாய்விட்டனர் என்ற விமர்சனத்துக்கு மட்டுமே ஆட்படுகின்றனர்; இவர்கள் தலைவர்கள் எனக்கொள்ளத்தக்க எந்தத் தகுதியும் அற்றவர்களாயே உள்ளனர். எங்கிருக்கிறோம் என்பதுபற்றிய புரிதல் இல்லாமல் மட்டுமல்ல, தலைமையும் சரியான அமைப்பும் இல்லாமலே எமது மக்கள் உள்ளனர். நாற்பது வருடங்களுக்கு முன்னர் பசுபதி என்ற கவிஞர் "அடிமைகளை அடிமைகளே அடிமைகொள்ளும் நாடு" என்று எமக்கான இருப்பை உணர்த்தியிருந்தார். பேரினவாதத்தால் அடிமைப்படுத்தப்பட இடமளியோம் என்கிறவர்கள் தமக்குள் அடிமைப்படும் சாதிகள், பிரதேசங்கள், இனங்கள் இருக்கவேண்டும் என அவாவுகின்றனர். ஆதிக்கம் பெற்றுள்ள பேரினவாதமும் இறைமையை பிராந்திய மற்றும் உலக மேலாதிக்கத்திடம் தாரைவார்த்து அடிமைப்பட்டேயுள்ளது.ஆக, எமது பிரச்சனை வெறும் சுற்று மதில்களுக்குள்ளேயோ பிராந்தியத்துக்குள்ளேயோ மட்டுப்பட்டதாய் இல்லை. எமது பிராந்திய மேலாதிக்கம் என்கிறவகையில் இந்தியா எம்மை அடிமைகொண்டிருப்பது வேறெதையும்விட வலிமையானது. பிரதானமாக தமிழகம் எம்மீது கொண்டிருக்கும் கருத்தியல் ஆக்கிரமிப்பு மலினப்பட்ட சினிமா-சஞ்சிகைகள் வாயிலாக மட்டுமானதாய் இல்லை; சுதந்திரம் தவறிக்கெட்டுத் தலைமையும் அற்றுள்ள எமக்கு தலைமைதாங்க முன்வரும் 'உலகத் தமிழ்த் தலைவர்கள்' அங்கிருந்து கிளம்பும் அபாயமும் மேற்கிளம்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து அனுமதிப்பது மேலும் பன்மடங்கு நெடுக்கடிகளை எமக்கு வழங்குவதாய் அமையும். இவ்வகையில் நாம் அடிமைப்படுவது தமிழக கருத்தியல் ஆக்கிரமிப்பாளர்களால் பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டதோடும் தொடர்புடையது.அந்தவகையில், எமக்கான விடுதலையின் முதல் தேவையாக பரந்துபட்ட பண்பாட்டு இயக்கத்தை முன்னெடுப்பது உடனடி அவசியமாகியுள்ளது. பல்வேறு அடிமைத்தனங்களைக் கொண்டுள்ள பாரம்பரியப் பண்பாட்டைப் பேணுவதற்கானதாக அது அமையக்கூடாது; உழைப்பவர் நலனோடு ஊடாட்டம் உடைய புதிய பண்பாட்டு இயக்கமாக அது அமைய வேண்டும். அதன் தொடர் வளர்ச்சி சரியான இலக்கை வகுத்து பொருத்தமிக்க மார்க்கத்தில் ஏற்ற வேலைத்திட்டத்தோடு சரியான மூல உபாயம்-தந்திரோபாயங்களோடு முன்னேறும் போது வலிமையான தலைமையைக் கட்டமைக்க இயலும். கூட்டுத் தலைமை மக்களிடமிருந்து மக்களுக்கு என்ற பாணியில் அத்தகைய புதிய பண்பாட்டு இயக்கத்தை முன்னெடுப்பதற்கு அமைவாக இன்று காலம் கனிந்துள்ளது.</div>
</div>
</div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-67878980974664695662012-09-15T02:24:00.002-07:002012-09-15T02:24:43.795-07:00தமிழ்ப் பண்பாட்டு வரலாறு: சில மீள் பார்வை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="uiHeader uiHeaderBottomBorder mbm" style="background-color: white; border-bottom-color: rgb(170, 170, 170); border-bottom-style: solid; border-bottom-width: 1px; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px; margin-bottom: 10px; padding-bottom: 0.5em;">
<div class="clearfix uiHeaderTop" style="zoom: 1;">
<h2 class="uiHeaderTitle" style="color: #1c2a47; font-size: 16px; margin: 0px; outline: none; padding: 0px;" tabindex="0">
<span style="color: #333333; font-size: 11px; line-height: 1.5em;">சில மீள் பார்வைக் குறிப்புகள்</span></h2>
</div>
</div>
<div class="mbl notesBlogText clearfix" style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 1.5em; margin-bottom: 20px; word-wrap: break-word; zoom: 1;">
<div style="line-height: 1.5em;">
<span class="photo_left" style="clear: left; float: left; max-width: 180px; padding: 2px 10px 5px 0px;"><img alt="" class="photo_img img" src="http://photos-f.ak.fbcdn.net/hphotos-ak-ash4/406373_354246371328375_560016915_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 493px; padding: 0px;" /></span></div>
<div style="line-height: 1.5em;">
"இரட்டைத்தேசியமும் பண்பாட்டுப்புரட்சியும்" தொடரின் விவாதத்தை மேலும் புதிய தளமான இங்கு முன்னெடுக்கப்போகிறோம். எந்தவொரு முடிந்த முடிவான சித்தாந்தத்தையும் விலங்காக மாட்டிக்கொள்ளாத தோழர்கள் அங்கு அக்கறையோடு எதிர்வினையாற்றி வழிப்படுத்தியிருந்தது போன்றே இங்கும் என்னோடு உடனிருந்து விவாதித்து எமக்கான சரியான வழித்தடம் கண்டு பயணிக்க எந்தத்தடையும் இல்லை. எம்மை இவ்வழியே ஆற்றுப்படுத்தும் மார்க்சியம் எமது சமூகப் புறநிலை நிதர்சனத்தை புரிந்துகொள்ளவும், மக்கள் விடுதலையீட்டும் திசைவழி மாற்றவும் உதவுவதாயுள்ளதே அல்லாமல், எந்தவொரு தீர்க்கதரிசியின் முடிந்த முடிவான முன் கட்டளைகளின் பேரில் இயங்க வற்புறுத்தவில்லை.விவாதங்கள் விருப்புக்கு உகந்ததில்லை என அச்சங்கொள்பவர்கள் இருக்கவே செய்வர். அறிவுத்தேடல் என்பது செங்குத்துப் பாறையில் ஏறும் கடின முயற்சி எனும்வகையில் சிரமங்களுக்கு முகங்கொடுக்கத் துணிந்தவர்களே சிகரங்களைத் தொடவல்லவர்கள் என மார்க்ஸ் சொன்னதை மறவாதிருப்போம். எம்மைத்தான் ஏற்கனவே மார்க்ஸ்-லெனின்-மாஓ சிகரங்களில் கொண்டுவந்து அமர்த்திவிட்டார்களே,<span class="photo_right" style="clear: right; float: right; max-width: 180px; padding: 2px 0px 5px 10px;"><img alt="" class="photo_img img" src="http://photos-h.ak.fbcdn.net/hphotos-ak-prn1/644141_354246527995026_1533755970_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 493px; padding: 0px;" /></span>அதிலிருந்தாலே விடுதலை சித்திக்குமே, அதை நோக்கி மக்களை அறைகூவுவதற்கு ஒருப்படாமல் ஏன் விவாதங்களுக்கு எல்லாம் அழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என எரிச்சல்படும் தோழர்கள் இருக்கிறார்கள். விவாதிக்க வந்து ஏற்கனவே நம்பிய புனித முடிவுகளை மாற்ற நேர்ந்துவிடுமோ என அஞ்சுவர்.ஒரு கடும் ஆன்மீகப் பிரசங்கப் பீரங்கியையும் தீவிர நாத்தீக பேச்சாளரையும் நேருக்கு நேர் தர்க்க மோதலுக்கு ஏற்பாடு பண்ணி மக்கள் எது உண்மை என அறியக் கேட்போராய் இருக்கிறார்கள். மக்களுக்கு இருதரப்பிலும் மேலும் போதிய கருத்துவிளக்கம் வேண்டும்போல் இருந்திருக்கலாம்; மக்கள் முன் விட்டுக்கொடுக்காமல் சண்டப் பிரசண்டம் பண்ணி வீடு போன இருவரும் தெளிவாக மாறியிருந்தனர். ஆணித்தரமாக மாற்றுக்கருத்தை முறியடிக்க அப்படி விவாதித்தார்கள் அல்லவா, ஆட்களின் முன் விட்டுக்கொடுக்காவிட்டாலும், அடிமனம் அதிர்ந்து போனதால் ஆள்மாறாட்டம் நேர்ந்துவிட்டது. அவன் இவன் இப்போது இவன் அவன் ஆகிவிட்டார்கள். ஆன்மீகம் பேசியவன் நாத்தீகத்துக்கும் நாத்தீகம் பேசியவன் ஆன்மீகத்துக்கும் மாறிவிட்டனர்(பின்னாலே, தொடர்ந்து விவாதித்தால் இதையும் இழப்போமோ என்ற அச்சத்தில் விவாதக் களத்தைத் தவிர்த்திருக்கக் கூடும்; பின்னாலே கதை தொடர்ந்ததாக மேற்படி நாட்டார்கதையில் தகவல் இல்லை).இவ்வாறு அச்சங்கொள்ளும் ஆளுமைச் சிதைவு மார்க்சியர்களுக்கு ஏற்படாது. இயங்கும் களமும் காலமும் மாற்றங்களோடு புதுக் கோலம் பூணும்போது அது குறித்த விவாதம் அவசியம் என்பதை அவர்கள் அறிவர். ஏகாதிபத்திய ஒடுக்குமுறை ஆட்சியின் கீழ்த் தேசங்கள் சுதந்திரம் தவறிக் கெட்டிருந்த நிலை இன்று இல்லை. ஒடுக்கப்பட்ட தேசங்களை ஐக்கியப்படுத்திய பாட்டாளிவர்க்கப் புரட்சியூடாக சோஸலிஷத்தை வென்றெடுத்த சோவியத் யூனியன் நிதர்சனமாயிருந்தபோது, தேச விடுதலைப் போராட்டம் சோசலிசத்தின் பகுதியாக இருந்தது;</div>
<div style="line-height: 1.5em;">
<span class="photo_left" style="clear: left; float: left; max-width: 180px; padding: 2px 10px 5px 0px;"><img alt="" class="photo_img img" src="http://photos-b.ak.fbcdn.net/hphotos-ak-snc7/310356_354246617995017_694820514_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 493px; padding: 0px;" /></span> சோவியத்தின் தகர்வின் பின்னர் விடுதலை பெற்ற முன்னாள் குடியேற்ற நாடுகளுக்குள் மோதல்களை ஏற்படுத்தும் அமரிக்க மேலாதிக்கத்தின் சதியின் பகுதியாக இனத்தேசியங்கள் கையாளப்படும் யதார்த்தம் அரங்கேறியுள்ளது. அடிமைத் தளையினின்றும் விடுதலை பெற்ற வறுமையுடையதான புண்ணிய பூமியென்று கூறியவாறு மேலாதிக்கம் கொள்ளும் இந்தியா அமரிக்காவுக்கு நிகராக எமது சுதந்திரத்தைப் பறித்து தொடர்ந்தும் எமது நாட்டினுள் தன் சேறாக்கலில் அல்லாடும் மீன் களுக்கு வீசும் புதுப்புது வலைகளில் பலதரப்பினரும் மாட்டியவாறு காலம் நகர்கிறது.உலகின் எப்பகுதியையும் விட காத்திரமான போராட்டங்களையும் தியாகங்களையும் நல்கிய இந்தியக் கொம்யூனிஸ்ட் அமைப்புகள் இன்றும் வேறெந்த நாட்டையும்விட பெரியனவாயும் வலியனவாயும் இருக்கவே செய்கின்றன; இருந்துமென்ன மக்களைவிட்டுக் காத தூரம் ஒதுங்கியபடிதான். ஏன்? மக்களைச் சரியாகப் புரிந்துகொண்ட கோட்பாடுகளுடன் இல்லை. வர்க்கப் பார்வை எனும் வலிய ஆயுதத்தைப் பெற்றபோதும் சாதியமைப்புடைய இந்தியச் சமூகம் பற்றிய தெளிந்த பார்வை போதிய அளவில் எட்டப்படாமலே உள்ளது. தனிநபர்கள் இதுதொடர்பில் சில முன்னேற்றங்களை எட்டியபோதிலும் கட்சிகள் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய படிதான். பெரும்பெரும் தத்துவ மேதைகளைக் கண்ட கட்சிகளும் நிலப்பிரபுத்துவத்துக்குரியதாக சாதியமைப்பைக் காணும் அவலம் தொடர்கிறது. இன்றும் சாதி இருப்பது நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சமாம்; நிலப்பிரபுத்துவத்துக்கு முன்னரே, புத்தர்காலத்தில் பேசப்பட்ட சாதி முன் தயாரிப்பாம். என்ன கொடுமை? சாதிப் பேய் வாராதிருந்தால் "மார்க்சே" என்று நிம்மதியாக வர்க்கம் பற்றிப் பாராயணம் பண்ணிப் பூசித்தே சோசலிசத்தைக் கண்டிருக்கமாட்டோமா?புரட்சிகர வர்க்க அணிதிரட்டல் மட்டுமே போதுமானதாக இல்லை. ஒடுக்கப்படும் தேசங்களினதும், ஒடுக்கப்பட்ட-பிற்படுத்தப்பட்ட சாதிகளினதும் கோரிக்கைகள்-தீர்வுகள் குறித்த தெளிவு அவசியம். சாதி-தேசங்களினுள் வர்க்கங்களுண்டு; அவற்றினுள் உள்ள பாட்டாளி வர்க்க நலனே முன் கவனிப்புக்குரியன. அனைத்து உழைக்கும் மக்களது ஒன்றிணைவுக்குத் தடையாக உள்ள சாதி-தேசப் பிரச்சனைத் தீர்வுக்கு அனுசரணையாக அவற்றின் சுயநிர்ணயம் குறித்த வரையறை வகுக்கப்படாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை. இது எமது மண்ணுக்கு மட்டுமுரியதல்ல. இன்று உலகளாவிய பிரச்சனையாகியுள்ளது. ஒடுக்கப்படும் தேசங்கள் புரட்சிகர சக்தியின் கவனிப்புக்குரியதான காலத்திலேயே இதற்கான கோட்பாட்டு உருவாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். புத்தம்புதிய சோவியத் உருவாக்கத்தில் வேறு அக்கறைகள் முன்னுருமை பெற்றமையால் இது கவனம்பெறாமல் போனது. சீன-சோவியத் தத்துவார்த்த மோதலில் திரிபுவாதம் குறித்த கோட்பாட்டுருவாக்கத்தை மாஓசேதுங் சிந்தனை மேற்கொண்டிருக்க வேண்டும். தவறிப்போயிருப்பினும், எமது வரலாற்று முன்னேற்றத்துக்கு சாதி-தேச நிதர்சனத்தில் சோசலிச முன்னெடுப்பு தொடர்பான கோட்பாடு உருவாக்கம் பெற அவசியம் ஏற்பட்டுள்ளது. தேசிய உணர்வு பாட்டாளி வர்க்கத்தையும் பற்றியுள்ள நிதர்சனத்திலிருந்து சோவியத் திரிபுவாதம் அறுபதுகளில் தோன்றிய சூழலை அணுகியிருப்பின் மாஓ சேதுங் சிந்தனை சோசலிச முகாம் தகர்வுறாமலே பாட்டாளி வர்க்க சர்வதேச உணர்வுடன் தத்தம் தேச-சோசலிசக் கட்டுமானத்தை முன்னெடுப்பது என்பதற்கான கோட்பாட்டை( திரிபுவாதத்துக்கான கோட்பாட்டையும்) கண்டடைந்திருக்க இயலும். இது சாதி-தேசங்களினுள் புரட்சியின் இணைவோடு உள்ள தொடர்பாடல். தேசக் கட்டுமானம் எப்படி சோசலிச நிர்மாணத்துக்குரியதாகலாம் என்பதற்கு மாஒசேத்ங் சிந்தனை வழி காட்டியிருப்பின் எமக்கான பாதை தெளிவாகியிருக்கும். தவறினால் என்ன, சாதியமைப்பில் வர்க்க அமைப்பு மாற்றம் குறித்த எமது வரலாற்று அனுபவத்தை வர்க்கப் பார்வையில் மீட்டுக் கோட்பாட்டு உருவாக்கம் கொள்ளும்போது சாதி-தேசப் போராட்டம் வாயிலாக சோசலிச நிர்மாணத்துக்குரிய கோட்பாட்டையும் கண்டு அடைந்தவர்கள் ஆவோம். இந்த நோக்கத்தோடு எமது இந்த சமூக உரையாடலைத் தொடர்வோம். சாதிபேதங்களில் பந்திக்கப்பட்ட எமது சமூகத்தில் வரலாற்று இயக்கமே இருந்ததில்லை எனும் கருத்துப் பழங்கதையாகிவிட்டது. இங்கு சமூக மாற்றங்கள் பண்பாட்டுப் புரட்சிவாயிலாக எட்டப்பட்டன என்பது போதிய கவனம்பெறவில்லை. இந்த அமர்வின் வாசிப்பில் அதனைப் பார்ப்போம். முன்னதாக, பண்பாட்டுப் புரட்சி இயக்கம் கட்டியெழுப்பட அவசியமுள்ளமையை வலியுறுத்தி, உண்மையில் அதனூடாக மேலெழும் வேலைப் பாணியாகவே இந்த உரையாடல் தொடரவேண்டும்.</div>
<div style="line-height: 1.5em;">
<span class="photo_right" style="clear: right; float: right; max-width: 180px; padding: 2px 0px 5px 10px;"><img alt="" class="photo_img img" src="http://photos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash3/536249_354246801328332_687333758_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 493px; padding: 0px;" /></span> தேவை உணரப்படும்போது அமைப்பு கண்டிப்பாக உருவாகும்! புதிய பண்பாட்டு வெகுஜன இயக்கம் கவனம் கொள்ளவேண்டிய அம்சங்கள் சிலவற்றை பின்வருமாறு பட்டியலிடலாம்( இது பூரணமானதில்லை; உருவாகும் புதிய பண்பாட்டு இயக்கமே இதனை முழுமையாக வரைந்து செயலுருக் கொடுக்க இயலும். இது ஒரு முன்னோட்டம் மட்டுமே):</div>
<div style="line-height: 1.5em;">
1. தேசத்தின் இறைமையை மீட்டெடுத்தலும் பாதுகாத்தலும்.</div>
<div style="line-height: 1.5em;">
2. தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையை முறியடித்தல்</div>
<div style="line-height: 1.5em;">
.3. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்தலும் இனங்களிடையேயான நல்லுறவை வலுப்படுத்தலும்.</div>
<div style="line-height: 1.5em;">
4. சாதி ஒடுக்குமுறையைத் தகர்த்தல்.</div>
<div style="line-height: 1.5em;">
5. பெண்ணொடுக்குமுறையைத் தகர்த்தல்</div>
<div style="line-height: 1.5em;">
.6. உழைப்பின் உன்னதம் போற்றுதல்.</div>
<div style="line-height: 1.5em;">
7. புதிய கல்விக்கோட்பாட்டை வகுத்து கற்றல்-கற்பித்தல் ஜனநாயக ஒழுங்கமைப்பை வென்றெடுத்தல்</div>
<div style="line-height: 1.5em;">
.8. சுகாதாரம்-மருத்துவம் ஆகிய துறைகள் வணிகமயமாதலை முறியடித்தல்</div>
<div style="line-height: 1.5em;">
.9. பொதுச்சேவையை மக்கள் நலநாட்டமுள்ளதாக விருத்தி செய்தல்.</div>
<div style="line-height: 1.5em;">
10. விளையாட்டுத்துறை வணிகமயப்படுதலை முறியடித்து மக்கள் நலநாட்டமிக்கதாக்குதல்.</div>
<div style="line-height: 1.5em;">
11. சிறுவர் பாதுகாப்பையும் உடல்-உள-ஆத்மீக விருத்தியையும் உத்தரவாதப்படுத்தல்.</div>
<div style="line-height: 1.5em;">
12. தமிழ் நூல்கள், கலைகள், சினிமா போன்றவற்றின் பரவலில் தமிழ்நாடு-இலங்கை இடையே இருவழிப்பாதையை உத்தரவாதப்படுத்தல்.</div>
<div style="line-height: 1.5em;">
எமது சாதிய-வர்க்க சமூகத்தில் விழுமியப் பெறுமானங்கள் தலைகீழ் நிலைப்பட்டது. அதன்பேறே பஞ்சமாபாதகங்கள் பற்றிய புலம்பல். பயிரை மேயும் வேலியின் வளாகத்துள் எந்த விழுமியம் தன்னைத் தற்காத்துக்கொள்ள இயலும்? சாதிய-வர்க்க பேதம் தகர்த்து உருவாகும் புத்துலகில் எல்லோரும் உழைத்துண்ணும் உத்தமர் ஆவதற்கு அமை வான புதிய பண்பாட்டு இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!சேர்ந்து செயலாற்ற அவசியமான உரையாடலைத் தொடர்வோம்!....</div>
</div>
</div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-42746327226102692002012-09-12T08:10:00.003-07:002012-09-12T09:25:36.131-07:00தேடலுடன் ... கூடங்குளமும்.கிழக்கும்,சுயநிர்ணயமும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11.199999809265137px; line-height: 16.49333381652832px;">
<span class="photo_left" style="clear: left; float: left; max-width: 180px; padding: 2px 10px 5px 0px;"><img alt="" class="photo_img img" src="http://photos-c.ak.fbcdn.net/hphotos-ak-snc6/263954_353274021425610_1843489867_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 493px; padding: 0px;" /></span> பாரதியின் நினைவை வலியுறுத்திய செப்ரெம்பர் 11 கடந்த ஒரு நாளின் பின்னரே இந்தச் சமூக உரையாடலுக்குக் குந்தியிருக்கிறேன்; வேகமாகப் பல சங்கதிகள் கடந்து போய்க் கொண்டிருக்கையில் 'என்னத்தைப் பேசி, என்னத்தைக் கண்டோம்' என்ற வெறுப்பே மிஞ்சியிருந்ததால் ஆற இருந்து எதுவும் பேச வரவில்லை. வேளாங்கண்ணி- பூண்டி மாதா கோயில்களுக்கு யாத்திரை சென்ற சாதாரண சிங்கள மக்களைத் தாக்கியதை ஈழத்தமிழருக்கான மாபெரும் பிரதியுபகாரமாக தமிழக தமிழ்த் தேசியர்கள் மார்தட்டிக் கூறும்போது, அந்த இனவாதச் சங்காரத்தின் முன்னே கையறு நிலையில் வேதனையை மட்டும் பெருமூச்சாக்கி சில எதிர்ப்புக்குரல்களுடன் ஒதுங்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட ஜனநாயக சக்திகளைக் குறைகூற எதுவுமில்லை என்று புரிந்தது. புரிதலின் மறுகரையாய், இலங்கைத் தமிழர் மீதான இனச்சங்கார யுத்த முன்னெடுப்பில் சிங்கள முற்போக்கு சக்திகள் போதிய எதிர்ப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை எனக்குற்றம் சுமத்துவது எத்தனை அபத்தம் எனப் புரிந்தது. உண்மையில் அத்தகைய நல்லெண்ணங்கொண்ட பல சிங்கள ஜனநாயகர்கள் பேரினவாத அரசுக்கு எதிரான ஆக்கிரோசமான பதிவுகளைப் பல்வேறு களங்களில் வெளிப்படுத்தியிருந்தனர். இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழ்-சிங்கள பாசிச சக்திகள் கை மேலோங்கி இருப்பது மெய்யாயினும், தற்காலிகமானது.<span class="photo_left" style="clear: left; float: left; max-width: 180px; padding: 2px 10px 5px 0px;"><img alt="" class="photo_img img" src="http://photos-f.ak.fbcdn.net/hphotos-ak-snc6/250216_353274994758846_724507557_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 493px; padding: 0px;" /></span> வெற்று நம்பிக்கை அலட்டலில்லை என்பதைக் கூடங்குளம் மக்கள் உணர்த்தி நிற்கின்றனர். ஜனனாயக சக்திகள் முன்னெடுக்கும் மக்கள் போராட்டம் எத்தனை கனதியானது என்பதற்கு அவர்கள் நேர் உதாரணம். தலைமை தாங்கிய உதயகுமார் தவிர்க்கவியலாத நிலையில் சரணடைய முற்பட்டபோது போராடும் மக்கள் அவரைச் சூழ்ந்து ஆர்ப்பரிப்போடு குண்டுக்கட்டாய்த் தூக்கித் தம்மோடு எடுத்துச் சென்று பாதுகாத்து, போராட்டத்தையும் தொடர்கின்றனர். தன்னைக் காக்க மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களைக் காவிச் செல்ல ஒரு தலைவர் உருவாகிய துன்பியல் தொடரப் போவதில்லை; மக்களுக்கான சரியான கோட்பாடு கண்டறியப்பட்டு ஏற்ற போராட்ட மார்க்கம் வகுக்கப்பட்டு முன்னேறும் போது தலைமைக்கும் புத்தூக்கமூட்டும் மக்கள் எழுச்சி இந்த உலகமயமாதலிலும் சாத்தியம் என்பதை மெய்ப்பிப்பதற்காகவே கூடங்குளம் மக்களுக்கான புரட்சிகர வணக்கங்களைக் கூறக் கடமைப் பட்டிருக்கிறோம். </div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11.199999809265137px; line-height: 16.49333381652832px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11.199999809265137px; line-height: 16.49333381652832px;">
<span class="photo_left" style="clear: left; float: left; max-width: 180px; padding: 2px 10px 5px 0px;"><img alt="" class="photo_img img" src="http://photos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash4/309190_353274818092197_845300142_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 493px; padding: 0px;" /></span> சரியான கோட்பாடு என்பதில் சுயநிர்ணயத்தை இன்று எவ்வாரு வரையறைப்படுத்துவது என்ற சங்கதி பிரதான இடத்தை எடுத்துள்ளது. முன்னர் இலங்கைத் தேசியம் மட்டுமே உ ள்பொருளென்று ஈழத்தமிழ்த் தேசியம் அதற்குட்பட்டிருப்பது சாத்தியம் என்பதை மறுதலித்தது உண்மையேயாயினும் விரைவில் தவறைத் திருத்தி தமிழ்த் தேசியத்தையும் சுயநிர்ணயத்தையும் இலங்கைக் கொம்யூனிஸ்ட்டுகள் ஏற்பவராயினர். இன்றும் அதில் மாற்றமில்லை. பல கொம்யூனிஸ்ட்டுகள் பிரிந்துசெல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயத்தையே வலியுறுத்துகின்றனர். என்னைப் பொறுத்தவரை நூறு வருடங்களின் முன்னர் ஏகாதிபத்திய நேராட்சியில் குடியேற்ற நாடுகளாக நாம் இருந்த காலத்தில் பேசப்பட்ட அந்த வரையறை பெயரளவிலான சுதந்திரத்தை ஈட்டி, அதைப் பொருளுள்ளதாக்கப் போரடும் இன்றைய சூழலில் மாற்றத்துக்குரியது எனத் தோன்றுகிறது. குறிப்பாக, இடியப்பச் சிக்கலாக (பிட்டும் தேங்காய்ப்பூவும் போல) கலந்தே வாழும் சிங்கள-தமிழ்-முஸ்லிம்-மலையக மக்களை எப்படிக் கூறு போட்டுப் பிரிந்து செல்லும் உரிமை பேசப்போகிறோம்? நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் உணர்த்தும் யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டாமா? இதன் பிரதிநிதித்துவம் கறாரான உண்மை எனக்கொள்ளத்தக்கது இல்லை என்றபோதும் முழுதாகப் புறக்கணிக்கத்தக்கதுமல்ல என்பதறிவோம். முஸ்லிம் 15, தமிழ் 12, சிங்களம் 8 எனும்வகையில் அமையும் பிரதிநிதித்துவம் கிழக்கில் தமிழ்ப் பெரும்பான்மை என்பதைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. விரைவில் முஸ்லிம் பெரும்பான்மை என்பதும் காணாமல்போய், கிழக்கு சிங்களமயப்படவுள்ள வாய்ப்பை முஸ்லிம் மக்கள் உணர்ந்த அளவுக்கு தமிழ்த் தேசியர்கள் புரிந்ததாகத் தெரியவில்லை(சம்பந்தர் கேட்டும் ஹக்கீம் வரவில்லை என்ற தலைகீழ் யதார்த்தம் சந்தர்ப்பவாத அரசியலாளர் விவகாரம்; இதில் சம்பந்தர் சரி ஹக்கீம் தவறிழைக்கிறார் என்பதும் பொருளல்ல. இரு சிறு தேசிய இனத் தலைவர்களைக் கடந்து கிழக்கில் சிங்கள ஆக்கிரமிப்பு நிதர்சனமாகாது தடுக்க மக்கள் என்ன செய்ய வேண்டும், எது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதே இங்கு அக்கறைக்குரியது). செய்யக்கூடாததைச் செய்வதும், செய்யவேண்டியதைச் செய்யாதிருப்பதும் கேடு விளைப்பதாகும் என்பது குறளில் வலியுறுத்தப்பட்டிருந்த ஓர் உண்மை. சிங்கள மக்கள் தத்தமது வாழிடங்களில் தமது வாழ்வாதாரங்களை வென்றெடுக்கப் போராடும் வகையில் நாம் உதவ இயலும். எமது நடைமுறையில் செய்ய வேண்டியதையும்-தவிர்க்க வேண்டியதையும் இனங்காண நாம் முயல்வதில் அது தங்கியுள்ளது. பிரிவினையால் தமக்கு கேடு நேரும் என்ற சிங்கள மக்களது அச்சத்தைப் போக்கி, அதேவேளை வடக்கு-கிழக்கில் எமது சுயநிர்ணயத்தை வென்றெடுக்க சிங்கள மக்களையும் ஏற்புக்கொள்ளவைப்பதற்கு பிரிவினையற்ற சுயநிர்ணயக் கோட்பாடு குறித்த விவாதமே இன்று அவசியமாகிறது. வடக்கை மட்டும் பிரிப்பதா, கிழக்கின் தமிழ்ப் பகுதியை சேர்த்துக்கொண்டு பிரிவதா(ஊடறுத்து நிற்கும் முஸ்லிம்-சிங்களக் கிராமங்களை என்ன செய்வது), தென் கிழக்கு முஸ்லிம் மக்களை பிரிந்துபோக அனுமதிப்பதாயின் வடக்கு-கிழக்கு பிராந்தியத்துக்குட்பட்ட முஸ்லிம் கிராமங்களின் நிலை என்னாவது எனக்கேள்விகள் ஆயிரமுண்டு. சுயநிர்ணய விவாதத்தை சிங்கள-முஸ்லிம் முற்போக்கு சக்திகளோடு இணைந்து முன்னெடுப்பதிலேயே இவற்றுக்கான தீர்வுகள் தங்கியுள்ளன. இல்லாமல் யூக்கோஸ்லவாக்கியா, திமோர், சூடான் போல ஏகாதிபத்திய வேட்டைக்காடாக இந்த இலங்கை மண்ணை ஆக்கப்போகிறோமா?<span class="photo_right" style="clear: right; float: right; max-width: 180px; padding: 2px 0px 5px 10px;"><img alt="" class="photo_img img" src="http://photos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/304399_353274904758855_830877183_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 493px; padding: 0px;" /></span> தொடரும் சிங்கள-தமிழ்-முஸ்லிம் இனவாத சக்திகளின் முன்னே முற்போக்கு சக்திகள் கையறுநிலையில் இருப்பது நீடிப்பின் அந்த அச்சுறுத்தலின் படிப்பினையையும் கண்டுதான் திருந்துவோமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறாகினும், இன்று முன்னெடுக்கும் ஆரோக்கியமான விவாதமும் அதுசார்ந்த ஒன்றுபடலும் அழிவின் கொடூரத்தையாவது குறைக்க ஏதுவாகும். அந்த நம்பிக்கை இல்லாமல் இல்லை. சில சிங்களக் கட்சிகள் வெளியிட்டுள்ள "மக்களைப் பிளவுபடுத்தும் இனவாதத்தை தோற்கடிப்போம்" என்ற துண்டுப்பிரசுரம் அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவுள்ளது; தெற்கில் முஸ்லிம் பள்ளிவாசல்கள்மீது சிங்கள இனவாத சக்திகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்து அனைத்து இன மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்துக்கு அறைகூவல்விடுத்துள்ளது. இனவாதத்தைக் கடக்க எத்தனிக்கும் நேசசக்திகள் நாம் கோரும் சுயநிர்ணயம் குறித்த விவாதத்தில் இணைவர் என நம்ப இடமுண்டு. "ஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி, சூழ்ந்திடும் இருள் அகல்வதும் உறுதி".<br />
<br />
<br /></div>
</div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-24072342372070128392012-08-11T10:49:00.000-07:002012-08-11T11:18:58.084-07:00இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப்புரட்சியும் -9 "மற்றொரு தொடக்கத்துக்காக"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">"மற்றொரு தொடக்கத்துக்காக"</span><br />
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVkGrIaaEiCLR-YQoqsaD_5vrWuvsZcLuQutFhtJzqyq7hm9a7Y3CxfRs_4a7FGoBdTckNIRA9lXEUAX-RSX5t4V-39vFMbRekB2f7e9tXhVuTUCm3MqVfVGtpZ7NlMHMJ3e7diSVBuDhM/s1600/leninlives.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVkGrIaaEiCLR-YQoqsaD_5vrWuvsZcLuQutFhtJzqyq7hm9a7Y3CxfRs_4a7FGoBdTckNIRA9lXEUAX-RSX5t4V-39vFMbRekB2f7e9tXhVuTUCm3MqVfVGtpZ7NlMHMJ3e7diSVBuDhM/s320/leninlives.jpg" width="320" /></a>நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்த முடிவுரை. இரட்டைத் தேசியம் குறித்த விவாதம் ஒருவகையில் முடிவடைந்த மாதிரித்தான். இதனைச் சந்தேகித்து (எவ்வகையில் என்பது குறித்துப் பின்னாலே பார்ப்போம்) எதிர்த்த பல நண்பர்கள், அது அவசியமற்றது எனக் கண்டு மௌனித்துள்ளார்கள். அவர்கள் இரட்டைத் தேசியக் கோட்பாட்டை விளங்கி ஏற்றுள்ளார்கள் எனும் உண்மையைப் புரிந்து கொள்ளாமலே இதனை இருட்டடிப்புச் செய்ய விரும்பும் 'மாற்றம்பெறாத புனித மார்க்சிய வசனப்பக்தர்கள்', எல்லாம் ஒருவழியில் ஓய்வுக்கு வந்துவிட்டதாக மகிழ்வர். "மரம் ஓய்வை விரும்பிய போதிலும் காற்று அதனை அனுமதிப்பதில்லை". </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இதனை முடிவுரை என்று தலைப்பிடாமல் "மற்றொரு தொடக்கத்துக்காக" எனக் கூறியிருப்பது காரணத்தோடுதான். பண்பாட்டுப் புரட்சியைக் கோட்பாட்டு வடிவங்கொடுக்கும் வகையில் தனது சமூக மாற்ற வரலாற்றை முன்னெடுத்த தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை மறுவாசிப்புக்குள்ளாக்கும் ஒரு புதிய தொடரை எழுத ஏற்றதாக இந்தத் தொடர் முடிவு பெறுகிறது. இப் பேசுபொருளை பூரணமாய்ப் புரிந்துகொள்ளவும், எமது வரலாற்றுப் போக்கை விளங்கிக்கொண்டு செயலில் இறங்கவும் அந்தப் புதிய தொடர் அவசியமாகும். எமது செயற் களத்துக்கான முன்னுரையாக உள்ள இத்தொடர் இச்சந்திப்போடு நிறைவுறும்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRglVh1v7tybMY0Mh5jajqMdbt6ZNZTShjxZHEJNuJaWATLKRLGar-tfrHjYm0gkYhAX_UtT07NQyWXuEUuVpPGTLoJ1AqfM_c04KZg2ONjp5rjpeLmRXI4rXGMenvWmQj426bdVYR6okg/s1600/racism.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="256" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRglVh1v7tybMY0Mh5jajqMdbt6ZNZTShjxZHEJNuJaWATLKRLGar-tfrHjYm0gkYhAX_UtT07NQyWXuEUuVpPGTLoJ1AqfM_c04KZg2ONjp5rjpeLmRXI4rXGMenvWmQj426bdVYR6okg/s320/racism.jpg" width="320" /></a>தவிர, எந்தக் கோட்பாடும் முடிந்த முடிவாகிவிடுவதில்லையே; நடைமுறை அனுபவங்களைத் தொகுத்து உருவாக்கப்படும் ஒரு புதிய கோட்பாடு தொடரும் நடைமுறைக்கான மார்க்கத்தை வடிவமைத்துத் தந்து பிரயோகிக்கப்படுகையில், முகங்கொள்ளும் இடர்ப்பாடுகளுக்கு அமைவாக புதிய செழுமைப்பாட்டுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். அதற்கு இடந்தரும் வகையில் முடிவில்லாத் தொடர் வளர்ச்சிக்குரியதாக சரியான கோட்பாடு கட்டமைக்கப்பட வேண்டும். மிகுந்த இடர்ப்பாட்டில் தொடரமுடியாத முடக்கத்துக்குள்ளாகும் கோட்பாட்டைக் கைவிட்டு புதிய கோட்பாட்டை வரித்துக் கொள்வதாக வரலாற்று வளர்ச்சி இயங்கியவாறுள்ளது. அவ்வாறு புதிய கோட்பாடுகளின் வழி மக்கள் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுப்பதாக மார்க்சியம் உள்ள காரணத்தினாலேயே, அது இறந்துவிட்டது என்று எக்காளமிட்டவர்களையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியவாறு புத்தொளி பெற்று மீண்டும் தேடலுக்குரிய தத்துவமாகியுள்ளது மார்க்சியம். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
மார்க்சியம் அதன் தொடக்க நிலையில் ஐரோப்பாவில் சோஸலிசம் வெற்றிகொள்ளப்படும் வகையில் பாட்டாளி வர்க்கப் புரட்சி சாத்தியமாகும் எனக்கருதியது; ஒரு நாட்டில் வெற்றிபெறும் பாட்டாளி வர்க்கப் புரட்சி உடன் ஐரோப்பா பூராகப் பரவுவதன் வாயிலாக உலகம் சோசலிச மாற்றம்பெறும் எனக் கருதப்பட்டது. ருசியப்புரட்சி சாத்தியமான போதிலும், லெனினிசத்தின் வழி தனியொரு நாட்டில் சோசலிசத்தைச் சாத்தியமாக்குவது எனும் புதிய கோட்பாடு வரிக்கப்பட்ட நிலையிலேயே அவ்வெற்றி சாத்தியமாக முடிந்தது. "உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" எனும் மார்க்ஸ் எதிர்பார்த்தவாறான உலகப் புரட்சிக் கோட்பாட்டை பிரயோகித்திருப்பின் சோவியத் ருசியா படைக்கப் பட்டதனூடாக முக்கால் நூற்றாண்டு சோசலிசச் சாதனையை உலகு கண்டிருப்பதும் நிறைவேறாமல் போய், மார்க்சியம் நடைமுறைச் சாத்தியமற்றதோ எனும் சந்தேகம் எழுந்திருக்கும் (வேறு வடிவில் புதிய கோட்பாட்டை மர்க்சியம் வழங்கி மக்கள் விடுதலை சாத்தியப்பட்டிருக்குமாயினும், மிகுந்த சிரமங்களையும் கால தாமதத்தையும் கண்டிருக்க நேர்ந்திருக்கும்).</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3ROSAT5nKfOedS1K9GcIk3OWJwsoFIpH4TV_PEFnTyOzBhrxgVAd1PTKbJOx1Hsy4vKRBiVr4azUjyIjeCFy02kPjvAwUS25qGJAdWPNSS8FQjt5bw27vWLxdX6jvIAa3j1TCKj_L_blZ/s1600/election.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3ROSAT5nKfOedS1K9GcIk3OWJwsoFIpH4TV_PEFnTyOzBhrxgVAd1PTKbJOx1Hsy4vKRBiVr4azUjyIjeCFy02kPjvAwUS25qGJAdWPNSS8FQjt5bw27vWLxdX6jvIAa3j1TCKj_L_blZ/s1600/election.jpg" /></a>மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் எதிர்பார்த்தவாறு மேற்கு ஐரோப்பா பூராவிலும் ஒரேவேளையில் பாட்டாளிவர்க்கப் புரட்சி ஏற்படாமல் போனது ஏன்? அப்போது ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கத்துக்கும் அங்குள்ள முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயான முரண்பாடே பிரதானமானதாக இருந்தது. அவர்களின் மறைவைத் தொடர்ந்து, லெனின் காலத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது ஏகபோக மூலதனத்தைக் குடியேற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்த நாடுகளைச் சுரண்டுவது தீவிரம் பெற்றபோது, ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஒடுக்கப்பட்டநாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு பிரதான இடத்தை எடுத்தது. எடுக்கவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பாட்டாளி வக்க - முதலாளி வர்க்க முரண் கூர் மழுங்கலாயிற்று.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
கிழக்கு ஐரோப்பிய - ஆசியக் கண்டங்களுக்கான ருசியாவில் புதிய எழிச்சியோடு வரலாற்று அரங்குக்கு வந்த பாட்டாளி வர்க்கம் லெனின் தலைமையில் புதிய கோட்பாட்டை வகுத்து மார்க்சியத்தை வளர்த்தெடுத்து, ஒடுக்கப்பட்ட தேசங்களையும் விவசாயி வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்தி சோசலிசத்தைச் சாத்தியமாக்கிக் காட்டியிருந்தது. அதன் பின்னர் பாட்டாளி வர்க்கப் புரட்சி நிகழவில்லை என்பதால் மார்க்சியம் தோற்றுப்போய்விடவில்லை. ஏகாதிபத்தியத்துக்கும் ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கும் இடையேயான முரண்பாட்டில் பாட்டாளி வர்க்கச் சிந்தனை வழிகாட்டலோடு சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கியூபா, வியட்னாம், வட-கொரியா போன்ற நாடுகள் எட்டிய சுதந்திரந்திரத்தினூடே சோசலிசத்தை வென்றெடுக்கும் வரலாற்றைத் தொடர்ந்தனர். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXZvkA__E7RbakF58l_v7H8qhIqCTf4Cu0jo0rcz3XXmIaJMqgr7VnovloY8k5_QBE8DqZHQmmlrEQQz3d2VRtBOPr_Dgkp-6KnRj5Pbbxukb1vPjYTZHSlN9ehM6KC48e-resxbmeN2hX/s1600/mao-zedong-3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXZvkA__E7RbakF58l_v7H8qhIqCTf4Cu0jo0rcz3XXmIaJMqgr7VnovloY8k5_QBE8DqZHQmmlrEQQz3d2VRtBOPr_Dgkp-6KnRj5Pbbxukb1vPjYTZHSlN9ehM6KC48e-resxbmeN2hX/s320/mao-zedong-3.jpg" width="242" /></a>இது தொடர்பில் மாஓ சேதுங் சிந்தனை பெறும் முக்கியத்துவத்தை அறிவோம். நகரங்களில் தொழிலாளர் புரட்சியை எதிபார்த்திருந்த சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியைக் கிராமங்களுக்கு ஆற்றுப்படுத்தி தேசப்பற்றுள்ள அனைத்து வர்க்கத்தினரையும் பாட்டாளிவர்க்கச் சிந்தனையின் கீழ் அணிதிரட்டி சீனப்புரட்சி வெற்றிவாகை சூட மா ஓசேதுங் சிந்தனை வழிவகுத்தது. தனித்த வழித் தடத்தில் முற்றிலும் தேசிய விடுதலைப் போராட்டமாகவே அமைந்த கியூபப் புரட்சியும் விரைவில் பாட்டாளி வர்க்கச் சிந்தனைத் தலைமைக்கு வர இயலுமாயிற்று. சுதந்திரத்தை வென்ற வேளையிலும் மார்க்சியத்தை ஏற்பதா இல்லையா என்ற தயக்கத்தோடு இருந்த தலைவர் பிடல் காஸ்ற்றோ விரைவில் கொம்யூனிஸ்ட் ஆகும் வகையில் வரலாற்று நெருக்கடி அமைந்தது; மார்க்சிய வழிகாட்டல் இல்லையெனில் தேச விடுதலையையும் பாதுகாக்க இயல்லாது எனக்கண்ட பின்னர் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆழமாக மார்க்சியத்தைக் கற்றுப் பிரயோகித்த பிடலும், அவரை மார்க்சியத்தை ஏற்கவைக்க கடுமையாக உழைத்த அவரது உற்ற நண்பர் சே குவேராவும் இன்று மார்க்சியச் சிந்தனைத் தேடலாளர்களது பிரதான நாயகர்களாகியிருப்பது தற்செயலானதல்ல - தேசிய விடுதலைப் போர்க்குணத்தின் வாயிலாகச் சோசலிசத்தை வென்றெடுக்கும் அவசியத்தோடு தொடர்புடையது அது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இந்த அம்சத்தில் முன்னர் அதிக முக்கியத்துவம்பெற்று, இன்று காலவோட்டத்தின் மறதிக்கு உள்ளாகும் மற்றொரு தலைவரான ஹோசிமின் கவனிப்புக்குரியவர். அவர் தலைமையில் முதலில் வியட்னாம் தேச விடுதலை மூலமாக சோசலிசத்தை அடையும் முன்னோடி நாடு எனப் பிரகடனப்படுத்தியிருந்தது, ஏகாதிபத்தியத் தலையீட்டால் அது முறியடிக்கப்பட்ட போதிலும் பின்னர் அவ்வழியில் சோசலிசத்தை வென்றெடுக்கும் தேச விடுதலையைப் பெற்றிருந்தது. ஐரோப்பிய நாடுகளில் இருபதாம் ஆண்டுகளில் வாழ்ந்த ஹோசிமின் மூன்றாம் அகிலம் தேசிய விடுதைக்காகப் போராடும் நாடுகளின் பால் சரியான வழிகாட்டலைக் காட்டுவதற்கு உதவும் வகையில் உழைக்க முடிந்தது. இது குறித்து யெவ்கனி கொபலெவ் எழுதியுள்ள "ஹோசிமின்" (தமிழிலில் க.விஜயகுமார்) எடுத்துக்காட்டியுள்ளமை கவனிப்புக்குரியது. ஏற்கனவே அவ்வழியில் செல்லும் கோட்பாட்டை லெனின் வகுத்து வழங்கியிருந்தமையை அறிவோம்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
லெனினிசம் இவ்வகையில் பெறும் முக்கியத்துவத்தை ஹோசிமின் வார்த்தைகளினூடாகக் காண்போம்: "முதலில் கம்யூனிசமல்ல, தேசியமே என்னை லெனின் மீதும் அகிலத்தின் மீதும் நம்பிக்கை கொள்ளச்செய்தது. படிப்படியாக போராட்டத்தின் போக்கில் நான் மார்க்சிய-லெனினியத்தைக் கற்றும், நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வந்தேன். உலகம் முழுவதும் உள்ள அடிமைப்பட்டுக்கிடக்கும் நாடுகளுக்கும், உலகெங்குமுள்ள தொழிலாளர்களுக்குமான விடுதலை என்பது சோசலிசத்தினாலும் கம்யூனிசத்தினாலும் மட்டுமே வென்றெடுக்கப்பட முடியும் என்ற முடிவுக்கு இறுதியாக நான் வந்து சேந்தேன். எவ்வாறு தேசபக்தியும் பாட்டாளிகளின் சர்வதேசியமும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்துள்ளன என உணர்ந்தேன்" ("ஹோசிமின்" ப.82).</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh375Na_9HSgtiaenYetilP2kzfuOE76Y3o7iSLJXNfJCeHQ-09sEsI8bKbdsoppfEZxS55QE4YW2myypXdjW79N0_EuUBEX6fIN0fqibdOvGmkSDU8MSGmvYzQr1704yMwMaQ6E47MSLhH/s1600/marx-1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh375Na_9HSgtiaenYetilP2kzfuOE76Y3o7iSLJXNfJCeHQ-09sEsI8bKbdsoppfEZxS55QE4YW2myypXdjW79N0_EuUBEX6fIN0fqibdOvGmkSDU8MSGmvYzQr1704yMwMaQ6E47MSLhH/s1600/marx-1.jpg" /></a></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இவ்வகையில் தேச விடுதலைக்கும் சோசலிசத்துக்கும் இடையேயான உறவை ஏற்காமல் இல்லை, பிரச்சனை தேசியத்தைப் பிளவுபடுத்தும் உங்கள் இரட்டைத் தேசியக் கோட்பாட்டில்தான் உள்ளது என்கிறீர்களா. ஒட்சிசனையோ, நைதரசனையோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள் என்றால் அதற்கு முன்னர் அந்த வாயுக்கள் வளிமண்டலத்தில் இல்லாமலா இருந்தது? இருக்கத்தான் செய்தது; இவற்றைக் கண்டுபிடித்த பின்னர் பல விளங்காப் புதிர்களுக்கு விடை கண்டறிந்து மனுக்குலம் முன்னேற இயலுமாயிற்று. எமது சாதியச் சமூகம் ஒடுக்குவோர்-ஒடுக்கப்படுவோர் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் சமூக சக்திகளாக சாதிகளை இன்றும் கொண்டுள்ள நிலையில் தேசியம் ஏற்கனவே ஒடுக்குவோருக்கானது-ஒடுக்கப்பட்<wbr></wbr></div>
டோருக்கானது எனப் பிளவு பட்டுள்ளமையைக் கண்டறிந்து அதற்கமைவாக எமது விடுதலைத் திசைமார்க்கத்தைக் கண்டறிய முயல்வதே இரட்டைத் தேசியக் கோட்பாடு மேற்கொள்ளும் முயற்சியாகும். ஈழத் தமிழ்த் தேசியம் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தமக்குள் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூக சக்திகளுக்கான சுய நிர்ணயத்தை வழங்குவதன் வாயிலாக ஒரே தேசிய அபிலாசைக்குள் ஐக்கியப்படுத்த இயலும் என்றே கூறுகிறோம். தவறும் பட்சத்தில் எதிரிகளால் பயன் படுத்த ஏற்ற எதிர்த் தேசியத்தை விட்டுவைத்தவர்களாவோம்.
<br />
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இப்படிச் சொல்லும்போது எதிரிகளால் பயன் படுத்தப்படலாம் என்பதாலே தான் இரட்டைத்தேசியம் குறித்து தேடல் கொள்ள வேண்டுமா எனக் கேட்கப்படுகிறது. இல்லை, எமக்கான ஏற்றத்தாழ்வான சமூக உருவாக்கமே ஒடுக்கும்- ஒடுக்கப்படும் தேசங்கள் போன்று மருதத் திணையால் ஏனைய திணைகள் ஒடுக்கிச் சாதிமுறை வாயிலாக சுரண்டப்படுதல் சார்ந்தது என்கிற வகையில் தேசத்துக்கான முந்திய வடிவம் ஒன்று நவீன தேசிய உருவாக்கத்துள் கொண்டிருக்கும் பிரச்சனையை விளங்கிக்கொள்ள வேண்டும். நிதர்சனமாயுள்ள இந்தப் பிளவாக்கத்தை நிவர்த்திசெய்து ஈழத்தமிழ்த் தேசியத்துக்கான சுயநிர்ணயத்தை வென்றெடுக்க வேண்டுமாயின் கசப்பான உண்மைகளைக் கற்றறிந்தாக வேண்டியவர்களாயுள்ளோம். நெருப்பு சுடும் என்பதால் சுட்டுவிடுவதில்லை, சாதிய இழிவு எனும் நெருப்போடு இருக்கிறோம் என்று சொல்வதால் சாதி வந்துவிடுகிறது எனப்படுகிறதா? அவ்வாறாயின் நனவிலி மனதில் உறைந்துள்ள சாதிமனம் ஏற்படுத்தும் சூடுபற்றி சுயவிமர்சனம் கொள்ள அவசியமுள்ளது என்ற புரிதலோடு ஏற்ற கற்றலுக்கான "வைத்தியரை" நாடுங்கள்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
இன்னொருவகையில் வேறொரு நியாயமான சந்தேகம் சில நண்பர்களிடம் உண்டு. பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டைக் கைவிட்டு ஒடுக்கப்படும் சாதித் (தலித்) தலைமையில் போராட வேண்டும் என்கிறீர்களா? இது மற்றொரு யதார்த்தம்; மிகப்பெரும்பான்மையான தலித் மக்கள் தொழிலாளர்களாயே உள்ளனர். அப்படியிருந்தும் சமூக மாற்றப் போராட்டத்தை பாட்டாளி வர்க்க நோக்கிலேயே முன்னெடுக்க வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் வலியுறுத்திவந்தோம். இதுவரையான வரலாற்றில் பாட்டாளி வர்க்கம் மட்டுமே தனது இருப்பையும் ஒழித்துக்கட்டினால் மட்டுமே ஈடேற்றம் என்ற யதார்த்தத்துடன் தோன்றியது; இழப்பதற்கு எதுவுமற்றதாகத் தோன்றி சோசலிசத்தின் வாயிலாகப் புத்துலகம் படைக்கக் கிடைத்த வாய்ப்பினாலேயே அவ்வர்க்கத்தால் மார்க்சியத்தைச் சிருஸ்டித்துத் தர இயலுமாயிற்று. அந்த மார்க்சிய வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சாதியத்தகர்ப்புப் போராட்ட அனுபவங்களின் தொகுப்பாகவே இரட்டைத்தேசியக் கோட்பாடு வெளிக் கிளம்பியிருந்தது என்பதை இத் தொடரில் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.333333969116211px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiivGe1jXFfA0eHTkXyxn69KANAkOv63PBZpl4FAPVeWdpow5ToRp_4fqXpVvykET84yK1sZ5Pe5K6X85nOQ7d_tr1Voyy9UjLNoLVOGW-1_PqB8LuO2tErcpSXQ-fALG8Qyfy7aez3p3Hn/s1600/question.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiivGe1jXFfA0eHTkXyxn69KANAkOv63PBZpl4FAPVeWdpow5ToRp_4fqXpVvykET84yK1sZ5Pe5K6X85nOQ7d_tr1Voyy9UjLNoLVOGW-1_PqB8LuO2tErcpSXQ-fALG8Qyfy7aez3p3Hn/s1600/question.jpg" /></a>வர்க்கப்பார்வை சாதிச் சமூக வரலாற்று வளர்ச்சிச் செல்நெறியைக் கண்டறிய இடந்தராத தோற்றமயக்கத்தை ஏற்படுத்த அவசியமில்லை; வர்க்கப்போராட்டம் மட்டுமின்றி தேசிய விடுதலைப் போராட்டமும் சோசலிசத்தை வென்றெடுக்க வழி கோலியுள்ளது என்ற வரலாற்றை மறுக்கவும் அவசியமில்லை. வர்க்கம் போல தேசமும் சாதியும் 'சமூக வர்க்கமாய்' ஒடுக்கலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும்போது வர்க்கப் போராட்டத்தின் வேறொரு வடிவமாகவே சாதி-தேச விடுதலைப் போராட்டங்களும் அமைவன என்பதை ஏற்பதற்கும் தடையிருக்க அவசியமில்லை. இந்த ஒடுக்கலில் பண்பாட்டு ஒடுக்கலுக்குள்ளாகும் நிலை காரணமாக பண்பாட்டுப் புரட்சிக்குள்ள இடத்தை நிராகரிக்கவும் அவசியமில்லை. பண்பாட்டுப் புரட்சியூடாக சமூக மாற்றத்தைச் சாத்தியமாக்கிய வேறுபட்ட வடிவத்தை தமிழ்ப் பண்பாட்டு வரலாற்று மறுவாசிப்பு வாயிலாக கண்டறிய இயலும். அதை மற்றுமொரு புதிய தொடரில் மேற்கொள்வோம். <span style="background-color: transparent; font-family: arial; font-size: 14.44444465637207px; line-height: 27.77777862548828px;">தொடர்வோம்... </span></div>
</div>ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-77329669068902295812012-06-23T07:50:00.002-07:002012-06-23T07:50:57.063-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="Apple-style-span" style="color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px;"></span><br />
<h2 class="contentheading" style="font-family: 'Segoe UI', Arial, Helvetica, sans-serif; font-size: 16px; font-weight: bold; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 8px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;">
<a class="contentpagetitle" href="http://keetru.com/index.php?option=com_content&view=article&id=8320:2010-05-07-10-27-14&catid=1080:10&Itemid=352" style="color: #333333; text-decoration: none !important;">பக்தி பேரியக்கத்தை வெறும் மத நிகழ்வாக மட்டும் பார்க்க முடியாது</a></h2>
<div class="article-tools" style="background-attachment: initial; background-clip: initial; background-color: #ececec; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-top-color: rgb(221, 221, 221); border-top-style: solid; border-top-width: 1px; clear: both; display: block; float: left; font-size: 12px; margin-bottom: 15px; width: 774px;">
<div class="article-meta" style="float: left; font-size: 12px; padding-bottom: 5px; padding-left: 5px; padding-right: 5px; padding-top: 5px; width: 619px;">
<span class="createby" style="background-attachment: initial; background-clip: initial; background-color: initial; background-image: url(http://www.keetru.com/templates/ja_purity/images/icon-user.gif); background-origin: initial; background-position: 0px 2px; background-repeat: no-repeat no-repeat; color: #666666; font-size: 12px; font-weight: bold; padding-bottom: 3px; padding-left: 20px; padding-right: 3px; padding-top: 3px;">ந.ரவீந்திரன் </span></div>
</div>
<div class="article-content" style="font-size: 12px;">
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இலங்கையின் வடபுலத்தில் யாழ்ப்பாண நகரிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பண்டத்தெருப்புக்கு உட்பட்ட காலையடி எனும் கிராமத்தில் 1955இல் பிறந்தவர். நடேசன் இரவீந்திரன். காலையடி அமெரிக்கன்மிசன் தமிமழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லுரி ஆகியவற்றில் கல்வி பெற்று, பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வெளிவாரி மாணவராய் கலைப் பட்டதாரியாகவும், பின்னர் முதுகலை மாணிப் பட்டத்தையும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் “திருக்குறளின் கல்விச் சிந்தனை’’ எனும் பொருளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
மார்க்சியத்தைத் தனது தத்துவத் தளமாக்கிக் கொண்டார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இப்போது “புதிய ஜனநாயகக் கட்சி’’) இவரது அரசியல் பார்வையை விரிவுபடுத்தியது. மலையகத்தில் 1977இல் ஆசிரியராகச் செயற்படத் தொடங்கியதிலிருந்து மேலும் தனது சமூகவியல் பார்வையை வளர்த்துக் கொண்டவர். மலையகத்தின் ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியில் 1992இல் விரிவுரையாளராக இணைந்து, 1995இல் வவுனியாவிற்கு இடமாற்றம் பெற்று இன்றுவரை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை வந்திருந்தபோது சந்தித்த உரையாடலிலிருந்து...</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>சந்திப்பு: முத்தையா வெள்ளையன்</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>உங்களுக்கு எழுத்து மீதும், ஆய்வு மீதும் ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<img alt="raveendran_300" height="300" src="http://keetru.com/images/stories/people/raveendran_300.jpg" style="border-bottom-style: none; border-color: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; float: right;" width="296" />எனக்கு ஆரம்ப காலங்களில் வாசிப்பு கூடுதலாக இருந்தது. எங்கள் கிராமத்தில் காலையடி மறுமலர்ச்சி மன்றம் என்று ஒன்று இருந்தது. நாங்கள் அந்த மன்றத்தில் கிராமம் சார்ந்த பண்பாட்டு இயக்கமாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இலக்கியங்கள் தொடர்பான தேடல்களும், சிறுகதை எழுதுவது, வாசிப்பது, விவாதங்களும் விமர்சனங்களும் செய்து வந்தோம். இதன் மூலம் எங்களை நாங்களே உருவாக்கிக் கொண்டிருந்தோம். 75, 76-ல் நான் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்த பிறகு அரசியல் செயல்பாடு முக்கியமாக இருந்தது. அதனுடாக எழுதுவது தவிர்க்க முடியாததாக இருந்தது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
கட்சி அமைப்பு சார்ந்த மட்டுவில் நூலகத்தின் மலருக்காக இயக்கவியல் பொருள் முதல் வாதம் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக்கட்டுரை மிக எளிமையாக எங்கள் தமிழ் மரபு ஊடாக இயங்கியல் பொருள் முதல் வாதத்தை எப்படி வெளிப்படுத்தலாம் என்று எழுதப்பட்டது. ஆனால் அந்த மலர் வெளிவராத காரணத்தினால் கட்சிப் பத்திரிகையான தொழிலாளியில் வெளிவந்தது. அந்தக் காலத்தில் படைப்புகளை எழுதுகிறவர்களின் பெயர் போடப்படுகிற மரபுகள் இல்லை. அந்த கட்டுரையை வாசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முக்கியமான தோழர் ஒருவர், இயங்கியல் பொருள் முதல் வாதம் என்றால் மார்க்ஸ், ஏங்கல்ஸ் லெனின் வார்த்தைகளின் ஊடாகத்தான சொல்ல வேண்டும் என்றார். அதன் பிறகு பாரதி நூற்றாண்டு விழா வந்தது. அந்த விழா கைலாசபதி தலைமையில் திட்டமிடப்பட்ட பனிரெண்டு தலைப்புகளில் ஒவ்வொருத்தரும் பனிரெண்டு மாதங்களுக்கு கட்டுரை படிப்பதாக இருந்தது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
எனக்கு தரப்பட்ட தலைப்பு அரசியல் இலக்கியமும் பாரதியும் இதை நான் கைலாசபதி நெறிப்படுத்தலில் தான் செய்தேன். பிறகு சிவசேகரம் மற்றும் கட்சித் தோழர்கள், நண்பர்கள், பாரதி மெய்ஞானத்தை முதன் முதலில் வெளியிட்ட சவுத்விஷன் பாலாஜி, தமிழ்நாட்டின் பல தோழர்களின் சந்திப்பு, விவாதிப்பு போன்றவைகளால் எழுத்து, ஆய்வுகள் என்று வளர்க்கக் கூடியதாக இருந்தது. <span style="font-size: x-small;">என்னை ஆரம்ப காலத்தில் ஒரு செயற்பாட்டாளனாக பார்க்கும் மரபு இருந்தது. இப்போது ஏதோ எழுத்தாளர் என்ற மாதிரியான தோற்றம் வந்திருக்கிறது.</span></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இப்போது செயல்பாட்டில் இருக்கிறதா? அதன் செயல்பாடுகள் எப்படி இருந்தன?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
பிரதான அரசியல் மாற்றங்கள் 56ஆம் ஆண்டுகளில் வந்தன. அதனூடாக வந்த தேசிய விழிப்புணர்வில் முக்கியமான அமைப்பாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இருந்தது. 70கள் வரைக்கும் வீரியத்தோடு இயங்கி வந்தது. அறுபதாம் ஆண்டுகளில் சீன, மாஸ்கோ தத்துவமோதல் என்பது கட்சியைப் பிளவு படுத்தியது. அந்த பிளவு வந்த போது கூட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உடைக்காமல் இருக்கவேண்டும் என்ற கருத்து அதில் இயங்கிக் கொண்டிருந்த கைலாசபதி, சிவத்தம்பி போன்று எல்லோரிடமும் இருந்தது. பிரதானமாக எங்களுடைய அணிக்கு வந்த கைலாசபதி நீர்வை பொன்னையன், டேனியல், சிலையூர் செல்வராசன் போன்ற இலக்கிய கர்த்தாக்கள் அதற்குள்ளே தொடர்ந்து இயங்கிக் கொண்டே எங்களுடைய கருத்துகளை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் எப்படி செயல்படுத்தலாம் என்ற பார்வை இருந்தது. 74ஆம் ஆண்டுகளில் எங்களுடைய தாயகம் வெளிவரத் தொடங்கியது. தாயகம் வெளிவந்த போது தேசிய கலை இலக்கியப் பேரவை செயல்படத் துவங்கியது. பின்னாளில் கணிசமாக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் எங்களோடு இணைந்து கொண்டனர். தொடர்ந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தாலும் கூட முதலில் இருந்த வீரியம் குறைந்து இருந்தது. இந்தச் சூழலில் தேசிய இலக்கியப் பேரவை மாதிரி பிராந்தியங்கள் சார்ந்து, பன்மைத் தன்மையோடு தேவைக்கு ஏற்ற வகையிலே பல அமைப்புகள் செயல்பட்டன.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>இந்தச் சங்கத்தில் சிங்களர்களும் இணைந்து இருந்தார்களா? அவர்களின் செயல்பாட்டு தன்மை எப்படி இருந்தது?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தமிழர்கள் மட்டுமே இருந்தனர். சிங்களர்களுக்குத் தனியாக இருந்தது. ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து செயல்படும் களங்கள் இருந்தன. 70ஆம் ஆண்டு வரையிலும் தமிழ்த் தேசியம் என்பது ஒரு பேசு பொருளாகக் கூட வர முடியாத அளவுக்கு முற்போக்கு இலக்கியத்தின் தாக்கம் இருந்தது. உதாரணத்திற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்க வரலாற்றை ‘ஏழாண்டு வரலாறு பற்றிÕ என்று</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
மு. தளையசிங்கம் ஒரு நூல் எழுதி இருந்தார். அதில் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் பிம்பம் எப்படி ஆக்கப்பட்டிருக்கு என்று எழுதும் போது, செயற்கையாக ஒரு தோற்றத்தைக் காட்ட முயற்சிக்கிறார் என்று எழுதுகிறார். இதை விட எஸ்.பொ. இன்றைக்கு கூட இப்படித்தான் சொல்ல வேண்டும் என்றால் அன்றைக்கு வளர்ந்து வரக்கூடிய படைப்பாளிகள் எல்லாருக்குமே ஒரு வழிகாட்டக் கூடியதாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இருந்தது. தளையசிங்கமோ, எஸ்.பொ.வோ. பொறமை கொள்ளக் கூடிய அளவுக்கு நிச்சயமாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் காத்திரமானதுதான்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>தொடர்ச்சியான இடதுசாரி மரபு இருப்பது போல தளயசிங்கம், எஸ்.பொ. போன்றவர்களின் தொடர்ச்சியான மரபு இன்று இருக்கிறதா?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
எஸ்.பொ. போன்றவர்கள் தனியாத்தான் இயங்கி வந்தார்கள். அமைப்பாக இல்லை. அவர்கள் ‘நற்போக்கு இலக்கியம்’ என்றுதான் இயங்கினார்கள். எஸ்.பொ. “சொல்லும் போது” இப்போதும் எனக்கு மார்க்சிய பார்வை உண்டு. முற்போக்கு இயக்கம் எதிர்பார்க்கிற மாதிரி எல்லாப் படைப்புகளிலும் மார்க்சியத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பைச் செய்ய முடியாது. இலக்கியம் தனியாக இருக்க வேண்டிய விடயம். அது நற்போக்கு இலக்கியமாக இருக்கலாம் என்றார். இதற்கு முன்பாக முற்போக்கு இலக்கியத்தில் எல்லா தரப்பினரும் உள் வாங்கப்படுகிற தன்மை இருந்தது. உதாரணமாக கனக செந்தில்நாதன், சொக்கன், போன்ற பல பேர் இயங்குகிற தன்மையும் இருந்தது. ஆனால் அந்த அரசியல் போக்கு என்பது இலங்கை தேசியம் சார்ந்து, இனவாதத்தைக் கடந்து, சாதி வாதங்களைக் கடந்து இருந்தது. இதைச் சிந்திக்க முடியாதவர்கள் விலகக் கூடிய தன்மையும் இருந்தது. இதிலிருந்து விலகியவர்கள் எஸ்.பொ.வின் பக்கம் போக நேர்ந்தது. ஆனாலும் அமைப்பு ரீதியாக செயல்பட வில்லை. அதற்கான களமும் அப்போது இல்லை. இந்தச் சூழ்நிலைக்குப் பிறகுதான் தமிழ்த்தேசியம் முக்கியமான இடத்திற்கு வரத் தொடங்கியது. மஹாகவி போன்றவர்கள் தமிழ்த் தேசியத்தோடு இயங்கி இருக்கிறார்கள். தமிழ்த் தேசியத்தை தங்களுடைய கலை இலக்கிய அரசியல் பார்வையாக வைத்துக் கொண்டு செயல்பட்டவர்கள் எவரும் கூட தங்களுக்கென்று காத்திரமான அமைப்பாக வரவில்லை.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
உதாரணத்திற்கு மஹாகவி கொழும்பில் இயங்கிய காலங்களில் முருகையன், கைலாசபதி, சிவத்தம்பி சிலையூர் செல்வராசன் போன்றவர்கள் கூடி கதைக்கக் கூடிய சூழ்நிலையும் இருந்தது. சிவத்தம்பி பிற்காலங்களில் எங்களிடம் இதைப்பற்றிச் சொல்லும் போது, அந்தக் காலத்தைப்பின்நோக்கிப் பார்க்கும் போது மோதிக் கொண்டிருந்த போக்குகள் இல்லை. நிறையப் பேசி இருக்கிறோம். மஹாகவியின் பல்வேறு படைப்புகளை முதலில் எங்களுக்குள் படித்துக் காட்டிபல விவாதங்களை செய்து, பிறகு வெளியிடப்பட்டிருக்கிறது. அது போல முருகையன், சிலையூர் செல்வராசன் ஆகியோரின் படைப்புகளை இதே மாதிரி படித்துக் காட்டி, சில சமயங்களில் மஹாகவியின் கருத்தை ஏற்று சில திருத்தங் களையும் செய்து இருக்கிறார்கள். இந்த வகையில் தமிழ்த் தேசியத்தை ஏற்றவர்கள் கூட முற்போக்கு இயக்கத்தோடு இணைந்து செயல்படாவிட்டாலும் உறவாடிக் கொண்டுதான் இருந்தனர்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>சோசலிச யதார்த்தவாதம் வேணுமா, வேண்டாமா, என்று நீண்ட நாட்களாக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இலங்கையில் சிவத்தம்பிதான் பேசிக் கொண்டு இருந்தார். நாங்கள் அரசியல் ரீதியாக 74-75 பிற்பகுதியில் இயங்க வந்த போது, கைலாசபதிதான் வழிகாட்டினார். சோசலிச யதார்த்த வாதம் பற்றி கைலசாபதி எங்கேயும் பேசவில்லை. அவர் முற்போக்கு இலக்கியம், அதன் பிரச்சனைகளைத்தான் பேசினார். முற்போக்கு இலக்கியத்தின் பரிணமிப்பு என்பது பிரதானமாக இருந்தது. முற்போக்கு இலக்கியம் தொடங்கின காலத்தில் மண்வாசனை இலக்கியத்தை முன் வைத்தார்கள். மண் வாசனை இலக்கியம் என்பது எங்களுடைய மண்ணின் அடிப்படைப் பிரச்சனைகள், அந்த பிரச்சனைகள் சார்ந்து மக்களுடைய இயங்கு ஆற்றல், உணர்வுகள் ஆகியவை படைப்புகளில் வரும் போது, அது எத்தகைய மாற்றத்திற்கு கொண்டு வரக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற விவாதங்களில் இருந்த நேரம் அது. அதே நேரம் இந்த இலக்கியத்திற்கு தேசிய இலக்கியம் என்று பெயர் கொடுத்ததில் கைலாசபதியின் பங்கு முக்கியமானது. பின்னர் கைலாசபதி, சிவத்தம்பி, ஏ.ஜே. கனகரட்னா, இளங்கீரன், சிலையூர் செல்வராசா போன்றவர்கள் இந்த விவாதத்தை முன்னெடுத்ததில் தேசிய இலக்கியம் என்ற ஒரு வடிவம் முக்கியமான பாத்திரத்தை வகித்தது. இதற்காக இறக்குமதிக்கான தடை என்ற இயக்கம் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இந்தச் சூழலில் தேசிய இலக்கியம் அடுத்த கட்டத்திற்கு சென்றது. அந்த அடுத்த கட்டம் என்பது தான் மக்கள் இலக்கியம். கைலாசபதியும் அதிகமாக வலியுறுத்தியது மக்கள் இலக்கியத்தைத்தான். சோசலிச யதார்த்தம் என்பதை விடவும் மக்கள் இலக்கியம் என்பது காத்திரமான விடயமாக இருந்தது. ஏனெனில் அதற்குள் சோசலி சத்திற்கான அபிலாசைகளும், சமூக மாற்றத்திற்கான விடயங்களும் வரும். இப்போது சிவத்தம்பி சொல்லும் போது சோசலிசம் எங்களுக்கு யதார்த்தமாக வராத ஒரு காலத்தில் சோசலிச யதார்த்தவாதத்தை பேசியிருக்கக் கூடாது என்றார். அதே நேரம் இந்தக் கருத்துகளை எதிர்ப்பவர்கள் பக்கமும் ஒரு நியாயம் இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரைக்கும் கைலாசபதி ஊடாக. நாங்கள் இயங்கத் தொடங்கி வளர்ந்த நிலையில் மக்கள் இலக்கியம் என்பது தான் காத்திரமான கோட்பாடு. இந்த முழுக் கோட்பாட்டு உருவாக்கத்தை வழங்க கூடியதற்கு முன்னர் கைலாசபதி இறந்து விட்டாலும் கூட, அவர் எழுதிய எழுத்துகளையோ, அல்லது நாங்கள் எதிர் நோக்கக் கூடிய பிரச்சனைகளையோ, முற்போக்கு இலக்கியம் எதிர் நோக்கிய பிரச்சனைகளையோ வைத்து பார்க்கும் போது, மக்கள் இலக்கியம் என்ற கோட்பாட்டை உருவாக்குவதற்கு வலுவான நியாயங்கள் இருக்கின்றன. சோசலிச யதார்த்த வாதம் என்கிற போது ஒரு வரம்புக்குள் வருகிற தன்மைவரும். ஏனெனில் இன்றைக்கும் கூட பரந்துபட்ட மக்கள் தளத்தில் நாங்கள் எப்படி இயங்க போகிறோம் என்கிற பிரதானமான சூழலில் முற்போக்கான இலக்கியம் ஒரு தலித்தில் இருக்கலாம். மரபு ரீதியாக இயங்குபவர்களைக் கூட பிற்போக்கு என்று முத்திரை குத்த வேண்டிய அவசியமில்லை. இப்போது புதிதாக வரக்கூடிய எதிர்ப்பிலக்கியம் இன்னொரு தளத்தில் இருக்கலாம் இதற்கு உதாரணமாக டேனியலைச் சொல்லலாம். இந்த மாதிரி புதிய பண்பாட்டு இயக்கத்திற்கு வருகிற போது சோசலிச யதார்த்த வாதம் என்று பேசக்கூடிய தாகவும், பட்டாளி வர்க்க உலக நோக்கு அடிப்படையில் படைப்பை எப்படி முன் வைக்க முடியும் என்பதை பார்க்க முடியும்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
டேனியல் படைப்புகளில் பாட்டாளி வர்க்க உலக நோக்கு வெளிப்படுவதை விடவும் ஒரு அமைப்பிற்கு எதிரான குரலாக பார்க்க முடியும். மரபு ரீதியான பண்பாட்டு இலக்கியம், எதிர்ப் பண்பாட்டு இலக்கியம் ஆகிய இரண்டிலும் முற்போக்குத் தன்மையும் இருக்கலாம். பிற்போக்குத் தன்மையும் இருக்கலாம். ஏனெனில் எதிர்ப் பண்பாட்டை பேசுபவர்கள் எல்லா அதிகாரத்தையும் எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, மக்கள் சார்பான பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்தையும் ஒரு அதிகாரத்துவமாகப் பார்க்கிறார்களே தவிர ஒரு சமூக மாற்றத்திற்கான அவசியமாகப் பார்க்க மறுக்கிறார்கள்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இதனால் முற்போக்கு, பிற்போக்கு என்று முத்திரை குத்துவதை விட நாங்கள் மக்கள் இலக்கியத்தை மூன்றாகப் பிரிக்கலாம். அந்தப் பிரிவால் மற்றவர் எதிரிகள் என்ற நிலைக்குப் போகாமல் இருக்கலாம். ஏனெனில் கடந்த காலத்தில் பிற்போக்கு வாதிகள் என்ற பிரச்சனையால் எங்களோடு நிறையப்பேர் சிக்கல்பட்டுப் போனார்கள். அதில் அவர் முற்போக்கான பாத்திரம் வகிக்கிற இடம் எது பிற்போக்கு வருகிற இடம் எது? என்றும் இது இரண்டிற்கும் இடையில் நடுநிலமைக்கு வருகிற சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. காரல்மார்க்ஸ், பைரனைப் பற்றிச் சொல்லும் போது நல்லவேளை பைரன் இறந்து விட்டார். இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் பிற்போக்கு வாதியாக மாறி இருப்பார் என்றார்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>நாட்டுப்புற இலக்கியம் மற்றும் பண்பாட்டு விசயங்களை இடதுசாரிகள் பயன்படுத்துவது சரியா?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
உலக ரீதியில் நாட்டார் இலக்கியங்களை ஆய்வுக்கு எடுத்தவை ஏகாதிபத்திய சக்திகள்தான். ஏனெனில் தாங்கள் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட நாடுகளில், தங்களுடைய ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு அந்த நாட்டு மக்களின் வழக்காறுகள் என்ன என்று அறிவது அவசியம். அந்த வகையில்தான் நாட்டார் வழக்காற்றைப் பிரதான ஆய்வுப் பொருளாக எடுத்தார்கள். அங்கேயிருந்து வந்த பல ஆய்வாளர்களும் இப்படித்தான். அதே நேரத்தில் எலலா ஆய்வாளர்களும் ஏகாதிபத்திய சார்போடுதான் இயங்கினார்கள் என்று இல்லாவிட்டாலும் கூட, அவர்களுடைய ஆய்வுக்குப் பின் புலங்களை ஏற்படுத்திக் கொடுப்பது, பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்று பல விஷயங்களை ஏகாதிபத்திய சக்திகள் தான் செய்து இருக்கிறார்கள். ஆய்வாளர்களும் தங்களைஅறியாமல் அதற்கு உதவுக் கூடிய வகையில் ஆய்வுகளுக்கான தன்மையோடுதான் செயல்பட்டார்கள். மேலும் ஆய்வாளர்கள் விசுவாசுத்தோடு ஆய்வுக்குரிய தன்மையோடு வெளிப்படுத்தினாலும் கூட ஏகாதிபத்திய சக்திகள் எப்படிப் பயன்படுத்த முடியும் என்று விளங்கிக் கொண்டுதான் பயன் படுத்தப்பட்டிருக்கிறது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல், சமூகவியல், தலித்தியம் போன்றவை இந்தத் தேவையின் அடிப்படையில் உருவாகியிருந்தாலும் கூட அந்த அந்த சமூகங்களை விளங்கி எப்படி அதன் மீது அதிகாரங்களை செலுத்தலாம் என்கிற விஷயங்கள்தான். இன்றைக்கு வரைக்கும் எங்களுடைய நாட்டில் எல்லாமே ஏகாதிபத்தியவாதிகள் போட்ட அந்தப் பாதையில் தவிர்க்க முடியாது செல்ல வேண்டிய ஒரு நிர்பந்தத்துக்குள் தான் இருக்கிறது. ஆனால் இதில் இருக்கக்கூடிய அறிவுப் புலத்தை அதாவது இதன் மூலம் நிகழும் கற்றலை நாங்கள் நிராகரிக்க வேண்டியதில்லை. நா. வானமாமலை நாட்டார் விஷயங்களை எடுத்து பட்டாளி வர்க்க உலக நோக்கில் கையாண்டிருக்கிறார். கைலாசபதியும் இது போன்று செயல்பட்டுள்ளார்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>இது போன்று இலங்கையிலும் செயல்பாடுகள் இருந்ததா?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இலங்கையில் கைலாசபதி இந்த விடயங்களை கட்டுரையாக எழுதி இருந்தாலும் பேரா. வித்தியானந்தன் நாட்டார் வழக்காற்றியலில் காத்திரமான பங்கு வசித்தார். இவரை நாம் பிற்போக்கு வாதியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவர் தமிழ் தேசியவாதியாக இருந்தார், இதில் உள்ள சிக்கல் என்பது தமிழ் தேசியவாதியாக அவர் இருக்கும் போது அவருடைய மாணவராக இருந்து வளர்ந்து முற்போக்கு வாத இயக்கத்துக்கு வந்த கைலாசபதி அரசியல் ரீதியாக பேரா. வித்தியானந்தனோடு முரண்பட்டார். உதாரணமாக உலகத் தமிழராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில்தான் வைக்க வேண்டும் என்பதில் மிகக் கண்டிப்பாக இருந்தார். இது முழுக்க முழுக்க தமிழர் கூட்டணியின் அரசியல் தேவையைப் பூர்த்தி செய்கிற விடயமாகப் போய், இன்றைக்கு வரைக்குமான மோசமான கெடுதிகளைச் செய்வதற்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இதை நான் இலங்கையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் சொன்னேன். அந்த நேர்காணல் அவரின் நினைவு நாளான மே 8ம் தேதி சார்ந்து பேரா. வித்தியானந்தனின் முற்போக்கான பங்களிப்புகள் பற்றி அமைந்திருந்தது. அதில் முற்போக்கான பல விஷயங்களை சொல்லி விட்டு விமர்சகனாக இதைச் சொன்னேன். அப்போது பார்வையாளர்கள் எப்படி இதை எடுத்துக் கொள்வார்கள் என்று நினைத்து இருந்ததேன். அப்போது வவுனியா சென்ற போது ஆயுதங்கள் என்ற படைப் பாளியைச் சந்தித்தேன். இவர் பேரா. வித்தியானந்துக்கு விசுவாசி. அதோட தமிழ்த் தேசியத்தில் அக்கறை உடையவர். அவர் நீங்கள் பேரா. வித்தியானந்தன் பற்றிச் சொனன விடயங்கள் சரிதான் என்றார்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
தமிழ்த் தேசியம் சார்ந்து அவருடைய பார்வையிலும் செயல்பாடுகளிலும் தவறுகள் இருக்கின்றன. ஆனாலும் அவரை ஏன் எங்களால் பிற்போக்கு வாதியாகச் சொல்லமுடியாது என்றால் நாட்டார் வழக்காற்றியலை எடுத்ததுதான். நாட்டார் வழக்காற்றியலை அவர் கையிலெடுத்தது ஒரு பிற்போக்கான நிலைப்பாடு அல்ல. ஆதிக்க சக்திகளுக்கு, தமிழ்த் தேசிய வெறியர்களுக்கு உதவுகிற நிலைப்பாடு அல்ல. முழுக்க மலையகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் நாட்டார் வழக்காற்றியல் மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாண அடிநிலை மக்களின் நாட்டார் வழக்காற்றியல் போன்ற சக்திகளின் கூட்டு மரபுகள், நாட்டார் பாடல்கள், நாட்டார்களின் பல வகையான பண்பாடுகள் போன்றவற்றை வெளிக் கொணர்வதாக இருந்தது. மிக முக்கியமாக, கூத்து மரபு என்பது யாழ்ப்பாணத்தின் அடிமட்ட மக்களிடம்தான் இருந்தது. அந்த பகுதியில் வைரமுத்து என்று ஒருவர் இருந்தார். அவர் வியந்து சொல்லுகிற அளவுக்கு ஆளுமை உடையர். அந்த ஆளுமையுடன் அவர் வெளிவர முடிந்ததற்கு காரணம் பேரா. வித்தியானந்தன் போரா. வித்தியானந்தம் இல்லை என்றால் கண்டிப்பாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பார். அவர் கோயில்களில் அரிசந்திர மயானகாண்டம் கூத்தை நடத்துவார். அந்த கூத்தில் ராஜாவுக்கு சிம்மாசனம் என்பது உரலாக இருக்கும். ஏனெனில் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இதனால் சாதிய இழிவுகளை சாதிய இருட்டடிப்புகளுக்கு எதிராக பேரா. வித்தியானந்தன் செயல்பட்டார். இது முற்போக்கு இயக்கத்தவர்கள்தான். உதாரணமாக</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
பேரா. மௌனகுருவைச் சொல்லலாம். இவரும் பேரா. வித்தியானந்தனின் மாணவர்தான். ஆனால் இவர் சிவத்தம்பியால் நெறிப்படுத்தப்பட்டவர். மட்டக்களப்பில் அழிந்து கொண்டிருக்கும் கலை மரபுகளை பாதுகாப்பதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. அவரோடு சேர்ந்து பல பேராளர்களும் இயங்கி இருக்கிறார்கள்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>தமிழில் உள்ள பக்தி மரபுகளை மார்க்சியர்கள் எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
பக்தி இலக்கியத்தைப் பற்றி நான் முதன் முதலில் வாசித்தது கைலாசபதி எழுதிய அடியும் முடியும், பண்டைய தமிழர் வாழ்வும் வழிபாடும்தான். தொடர்ந்து நான் இயங்கிக் கொண்டு இருக்கும் போதுதான் ஒரு விடயம் விளங்குகிறது. அதாவது எங்களுக்கான சமூக மாற்ற செயற்பாடு என்பது பண்பாட்டுப் புரட்சி ஊடாகத்தான் இதுவரை நடந்திருக்கிறது. இன்றைக்கு வரைக்கும் இலங்கையர்களிடமும் இந்தியர்களிடமும் இனக்குழு பண்பு இருப்பதால் சமூக மாற்றங்களே நடக்கவில்லை என்ற பார்வை கூட காரல் மார்க்சிடம் இருந்தது. கா. மார்க்ஸ் இங்கே வந்து நேரடியாக பார்க்க வில்லை. அதனால் அவருக்கு கிடைத்தது எல்லாம் ஆங்கிலேயர்களின் பார்வையில் எழுதப்பட்டது. வடிவமும் எங்கள் முன் இருக்கிறது. எங்களுக்குள் இனக் குழுமரபும் முழுவதாக உடைக்கப்படாமல், முன்னேறிய இனக்குழு மேலாதிக்கம் செலுத்துவதன் மூலமாக ஏனைய இனக்குழுக்களை சாதிகளாக மாற்றிக் கொண்டு ஏற்றத்தாழ்வான, சுரண்டல் முறை ஏற்படுத்திக் கொண்ட காரணத்தினாலே பாரம்பரியமாக பண்பாட்டில் இருக்கக்கூடிய வீரியம் எங்களுக்குள் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. வெறும் அரசியல் மாற்றத்தை செய்து கொண்டு, பிறகு இதை செய்யலாம் என்றால் மக்கள் இணங்கி வர முடியாதவர்களாக இருப்பார்கள்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
பக்தி இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் காவிரி நதிக்கரை சார்ந்த விவசாயப் பகுதிகளில் உள்ள கோயில்கள்தான் பாடு பொருளாகி இருக்கின்றன. இந்த திருத்தலங்களில் நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் தேவாரம் இசைத்துக் கொண்டு செல்வதும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீலகண்டர் யாழ் மீட்டிப் பாடுவதும், இதன் மூலமாக மக்கள் ஈர்க்கப்படுவதும் நிகழ்ந்திருக்கிறது. இந்த மாதிரியாகத்தான் பக்தி இயக்கம் வெற்றி பெற்றது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
வணிக வர்க்க அதிகாரத்தோடு அரசு இருந்த போது வணிக வர்க்கத்துக்குரிய சந்தைகளை பாதுகாப்பாக ஏற்படுத்திக் கொடுப்பது என்று அரசு இருந்த நிலையில் விவசாயத்திற்கான வாழ்கைமுறைக்குரிய ஏர், கலப்பை மண்வெட்டி போன்ற உற்பத்தி சாதனங்களை அதிக அளவு உற்பத்தி செய்கிற அரசியலுக்கு மாற்ற வேண்டி தேவை ஒன்று பக்தி இயக்கத்தால் வருகிறது. வணிக வர்க்கம் அதிகாரத்தில் இருந்த காலத்தில் பஞ்சம் பசி, நோய்கள், பெருகி இருந்தன. மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் இதைப் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் வரும் பக்திப் பேரியக்கம் விவசாயிகளைக் கவருவதாக இருக்கிறது. அதனால் விவசாயிகளின் இயக்கமாக மாறுகிறது. அரசர்கள் சைவத்திற்கும், வைணவத்திற்கும் மாறுவது என்பது விவசாய அரசியலுக்கு மாறுவதாகத்தான் அர்த்தம். சமணத்திற்கும், பௌத்தத்திற்கும் விவசாயத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. சமண பௌத்த துறவிகள் விவசாயம் செய்யக் கூடாது. ஏனெனில் விவசாயம் செய்யப் போனால் நிலத்திலிருக்கும் பூச்சிகள் எல்லாம் அழிக்கப்படும்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
கிரேக்கம், ரோமில் ஏற்பட்ட வீரியமான வர்க்கப் போராட்டம், அதனுடைய அரசியல் கிளர்ச்சி, புரட்சி என்ற வடிவம் சார்ந்து பக்தி பேரியக்கத்தில் நடக்கவில்லை என்று நாங்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தோமே தவிர, கைலசாபதி ஆய்வின் ஊடாக வெளிப்பட்ட இந்த விஷயம் மிகப் பிரதானமானது. இப்படி ஒரு பண்பாட்டு இயக்கத்திற்குள் இருந்த சைவமும் வைணவமும் அடிப்படையில் விவசாயிகள் தான். உதாரணமாக சமண, பௌத்த தத்துவத்தில் கன்மம் அதாவது விதிதான் எல்லாவற்றையும் விட பெரியது. விதியை வெல்ல முடியாது என்பதுதான். இவர்கள் கன்மத்திற்கு கொடுத்த அதீத அழுத்தம் என்பது வணிக வர்க்கத்தின் தத்துவம்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
சைவத்திலும், வைணவத்திலும் 'விதி' என்ற கருத்துருவாக்கம் வந்து விட்டாலும் விதியை வெல்லலாம் என்ற கருத்தும் இருந்தது. கடவுளை சரணடைந்தால் விதியை வெல்ல முடியும். விவசாயத்தில் விதியை ஒரு கட்டத்துக்கு மேல் நம்ப வேண்டியதில்லை. விவசாயத்தில் இந்த போகம் சரியில்லை என்றால் அடுத்த போகத்திற்காவது நன்கு விளைந்தால் போதும் அதற்கு கடவுளை வணங்கினால் சரியாக இருக்கும் என்று அந்த விவசாயி நினைப்பதுண்டு.விவசாயியைப் பொறுத்த வரைக்கும் எல்லா காலமும் ஒரே மாதிரி இருக்கப் போவதில்லை. வணிகனைப் பொறுத்தவரைக்கும் மூலதனம் முடங்கினால் முடங்கினதுதான். விவசாயத்தைப் பொறுத்தவரைக்கும் அவனுடைய நிலம் இருக்கப் போகிறது. உழைப்பு இருக்கப் போகிறது. ஒரு கட்டம் இல்லை என்றால் இன்னொரு கட்டத்தில் மீள முடியும். ஆகவே விதியை முழுவதுமாக நம்புவதை விட, நிலத்தை தந்தது கடவுள், விவசாய முறைகளை தந்தது கடவுள் என்று எல்லாமே கடவுள் என்று ஒரு தத்துவமுறையைத் தந்ததுதான் சைவமும் வைணவமும். இதைத்தான் கைலாசபதி கோசாம்பி, போன்றவர்களும் வெளிப்படுத்தி இருந்தார்கள். இதைத் தொடர்ந்து என்னுடைய ஆய்வுகளும் எங்களுடைய சமூகப் புரட்சிகளும் பண்பாட்டு புரட்சியாகத்தான் இருந்துள்ளது என்று என்னை வலியுறுத்தும் நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கிறது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் பாரதியின் செயல் பாட்டில் இந்தப் பண்பாட்டு இயக்கம் இருக்கும். காந்தி அரசியல் அரங்கிற்கு வருவதற்கு முன்னரே அஹிம்சை சார்ந்த விஷயங்களை ஆன்மீகம் அரசியலோடு இணைவது பற்றியெல்லாம் பாரதி ஏற்கெனவே பேசியிருக்கிறார். காந்தி அரசியல் மயப்படுத்தி செயல்படுத்திய உடனே பாரதி அதை பெரும் வியப்புக்குரிய விஷயமாக பார்த்தார். அதனால்தான் வாழ்க நீ எம்மான் என்று பாரதி பாடினார். அந்த வியப்புக்குக் காரணம் அவர் விரும்பி எதிர்பார்த்த அரசியலை காந்தி ஆன்மீகத்தை இணைத்ததுதான். ஆன்மீகத்துடன் என்றால் கடவுளை முன் நிறுத்துகிற ஆன்மீகவாதம் அல்ல. காந்தியிடம் சிறிது ஆன்மீக வாதம் இருந்தது. பாரதியிடம் இருந்த ஆன்மீகம் நாத்திகம். இந்திய அளவில் வெகுசனங்களை திரட்டுவதில் காந்திக்கு இருந்த வாய்ப்பு என்பது பண்பாட்டுப் புரட்சி சார்ந்து அரசியலைச் செயற்படுத்தியது தொடர்பானது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இந்த வகையில் பக்திப் பேரியக்கத்தை வெறும் மத நிகழ்வாக மட்டும் பார்க்க முடியாது. பக்திப் பேரியக்கத்துக்கு பிறகு நிலவுடமை அதிகாரம் வருகிறது. இதனால் ஒரு சாதி இறுக்கத்தை தமிழ்ச் சூழலில் கொண்டு வந்தது. இந்த வரலாற்றுச் செல்நெறியில் ஒரு கட்டத்தில் புரட்சிகரமான பாத்திரத்தைத் தருவதாக இருந்து பின்னர் அதுவே அதிகார வர்க்கமாக மாறின பிறகு, அது ஒடுக்குகிற தன்மைக்கு வந்திருக்கிறது. இதிலே உள்ள இரண்டு தன்மைகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்வது அவசியம். இதில் இருந்த புரட்சிகரமான பங்கு என்ன? அது பின்னர் அதிகாரச் செயற்படாக மாறின பிறகு ஏற்பட்ட போக்குகள் என்ன? என்பதைப் பார்ப்பது ஆய்வாளர்களுக்கு முக்கியமான விஷயமாக இருக்கும். நாங்கள் இப்போது இயங்குகிற எங்கள் செயல்பாட்டிற்குக் கூட, இதிலிருக்கிற படிப்பினைகளை எடுத்துக்கொண்டு, இப்போது இருக்கிற பண்பாட்டு இயக்கத்தைப் பார்ப்பதற்கு உதவியாக இருக்கும்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>சைவம், வைணவம் என்ற இரண்டில் நெகிழ்வு தன்மையான போக்குகள் எதில் இருப்பதாக நினைக்கிறீர்கள்?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
எந்த ஒரு விடயத்திலும் முன் முடிவுகளை எடுக்க முடியாது. 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் சைவம் தான் பெரும் நிலப்பிரபுத்துவ வர்க்கத் தத்துவமாக இருந்தது. சைவ சித்தாந்தம் ஒரு தத்துவமாக முன் வைத்த தத்துவ வாதிகள் மிகுந்த நெகிழ்வு தன்மையுடன் பேசினார்கள் பேசியாக வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. ஏனெனில் ஒரு புதிய தத்துவம் சொல்லப்படுகிற போது நெகிழ்வுத் தன்மையோடுதான் பேசியாக வேண்டும். பிறகு அதிகார வர்க்க மதமாக வந்த பிறகு சைவம் நெகிழ்வுத் தன்மை இல்லாமல் ஒரு இறுக்கமான, ஏனைய சத்திகளை ஒடுக்குகிற கருவியாகவும் மாறியது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இந்தச் சூழலில் தான் வைணவம் நெகிழ்வுத் தன்மை உடையதாக இருந்தது. பெரும்பாலும் வைணவம் சிறு நில உடமையாளர்களின் தத்துவமாக இருந்தது. அதனாலே சாதிய இறுக்கங்கள் இல்லாமல் எல்லாரையும் அரவணைத்துப் போகிற போக்குகள் இருந்தன.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>திராவிட இயக்க நாத்திகத்திற்கும், மார்க்சியம் சொல்லுகிற நாத்திகத்திறகும் என்ன வேறுபாடுகள் உள்ளன?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
திராவிட இயக்கத்தின் நாத்திகம் என்பது நாத்திக வாதம். பெரியார் சொன்னது என்பது கடவுள் இல்லை என்று விளங்கிக் கொண்டால்தான் பிரச்சனையும் முழுமையாக தீரும் என்பதுதான். ஏனெனில் கடவுளைச் சொல்லிக் கொண்டுதான் இவ்வளவு ஏமாற்றுகளும் நடைபெறுகிறது. கடவுள் இல்லை என்பது நமது பிரதான வேலையாக இருக்கும் போது நாத்திக வாதம் என்பது பிரதான இடத்தை எடுத்துக் கொள்கிறது. மார்க்சியர்கள் நாத்திகர்கள். ஏனெனில் எங்களுக்கு கடவுள் இல்லை என்று தெரியும். ஆனால் கடவுள் இல்லை என்பதை மக்களிடம் பிரதானமாக ஒரு விடயமாக எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்பது இயக்கச் செயல்பாடு இல்லை. மார்க்சியம் எங்களுக்குக் கற்றுத்தருவது என்பது இந்தச் சமூக அமைப்பில் மக்களுக்கு ஒரு ஆறுதல் கொடுக்கிற விஷயமாக மதம் இருக்கிறது. அதே நேரம் இதை மக்கள் செயல்பாடுகள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுவதின் மூலம் சமத்துவ பொருளாதாரம் ஏற்பட்டு, அதன் வாயிலாகத் தம்முடைய பிரச்சனைகள் தீரும் என்று அறியும் இடமில்லை. இதனால் கடளிடமிருந்து தானாக மக்களே விலகி விடுவார்கள்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
மிக மோசமாக மதம் மக்களை ஏமாற்றுகிற இடத்தில்தான் இருக்கிறது. உதாரணமாக சமீபத்தில் ஒரு சாமியார் அம்பலப்பட்ட விடயம். மக்கள் அதீதமாக நம்புகிற இடத்தில் கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்லப்போனால் இன்னும் அதிகமாக மக்கள் கடவுள் பக்கம் போவார்கள். திராவிட இயக்கம் தொடர்ந்து நாத்திக வாதம்பேசிய பிறகு இன்றைக்கு நிலைமை என்பது முதலில் இருந்ததை விட மோசமாக இருக்கிறது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
நாத்திகவாதம் என்பது நடைமுறையில் தோல்வி அடைந்துவிட்டது. மார்க்சியர்களின் நாத்திகம் என்பது விஞ்ஞான பூர்வமானது. ஆரம்பத்தில் நான் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டு இயங்கும் போது ஓரளவுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தது. அப்போது கடவுளை மறுத்த தோழர்களிடம் விவாதங்களில் ஈடுபட்டுள்ளேன். காலப்போக்கில் என் வாசிப்புகளிலும் செயல்பாடுகளிலும் கடவுள் இல்லை என்பதை உணர முடிந்தது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>ஆரியர், திராவிடர் பிரிவு சாதியத்தை அதிகமாக உருவாக்கியிருக்கிறது என்று ஆர். எஸ் சர்மா, கோசாம்பி, ரொமிலாதாப்பர் எழுத்துகளில் காணப்படுகிறது. இதில் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
ஆரியர் என்பது வேறு இனம்; இங்கிருந்த திராவிடர்கள் என்பது தனி இனம் என்று பார்ப்பதில் ஏற்படும் தவறுகளைச் சொல்வதற்காக ஆரியர் என்பதை ஒரேமாதிரியாகச் சொல்லாமல் வெவ்வெறு காலங்களில் சில ஆரிய குழுக்கள் வந்திருக்கின்றன. ஆகவே ஆரியர்களை ஒரு இனமாக பார்க்க முடியாது என்கிறார்கள். டி.டி கோசம்பி, ஆர். எஸ் சர்மா மேலும் இவர்கள் சொல்லுகிற போது ஆரியர்கள் பல்வேறு குழுக்களாக வந்த போது இருந்த இனக்குழு தன்மைக்கும் இங்கே முன்னர் இருந்த சிந்துவெளி பண்பாடு சார்ந்த இனக்குழுத் தன்மைக்கும் உள்ள முரண்பாடுகள் தவிர்க்க முடியாமல் இருந்திருக்கலாம். இதனால் குறிப்பிட்ட காலம் வரைக்கும் போராட்டம் சார்ந்து வெளியிலிருந்து வந்தவர்கள் எல்லாருமே வெள்ளையாக இல்லாவிட்டலும் சுமாரான வெள்ளைநிறமும், பொன்நிற முடியும் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள். இங்குள்ள கருப்பு நிறத்தவர்களுடன் இவர்கள் கலப்பு அடையக்கூடாது என்கிற தன்மை தூய்மை மற்றும் தீட்டு என்று இனக்குழு வாழ்க்கை முறையில் வருகிறது. என்று இந்த வர்ண கருத்தால் இங்கே இருந்தவர்களை தாசர்கள் என்று பார்த்தார்கள். தாசர் என்பது அடிமை என்ற அர்த்தத்தில் ஆரம்பத்தில் சொல்லப்படவில்லை. ஆரியர் என்பது கூட உயர்ந்தது என்ற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. ஆரியர் என்பது வெளியிலிருந்து வந்தது என்ற அர்த்ததோடுதான் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. பிராமணர்கள் என்பது கூட இங்கே இருந்த சுதேசிகளும் அந்த பிராமணர் களும் இணைந்த சமூகம்தான்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
ஆரம்பத்தில் வந்த ஆரிய குழுக்களிடம் உருவ வழிபாடுகள் கிடையாது. அவர்கள் நாடோடி சமூகமாக இருந்ததால் இயற்கையின் எல்லா அம்சங்களையும் வழிபடுகிற தன்மையாக இருந்ததே தவிர, உருவ வழிபாடு இல்லை. இங்கே இருந்த சுதேசிகளிடம் உருவ வழிபாட்டுத் தன்மை இருந்தது. இவர்களிடம் தான் ஆகம முறைகள் இருந்தன. சிந்துசமவெளிப் பண்பாட்டில் கோவில்களுக்கான கட்டிட அமைப்புகளும் பூசை முறைகளும் பலி பீடங்களும் இருந்ததாக கோசாம்பி கூறியுள்ளார். இந்த வழிபாடு ஆகமம் சார்ந்ததாக இருக்கிறது. இந்த வகையை உள் வாங்க வேண்டிய தன்மைக்கு வெளியிலிருந்து வந்த இனக்குழுக்கள் வருகிறார்கள். இந்த இரண்டு குழுக்களிடையே ஆரம்ப காலத்தில் மோதல் இருந்தது என்பதை வைத்துதான் சூத்திரர்களும், அரக்கர்களும் இந்த மண்ணுக்கு உரியவர்களாகவும், வெளியில் இருந்து வந்தவர்கள் தேவர்கள் என்கிற ஆய்வுகளை எங்கள் முன்னோடிகள் வைத்தார்கள். அதற்காக இங்கே இருந்தவர்கள் எல்லாருமே சூத்திரராகப்பட்டார்கள்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
அன்றைக்கு முன்னேறிய இனக்குழுக்கள், ஏனைய இனக்குழுக்கள் ஆகியவைகளை வென்று அடக்கி சாதிகளாக்குவது, அதற்கு ஆரியர்கள் வைத்திருந்த வர்ணங்களை சூட்டுவது நிகழ்ந்திருக்கிறது. (அப்போது இங்கு பிளவுகள் இல்லை. ஏற்றத் தாழ்வான சமூக முறைகள் இல்லை.) அவர்களுக்குள் இருந்த சமத்துவ நிலைகளில் இருந்து கொண்டு வர்ண வேறுபாடுகளைப் பேசினார்கள். பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் என்கிற அளவில் தொழில் ரீதியாக வேறுபாட்டிற்குள் வைத்துக் கொண்டார்கள்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
உண்மையில் யதார்த்தம் என்பது ஆயிரக்கணக்கான இனக்குழுக்கள் சாதிகளாக மாறியிருக்கக் கூடிய சூழலில் சாதியம் என்பது வாழ்முறையாக இருக்கிறது. வர்ணமாக இல்லை. வர்ணம் என்பது இந்த வாழ்வுமுறையை விளக்குவதற்கு ஒரு கருத்தியலாக ஒரு வகையில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் சாதியம்தான் யதார்த்தமாக இருக்கிறது. சாதி என்ற சொல் சமஸ்கிருதத்தில் இல்லை. இந்து மரபுச் சொல்லும் இல்லை. இது பாலி மொழிச் சொல். பௌத்த மதம்தான் சாதிபற்றி அலசுகிறது. புத்தரைப் பொறுத்த வரைக்கும் வர்ண கருத்தியலை ஏற்றுக் கொள்கிறார். சாதியின் நடைமுறை இறுக்கத்தை விளங்கிக் கொள்கிறார். பௌத்த மதத்திற்கு வந்த அசோகர், தம்முடைய கல்வெட்டு ஒன்றில் பொது வாழ்க்கையில் சாதி பார்க்கக் கூடாது என்று பொறித்து இருக்கிறார். சாதியைக் கடந்துதான் பௌத்த சங்கத்தை புத்தர் உருவாக்குகிறார்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
அதே நேரத்தில் யதார்த்தத்தில் சாதிகள் இருக்கின்றன என்பதும் வர்ண கருத்தியல் சார்ந்து பிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்பதும் பொய் என்று இந்த வகையில் வர்ண கருத்தியல், சாதி ஆகியவைகள் பற்றிய ஆய்வுகள் அண்மைக் காலத்தில் வளர்ந்து வரக்கூடிய ஒரு விஷயம். இனக்குழுக்கள் சாதியாக மாறியது என்றாலும் ஒவ்வொரு இனக்குழுவும், வர்க்கப்பிளவு வந்து அது இரண்டாக உடைந்து வேறு வேறு சாதிகளாக மாறுவதற்கு வாய்ப்பிருந்திருக்கிறது. இதில் பிரதான விஷயம் என்பது இனக்குழு வாழ்முறை நீடிக்கக் கூடிய வகையில் ஒரே இனக்குழுவே சாதியாக இன்றைக்கு வரைக்கும் நீடிக்கிற தன்மையும் இருக்கிறது என்பதுதான்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையட்டி வந்த பல ஆய்வுகள் வழியாகத்தான் பல விசயங்கள் வெளிவருகின்றன. ஐரோப்பிய சமூகத்தில் முதலாளித்துவ அமைப்பு உருவாவதற்கு ஏற்பட்ட மாற்றங்கள், முதாலாளித்துவத்தில் மூலதனம் எப்படி வந்தது என்று மார்க்ஸ் ஆய்வு செய்கிறபோது மூலதனத்தின் முதல் பாகத்தில் ஆசிய ஆய்வு பாணி உற்பத்தி முறையைக் பற்றிக் கூறுகிறார். முன்னேறிய இனக்குழுக்கள், ஏனைய இனக்குழுக்களை ஒடுக்கி, சுரண்டுவது ஆசிய முறையாக இருக்கிறது என்று மார்க்ஸ் சொன்னது இங்கு கவனிக்கப்படவில்லை.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
அங்குள்ள மூலதனம் எப்படி வந்தது என்பதில் இந்த சமூகம் ஏன் இப்படி இருக்கிறது- இந்த சமூகத்தில் ஆங்கிலேயர்களுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன- இந்த சமூகத்தை ஒடுக்கி பெறப்பட்ட மூலதனம்தான் மூலதனத் திரட்சியாக வருகிறது. (இதற்கு உதாரணமாக அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியப் பகுதிகளில் எடுக்கப்பட்ட மூலதனம் அவர்களின் மூலதனத் திரட்சியாக வருகிறது.)</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>பெரியாருடைய கருத்தியலில் நிலஉடமை எதிர்ப்புத் தன்மை இருந்தாலும் அந்தக் கருத்து பெருநில உடமையாளர்களை நோக்கியது அல்ல. அதுவும் நகர்ப்புற சொல்லாடல்களாகவே இருக்கிறது என்று ஒரு ஆய்வு உள்ளதே-?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
பெரியார் பிரதானமாக பண்பாட்டுத் தளம் சார்ந்த இயக்கத்தைத்தான் நடத்தியிருக்கிறார். சாதிய தகர்ப்பு என்பது நிலவுடமைக்கு எதிரானது. நிலஉடமை தகர்ப்பு பற்றியோ, நிலச்சீர்திருத்தம் பற்றியோ எதுவும் பேசவில்லை. ஆனால் அம்பேத்கர் பேசியிருக்கிறார். அதே நேரம் அதை இயக்கமாகக் கொண்டு செல்லாதது தவறு என்று கடைசிக் காலங்களில் விளங்கிக் கொள்கிறார்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
சாதிய தகர்ப்பு என்ற பண்பாட்டுத் தளத்தில் இயங்கியதில் ஏற்பட்ட தவறு என்ன என்று அம்பேத்கர் விளங்கியிருக்கிறார். அந்த அளவில் கூட பெரியார் நிலச்சீர்திருத்தம் சம்பந்தமாகவோ, அந்த நிலஉடமை சம்பந்தமான பொருளாதாரத் தளம் சார்ந்த செயல்பாடுகளுக்கு அவர் போகவே இல்லை. அவருடைய பிரதான பாத்திரமும், மதிக்கப்பட வேண்டியது பண்பாட்டுத் தளத்தில்தான்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>திராவிட இயக்கத்தை ஒரு வகுப்புவாத இயக்கமாக மார்க்சிய இயக்கங்கள் ஆரம்பத்தில் பார்த்ததாக கூறியுள்ளீர்கள்?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<img alt="raveendran_340" height="340" src="http://keetru.com/images/stories/people/raveendran_340.jpg" style="border-bottom-style: none; border-color: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; float: left;" width="326" />எங்களுக்கான பிரதான பின்னடைவே இதுதான். ஆரம்பத்தில் நாங்கள் சமூக அக்கறை சார்ந்து இயங்கின காலத்திலே 70ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தேசியம் என்பது முனைப்பாகத் தொடங்கியது. தமிழ்த் தேசிய உணர்வோடு அரசியலைத் தேடிப் போகும் போது தமிழர் தேசிய கூட்டணி சந்தர்ப்பவாதமாகத்தான் இருந்தது. உண்மையாக தமிழர்களின் விடுதலை தரக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை என்பது அப்போதே எங்களுக்குத் தெரிந்தது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இதனால் அதிலிருந்து விலகினோம். அப்போது மார்க்சியம் தான் சரியாக இருக்கும் என நினைத்தோம். அப்போது லெனினின் சுயநிர்ணய உரிமை பற்றிப் படித்துக் கொண்டே கட்சியில் விவாதிக்கத் தொடங்குகிறோம். கட்சியில் எங்களுக்கு முன்னர் இருந்த தோழர்கள் இதை வகுப்புவாதமாகப் பார்க்கக் கூடிய போக்கு இருந்தது. அப்போது தமிழர் இனத்தை ஒரு தேசிய இனம் இல்லை என்று கட்சி விவாதித்துக் கொண்டிருந்தது. தேசிய இனம் என்று அங்கீகரித்தால் சுயநிர்ணய உரிமை என்று சொல்ல வேண்டி வரும். சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்ல வேண்டி வரும். அதனால் சுய நிர்ணய உரிமையை மறுத்தால் தேசிய இனம் என்பதையும் மறுக்க வேண்டும். தேசிய இனம் என்பதை மறுத்தால் தமிழினத்தைப் பற்றி அதிகமாக அக்கறை காட்டுபவர்கள் வகுப்பு வாதி, இனவாதி என்று சொல்லுகிற நிலைக்குப் போகும். அதே நிலைமை தமிழ்நாட்டிலும் இருந்தது. ஆனால் வெளிப்படையாகத் தேவைப்பட்டிருக்காது. ஏனெனில் அந்த மாதிரி ஒரு சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான வீறு கொண்ட அரசியல் எழுச்சி இங்கு வரவில்லை. இங்கு அதற்கு முன்னரே திராவிட இயக்க எழுச்சி வருகிறது. எல்லையை உடைத்து, செயல்பட்ட பண்பாடு இயக்கம்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இவர்கள் இப்படி எடுத்த தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செயல்படத் தொடங்கினோம். அவர்கள் சிலப்பதிகாரம், திருக்குறளை முன்னெடுத்தவுடன் நாங்கள் கம்பராமாயணத்தை எடுத்தோம். சிலப்பதிகார ஆய்வின் மூலமாக ம.பொ.சி இந்திய தேசியத்தின் ஊடாக தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்தார். தேசிய இலக்கியமாக சிலப்பதிகாரம் வருகிறது. இதற்கு எதிராக ஆய்வு என்பது திராவிட இயக்கங்களின் தவறுகளை வெளிப்படுத்துவதாக இருக்கும். கம்பராமாயணத்தை ஆரியர் படைப்பு என்று உடனே அவர்கள் நிராகரித்தனர். தமிழ் இன வாதத்திற்கு எதிரான நிலைப்பாடு என்று நாங்கள் எடுத்ததுதான் பின்னடைவுக்குக் காரணம்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
கேரளாவில் நாராயண குரு முன்னெடுத்த பண்பாட்டு இயக்கத்தை அங்கே கம்யூனிஸ்ட் கட்சி கையில் எடுத்தது. மேற்கு வங்காளத்தில் விவேகானந்தர், தாகூர் சரத்சந்திரர் எடுத்த பண்பாட்டைக் கையில் எடுத்தது. இங்கே செய்யத் தவறியதற்கு பிரதான காரணம் திராவிட இயக்கம் ஒரு இனவாதம் என்பதுதான். அதே நேரம் இனவாதம் இல்லை என்றும் சொல்ல முடியாது. ஆனால் இனவாதம் இல்லாத ஒரு தமிழ்த் தேசிய இயக்கமாக நாங்கள் எப்படிப் பார்க்கப் போகிறாம்?</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இப்போது திராவிடர் இயக்கத்தின் தமிழ்த் தேசியமாக இல்லாமல் காங்கிரசின் தமிழ்த் தேசிய இயக்கமாக <span style="font-size: x-small;">ம.பொ.சி யால் சிந்திக்க முடிந்தது. அப்படி திராவிட இயக்க தமிழ்த் தேசியமாக இல்லாமல் கம்யூனிஸ்ட்களின் தமிழ்த் தேசியமாகப் பார்க்கத் தெரியாமல் போனது. அதே நேரத்தில் மலையாளியின் உணர்வை நாம் எப்படிப் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வு நம்பூதிரிபாத்திடம் இருந்தது. தமிழ்த் தேசியத்தைத் திராவிட இயக்கங்கள் மோசமான இடத்தில் கொண்டு போன நிலையில் அதனுடைய சரியான தளத்தில் எடுப்பதற்கான வாய்ப்புகளைத் தவற விட்டு விட்டோம். இதுதான் பின்னடைவுக்குப் பிரதான காரணம். இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைந்ததற்கு கம்யூனிஸ்ட்களின் முக்கிய பங்களிப்பு இருக்கிறது. இலங்கையில் பிரிவினைக்கு எதிராகப் பார்ப்பது என்பது பாகிஸ்தான் பிரிந்ததால் வந்த கேடுதான். லட்சக்கணக்கான மக்கள் உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாகவும் அழிக்கப்பட்டது என்ற கொடூரத்தின் தாக்குதலால்தான் பிரிவினைகளை வெறுப்பது என்பது கம்னியூஸ்ட்களிடம் வந்தது. சுய நிர்ணய உரிமைப் பிரச்சனை, தேசிய இனங்களின் பிரச்சனையை ஆழமாகப் பார்க்க வேண்டும் என்பதில் பின்னடைந்தது என்பது உண்மை. மொழி வாரி தேசியங்களும் எங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கைகளும் இருந்தன.</span></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>தமிழ் இலக்கணத்தில் நிகழ்கால வினைகளே இல்லையே-?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இலக்கணம் கண்டிப்பாக சமூக வளர்ச்சியோடு சம்பந்தபட்டதுதான். தொல்காப்பியர் சொன்ன பல விஷயங்கள் இன்று மாற்றமடைந்திருக்கிறது. சங்க காலமா சங்கம் மருவிய காலமா என்று பார்ப்பதில் இலக்கணத்தில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்துதான் சொல்கிறோம். திருக்குறள் சங்க காலத்திற்கு உரியது இல்லை என்று ஏன் சொல்கிறோம் என்றால் அது வெண்பா வடிவத்தில் வருகிறது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
சங்கம் மருவிய காலத்தில்தான் கலிப்பா, வெண்பா போன்ற விஷயங்கள் வருகின்றன. சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது சமூக உற்பத்தி முறைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் செய்யப்படும் பொருள் என்பது வருகிறது. உதாரணமாக திருவள்ளுவர் கூறும்போது, உழுதுண்டு வாழ்வோரோ வாழ்வார் என்பார். அந்தக் காலத்தில் நிலத்திற்கு சொந்தக்காரராக இருக்கிறவரே நேரடியாக விவசாயம் செய்கிற முறைதான் இருந்தது. உழுதுவித்து உண்போர் என்கிற விஷயம் திருக்குறளில் வராது. ஏனெனில் செய்யப்படும் பொருள் இங்கு தேவைப்படாது. நிலபிரபுத்துவம் முழு வீச்சோடு வரும்போது விவசாயி என்பவன் உழுவதிலிருந்து முற்றாக வேறுபட்ட தன்மையாக, பண்ணையாளராக வருகிறார். மற்றவர்களை கொண்டு வேலை வாங்குவது என்ற வாழ்கைமுறை வரும் போதுதான் இலக்கணங்களில் மாற்றங்களும் தேவைப்படுகிறது. தேவைக்கேற்றார் போல் வருகிறது. அது மாதிரி காலம் சார்ந்து உணர்வு என்பதில் கூட நாங்கள் ஒரு வரலாற்று சார்ந்து பெரிய பங்களிப்பு செய்கிறோம் என்ற உணர்வோடு இவர்கள் இயக்கியவர்கள் இல்லை.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
சங்க காலத்தில் அரசன் என்பவன் மக்களின் நேரடி தலைவன். பாரி, கோரி என்று கடையெழு வள்ளல்கள் எல்லாம் மன்னர்கள் என்றாலும் அவர்கள் இனக்குழுத் தலைவர்கள்தான். இதன் பிறகு தான் முடி வேந்தர்கள் வருகிறார்கள். முடி வேந்தர்கள் என்பது முழுக்க முழுக்க தமிழுக்கு அப்போது புதியது. சேர, சோழ, பாண்டியர்கள்தான் முடி வேந்தர்கள். இந்த முடிவேந்தர்கள் என்பது முன்பு இருந்த அரசர்களிடமிருந்து வித்தியாச மானது. குறிப்பதற்காக ‘வம்பவேந்தவர்கள்’ என்ற சொல் வருகிறது. வம்ப என்றால் புதுமை என்று அர்த்தம். இந்த ஆட்சிமுறை என்பதும் ஒடுக்குமுறைக்கான கருவியாக மாறுவது என்பதும் இருக்கிறது. இப்படி ஒரு மாற்றம் நடந்திருக்கிறது. என்பதை வைத்துதான் சம காலத்தில் இயங்குவதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்ற நினைப்பில்தான் நிகழ்காலத்திற்கு உரிய அர்த்தத்தை விளங்குவது என்று வரலாம். இதற்குப் பிறகுதான் நிகழ் காலத்துக்கான அழுத்தமும் வருகிறது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இது நடைமுறை சார்ந்து நிகழ் காலத்து வரலாற்று முக்கியத்துவம் உள்ள விசயம். அப்போது புரிந்து கொள்கிற விசயம் இல்லை. பின்னர் வருகிறவர்களுக்கு அது புரியும். <span style="font-size: x-small;">2000 வருடம் மனித குலத்திற்குள் வளர்ந்த நல்ல சிந்தனைகளை உடைக்கிறதுதான் பின் நவீனத்துவம். இந்தப் பின் நவீனத்துவத்தின் நோஞ்சான் பிள்ளைதான் பின்னை காலனித்துவ ஆய்வுகள். அடிப்படையில் மார்க்சிய சிந்தனை சார்ந்து மக்கள் விடுதலை சார்ந்து முன்னேறக் கூடிய தன்மைகளை திசை திருப்பக் கூடிய விஷயமாகத்தான் இதைப் பார்க்கிறேன். அதற்காக பின்னைக் காலனிய முறையில் சார்ந்து செய்யப்பட்ட ஆய்வு முறைகள் எல்லாவற்றையும் நான் நிராகரிக்கவில்லை. ஆனால் அதற்கு உள்நோக்கம் இருக்கிறது.</span></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
பின் நவீனத்துவத்தினால் உண்மையான சமூக மாற்றம் என்பதைப் பெருங்கதையாடல் என்று சொல்கிறார்கள். இந்த பெருங்கதையாடலால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. சிறுங் கதையாடல்களாலான சிறு அடையாளங்களை முதன்மைப் படுத்திப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு அடையாளங்களும் தங்களுக்குள் மோதிக் கொள்வதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இந்த காலனித்துவ முறையை முழுசாக உடைத்துக் கொண்டு ஒரு சுதந்திரமான வெளியை நோக்கி அந்த நாடுகள் போகக் கூடிய பாதைகளை காட்டுவதாக இல்லை. அதற்குள் வந்த சிலர் ஒரளவுக்கு ஏகாதி பத்தியத்திற்கு எதிரான மேலாதிக்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும் கூட ஒரு புதிய சமூக அமைப்பை உருவாக்க உதவுபவர்களாக இல்லை. காலனித்துவம் முழுசாக முடியவில்லை என்பதால் பின் காலனித்துவம் என்ற சொல்லைப் பாவிக்கிறார்கள். மார்க்சியவாதிகள் நவ காலனித்துவம், அரை காலனித்துவம் என்ற சொல்லைப் பாவிக்கிறோம். இந்தச் சொல்லை பிழை என்று சொல்ல வரவில்லை. அவர்கள் ஏற்படுத்துகிற ஆய்வு முறையியல் என்பது மார்க்சியம் செய்யக்கூடிய சமூக மாற்றத்திற்கான பகுதியான ஆய்வுகளை முடக்குகிற விஷயமாகத்தான் இருக்கிறது. இந்த மார்க்சிய ஆய்வு முறைகளை மாணவர்களிடம் சென்று அடைய விடாமல் தடுக்கிற ஒரு முறைதான் பின் காலனிய ஆய்வு முறைகள். இது உலகமயமாதலின் சூழ்ச்சியின் ஒரு பகுதிதான் இது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>இது சார்ந்துதான் இன்னொரு கேள்வி. சோவியத்யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு முதலாளித்துவத்திற்கும், சோசலிசத்திற்கு மான மோதல் முடிவுக்கு வந்து விட்டது. இனிமேல் நாகரி கங்களுக்கு இடையிலான மோதல்தான் இருக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறதே?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இது அடிப்படைவாதம் மேலோங்கின நிலையில் பேசப்படுகிற விஷயம். அடிப்படை வாதம் பேசு பொருளாக இன்னும் சிறிது காலத்திற்கு நீடிக்கக் கூடிய விஷயம்தான். இது மாறும். இஸ்லாமிய அடிப்படை வாதம், அதற்கு எதிராக பயங்கரவாத ஒழிப்பு என்பது நிலையாக இருக்க முடியாது. சோசலிச முகாமை தகர்ப்பதற்காக ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளால் ஊட்டி வளர்க்கப்பட்டதுதான் இஸ்லாமிய அடிப்படை வாதம். இப்போது இதோடு மோதிக் கொண்டு இருக்கிறார்கள். இதோடு மோதுவது கூட ஒரு கட்டம்தான்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
சோவியத்யூனியன், சீனா சார்ந்த விவாதங்களில் சோவியத் பாராளுமன்றப் பாதையை முன் வைத்தது. சீனா ஆயுதப் போராட்டத்தைத்தான் முன் வைத்தது. இந்த விவாதம் ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டம்தான் என்ற நிலைக்குச் செல்கிறது. அனைத்துப் போராட்டங்களையும் இணைக்க வேண்டும் என்ற விசயத்திலிருந்து விடுபட்டு ஆயுதப் போராட்டம் என்ற நிலைக்கு வருகிறது. சீனா செய்த இந்த பாதகமான அம்சத்தில் ஆயுதப் போராட்டத் திற்குள் எல்லாவற்றையும் முடக்கியது. உண்மையில் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் மக்கள் கிளர்ந்து எழுந்து இயல்பாகக் கலந்து கொள்ளும் போது, எதிரி ஆயுதத்தால் அடக்கும் போதுதான் அதற்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டி வரும். இதில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி விழிப்புணர் வாக இருக்க வேண்டிய இடம்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இன்றைக்கு சமூக மாற்றத்திற்கான அனைத்துப் போராட்ட வடிவங்களையும் இணைத்து முன்னேற கட்சிகள் இல்லாமல் போன ஒரு சூழலில், பாவித்து, தானே வளர்த்த அந்த பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்பதை உண்மையான உலக போக்கு என்று அமெரிக்கா சொல்லிக் கொண்டு இருக்கிறது. இதை எவ்வளவு காலத் திற்கு செய்ய முடியும்? புலிகள் அழிவார்கள் என்பதை பலபேர் ஏற்க முடியாதவர்களாகத்தான் இருந்தார்கள். புலிகள் அழிவார்கள் என்பது இயங்கியல் ரீதியானது. இப்படி சொன்ன போது இருக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதம், அதனுடைய பயங்கரவாத வடிவம் என்பதை மற்றவர்களைவிட முஸ்லீம் மக்கள் வெறுக்கிறார்கள். இதற்கு எதிராகக் கண்டிப்பாக முஸ்லீம் மக்கள் கிளர்ந்து எழுவார்கள். அந்த மக்களுக்கு இடையே ஏற்படும் மாற்றம் என்பது தொடர்ந்து இந்த பண்பாட்டு மோதல் மாற்றம்தான். இப்போது சொன்ன உலகப் போக்கு என்பது இல்லாமல் போகும். இது இல்லாமல் போன பிறகு கண்டிப்பாக அரசியல் ரீதியாக சமூக மாற்றம் சார்ந்த தேடல்கள் என்பது வரும்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இருக்கும் மோதல் என்ன? சோவியத்யூனியன் வீழ்ச்சியிலிருந்து சீனா படித்துள்ளது. அதாவது சீனாவில் ராணுவமயப்படுத்துவதைக் குறைத்துக் கொள்வதுதான். தம்முடைய நாட்டை பாதுகாத்தல் என்ற அளவுக்குத்தான். பொருளாதார முறையை விட உயர்ந்ததுதான். முதலாளித்துவ பொருளதார சமூக வளர்ச்சி என்பது முதலாளித்துவ பொருளாதார முறையை விட உயர்ந்ததுதான். உலகம் முழுவதும் நிறைய உள் நாட்டுக் குழ்ப்பங்களுடன் இருக்கும் போது, சீனா மட்டும்தான் உள்நாட்டுக் குழப்பம் இல்லாமல் முன்னேறிக் கொண்டு இருக்கிறது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>ஏ.ஜே. கனகரட்னா பற்றி...</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
ஏ.ஜே. கனகரட்னா இலங்கையில் மிக மதிக்கத்தக்க இடதுசாரி. அவர் ட்ராஸ்கியவாதி. ட்ராட்ஸ்கியவாதி என்றாலே மிக தவறுகளோடு, வறட்டுத்தனங்களோடு இயங்குகிறவர்களாக இருப்பார்கள். ஆனால் இலங்கையில் சூழலில் வித்தியாசம் இருந்தது. இலங்கையில் முப்பதாம் ஆண்டுகளில் கம்யூனிஸ அமைப்பு என்பதே சம சமாஜம் என்ற கட்சி வடிவத்தில்தான் வருகிறது. சம சமாஜம் என்பது சிங்கள சொல். இதில் ஸ்டாலினிசத்தை ஏற்றுக் கொண்டவர்களும், ட்ராட்ஸ்கியை ஏற்றுக் கொண்டவர் களும் இயங்குகிறார்கள்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
நாற்பதாம் ஆண்டுகளில்தான் ஸ்டாலினிசம், ட்ராட்ஸ்கியம் என்று கட்சிக்குள் மோதல் வந்தது. இந்த மோதலில் வெளியேறிவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி என்ற வடிவத்ததை எடுக்கிறார்கள். முப்பதாம் ஆண்டுகளில் சமசமாஜம் கட்சியில் இயங்கிய ட்ராட்ஸ்கிய வாதிகள் எல்லா பகுதிகளிலும் ஒரு வறட்டுத்தனத்துடன், தூய்மையான பாட்டாளி வர்க்கம் என்று முடங்கிப் போயிருந்தனர். ஆனால் இலங்கையில் மட்டும் இவர்கள் கீழ் இறங்கி, சமூகரீதியாக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கங்களை முன் எடுத்தனர். ஒரு சமூக தளத்தில் இறங்கி வேலை செய்வது என்பது வந்தது. நாற்பதுகளில் பிளவு வந்தாலும் தொடர்ந்து ட்ராட்ஸ்கிய வாதிகள் சம சமாஜம் கட்சியில் இயங்கினாலும் ஒரு வித்தியாசம் இருந்தது. ஏனைய ட்ராட்ஸ்கிய வாதிய அமைப்புகள் போல் இல்லாமல் வெகுசனத் தன்மையில் இயங்குகிற அமைப்பாக சம சமாஜம் இருந்தது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இந்த நிலையில் ஐம்பதாம் ஆண்டுகளில் ட்ராட்ஸ்கியை ஏற்றுக் கொண்ட ஏ.ஜெ. கனகரட்னா கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் இயங்கி வந்தார். யாழ்ப்பாணத்தில் அவர் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் இலக்கிய கோட்பாடாக தேசிய இலக்கியம் வருகிறது. அதில் காத்திரமாக இயங்கினார். அவருக்கு தமிழ் முடியாவிட்டாலும் முற்போக்கு இலக்கியம் சார்ந்து விவாதங்களுக்குள் செயற்படுகிறவராக இருந்தார். யாழ்ப்பாணத்தில் இயங்கிய கம்யுனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளான சாதி ஒழிப்பு போராட்டம், விவசாயிகள் போராட்டம் ஆகியவைகளை ஆதரிப்பவராகவும், ஆசானாகவும் இருந்தார்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இவருடைய பங்களிப்பு என்பது ட்ராட்ஸ்கிய வாதத்திற்குள் முடங்கின ஒன்றாக இல்லை. பரந்துபட்ட ஐக்கிய முன்னணிக்குள் செயற்படக் கூடிய, அமைப்புகளுக்குள் அங்கம் வகிக்கவில்லை என்றாலும் முற்போக்கான எல்லாச் சக்திகளோடும் இயங்கி இருக்கிறார். மொழி பெயர்ப்புப் பணிகளையும் செய்து இருக்கிறார். அவருடைய இயக்கத்தின் தேவையாகத்தான் டொமினிக் ஜீவாவின் மல்லிகை இதழ் வெளி வந்தது. இடதுசாரிகளுக்கு அப்பால் உள்ளவர்களுக்கும் பிரதானமாக அவரின் மேல் அபிமானம் உண்டு. அவர் தமிழ்த் தேசியத்தையும் ஒரு முற்போக்கு கண்ணோட்டத் தோடு ஏற்றுக் கொண்டவர். தமிழ்த் தேசியத்தின் பிற்போக்கானவர்கள் கூட அவரை மதிப்பர். முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட போது இனி மேல் சிங்கள பேரினவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்த மாட்டேன். ஏனெனில் தமிழும் பேரினவாதமாக இருக்கிறது என்றார்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>மார்க்சியத்தின் போதாமைகள் குறித்து, பின் நவீனத்துவம் வைக்கும் விமர்சனங்களை மார்க்சியர் கணக்கில் எடுத்துக் கொள்பவராகவே இருக்கிறரர்கள். இதுவே மார்க்சியம் பின் நவீனத்துவ உரையாடலை சாத்தியமாக்குகிறது என்ற ஒரு கருத்து நிலவுகிறதே?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இந்தியாவின் மற்ற பகுதிகளை விட, தமிழகப் பகுதிகளில் பின் நவீனத்துவம் பேசியவர்கள் தீவிரமாக இடதுசாரிகளாக செயல்பட்டு வந்தவர்கள் தான்.<span style="font-size: x-small;">இங்கேயும் ஒரு கட்டத்தில் இந்த போக்குகள் வந்தன. உதாரணமாக அ. மார்க்ஸ் போன்றவர்கள் இயங்கத் தொடங்கின காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பிற்குள் இருந்த தவறுகளுக்கு எதிராகத்தான் பின் நவீனத்துவ நிலைப்பாட்டை எடுத்தார். அந்த நேரத்தில் அவர் வெளிப்படையாகச் சொன்ன விசயம் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படையில் உள்ள தவறுகள்தான் இவ்வளவுக்கும் காரணம் என்று. இப்போதும் குருசேவ், ஸ்டாலின் போன்றவர்களிடம் இருக்கும் தவறு லெனினிடமும் இருக்கிறது என்கிறார்.</span></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
லெனின் கட்சி அமைப்பு சார்ந்து சொன்ன வடிவங்கள் பின்னால் வந்த அதிகாரத்தால் தனிநபர் வழிபாடு போன்ற விஷயங்களுக்கு இடம் கொடுத்தது என்று பார்க்கிறார். பின் நவீனத்துவம் சார்ந்து சொல்லப்படுகிற நிலைப்பாடு என்பது உதாரணத்திற்கு பெருங்கதையாடல் அவசியமில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் சமூக பிரச்சனைகளை கம்யூனிஸம்தான் தீர்க்க முடியும் என்கிறார் அ. மார்க்ஸ். அவர் சமீபத்தில் இலங்கை வந்த போது, இலங்கைப் பிரச்சனைக்கு இனி என்ன செய்யப்படலாம் என்று கேட்டோம். ஒரு வகையில் முற்போக்கு அமைப்புகள், அதனுடைய அரசியல், செல்நெறிகள், கட்சி முறை சார்ந்து ஏதாவது சொல்லமுடியுமா என்றுதான் அவரிடம் கேட்டோம். ஆனால் அவரால் அதற்குள்ளே போக முடியாமலே இருக்கிறது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
கட்சி அமைப்பு என்றாலே அதற்குள் அதிகாரம் இருக்கும். லெனின் சொன்ன பட்டாளி வர்க்கம் என்பதே ஒரு அதிகாரம்தான் என்று சொல்லும் போது அதைப் பற்றித் தெரியாதவராகவே இருக்கிறார். இது இயங்குகிற சக்திகள் ஒரு வழிமுறை காரணமே தவிர, இது எனக்கு சொல்ல முடியாது என்கிறார். இதுதான் அவர்களின் போதாமை. மார்க்சிய அமைப்புகளிடம் போதமை இல்லை. தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறது. சோவியத் யூனியனின் கடைசிக் காலம் வரை சோசலிசம் இருந்திருக்கிறது. பெண்களுக்கான உரிமைகள், போன்று பல விசயங்கள் நடந்தன. இன்றைக்கு அதெல்லாம் இல்லை. இந்த வகையில் கட்சியின் அமைப்புக்குள் ஆயிரம் இருந்தாலும் மாற்றம் நடந்திருக்கிறது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
கட்சி என்பது ஆகாயத்திலிருந்து குதித்தது அல்ல. கட்சி என்பது மனிதர்களால் ஏற்படுத்தபட்டதுதான். இந்த சமூக மாற்றத்திற்கான ஒரு இயங்குதளம்தான் கட்சி. இப்படி இயங்குகிற ஒரு தளத்திற்குள் தனி நபர் அதிகாரம் வருகிறது என்றால் கட்சி அமைப்பிற்குள் போராடுகிற விஷயம்தான். இதற்கான ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாடு விஞ்ஞான பூர்வமானது. இது நிறைய வெற்றிகளை சாத்தியப்படுத்தியிருக்கிறது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்களை மீறி சில தவறுகள் நடந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தாலும் அவர்கள் எவ்வளவு வேகமாகப் புரிந்து கொள்ள முடியுமோ அவ்வளவு வேகமாக நடைமுறைகளை மாற்றம் செய்தார்கள். சோவியத்யூனியன் தளர்வு என்பதற்குப் பல விஷயங்கள் இருக்கின்றன. அது படிக்கப்பட வேண்டியதுதான். நிச்சயமாக பின் நவீனத்துவ முறையில் அல்ல. பின் நவீனத்துவத்தால் எந்த வழியையும் காட்ட முடியாது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>இலங்கையில் போருக்குப் பிந்தைய சூழலில் தமிழ்த் தேசியம் தே¬வ்ப்படுகிறதா?</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
அதாவது தேசியம் என்பது என்ன என்பதில் நாங்கள் தவறு செய்து இருக்கிறோம். 70ஆம் ஆண்டுகளில் சண்முகதாசன் தலைமையில் பிரிந்து வந்ததற்கு காரணம் தமிழர் என்பது தனி தேசிய இனம். சுய நிர்ணய உரிமை என்பது பிரிவினையை மட்டும் கொண்டது அல்ல. ஏனெனில் ஏற்கெனவே சீனா பிரிந்து செல்லாத தேசிய சுயநிர்ணய உரிமையைப் பற்றி பேசியிருக்கிறது. தேசிய சுய நிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமை என்று லெனின் கூறி இருக்கிறார். லெனின் கூறுவது என்பது, காலனிய காலத்தில் குடியேற்ற நிலையில் குடியேற்றப்பட்ட நாடுகள் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து போகலாம் என்றார்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>இன்றைக்கு ஒரு சாதி கூட தேசிய இனத்தின் தன்மையோடுதான் இருக்கிறது.</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இன்றைக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பண்பாடும் ஒடுக்குகிற சமூகத்தின் பண்பாடும ஒரே மாதிரி என்று சொல்ல முடியாது. இதற்கென்று தனித்தனி வரலாறு உண்டு. ஐரோப்பிய சமூகத்தில் ஒரு வர்க்கத்துக்கென்று ஒரு கட்சி இருக்கும். எங்களுடைய சமூகத்தில் வர்க்க பிளவு இல்லாத போது சாதிக்கென்று கட்சி வருவது தவிர்க்க இயலாது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இலங்கையில் நாங்கள் தமிழ்தேசியம் என்பதை அங்கீகரிக்கத்தான் வேண்டும். முப்பது வருடம் இரத்தம் சிந்தி போராடி, தோல்வி அடைந்த தவறுகளின் விளைவை மட்டும் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியம் இல்லை என்று பார்க்க முடியாது. நிச்சயமாக தமிழ் ஒரு தேசிய இனம்தான். ஆனால் அது இலங்கையில் பிரிய தேவையில்லை. இதை ஆரம்ப காலத்தில் சண்முகதாசன் காலத்திலே தேசிய இனம் இல்லை என்று சொன்னதுதான் தவறு. தவிர பிரிவினை கோரிக்கை ஏன் ஆபத்தானது என்று என்ன காரணங்கள் சொன்னாரோ, அதுதான் இந்த முப்பது வருடங்களில் நடந்தது. தனிநாடு அமைந்தால் பக்கத்திலிருக்கும் ஆறுகோடி தமிழர்களின் இடமாகி விடும். அதனால் சிங்கள பண்பாட்டை அழித்து விடும் என்ற பயம் சிங்களர்கள் மத்தியில் இருக்கிறது. இதைப் பற்றி பயம் வேண்டாம் என்று காட்டப்பட வேண்டியுள்ளது. அதுபோல முஸ்லீம் மக்களும் தனி தேசிய இனம். இங்கு முஸ்லீம் கிராமங்கள் உள்ளன. இது போன்ற சிதறி வாழுகின்ற சமுகங்கள் தனி தேசிய இனமாக அங்கீகரிக்கப்படும் போது அதற்கான ஆட்சி முறை தேவைப்படுகிறது. இது போன்றுதான் மலையக மக்களும். தேசிய இனம் என்று அங்கீகரித்தலே பிரிவினை என்று பார்க்க வேண்டியதில்லை.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
எந்த ஒரு தேசிய இனமும் பிரியாமல் ஏனைய இனங்களோடு இணைந்து தன்னுடைய உரிமைகளை எப்படிப் பாதுகாக்க முடியும் என்ற உரிமையை அவர்களுக்குக் கொடுத்தால் நிச்சயமாக இந்த பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். ஆகவே தேசிய இனப்பிரச்சனைகளை பழைய வடிவங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்ப உள்ள சூழலுக்கு ஏற்ற மாதிரி செயல்படவேண்டியிருக்கிறது. தேசிய இன உணர்வு என்பது ஒடுக்குமுறையிலிருந்து வருகிறது. அந்த ஒடுக்குமுறை பல்வேறு வடிவங்களில் இருக்கலாம். தம்முடைய பொருளாதார நலம், சந்தை, அந்த மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற புறக்கணிப்புகள் வரும் போதுதான் அந்த குழு அல்லது அந்த இனம் என்று வருகிறது. இந்த ஒடுக்குமுறை, புறக்கணிப்பு சார்ந்து போராடுகிற போது அதை அங்கீகரிக்காமல் இருப்பதற்கு மார்க்சியர்களுக்கு எதிரான சக்திகள் பயன்படுத்தும் அபாயமும் இருக்கிறது. தேசிய இனப்பிரச்சனை என்பது ஒரு பரந்த தளத்தில் விவாதிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. இதற்கு முன் தீர்மானங்களாக சில முடிவுகளை சொல்ல முடியாது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<strong>புலிகளின் அணுகுமுறைத் தவறுகள் பற்றி....</strong></div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
புலிகள் கடந்த காலத்திலே அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தார்கள். அதுதான் அவர்களின் அழிவுக்குக் காரணம். இதிலிருந்து எந்தப் பாடமும் படிக்காதவர்களாகத் தான் தமிழ்த் தேசியர்கள் இருக்கிறார்கள். அண்மையில் நடந்த நாடாளுமன்ற முடிவுகள் கூட இப்படித்தான் இருக்கிறது. இந்தியாவில் இந்துத்துவ சக்தி களோடு கூட்டுச் சேருகிறார்கள். இது ஒரு சிக்கலான பிரச்சனைதான். அதற்காக தமிழ்ச் தேசியப் பிரச்னையை இல்லை என்று சொல்ல முடியாது. ஏனெனில் சிங்கள பேரினவாத அரசாங்கம் எந்தத் தீர்வையும் வைக்காமல் இழுத்தடிக்கிறது. மக்கள் முழுவதையும் நாங்கள் குறை சொல்ல முடியாது. தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக இருக்கிறார்கள். சிங்கள அரசாங்கம் எந்தத் தீர்வையும் வைக்காததால் மக்கள் தமிழ்த் தேசியத் தலைவர்கள் வைக்கும் தீர்வுக்குச் செல்கிறார்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் ஆயுதப் போராட்டம் நிறைவுக்கு வருகிறது. ஆனால் சிங்கள மக்கள் இந்திய வெறுப்போடு இருந்தார்கள். அப்போது ஜே.வி.பி. இயக்கம் மிகப் பெரிய இந்திய எதிர்ப்பு இயக்கத்தை நடத்தினார்கள். மைசூர் பருப்பு என்பதில் மைசூர் என்று இருப்பதாலே அந்தப் பருப்பை சிங்கள மக்கள் வாங்க மாட்டார்கள். அப்போது பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இந்தியா என்பதை எல்லா வடிவத்திலும் எதிர்த்தார்கள்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இது இந்தியாவுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. இதனால் அடுத்த 15 வருடத்திற்கு யுத்தம் நடத்தப்பட்டது. இந்த யுத்தத்தில் இந்தியா நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. புலி மிகப்பிரமாண்டான இயக்கமாக வளர்வதற்கு இந்தியா எவ்வளவு வாய்ப்புக் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்குக் கொடுத்தது. இது சிங்கள மக்களை தங்களுக்கு ஆதரவாகத் திருப்பும் இந்த தந்திரம் வெற்றிகரமாக நிறைவேறி இருக்கிறது. இன்றைக்கு சிங்களர்கள் மத்தியில் இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு கருத்தும் இல்லை. இலங்கையின் முழு இறைமையையும் இந்தியாவிடம் இழந்திருக்கிறது.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
இந்த இனப்பிரச்சனை அமெரிக்க மேலாதிக்கவாதம் அல்லது இந்தியா தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான விடயம் என்றுதான் கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா மக்களும் தங்களுடைய சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்கக் கூடிய வகையில் இலங்கையில் வருகிற அரசியல் விழிப்புணர்வு, இலங்கையில் தேசிய இனங்களை அங்கீகரிப்பது பற்றிய விழிப்புணர்வு, இவை சார்ந்து வரக்கூடிய மாற்றங்கள்தான் முக்கியம். இந்த இரத்தம் சிந்துகிற வேலையிலிருந்து மீள வேண்டுமானால் அரசியல் விழிப்புணர்வு வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரைக்கும் இந்தியாவில் ஏற்படுகிற மாற்றம்தான் இலங்கைக்கான மீட்சியாக இருக்க முடியும். ஏனெனில் அந்த சிக்கலுக்குள்தான் நாங்கள் போய் கொண்டிருக்கிறோம்.</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
நன்றி - கீற்று , புதிய புத்தகம் பேசுது </div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
2011- may</div>
<div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">
<br /></div>
<div style="float: right; font-size: 12px; margin-bottom: 10px; margin-top: 40px;">
<a class="aisectionhref" href="http://www.keetru.com/index.php?option=com_aisection&id=8320&Itemid=139" style="color: blue; text-decoration: none;">இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்</a></div>
<div>
<br /></div>
</div>
</div>ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-52960359188171881192012-06-19T13:50:00.000-07:002012-06-21T13:16:49.328-07:00மனித உறவுகளின் உன்னதங்களைக் கிளர்ந்தெழத்தூண்டும் " மிருச்சகடிகம்" நாடகத்தை முன்னிறுத்திய ஒரு தேடல் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"></span><br />
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6eTECx3Cn_OJU7Yov3Al7X-RHzB_-lScoXmCU9HIpOqS0jSvPrvUGTB_8HbNwv55w0Nw32zsBx_h4Nb0rL-oxKp1lBB4NdQK85oldPae0Yz64g2XWP0EvxihyphenhyphenUlyH15110X3ZqP11HeSb/s1600/300px-Krishna_Narakasura+3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><br /></a><br />
<span class="Apple-style-span" style="font-family: inherit;">
</span><br />
<h4 style="text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;">மனித உறவுகளின் உன்னதங்களைக் கிளர்ந்தெழத்தூண்டும் <b><span class="Apple-style-span" style="color: red;">" மிருச்சகடிகம்"</span></b> நாடகத்தை முன்னிறுத்திய ஒரு தேடல் <span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;"> - <span class="Apple-style-span" style="font-size: x-small; font-weight: normal;">ந.இரவீந்திரன்</span></span></span></h4>
</div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;"><br />
</span></span><br />
<div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;"><br /></span></span></div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;">
</span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuGOXDYuoYcpu4VBFUAXDwrTEeiUoaCMmU4sLkB_GnrZThw5kzwRTwfcnhe5tPYgnrojsX2bjoZ4Pa7RvbCw6ks0Jhd5AbsxGWZJ-_ACnkLbgLhajFd1RVon-svMdH6XIWHnsQ-b6v3YGv/s1600/Mownakuru.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="153" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuGOXDYuoYcpu4VBFUAXDwrTEeiUoaCMmU4sLkB_GnrZThw5kzwRTwfcnhe5tPYgnrojsX2bjoZ4Pa7RvbCw6ks0Jhd5AbsxGWZJ-_ACnkLbgLhajFd1RVon-svMdH6XIWHnsQ-b6v3YGv/s200/Mownakuru.jpg" width="200" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPiGLq2zlLVscbMV2TC44n1olKoJ2GVuJQJUCjHD_U6lGvWK6mT5vuTxZLVMs39K0Q8riRKY5_HUaJeWOyWco0luVH_Xb3B1RJgf4eBKVZ-Nplu7XeQdHeEk2IkNHUxNrJLuPU_qskk_bB/s1600/Parakrama+Niriella.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPiGLq2zlLVscbMV2TC44n1olKoJ2GVuJQJUCjHD_U6lGvWK6mT5vuTxZLVMs39K0Q8riRKY5_HUaJeWOyWco0luVH_Xb3B1RJgf4eBKVZ-Nplu7XeQdHeEk2IkNHUxNrJLuPU_qskk_bB/s1600/Parakrama+Niriella.jpg" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimTgYymiGiIWgJ7cCIlNSShfx7CF3OcrG2esqRlVbyXY42YkLVEq6JLNOulhZhdsK716deg6CaUnz_BHjUqxMlvC8yyUQfDS0jNHjRbVQhv525lhBqDr7n4Y27X_ARz42AANotPW4aeQwy/s1600/meti-karaththaya21.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimTgYymiGiIWgJ7cCIlNSShfx7CF3OcrG2esqRlVbyXY42YkLVEq6JLNOulhZhdsK716deg6CaUnz_BHjUqxMlvC8yyUQfDS0jNHjRbVQhv525lhBqDr7n4Y27X_ARz42AANotPW4aeQwy/s320/meti-karaththaya21.jpg" width="214" /></a></span></span></div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;">
</span></span><br />
<div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;"><br /></span></span></div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;">
</span></span><br />
<div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;"><br /></span></span></div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;">
<div>
"மானுடம் வென்றதம்மா" - கம்பராமாயணத்தில் வெளிப்பட்ட இந்த முழக்கத்தை முன்னிறுத்தி ப.ஜீவானந்தம், கவியுள்ளமொன்று பொதுமை நாட்டம் கொள்ளும் பாங்கை வெளிப்படுத்தியிருப்பார். அநீதி ஒழிக்கப்பட்டு நீதியின் வெற்றிபற்றிய அக்கறை எப்போதும் இருந்து வந்துள்ளது. நிலப்பிரபுத்துவச் சமூகமுறைமை நிலைநிறுத்தப்பட்ட சூழலில் கம்பர் இந்த விருப்பைக் காட்டுவார். இதற்கு ஆயிரம் ஆண்டுகளின் முன்னர்கூட மானுடத்தின் மேன்மைக்கான அவா மேலோங்கி வந்ததைக் காணவியலும். இந்த "கூட" அழுத்திச் சொல்லப்படக் காரணமுண்டு. அப்போதுதான் ஆதிக்கம்பெற்ற மருதத் திணை ஏனைய திணைகளை வென்றடக்கி, ஏற்றத்தாழ்வுச் சமூக முறை நிதர்சனமாக அடிகோலி இருந்தது. அதனைச் சாத்தியப்படுத்திய "வம்ப வேந்தரின்" புதுமைச் சாதனை பாடிப்பரவப்பட்டபோதே, "எவ்வழி நல்வழி ஆடவர், அவ்வழி வாழிய நிலனே" என்ற அவ்வையின் குரலும் ஒலித்தது. ஆட்சியாளரின் வேறெந்த திறனையும் முன்னிறுத்துவதைவிடுத்து "நல்வழி" வலியுறுத்தப்படும்போது, மானுடம் மேன்மைபெறும் மார்க்கம் மனம் கொள்ளப் படுகிறது எனப் புரிதல்கொள்ள இயலுமாகிறது.</div>
<div>
நல்வழிப்பட்ட ஆட்சி குறித்த வள்ளுவரின் வரையறையில் அதிசயிக்கத்தக்கவண்ணம் மக்கள் நலநாட்ட அரசுக்குரிய பண்புகள் மேலோங்கியிருக்கக் காணலாம். நியாயமான வரியைக் கடந்து கூடுதல் அபகரிப்பைச் செய்யும் அரசை வேலேந்திக் கொள்ளையடிக்கும் வழிப்பறிகாரர் என்றே அடையாளப்படுத்துவார் வள்ளுவர். அல்லற்பட்டு ஆற்றாது அழும் மக்களின் கண்ணீர் கொடுங்கோலாட்சியை வீழ்த்தும் என்பார். பின்னாலே வணிக ஆதிக்கத்தைத் தகர்த்து விவசாயத்துக்கான அரசியலுக்கு அரசை மாற்றுவதில் பக்திப் பேரியக்கம் மக்களை அணிதிரட்ட ஏற்றதாக அல்லற்பட்ட மக்கள் பற்றிய வள்ளுவர் குரல் அமைந்தது எனலாம்.</div>
<div>
மானுட நேசிப்புடனான கவியுள்ளங்கள் இவ்வகையில் மானுடத்தின் பொதுமை குறித்து அக்கறைகொண்டு பலவாறு கருத்துரைத்தபோதிலும் மனிதர் உணவை மனிதர் பறித்து உண்ணும் அவலம் மேவியதாய், உழைப்போர் பட்டினியில் வாட - அவர்களை வென்றடக்கிச் சுரண்டுவோர் உழைப்பில் பங்கின்றியே ஆடம்பரச் சுகபோக வாழ்வைக் காணும் அதேவேளை, அந்தத் தண்டச் சோறுண்போரே உயர்வானவர் எனப் போற்றும் தலைகீழ் விழுமியம் தோன்றி வளர்ந்த காலமாக இவை இருந்தன. "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணில் உண்டு களிப்போரை நிந்தனை செய்வோம்" என்ற பாரதியின் குரலே தமிழில் முதன்முதலில் இந்தத் தலைகீழ் விழுமியக் கோலத்தை மாற்றும் புரட்சி அறைகூவலை விடுத்தது. அந்தப் புரட்சிப் பிரகடனத்தை வென்றெடுக்கும் நடைமுறைச் சாத்தியம் உருவாகி ஏறத்தாழ நூறாண்டு கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளபோதிலும், மானுடம் வெல்லுவதென்ன, மனுக்குலம் உட்படப் புல்பூண்டனைத்தையும் அழிக்கும் கோர யுத்த சாகரத்தில் உலகை நாசகாரப் படுத்துவதை முதலாளித்துவச் சுரண்டலாளர்கள் செய்வதிலிருந்து காக்கமுடியுமா என்ற கேள்வியே இன்று மேலோங்கியுள்ளது.</div>
<div>
அதற்கான காரண காரியங்களைத் தேடுவதோ, தீர்வுக்கான வழிமுறையை நாடும் மார்க்கம் பற்றி அலசுவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. தமிழில் வள்ளுவரின் குரல் சாத்தியப்பட்டபோது (கி.பி.நாலாம் நூற்றாண்டில்) சமஸ்கிருதத்தில் எழுந்த ஒரு நாடகத்தின் அரங்க அனுபவம் குறித்து இங்கு பார்க்கலாம். இந்த விவாதத்தினூடாக எமது எதிர்கால மார்க்கம் பற்றிய தேடலுக்கு விவாதத்தை தொடங்க இயலுமாயின் அதுவே போதுமானதாய் அமையும். </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQe4UgQmpQYspBZ3VcCS6pV77XIkB8jkwjR7Nb7_d4Yw6MFvBpfwiQVXVkxuJWhM4g4j6ijqAX8QE6GbXcdMyIoRi2LV4V8l5IPki31TfHWxmYG40_OV5EwFfHQZLgPqhHQ2XDqNULo9w0/s1600/bharatanatyam-vineeth-nair.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQe4UgQmpQYspBZ3VcCS6pV77XIkB8jkwjR7Nb7_d4Yw6MFvBpfwiQVXVkxuJWhM4g4j6ijqAX8QE6GbXcdMyIoRi2LV4V8l5IPki31TfHWxmYG40_OV5EwFfHQZLgPqhHQ2XDqNULo9w0/s200/bharatanatyam-vineeth-nair.jpg" width="135" /></a> -- 1 --</div>
<div>
<br /></div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKwSETq_UhGgMQHYG9dwO3ukAL1s-RQOXR4KIReAsPKt0xy8DWbwTH9gcqMYKegvlUuiisNti29poDwowhiBftHCYXAxWbyGuU1dOtpIyPDiNaCSv-bcTpf3uFsnXj30OYP_Jq22mrT5VN/s1600/P1060184+vandi+.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="190" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKwSETq_UhGgMQHYG9dwO3ukAL1s-RQOXR4KIReAsPKt0xy8DWbwTH9gcqMYKegvlUuiisNti29poDwowhiBftHCYXAxWbyGuU1dOtpIyPDiNaCSv-bcTpf3uFsnXj30OYP_Jq22mrT5VN/s200/P1060184+vandi+.jpg" width="200" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</span><span class="Apple-style-span" style="line-height: 19px;">சூத்திரகரால் கி.பி 300 – 400 காலப்பகுதியில் எழுதப்பட்ட சமஸ்கிருத மொழி நாடகம் 'மிருச்ச கடிகம்' இந் நாடகத்தின் சிறப்பம்சமாகக் கொள்ளப்படுவது அதன் இரட்டைக் கருக்களாகும். </span></span><br />
<div style="border-collapse: collapse; color: #222222;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKwSETq_UhGgMQHYG9dwO3ukAL1s-RQOXR4KIReAsPKt0xy8DWbwTH9gcqMYKegvlUuiisNti29poDwowhiBftHCYXAxWbyGuU1dOtpIyPDiNaCSv-bcTpf3uFsnXj30OYP_Jq22mrT5VN/s1600/P1060184+vandi+.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><span class="Apple-style-span" style="font-family: inherit;"><br /></span></a><span class="Apple-style-span" style="font-family: inherit;"> "மிருச்சகடிகம்"என்பதன் பொருள் சிறிய மண்வண்டில் என்பது. நாடகத்தின் இறுதிக் காட்சிகளில்தான் அந்தச் சிறிய மண் வண்டில் வரும்; கதையின் தொடக்கத்தில் அதற்கான மாற்றம் ஏற்பட்டிருக்கும். பொன்னிற வண்டில் வைத்து விளையாடத்தக்க பிள்ளையையுடைய குடும்பமொன்று களிமண் விளையாட்டு வண்டிலையே பிள்ளைக்கு கொடுக்கத் தக்க வறுமைநிலைக்காளான மாற்றம் தொடக்கத்தில் வரும். காட்சியில் பிள்ளை முன்னதாக வருவதில்லை. சூத்திரகரால் கி.பி. நாலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது இந்த நாடகம். இதே சமகாலத்தில் முன்பின்னாக தமிழின் "சிலப்பதிகாரம்" காப்பியம் பிறந்தது. மிருச்சகடிகம் சமஸ்கிருத நாடகம் என்பது தவிர அதன் பேசுபொருள் சிலம்பு காட்சிப் படுத்தும் வாழ்க்கைக் கோலங்களிலிருந்து எவ்வகையிலும் வேறானதல்ல.</span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;">சாருதத்தன் என்ற வணிகன் செல்வச் செழிப்போடு இசையிலும் ஆடல்பாடல்களிலும் மூழ்கித்திழைப்பவன்; வசந்தசேனை எனும் அழகிய கணிகை அவனை எதிர்கொண்டபோது இருவரும் காதல்வயப்படுவர். ஆயினும் இணைதல் வாய்க்காமல் பிரிவு நிகழும். வசந்தசேனையைக் காதல் வேண்டி அரசனின் மைத்துனன் துரத்தியவாறிருந்ததால் அப்போதைக்கு காதல் மனதோடு இருவரும் பிரிந்திருப்பர். அடுத்த காட்சியில் சாருதத்தன் வறுமையெய்துவான்; இசையும் ஆடல்பாடல்களும் அவன் மாளிகையினின்றும் நீங்கிப் போய்விடும். அரசனின் மைத்துனனின் துரத்தலிலிருந்து தப்பித்துவரும் வசந்தசேனை சாருதத்தன் வீட்டில் தஞ்சம் புகுவாள்; அவனின் வறுமை கண்டு, தனது நகைகளைக் கொண்டு இழந்த வணிக வாய்ப்பை மீட்கட்டும் என்றுகருதி, இரவில் தான் திரும்புவதால் கள்வர் பயம் எனக்கூறி அவற்றை அடைக்கலப் பொருளாக வைத்திருக்குமாறு கூறிக் களற்றிக் கொடுத்துவிட்டுச் செல்வாள்.</span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;">அதன் உள்நோக்கத்தைப் புரியும் வாழத்தெரிந்த பேர்வழியென்றால் முன்னதாக அவன் வறுமை எய்தியிருக்க மாட்டான்; வணிகத் தோல்வியைவிட, இல்லையென்று வரும் ஏதிலர்க்கு வாரிவழங்கியே அவன் வறுமையுற்றிருந்தான். இப்போதும் ஒன்றைப் பத்தாக்க முயலாது அடைக்கலப் பொருளாகவே பாதுகாத்து வந்தான். திருட்டைத் தொழிலாகக் கொண்டிராது, வசந்தசேனை வீட்டில் அடிமைப்பட நேர்ந்த தனது காதலியை மீட்கப் பணம் வேண்டித் திருடவரும் இளைஞன் "விதிவசத்தால்" சாருதத்தன் வீட்டில் திருடிய நகைகளோடு வசந்தசேனை வீட்டுக்கு செல்வான்.</span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;">அங்கே முன்னதாக வேலைக்காரியாயுள்ள தனது காதலியைக் கண்டு தனது நோக்கத்தை அவ்வாலிபன் கூறுவதை மறைவிலிருந்து வசந்தசேனை கேட்டிருப்பாள்; அவனோடு அவன் காதலியை அனுப்பும் எண்ணத்துடன் இருந்தவளுக்கு நகைகளைப் பார்த்ததும் சாருதத்தனின் நேர்மை புரியும். அதைவிட, களவுபோனதை மறைத்து அவன் மாற்று நகைகளைக் கொடுத்தபோது, அவனோடேயே தனது காதல் வாழ்வு இணைய வேண்டும் என்ற உறுதி வலுப்படும். ஒருகணிகைக்குரிய வாடிக்கையாளரை மகிழ்விப்பதிலிருந்து விலகி அவனோடு வாழ முடிவு செய்வாள். அதற்கு வாய்ப்பாக, அல்லது பிரச்சனையாக அமைவது அவளிடம் வந்துசேர்ந்த சாருதத்தனின் விலைமதிப்பற்ற மாணிக்கமாலை. அனைத்தையும் இழந்த கணவனை இன்னமும் அந்தக் கணிகையிடம் தான் இழந்துவிடவில்லை என்பதால், தலைவி அந்த மாணிக்கமாலையைக் கொடுத்து கணவனை மீட்க முயன்றிருந்தாள். தலைவி இப்போதெல்லாம் அவனோடு உரையாடுவதில்லை-வேலையாட்கள் வாயிலாகவே ஊடாட்டங்கள். மனவி தன் வறுமை நிலையைத் தொட்டுக் காட்டும் ஒரு சந்தர்ப்பமாய் மருகுவான் சாருதத்தன். இருந்தாலும் அந்தக் கணிகை மீதான காதலை வளர்ப்பதில் இந்தத் தலைவன் குறை வைக்கவில்லை.</span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfL5YAnbNGlKBNYPFEw9KLxUDsnQP5rRRUJqOq41aWQidgLffHnFa-meOLiztNvfihBKLx2tfT_e2uVuF-ZdT4eUPlMGe0_Vn14E7aP603Ag-VqDPP_C3wT1SuXrBKFuCqT1Wzc8A_1pBD/s1600/indian_classical_kuchipudi+88.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-left: 1em;"><span class="Apple-style-span" style="font-family: inherit;"><img border="0" height="291" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfL5YAnbNGlKBNYPFEw9KLxUDsnQP5rRRUJqOq41aWQidgLffHnFa-meOLiztNvfihBKLx2tfT_e2uVuF-ZdT4eUPlMGe0_Vn14E7aP603Ag-VqDPP_C3wT1SuXrBKFuCqT1Wzc8A_1pBD/s320/indian_classical_kuchipudi+88.gif" width="320" /></span></a><span class="Apple-style-span" style="font-family: inherit;">அவனோடான அந்த உள்ளப் பிணைப்பைக் கொண்டிருந்த வசந்தசேனை மாணிக்கமாலையைத் தலைவியிடமே அனுப்பிவைப்பாள். இந்த நிலையில்தான் அந்தச் சிறிய மண் வண்டில் வரும். சாருதத்தனின் சிறிய மகன் முன்னதாக பக்கத்து வீட்டு சிறுவனின் பொன்னிற வண்டிலோடு விளையாடியது இன்றைய வறுமையால் இல்லாது போன நிதர்சனம் புரியாது, இந்தச் சிறிய மண்வண்டில் வேண்டாம், பொன்னிற வண்டில் வேண்டும் என அடம்பிடிப்பான். செவிலித்தாய் அவனை வசந்தசேனையிடம் அழைத்து வந்து தீர்வுக்கு வழி கோரியபோது, வசந்தசேனை தனது நகைகளைக் கொடுத்து பொன்னிறவண்டில் வாங்கச் சொல்வாள். அந்த நகைகளையும் மாணிக்கமாலையையும் மீண்டும் வசந்தசேனையிடம் கொடுப்பதற்காக தலைவி இறுதிமுயற்சி எடுத்தபோது இருவரிடையேயான உணர்ச்சிப் பரிமாறல் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்தச் சிறுவன் தனது மகன் என்பதால் நகைகள் அவனுக்காகலாம் என வலியுறுத்துவாள், வசந்தசேனை. இது தமிழின் வீரயுகப் பாடலில்(சங்க இலக்கியத்தில்) ஏற்கனவே கண்டகாட்சிதான்; தலைவியின் மகனைப் பரத்தை தன் மகனாக ஆரத்தழுவுவது அங்கே பேசப்பட்டிருந்தது.</span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;">மனமாற்றம் பெற்று வசந்தசேனையின் உண்மைக்காதலுக்கு மதிப்பளித்த தலைவி வசந்தசேனையைக் கணவர் சென்றிருக்கும் பூந்தோட்டம்சென்று, அனைத்தையும் இழந்து பொய்விட்டதாய் மனச் சோர்வடைந்த அவனை மகிழ்விக்குமாறு கூறி அனுப்புவாள். அங்கு செல்லவேண்டியவள் தவறொன்றினால் அரசனின் மைத்துனனால் அனுப்பப்பட்ட வண்டிலில் சென்று மாட்டுப்பட்டிருப்பாள். தன்னை ஏற்க மறுத்த வசந்தசேனையை அக்கொடியவன் தாக்கியதில் மூர்ச்சையுறுவாள் வசந்தசேனை. அவள் இறந்துவிட்டதாகக் கருதி அவன் வெளியேறியபோது வந்துசேர்ந்த சருதத்தனின்மீது கொலைப்பழியைப்போடும் அரசனின் மைத்துனன் மரணதண்டனையைத் தெர்ப்பாக்கி நிறைவேற்றும் எத்தனிப்பில்.</span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;">இந்த அகவாழ்வுப்போராட்டத்தின்போது வெளியே புற வாழ்வுப்போராட்டத்தில் அடிப்படையான ஒருமாற்றம் ஏற்பட்டிருந்தது. வசந்தசேனையிடமிருந்து தனது காதலியை மீட்டுச் சென்று கொண்டிருந்தானல்லவா "திருட்டு" வாலிபன்; போகும் வழியில் அவன் அறியும் செய்தியால் காதலியைத் தனியே வீடுபோக அனுப்பிவிட்டுச் சமூகப் பொறுப்பேற்க அவன் கிளம்பியிருப்பான். அவனது உற்ற நண்பனான இடையரிளவல் அரசனால் சிறைப்பட்டிருப்பதான செய்திதான் அவனைச் சமூகப் பணிக்குக்கு மீட்டிருந்தது. இவனால் சிறை மீட்கப்பட்ட இடையரிளவல் தப்பிச் செல்லும் வழியில் சாருதத்தன் உதவியையும் பெற்றிருந்தான். இறுதிக்கட்டத்தின்போது கொடுங்கோல் அரசனை வீழ்த்தி ஆட்சியைப் பொறுப்பேற்றிருந்தான். அவனது பணிப்பின்பேரில் "திருட்டு" நண்பன் சாருதத்தனின் புதிய பதவியை அறிவிக்கும்பொருட்டுவரும்போது கொலைக்களத்திலிருந்து மீட்கப்படுவான். கூடவே அரசனின் மைத்துனனின் கபடங்கள் அம்பலத்தில்; இறந்ததாக விடப்பட்ட வசந்தசேனையின் அசைவிலிருந்து உண்மையறிந்த துறவியொருவரால் காப்பாற்றப்பட்ட வசந்தசேனையும் கொலைக்களத்திற்கு வந்து உண்மைகளை வெளிப்படுத்தியிருப்பாள் - அவளையும் அவளூடாக சாருதத்தனையும் காப்பாற்றும் துறவியுங்கூட முன்னர் சாருதத்தனின் உதவியைப்பெற்றவர்தான். இப்போது மக்களும் கொடுங்கோலரசுக்கு எதிரான புதிய அரசுக்கு ஆதரவாக ஒருங்குதிரள்வர். எல்லாம் நலமே!</span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;"> --2--</span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><br /></span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><br /></span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;">எவரும் எதிர்பார்க்கக்கூடியவாறு பல நூற்றாண்டுகளின் முந்திய இந்த நாடகத்தை இப்போது மேடையேற்றுவது அவசியமா என்ற கேள்வி எழவேசெய்துள்ளது. ஏப்ரல் மாத முடிவில் கொழும்பில் "மிருச்சகடிகம்" மேடையேற்றப்பட்டபோது, சொந்தப் பெண்டாட்டி அவ்வளவு ஆதரவாயிருக்க அவருக்கு இன்னொரு காதல் வேண்டிக்கிடக்கோ என்ற கேள்வியெழக் காணமுடிந்தது. சரி, அதைவிட்டுப்பார்த்தால் நாடகம் எப்படி என்ற போது "உண்மைதான் - அற்புதமாயிருந்தது" என்ற பதிலே வந்தது. இருவாரங்களின் பின்னர் நண்பர் சி.ஜெயசங்கரின் "மிருச்சகடிகம் நாடக ஆற்றுகையும் அதன்போது வெளியிடப்பட்ட பிரசுரம் ஆகியவற்றை முன்வைத்து..." என்ற விமர்சனம் "தினக்குரல்" பத்திரிகையில் வந்ததைப் பார்த்தபோதும் நண்பர்கள், இந்த விமர்சனங்களைக் கடந்து நாடகம் நன்றாய்த்தானே இருந்தது என்ற பதிலையே காணமுடிந்தது.</span></div>
<div class="separator" style="border-collapse: collapse; clear: both; color: #222222; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6FFm35pIzyDuk13EjqdBK_BRSvioGydXwi9VaA2qdp0OkgjT-svFm0r94BrFjiBZP4CD1ljcxnjvq9AGxuwWC6rob3qb_R_E10AsOQI7YtEWhR7SXRUrWKXIX_ZkbLBDeX0ZECPy2QGwf/s1600/king1+5.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-left: 1em;"></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPOO_mMw4uSKC_CUbGOehyCHWZsB8P0WnPt1Kh7qUXMcC_-jG9hWIzXeDUrdJbbwY8ceINtwxaqDXzWv4-vSwELWA3oj8W1ML_7hZAExQjyRsMERjLBH6J8PLS8YoNsVJGNWXLGEANjE80/s1600/kc+7.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-left: 1em;"><span class="Apple-style-span" style="font-family: inherit;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPOO_mMw4uSKC_CUbGOehyCHWZsB8P0WnPt1Kh7qUXMcC_-jG9hWIzXeDUrdJbbwY8ceINtwxaqDXzWv4-vSwELWA3oj8W1ML_7hZAExQjyRsMERjLBH6J8PLS8YoNsVJGNWXLGEANjE80/s1600/kc+7.jpg" /></span></a></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;">ஜெயசங்கர் முன்வைத்த விமர்சனத்தில் அடிப்படையான இரு அம்சங்களுண்டு. ஒன்று அரங்கியல் பிரச்சனை. நாடகத்தரப்பினரும் சரி, விமர்சனத்தை முன்வைத்த நண்பரும் சரி அரங்கியல் துறைக் கல்விப் புலம் சார்ந்தவர்கள். அவர்களைமீறி நாங்கள் மூக்கை நுழைப்பது அதிகப்பிரசங்கித்தனம் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அரங்கியல் நுட்ப விவாதங்கள் கடந்து ரசனை நிலையிலிருந்து நாம் பேசுவதில் தப்பிருக்காது. இந்த நாடகம் சமஸ்கிருதப் பிரதி என்கிறவகையில், சமஸ்கிருத அரங்கு பற்றிய பரிச்சயத்துடன் அல்லது அந்த மரபுகளை உள்வாங்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்க வேண்டும் - ஆற்றுகை கிழக்கு பல்கலைக் கழக மற்றும் விபுலானந்தர் கலைக் கல்லூரி நாடக கற்கை மாணவர்கள் பங்கேற்பு என்கிறவகையில் இந்த எதிர்பார்ப்பு சரியானதுதான். அதை அவர்கள் தமது கல்விக் கலந்துரையாடலிலும் பெற்றுக்கொள்ள இயலும். பொது ரசனை என வரும்போது சினிமாப்பாணியில் அமைந்துவிட்டது என்பது விமர்சகரின் குற்றச்சாட்டு. </span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;">இப்போது எமது கவனிப்புக்குரியது, விமர்சகர் வெளிப்படுத்தும் அரசியல் குற்றச்சாட்டுகள் தொடர்பானது. அரங்க அரசியல், இனத்துவ அரசியல் என்கிற இரு தளங்களிலும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. "போருக்குப் பின்னரான சூழலில் பெரும் பொருட் செலவில் உயர் கல்வி நிறுவனமொன்றின் அரங்கியல் மாணவர்களை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மிருச்சகடிகம் நாடகம் ஈழத்துத் தமிழர்களின் நவீன அரங்க வரலாற்றில் ஒரு புறநடையாகவே காணப்படுகின்றது.ஏனெனில் ஈழத் தமிழரது நவீன அரங்கு பேராசியர் க.கணபதிப்பிள்ளை காலம் தொடங்கி இற்றைவரை ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், விலக்கிவைத்தல்கள், விளிம்பு நிலைகளில் வைத்திருத்தல் என்பவற்றை கேள்விக்குட்படுத்தியும் மாற்றுத்தளங்கள் பற்றிய உரையாடல்களை முன்மொழிந்துமே இயங்கி வருவது வரலாறாக இருக்கிறது....கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலான ஈழத் தமிழர்களின் நவீன அரங்க வரலாறு உலகத்தின் புதுமைகளைத் தன்னகத்தே உள்வாங்கி இயங்கிவருவதுடன், புதுமைகளை உருவாக்கியும் அளித்திருக்கிறது என்பதும் யதார்த்தம்". </span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;">இந்த அரங்க அரசியலில் நவீன கலைத்துவ மேன்மையைக் கடந்து சினிமாப்பாணிக்கு இந்த நாடகம் சென்றிருப்பதாகக் குற்றம் சாட்டப்படுவதை ஏற்க இயலவில்லை. இங்கு சொல்லபடும் வகையில் கணபதிப்பிள்ளை தொடக்கிவைத்த மரபின் தொடர்ச்சியான மற்றொரு புதுமையாகவே "மிருச்சகடிகம்" அரங்க ஆற்றுகை அமைந்திருந்தது. இதனைச் சினிமாப் பாணியெனக் கொச்சைப்படுத்திவிட முடியாது. அப்படித்தான் அந்தக்கலப்பு உள்ளது என்றால் மேன்மையான கலைத்துவ எழுச்சியைப் பாதிக்கும் வகையிலாய் இல்லாமல் செழுமைப்படுத்தும் அளவிலேயே அமைந்துள்ளது. இந்த இணைவு(சினிமாத் தாக்கம் கலைத்துவத்தைச் சிதைக்காமல் நாடக அனுபவத்தை மேன்மைப்படுத்தல்) புதுமையின் பாற்பட்டதே. </span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;">இதற்கு தமிழக அரங்கியலாளரான வெளி ரங்கராஜன் கருத்தைத் துணைக்கு எடுப்பது அவசியமாகின்றது. அங்கு நவீன நாடகத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதுகுறித்த கருத்தாடல் ஒன்று வெளி ரங்கராஜன் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன்போது இக்கருத்தை அவர் முன்வைத்தார்; தி.மு.க. எழுச்சியுற்றுவந்த ஐம்பதாம் ஆண்டுகளில் நாடக மேடைகளை உச்ச அளவில் பயன்படுத்திக்கொண்டனர். அந்த நாடகங்களின் பெரும்பகுதி அவர்களது கொள்கைவிளக்க உரைவீச்சுக்களாயே இருந்தன. நாடக அர்ங்கைப் பேச்சு மேடையாக்கியதற்கு மறுதலையாக, அரசியல் பிரசார மேடையை ஒருவகை நாடகப் பாங்குக்குரியதாக்கிக் கொண்டனர்; அதுவரை ஒரேயிடத்தில் நின்று பேச்சாளர் உரையாற்றுவது என்ற மரபை உடைத்துக்கொண்டு, அவர் உணர்ச்சி வேகத்துக்கு அமைவாக அங்கும் இங்கும் பாய்ந்து பாய்ந்து பேசி நாடக அனுபவத்தை உணர்த்தும் பாங்கு ரசிக்கத்தக்கதாயே இருந்தது. இரு(நாடக, பேச்சு) அரங்கங்களின் தனித்தனியேயான புனிதங்களை ஒரு தேவையின் நிமித்தம் உடைத்துக்கொண்டு மக்களை ஈர்க்க முடிந்தமை கவனிப்புக்குரியது; அதனின்றும் நவீன அரங்கியலாளர் கற்றுக்கொள்வது அவசியம் என்பது வெளி ரங்கராஜன் கருத்தாகும். </span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYk7fA85Qb1dIR3rtTkuScrepDDN2zMsWZ-5nnDsL-psviwaiJ56JMfkIBWDYR1E9x53ZpqXoYvemgcNy4qIq8jrq_hXNpSCwDNMg4cWqAn69HPjsgChMxud49JHmmHVopOnzumdtgCrV0/s1600/Ravanesan+001.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><span class="Apple-style-span" style="font-family: inherit;"><img border="0" height="214" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYk7fA85Qb1dIR3rtTkuScrepDDN2zMsWZ-5nnDsL-psviwaiJ56JMfkIBWDYR1E9x53ZpqXoYvemgcNy4qIq8jrq_hXNpSCwDNMg4cWqAn69HPjsgChMxud49JHmmHVopOnzumdtgCrV0/s320/Ravanesan+001.jpg" width="320" /></span></a><span class="Apple-style-span" style="font-family: inherit;">அன்றைய சினிமாக் கலையிலும் திராவிடர் இயக்கத்தினர் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தனர். முன்னதாக கூத்துப்பாணியின் தாக்கம் சினிமாவில் அதிகமிருந்து, ஒரே பாட்டுக்கச்சேரியாக இருந்த பண்பை மாற்றி சினிமாவையும் பேச்சு மேடை போலாக்கிக் கொண்டனர். ஐம்பதுகளின் முடிவிலிருந்து எழுபதுகளின் தொடக்கம்வரை தமிழ்கூறு நல்லுலகின் ஒலிபெருக்கிகள் எங்கும் பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டப்பொம்மன் வசனங்கள் தூள்கிழப்பியிருந்தன. புதிய சினிமா நடிகன் ஆவதற்கான பிரதான பயிற்சிக்குரியதாக இந்த வசனங்களைப் பேசிக்காட்டுவது அவசியமாயிருந்தது. இந்த வசனங்களைப் பேசிநடித்த சிவாஜி கணேசன் சினிமா ஊடகத்தையே புரிந்து கொள்ளாமல் நாசப்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாக நேர்ந்தது. அந்தக் குற்றச்சாட்டிலிருந்து அவரை மீட்டது மிக முக்கிய திறனாய்வு ஆளுமையான கா.சிவத்தம்பி என்பது கவனிப்புக்குரியது. இலக்கியத்தில் அழகியல் வாதத்துக்கு சரியும் அவரது திறனாய்வுக் கருத்துக்கள் வெளிப்பட்ட போது, பொதுவாக தமிழ்ச் சினிமா குறித்தும் குறிப்பாக சிவாஜி கணேசன் மறைவின் போது அந்தக் கலை ஆளுமை குறித்தும் கா.சி. எழுதிய கட்டுரைகள் வீச்சுடையனவாக இருந்தன. எண்பதுகளின் அழகியல் வாத அலை இலக்கியத்துறை விமர்சனத்தில் அவரை ஆட்டம் காணச் செய்தபோதிலும், அரங்கியல் தளத்தில் அவரை அசைக்க இயலவில்லை என்பதை சினிமா குறித்த அவரது ஆய்வுகள் காட்டின. தமிழ்ச் சினிமா வளர்ச்சியில் தமிழ்க் காப்பிய மரபினதும் பார்சி நாடகக் கலை மரபினதும் தொடர்ச்சி தாக்கம் புரிவதை விளங்கிக்கொள்வது அவசியம் எனபதை இதன்போது சிவத்தம்பி வலியுறுத்திருந்தார்.</span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;">மறுதலையாக, நாடக அரங்கின்மீது சினிமா அதன் சாதகமான பாதிப்பை ஏற்படுத்தமுடிந்தால் அரங்கப்புனிதம் எதுவும் சிதைந்துவிடப் போவதில்லை; செழுமைப் படுத்துவதாயே அந்தத் தாக்கம் கொள்ளத்தகும். "மிருச்சகடிகம்" அரங்காற்றுகையில் இருந்திருக்கத்தக்க சினிமாவின் தாக்கம் என்பது அத்தகைய புதுமைக்கான பரிமாணத்துக்குள் மட்டுப்பட்டு விடத்தக்கதே. காட்சிப் படிமங்களும், நடிகர்களின் உடல்மொழியும் முழுமையான அரங்க அனுபவத்துக்குப் பார்வையாளர்களை ஆற்றுப்படுத்தி, இக்கலைப்படைப்பு எத்தகைய வாழ்வனுபவத்தை ரசிகமனங்களில் ஏற்படுத்த வேண்டுமோ அதற்குரிய அளவில் வெளிப்பட்டன. சினிமாத்தனமான மலினம் ஏற்பட வாய்ப்புள்ள கணிகையான வசந்தசேனையின் பாத்திரமேற்று நடித்த மாணவியின் ஒவ்வொரு அசைவும் நளினங்களும் உரையாடலும் அற்புதமான கலை அனுபவங்களாய் அமைந்து நாடகப் பிரதி வெளிப்படுத்த முனைந்த வாழ்வனுபவத்தை ரசிகர்களிடம் தொற்றவைப்பதாகவே அமைந்திருந்தது. இதைப் பார்வையாளர்கள் விதந்துரைப்போடு சொல்லிச் சென்றதை அவதானிக்க முடிந்தது. அவ்வாறே "திருடனாக" பாதிரமேற்றவர் வெளிப்படுத்திய உடல்மொழிகளும் எவ்வகையிலும் மிகைப்படாமல்(அல்லது சினிமாத்தனமாயில்லாமல்), அளவோடு சொல்லவேண்டியதைச் சொன்னதாகவே அமைந்திருந்தது. அரசனின் மைத்துனன், சாருதத்தன்-அவனது அணுக்கத்தொண்டனான பிராமணன்(இவரது பேச்சு சிலவேளைகளில் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக அமந்திருந்தது) ஆகியோரும் அடுத்தநிலையில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர். சொன்னாற்போல, சிறிய மண்வண்டிலோடு விளையாட்டுக் காட்டி, படைப்பின் மையக்கருவாக இருந்த வாழ்வில் "விதியின்" விளையாட்டை வெளிப்படுத்தவேண்டிய அளவோடு உணர்த்தி நடித்த பாடசாலைச் சிறுவனும் பாத்திரம் அறிந்து போடத்தக்க வேடம் பூண்டிருந்தமையும் பார்வையாளர்களது கவனத்தை ஈர்ப்பதாக அமந்திருந்ததைச் சொல்லமறந்துவிட முடியாது. தவிர, ஒவ்வொரு பாத்திரத்துக்குமுரியவர், அந்த அரங்கு வெளிப்படுத்த முனைவதில் தனக்குரியதைப் புரிந்து கொண்டு இயங்கியிருந்தார்கள் என்பது அழுத்தி வலியுறுத்துவது வெறும் சம்பிருதாய பூர்வமான பாராட்டாக அமையாது.</span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;">உண்மையில் இந்த நாடகம் பற்றிப் பேசவேண்டும் என்ற தூண்டலை ஏற்படுத்துவதில் இந்த அரங்காற்றுகையில் பங்கேற்ற ஒவ்வொருவரது அர்ப்பணிப்பான பங்களிப்பும் காரணியாக அமைந்தது என்பது வலியுறுத்தப் படுவது அவசியம்.</span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;">என்னதான் அரங்கக் கல்வி உயர் நிறுவன மாணவர்கள் என்றபோதிலும், சமூக அக்கறையோடு இத்தனை தொகை மாணவர்கள் ஒருங்கு திரண்டு பொறுப்புணர்வுடன் இயங்கி இருக்கிறார்கள் என்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தவிர இந்த வளம் எதற்காக பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதும் கவனிப்புக்குரியது. அது சார்ந்ததாகவே ஜெயசங்கரின் அடிப்படையான விமர்சனம் அமந்திருந்தது. அது அழுத்தம் கொடுத்துக் கவனிக்க வேண்டிய ஒரு அம்சமே.</span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><br /></span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;"> --3--</span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><br /></span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6FFm35pIzyDuk13EjqdBK_BRSvioGydXwi9VaA2qdp0OkgjT-svFm0r94BrFjiBZP4CD1ljcxnjvq9AGxuwWC6rob3qb_R_E10AsOQI7YtEWhR7SXRUrWKXIX_ZkbLBDeX0ZECPy2QGwf/s1600/king1+5.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-left: 1em;"><span class="Apple-style-span" style="font-family: inherit;"><img border="0" height="261" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6FFm35pIzyDuk13EjqdBK_BRSvioGydXwi9VaA2qdp0OkgjT-svFm0r94BrFjiBZP4CD1ljcxnjvq9AGxuwWC6rob3qb_R_E10AsOQI7YtEWhR7SXRUrWKXIX_ZkbLBDeX0ZECPy2QGwf/s320/king1+5.jpg" width="320" /></span></a><span class="Apple-style-span" style="font-family: inherit;">இந்த நாடகம் ஏற்கனவே சிங்களத்தில் "மெட்டிக்கரத்தய" என சிறியமண்வண்டில் என்ற பொருள்பட 2000 ஆம் ஆண்டிலிருந்து மேடையேற்றப்பட்டு வருகிறது; அதன் நெறியாளர் சிங்கள அரங்கின் சமகால ஆளுமைகளில் ஒருவரான பராக்கிரம நெரியெல்ல. அவ்வாறு சிங்கள மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கப்பட்ட "மிருச்சகடிகம்" சமஸ்கிருதத் தலைப்போடு, பராக்கிரம நெரியெல்லவின் நெறியாள்கையில் தரப்பட்டுள்ளது. தமிழ் அரங்க ஆற்றுகைக்கு நிர்வாக நெறியாளராக தமிழ் அரங்கின் சமகால ஆளுமைகளில் ஒருவரான சி.மௌனகுரு திகழ்கிறார்..இந்த சிங்கள-தமிழ்க் கூட்டு விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.</span></div>
<div style="border-collapse: collapse; color: #222222;">
<span class="Apple-style-span" style="font-family: inherit;">இந்த நாடக வாயிலான இணைப்பு கலாசார ஒற்றுமைக்கு வழிசமைக்கும் என நம்பப்படுவதாக நாடகம் தொடர்பிலான பிரசுரம் ஒன்று கருத்துரைத்துள்ளது. இது தொடர்பில் ஜெயசங்கர் கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளார். "உரிமைகள் பற்றிய நிலைமைகளுக்கும், விடயங்களுக்கும் விளக்கங்கள் காணமுடியாமல் பேசப்படுகின்ற கலாசார ஒற்றுமை என்பது எங்கனம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடியது? கலாசார சங்கமம் பற்றிப் பேசப்படுகின்ற பொழுதுகளில் எழுகின்ற கேள்விகளில் அடிப்படையானவை எவை? வித்தியாசமான பண்பாடுகளின் கொண்டாட்டம் பரிந்துரைக்கப்படாமல் கலாசார சங்கமம் முன்மொழியப்படுவதன் நோக்கம்தான் என்ன?" எனும் நியாயமான கேள்விகளை எழுப்புகிறார் ஜெயசங்கர்.</span></div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;"></span><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;"></span></span><br />
<div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;">இந்த நாடக முயற்சியை மட்டும் பார்த்தால் கலையிலும் சிங்கள மேலாதிக்கத்துக்கு இடம் கொடுத்தது போன்ற தோற்றம் எழலாம்தான்; அவ்வாறன்றி, பராக்கிரம நெரியெல்லவின் தொடர்ச்சியான முந்திய முயற்சிகளையும் பார்ப்போமானால் இந்தச் சந்தேகம் அவசியமற்றது எனப் புரிந்துகொள்வோம். அவர் யுத்தகாலத்திலேயே தமிழ்க் கலைஞர்களைச் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். ஒருபிரதியை, தமிழில் சிங்கள நடிகர்களை வைத்தும் சிங்களத்தில் தமிழ் நடிகர்களை வைத்தும் மேடையேற்றி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றவர். தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து கொழும்பில் மேற்கொண்ட இதுபோன்ற முயற்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஜெயசங்கர் இந்த முயற்சிகளை அறிந்திருப்பார் என்றே நம்புகிறேன்.</span></span></div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;">
</span><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;"></span></span><br />
<div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;">பண்பாட்டு ஆக்கிரமிப்பு உணர்வோடு இயங்கியவரல்ல பராக்கிரம நெரியெல்ல. சிங்களக் கலைஞர்களின் நட்புணர்வைத் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தும் சமத்துவப் பண்பைக் காட்டுவதோடு, சிங்கள மக்களுக்குத் தமிழர் பிரச்சனைகளைத் தெளிவுபடுத்த முயற்சிக்கிறவர். இந்தக் குணாம்சம் இல்லாதிருப்பதே இலங்கையின் பெரும் சாபக் கேடாகும். தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர்விடுதலை கூட்டணி என்பன தமிழர் மத்தியில் வெறும் இனவாதத்தை வளர்க்கும் அரசியல் யுத்தத்தினூடாக தமக்கான பாராளுமன்ற ஆசனங்களைப் பெருக்கினரே அன்றித் தமிழர் பிரச்சனைத் தீர்வுக்காக எந்தப் போராட்டங்களையும் முன்னெடுத்தவர்களல்ல; அதோடு சிங்கள மக்கள் தவறான புரிதல் கொள்ள வாய்ப்பளித்து அங்கே தம்மைப்போன்று சிங்கள இனவாதிகள் ஆதாயம் பெற வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தனர். முப்பது வருட யுத்தத்தின் அரசியலும் இதேபோன்றே இருதரப்பு இனவாதிகளும் மக்களைப் பிளவுபடுத்துவதாய் இருந்ததன்றி வேறல்ல. இந்த ஆதிக்கக் கும்பல்களுக்கு தமிழ்-சிங்கள மக்கள் ஐக்கியப்படக் கூடாதென்பதே அடிப்படைக் குறிக்கோள். இதனைத் தகர்த்து இருஇன மக்களும் ஐக்கியப்படுவதை விடுதலையை நேசிக்கும் எவரும் வரவேற்றாக வேண்டும். அதனையே பராக்கிரம நெரியெல்லவும் மௌனகுருவும் இங்கே செய்துள்ளார்கள்.</span></span></div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;">
</span></span><br />
<div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;">கொழும்பில் இந்த நாடகத்தை முதன் முதலில் பார்த்த சிங்கள மக்கள் தம்மால் புரிந்துகொள்ள முடிந்ததாகக் கூறியதைக் கேட்க முடிந்தது. ஒரு அரங்கில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து இருப்பதே இன்று பெரும் மகிழ்வுக்குரிய அம்சம்; அதனூடாக பரஸ்பரப் புரிந்துணர்வுக்கு வர என்ன செய்யப்பட வேண்டும் என்பதைத் தேடுவது அவசியம். அரசியல் அரங்கில் உரிமைகுறித்து எழுப்பப்படும் செயல் ஒழுங்குக்கு இந்த ஐக்கியம் வலுச்சேர்க்குமே அன்றி, இனபுரிந்துணர்வு என்பது எவ்வகையிலும் காட்டிக்கொடுப்பாக மாட்டாது. தமிழ்த் தேசியம் ஆண்டபரம்பரை மமதையை வெளிப்படுத்துவதும், சிங்களப் பேரின வாதம் ஏனைய சிறு தேசிய இனங்களை ஆக்கிரமிப்புக் கொள்ள முனைவதும் இத்தகைய கலைஞர்கள் ஏற்படுத்தும் 'கலாசார ஒற்றுமையால்' முறியடிக்கப்படும் வாய்ப்பே அதிகம். ஒரு அரங்கியல் கலைஞரும் அத்துறையின் கல்வி இயலாளருமான ஜெயசங்கர், மக்களைப் பிளவுபடுத்தும் பிற்போக்கு அரசியல்வாதிகள் போலன்றி, மக்களை ஒன்றிணைக்கும் உயர்ந்த கலையுள்ளத்தையே வெளிப்படுத்துவார் என நம்பலாம்.</span></span></div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;">
</span></span><br />
<div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;"><br /></span></span></div>
<span class="Apple-style-span" style="font-family: inherit;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;">
</span><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;"></span><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;"><div>
--4--</div>
<div>
<br /></div>
</span><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;"><div>
இனப்புரிந்துணர்வையும் இன ஒற்றுமையையும் ஏற்படுத்துவதை இந்த நாடகப் பேசுபொருள் எந்த அளவில் சாத்தியப்படுத்த வல்லது? சொந்த மனைவிக்கு துரோகமிழைப்பதும், கொடுங்கோலரசைக் கிளர்ச்சியில் வீழ்த்துவதை முனைப்பாக்காமல் அடக்கி வாசிப்பதும், ஏவலாளர்கள் மேல் சவாரி செய்யும் உயர்சாதி மனப்பாங்கை வெளிப்படுத்துவதும் என எதிர் விழுமியங்களைப் பேசு பொருளாக்கியுள்ள இந்த நாடகமா இனப்புரிந்துணர்வை ஏற்படுத்திவிடப் போகிறது என்ற கேள்வியை மேலோட்டமாகப் பார்க்கும்போது நியாயம் போலவேபடும். மாறாக, முதல் பார்வை அனுபவத்தில் இத்தனை உத்தம குணங்களைக் கொண்டிருக்கும் தலைவன் கணிகையை நாடுவதென்பது தவிர்ந்த ஏனைய அம்சங்கள் எதுவும் நெருடலாக இருந்ததில்லை. </div>
<div>
வணிக மேலாதிக்கம் நிலவிய அதே வேளை அதன் வீழ்ச்சியோடு நிலப்பிரபுத்துவம் ஆதிக்கம் பெறவுள்ள மாற்றத்துக்கு சற்று முன்னதாக உள்ள காலமான கி.பி. நாலாம் நூற்றாண்டுக்குரிய கதை இது. வீழ்ச்சியுறும் வணிக ஆதிக்கத்தின் ஒரு குறியீடே சாருதத்தன் என்ற வணிகனின் வறுமையுறுதல் எனக் கருதலாம். செல்வச் செழிப்பின் மேட்டிமைப் பண்பின் வெளிப்பாடன்றி, ஏவலர்களுடனும் நட்பாகப் பழகும் பாங்கே நாடகம் முழுமையிலும் காணமுடிந்தது. கணிகையும் இலகுவாய் தனது அடிமைப் பெண்ணை காதலனுடன் அனுப்ப மனம் ஒப்புகிறவளாயுள்ளாள். </div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6eTECx3Cn_OJU7Yov3Al7X-RHzB_-lScoXmCU9HIpOqS0jSvPrvUGTB_8HbNwv55w0Nw32zsBx_h4Nb0rL-oxKp1lBB4NdQK85oldPae0Yz64g2XWP0EvxihyphenhyphenUlyH15110X3ZqP11HeSb/s1600/300px-Krishna_Narakasura+3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6eTECx3Cn_OJU7Yov3Al7X-RHzB_-lScoXmCU9HIpOqS0jSvPrvUGTB_8HbNwv55w0Nw32zsBx_h4Nb0rL-oxKp1lBB4NdQK85oldPae0Yz64g2XWP0EvxihyphenhyphenUlyH15110X3ZqP11HeSb/s1600/300px-Krishna_Narakasura+3.jpg" /></a>ஆணாதிக்கம் என்கிறவகையில் மனைவியோடு பேச்சுவார்த்தையில்லாமல் கணிகையை நாடும் தலைவன், மற்றும் காதலை ஏற்க மறுக்கும் கணிகையை வன்முறையால் அடைய முயலும் அரசனின் மைத்துனனின் துரத்தலும் இறுதியில் கொலை செய்யக்கூடிய அளவுக்கு ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதும் என்பவை கவனிப்புக்குரியன. இவை கூட மறுவாசிப்புக்குள்ளாகும்போது மாறுபட்ட அனுபவங்களைத் தரக் காணலாம். </div>
<div>
வறுமை எய்திய நிலையில் அவனது பொறுப்பற்ற தன்மையின் மீதான தனது எதிர்ப்புணர்வைத் தலைவி பேசாது ஒதுக்குவதன் வாயிலாக வெளிப்படுத்துகிறாள். அவளது மாணிக்கமாலை தரப்படும்போது தன் இயலாமையை அவள் இடித்துரைப்பதாக தலைவன் மறுகுவதில் அவனது தாழ்வுமனப்பான்மை வெளிப்படக் காணலாம். அதற்கான மாற்றாக கணிகைமீதான காதல் அமைகிறது. இதன் மறுதலை நடத்தையைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். மாதவி எனும் கணிகையுடனான காதல் வாழ்வில் பணம் அனைத்தும் தேய்ந்த தாழ்வுமனப்பான்மையோடு இருந்த கோவலன், சிறு ஊடலில் அவளைப் பிரிந்து மனைவி கண்ணகியை நாடிவருவான். வருபவனைத் தெருவில் நிறுத்தி நாக்கைப்பிடிக்கிற மாதிரிக் கண்ணகி நாலு கேள்வி கேட்காதது அன்றைய ஆணாதிக்க ஏற்புக்கு அமைவான காப்பிய வார்ப்பு; இன்றைய விழிப்புணர்வில் கண்ணகி குற்றக்கூண்டில் நிறுத்தப்படுவதைக் காணலாம். இந்த நாடகத்தில் முன்னதாக தனது வலிமையான எதிர்ப்புணர்வைத் தலைவி காட்டுகிறாள். </div>
</span><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;"><div>
அதுசரி, பிறகு எல்லாத்துக்கும் சேர்த்து கணவனை மகிழ்விக்க கணிகையைக் கூட்டிக்கொடுப்பவளாக அல்லவா காட்டப்படுகிறாள்? இங்கு ஆணாதிக்கத்துக்குரிய அம்சம் இருப்பது மெய்; அதைமீறி, கண்ணகியை விடவும் ஆளுமைக்குரிய பெண் என்பதை தலைவி உணர்த்தத் தவறவில்லை. கணிகை அந்தக் குடும்பத்தின் ஒரு அங்கமாகி இழந்த அவனது வணிக வாய்ப்பை மீட்டுக் கொடுத்து, தலைவிக்குமான நம்பிக்கையையும் தருகிறவளாக இங்கு உள்ளநிலையில், அவளது உண்மைக் காதலைத் தலைவி ஏற்றுக் கொள்கிறாள். இந்தமீட்பின் பின்னர் தாழ்வுமனப்பான்மையிலிருந்து தலைவன் மீள உள்ள வாய்ப்பினால் கணிகையோடு மட்டுமன்றித் தலைவியோடும் அன்னியோன்ய வாழ்வை அவன் சாத்தியப் படுத்த இயலும். அன்றைய பரத்தைமையை ஏற்புக்குரியதாய்க் கொண்ட வாழ்முறை இப்படைப்புக்கு வெளியேயான விமர்சனங்கள் ஊடாக மாற்றத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டிய ஒன்று. </div>
</span><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: #222222;"><div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG8np1O-esij2lhUVvgXcdZviHKhHnnHrg95CZ1fMj527zSEocd0DnahJkfyw-CZq1xx37NpnKG3A-KDaAVMWJ0vATHXZ8zCIa6MGgZ4Yh70okpWAjCM7y0Mp8UhyphenhyphenmBnPZGa-9i19r0GI9/s1600/Bullock_cart_mohenjo-daro.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="178" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG8np1O-esij2lhUVvgXcdZviHKhHnnHrg95CZ1fMj527zSEocd0DnahJkfyw-CZq1xx37NpnKG3A-KDaAVMWJ0vATHXZ8zCIa6MGgZ4Yh70okpWAjCM7y0Mp8UhyphenhyphenmBnPZGa-9i19r0GI9/s320/Bullock_cart_mohenjo-daro.jpg" width="320" /></a>இதற்கு அப்பால் மனித உறவுகளிடையே அன்றைய சமூக வளர்ச்சி ஏற்பட்ட தன்மைக்கு அமைவாக உன்னதப் பண்புகளை வெளிப்படுத்துவதாக இந்த நாடகம் அமைந்திருப்பது அழுத்தி வலியுறுத்தப்பட வேண்டிய அம்சமாகும். அநீதிக்கு எதிரான போராட்டமும் அன்றைக்கான அளவில் வெளிப்பட்டிருக்கிறது எனலாம். இக்காரணங்களினாலேயே இந்த நாடகப் பிரதியை ஒரு இலக்கிய வடிவமாய் கதிரவேல்செட்டியார் தமிழாக்கியபோது, அதற்கு விபுலானந்த அடிகள் முன்னுரை எழுதியிருந்தார். இப்பிரதியின் நாடகக் குணாம்சத்தில் துண்டாக்கலுக்கான நவீனத்துவ வாய்ப்பிருந்ததால் ஜெர்மனிய நாடக மேதை பிரெக்ட் இந்த நாடகத்தை விதந்துரைத்தார்(இது குறித்து உரையாடலின் போது இக்கருத்தை மௌனகுரு கூறியிருந்தார்; மேல் விபரங்களை அவர் விளக்க வேண்டும்). தவிர சமூக நோக்கிலான எமது பார்வையோடு, அர்ங்கியல் நோக்கும் இணைந்த மேலும் வளரும் திறனாய்வுகள் இன்னும் பல உண்மைகளை வெளிக்கொணரும் என நம்பலாம்.</div>
<div>
<br /></div>
<div>
நன்றி -புதுவசந்தம் 2012 </div>
</span></span></div>ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-25140482560335273442012-06-03T11:30:00.000-07:002012-06-03T11:30:57.639-07:00இரட்டைதேசியமும் பண்பாட்டுப்புரட்சியும்-8<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<b><u>]சமூக வர்க்கங்களிடையேயான போராட்டங்கள் வாயிலாக இயங்கும் வரலாறு பற்றி:--</u></b><br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbEGQN-1pNL9kn813Hn5wRDhtZcnZrhsED_R2l_Iz41_2CLiD-zXg9VMVfHD8JwaU4fHoOwC8JoxbM12qsygVTemBBWWFwhYAOufSBWGDN0-WKDatLJISjJ5bQMQwZAklmT8kekrGvTmHw/s1600/7577.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbEGQN-1pNL9kn813Hn5wRDhtZcnZrhsED_R2l_Iz41_2CLiD-zXg9VMVfHD8JwaU4fHoOwC8JoxbM12qsygVTemBBWWFwhYAOufSBWGDN0-WKDatLJISjJ5bQMQwZAklmT8kekrGvTmHw/s320/7577.jpg" width="288" /></a> கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் 1848 இல் எழுதிய "கம்யூனிஸ்ட் அறிக்கை" உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் அதிமுக்கிய நூல். சர்வதேச உணர்வோடு சமூக மாற்றக் கொந்தளிப்பில் இருந்த ஐரோப்பிய பாட்டாளி வர்க்க அணியின் கோரிக்கையின் அடிப்படையில் அந்த வரலாற்றுச்சிறப்புமிக்க படைப்பை அவ்விருவரும் எழுதியிருந்தனர். அந்த வரலாற்று முக்கியத்துவம் காரணமாக அதன்மீது அவசியப்பட்ட சில திருத்தங்களைக்கூட மூலப்பிரதியிலன்றி , பின்னால் அதன் புதிய பதிப்புகளுக்குரிய முன்னுரைகளில் வேண்டிய திருத்தங்களைக் குறிப்பிட்டிருந்தனர். பிரான்சியப் பாட்டாளி வர்க்கம் முதன்முதலில் அதிகாரத்தைப்பெற்ற 1871 பாரிஸ் கொம்யூன் தோல்வியுற்ற பின்னர், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம் என்பதை அத்தகைய முன்னுரையிலேயே குறிப்பிட்டனர்.<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqXFnO1VLcPESdBE9Cc5tSlx85Kd7SIos1tWQ3UhzkZWOJKqwrUxSaKO8qzU99Gv_4pM_4M3D0YEh0a7kN15FdAj7cRaIf6z5KU5x8BQPAoP3jsuUBr5bcM-uvAt6UPclUQvE7pOGxicLy/s1600/marx-eng6.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em; text-align: center;"><img border="0" height="218" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqXFnO1VLcPESdBE9Cc5tSlx85Kd7SIos1tWQ3UhzkZWOJKqwrUxSaKO8qzU99Gv_4pM_4M3D0YEh0a7kN15FdAj7cRaIf6z5KU5x8BQPAoP3jsuUBr5bcM-uvAt6UPclUQvE7pOGxicLy/s320/marx-eng6.jpg" width="320" /></a>"மனித வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்துவருகிறது" என்பதில், "எழுதப்பட்ட வரலாற்றில்" என்ற திருத்தம் பின்னர் சேர்க்கப்பட்டது. அவகாசம் இருந்திருப்பின் "மூலதனம்" ஆய்வின் பின்னர் "வர்க்கப்போராட்டம் மற்றும் சமூக வர்க்கங்களிடையேயான போராட்டங்கள் வாயிலாக வரலாறு இயங்கி வந்தது" என்பதை சேர்த்து இருப்பர். அதற்கான அடிப்படை மூலதனம் நூலில் உண்டு. ஆசிய உற்பத்தி முறையில் இருந்த வேறுபாட்டை, இங்கு ஐரோப்பாவில்போல அமைப்பு விருத்திகளை ஏற்படுத்தும் வகையில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதாக முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் எழுதிக்கொண்டிருந்த வேளை, மார்க்ஸ் அதன்மூலாதாரங்களைத் தேடிச் செல்லும் வகையில் தனது ஆய்வுப் பயணத்தை முன்னெடுத்துச் சென்றார். இங்கு வர்க்கப்பிளவு ஏற்படாமல் முன்னேறிய இனமரபுக்குழு ஏனையவற்றை ஒடுக்கிச் சுரண்டுவதன் வாயிலாக ஏற்றத்தாழ்வுச் சமூக முறை தோன்றியது எனக்கூறிய கார்ல் மார்க்ஸ், இனமரபுக்குழுக்களின் நீடிப்பே சாதிகள் என்பதையும் கூறியிருந்தார்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhKDWdYz_IHA5z-8NQyRadJOQq04lptuiZDOTwlggH9m3jPPf8N2JpYyg5O3RJKfKRpsc13k6o1hCMWVE0jkroU3QkGXFbefwxute2RWOxPTKEtAzmaDXpDqdapZQQGRZ-TpF-t0TVTifO/s1600/111358595.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhKDWdYz_IHA5z-8NQyRadJOQq04lptuiZDOTwlggH9m3jPPf8N2JpYyg5O3RJKfKRpsc13k6o1hCMWVE0jkroU3QkGXFbefwxute2RWOxPTKEtAzmaDXpDqdapZQQGRZ-TpF-t0TVTifO/s320/111358595.jpg" width="240" /></a> ஆரம்பத்தில் இங்குமாற்றங்கள் நடந்திருக்கவில்லை என்ற கூற்றை நம்பியதுபோலன்றி, இந்த ஆய்வு ஆழப்பட்டபோது சமூக அமைப்புமாற்றங்கள் இங்கு நடந்தேறியமையை மார்க்ஸ் புரிந்துகொண்டார். அந்தத் திசையில் தொடர்ந்து ஆய்வினை வளர்த்திருப்பின், வர்க்கப்போராட்டங்கள் மூலமாக மட்டுமின்றி, சாதிகளிடையேயான போராட்டங்கள் வாயிலாகவும் வரலாறு இயங்கியுள்ளது என்ற திருத்தத்தைச் சேர்த்திருப்பார். வர்க்கப்பிளவு தனிமனிதர்களாய் மக்களை ஆக்கியது போலன்றி சாதிகளான இனமரபுக்குழுக்கள் சமூக வர்க்கங்களாய்ச் செயற்படுகின்றன. இன்றைய முதலாளித்துவச் சமூக அமைப்பில் ஒடுக்கும் தேசம் ஆளும் சமூக வர்க்கமாக இருக்கும்போது, ஒடுக்கப்படும் தேசங்கள் சுரண்டப்படும் சமூக வர்க்கங்கள் ஆகின்றன. ருஸ்யப் புரட்சியின் பின்னர் தேச விடுதலைப் போராட்டங்கள் வாயிலாக சோஸலிஷம் வெல்லப்பட்டதை மார்க்ஸ் இருந்து கண்டிருப்பாராயின், "சமூக வர்க்கங்களிடையேயான போராட்டங்கள் ஊடாகவும் வரலாறு முன்னேறுகிறது" எனும் திருத்தத்தை இணைத்திருப்பார்.<br />
அவர் எழுதாதபோதிலும் அவர் இருந்தால் எப்படிச் சிந்தித்திருப்பார் என்ற பரிச்சையத்தை நாம்கொள்ளும் வகையில் எங்களைப் பயிற்றுவித்திருக்கின்றனர். லெனின் தனது காலத்தில் ஏற்பட்ட மாற்றத்துக்கு ஏற்ப மார்க்சியச் சிந்தனைமுறையை எவ்வாறு வளர்ப்பது என வருகிறபோது, மார்க்ஸ் இந்தநிலைமையை எவ்வாறு முகங்கொண்டு சிந்திப்பாரோ அவ்வாறு சிந்திக்க வேண்டும் எனக்கூறியதன் வாயிலாக இதனை உணர்த்தியிருந்தார். அந்தவகையில், சமூக வர்க்கங்களிடையேயான போராட்டங்கள் அண்மைக்காலத்தில் இயங்கியவாறினை எழுதிப்பார்ப்பது சுவாரசியமான முயற்சியாய் அமையும்.<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7Z-v-RzcXFrXyoXyrRTyXnDBpcEvDwDHZGxt4twYxCDzP15A06fJbc8dQ0jIwKJRBjdE7SVQ6qri3nG808v-KIukwwFeyscrI4CuyUiqk0IYMusKOYs3NWeyTymKkQIVA50Yj-xSHiArw/s1600/585174082.jpg" imageanchor="1" style="clear: right; display: inline !important; float: right; margin-bottom: 1em; margin-left: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7Z-v-RzcXFrXyoXyrRTyXnDBpcEvDwDHZGxt4twYxCDzP15A06fJbc8dQ0jIwKJRBjdE7SVQ6qri3nG808v-KIukwwFeyscrI4CuyUiqk0IYMusKOYs3NWeyTymKkQIVA50Yj-xSHiArw/s1600/585174082.jpg" /></a>இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி(ஐ.தே.க.) ஆட்சியில் இருந்தபோது பிரித்தானிய ஏகாதிபத்தியம் தன் சார்பான சுரண்டலைத் தொடரும் பொறுப்பை அதனிடம் கையழித்து டொமினிக்கன் அந்தஸ்த்துள்ள குடியரசாக அங்கீகரித்தது. ஐ.தே.க. சிங்கள ஆளும் சாதியான கொவியா தலைமையில் இயங்கியது. அது பிரித்தானிய ஏகாதிபதியத்துடன் கைகோர்த்து தரகுமுதலாளித்துவ உறவில்(உள்ளூரில் பிரபுத்துவ ஊடாட்டத்துடன்) திருப்தியுறுவது. அதுவும் ஒருவகைத் தேசியம்(பிரபுத்துவத் தேசியம்) தான். கொவியா சாதியினர் ஏனைய சாதிகளை அணிதிரட்டி அந்தப் பிரபுத்துவத் தேசியத்தை சிறிதுகாலம் இயக்க வல்லவர்களாய் இருந்தனர். கொவியா நமது வெள்ளாளர் போன்ற வேளாண்மை தொடர்பான நிலப்பிரபுத்துவ அமைப்புக்கான ஆளும் சாதி; இலங்கைத் தமிழரின் கட்சியாக அப்போது இருந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் யாழ்.வெள்ளாளத் தலைமையில் தமிழ்ச் சாதிகளை அணிதிரட்டியிருந்தது. அந்தவகையில் ஐ.தே.க. அரசில் ஆளும் சாதியவர்க்க அணிசேர்க்கையாக காங்கிரஸ் இணைந்திருந்தது. அதெப்பிடி தமிழ்த் தேசியம் உரிமைகள் பற்றிய உணர்வின்றி பேரினவாதத்தோடு கூட்டமைத்தது என்று கேட்கமுடியாது. இனம் இனத்தோடு சேரும் என்றவகைப்பாடு இது. அப்போது எதிர்க் கட்சியாக அமைந்தது தொழிலாளர்களை அணிதிரட்டியிருந்த பாட்டாளி வர்க்கக் கட்சி( சம சமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி எனப் பாட்டாளி வர்க்கக் கட்சி இரண்டு பட்டிருந்தது). தொளிலாளர்களாய் மிகப் பெரும்பான்மையினராக ஒடுக்கபட்ட சாதியினரே இருப்பது யதார்த்தம் என்ற வகையில் ஒடுக்கப்பட்டோர் கட்சியாக அடையாளப்படுத்தப் பட்டதுண்டு. தமிழில் கொம்யூனிஸ்ட் கட்சி என்றால் நளவர்-பள்ளர்(தமிழகத்தில் பள்ளர்-பறையர்) கட்சி என்பது ஏதோ தற்செயலாக ஏற்பட்டுவிட்ட விடயமல்ல. இத்தகைய சாதி அடையாளத்தை மீறி சமூகமாற்றத்தை வேண்டிநிற்கும் உயர்சாதி உழைக்கும் மக்களும் முற்போக்கு சக்திகளும் பாட்டாளி வர்க்கக் கட்சிகளில் இணைந்திருந்தனர்; ஆதிக்கச் சாதிக் கட்சிகளில் உயர்வர்க்கநிலை அடைந்த ஏனைய சாதிகளைச் சேர்ந்தவர்கள் அணிதிரட்டப்படுவதுபோல. தவிர, ஒருவர்க்கமோ சாதியோ தனது நலன் எதையும் வென்றெடுக்க முயல்கிறபோது, அதனோடு ஒத்து தமது நலன் களை வெறெடுக்கப் போராடும் ஏனைய வர்க்கங்களின் மற்றும் சாதிகளின் அணி சேர்க்கையோடுதான் சாத்தியப் படுத்தையலும்.,<br />
இலங்கையில் சிங்கள-தமிழ் ஆளும் சாதிகளின் ஐக்கியம் முன்னரே ஏற்பட்டிருந்தது. இலங்கையின் முதல் இனக்கலவரமாக அமைந்த முஸ்லிம்களுக்கு எதிரான 1915 ம் ஆண்டின் பேரின வாதத்தின் தாக்குதல் காரணமாக டி.எஸ்.சேனநாயக்க போன்ற கொவியாத்தலைவர்கள் சிறையிடப்பட்டனர். அவர்களை மீட்க நமது வெள்ளாளத் தலைவரான சேர்.பொன். இராமனாதன் உலகயுத்தம் நடந்துகொண்டிருந்த ஆபத்தான சூழலிலும் பிரித்தானியா சென்று வெற்றியோடு திரும்பியிருந்தார்(ஐயோ, பாதுகாப்பாக வர்க்க அடையாளத்தை அந்தத் தலைவர்களுக்கு கொடுக்க வேண்டியது தானே, ஏன் சாதி அடையாளம் என்று அலறுகிறவர்களுக்காக, அவர்களெல்லாம் அந்த ஆளும் சாதிகளின் நலன் களைப் பாதுக்காக்கவே முயன்றனர் என்ற உண்மையை மூடிமறைத்துவிட முடியாது; தமது ஆளும் சாதியவர்க்க நலன் பேணப்படுவதை உத்தரவாதப்படுத்திய வண்ணம் 'முழு மக்களுக்காகவும்' அவர்கள் உழைத்தார்கள் என்கிறவகையில் 'தேசிய' மற்றும் 'சிங்கள' அல்லது 'தமிழ்' தலைவர்களாக அவர்கள் கொண்டாடப்படுகின்றனர்). அடுத்து நடந்த சட்ட மன்றத்துக்கான தேர்தலில் இலங்கையருக்கான ஆசனத்தை தமது சகபாடியான வெள்ளாளத் தலைவருக்கு வழங்க கொவியாத் தலைவர்கள் முன்வந்தனர். எதிர்த்து வேட்பாளராக நின்றவர் கரவா சாதித் தலைவர். கொவியா-வெள்ளாளக் கூட்டினால் அந்த கரவாத் தலைவர் தோற்கடிக்கப்பட்டார்.<br />
இது பின்னால் இலங்கை இனப்பிரச்சனையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் முதன்முதலில் சிங்கள வணிககுலாமாக தோன்றி வளர்ந்த பிரிவினராக கரவா சாதியினர் இருந்தனர். ஏகாதிபத்தியத்தோடு தரகு உறவில் ஆட்சியைப் பங்குபோட்டுள்ள கொவியா-வெள்ளாள ஆட்சியாளர்களிடமிருந்து தேசிய முதலாளித்துவ வளர்ச்சி பெறப் போராடும் கரவாசாதியினர் அதிகாரத்தைக் கைமாற்றியெடுக்க முயலும்போது அந்த ஆளும்சாதிகளுக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. இதன் வெளிப்பாடாக சிங்கள தேசிய சக்திகள் வெள்ளாளர்களுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பேரில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக இயங்கினர்(துர்ரதிஷ்டவசமாய்த் தமிழ்த் தேசியம் யாழ்.வெள்ளாளத் தேசியமாயே இயங்கி வந்தது). கரவா-வெள்ளாள எதிர்ப்பு சிங்கள-தமிழ் எதிர்ப்பாகப் பரிணமித்தமை குறித்து ச.சத்தியசீலன் "இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங்கள்" நூலில்(பக்.60-61) தெளிவுபடுத்தியுள்ளமை காரணமாய் இங்கு விரித்துரைப்பதைத் தவிர்க்கிறேன்.<br />
பண்டாரநாயக்க தலைமையில் தேசிய முதலாளித்துவ எழுச்சி ஏற்பட்டு 1956 இல் ஆட்சியைக் கைப்பற்றியபோது சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் மிகப்பெரும் சக்தியாக அணிதிரண்டவர்கள் பிரதானமாய் கரவா சாதியினர். இந்தத் தேசிய முதலாளித்துவ எழுச்சியின் தலைவராக இருந்தவர் கொவியா சாதியினர் என்பது ஒருமுரண். இருப்பினும் அவர் கிளர்ச்சியுறுத்திய கோரிக்கைகளில் புதிய சக்திகள் ஆட்சியில் பங்கேற்றது என்பதே கவனிப்புக்குரியது. பெருமுதலாளி வர்க்கமாகப் பரிணமித்து ஐ.தே.க. இல் அணிதிரண்ட தரகுவர்க்கமும் தேசிய முதலாளித்துவமும் மாறி மாறி அதிகாரத்தில் பங்கேற்றன; ஆயினும் நாட்டின் பிரச்சனைகளை அவற்றால் வளர்க்கத்தான் முடிந்ததே அன்றித் தீர்வுகளை எட்ட இயலவில்லை. குறிப்பாக இனப்பிரச்சனை பூதாகாரமாக்கப்பட்டது. தீர்க்கப்படாத ஏனைய பிரச்சனைகளால் எழக்கூடிய எதிர்ப்பைத் திசைதிருப்பவும் இன முரண் கூர்மையாக்கப்படுவது பயனுள்ளது என ஆதிக்க சக்திகளுக்குப் படுகிறது. ஏனைய தேசிய இனங்களின்மீது ஆதிக்கம்புரியும் வாய்ப்பில் சிங்கள இனத்தினுள் உள்ள பல் வேறு சாதிகளிடையேயான முரணையும் மீறி ஆளும் இனம் எனும் பொது அடையாளம் "ஒடுக்கும் சமூக வர்க்கமாக" ஆகியுள்ளது. ஆயினும் சிங்கள மக்களுக்குள்ளும் ஆதிக்க சாதித் தேசியம்-ஒடுக்கப்படும் சாதித் தேசியம் என்பவற்றோடு இடைச் சாதிகளின் தேசியமும் இயங்கவே செய்கிறது. ஒரு புரட்சிகர அணி இந்த முரண்பாட்டை எவ்வாறு கையாள்வது என்பது பிரதான அம்சமாகும்.<br />
நீண்ட காலமாக இலங்கைத் தேசியம் என்பதைச் சிங்களத் தேசியமாகவே காண முற்போக்கு சக்திகளாயுள்ள சிங்கள மக்களும் பழகியுள்ள அவலம் இன்னமும் மாறவில்லை. இப்போது ஓரளவு பல்தேசியம் பற்றிப் பேசப்பட்டபோதிலும் அதன் உள்ளார்ந்த பொருளை முழுமையாக கவனம் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கில்லை. இனப்பிரச்சனையில் தவறு செய்துள்ளது என்பது உட்படப் பல்வேறு காரணங்களால் ஜெ.வி.பி.யிலிருந்து பிளவுற்றுப் புதிய கட்சியாக தோற்றம்பெற்றுள்ள "முற்போக்கு சோசலிசக் கட்சி" பல அம்சங்களில் ஆரோக்கியமான முன்னேற்றங்களைக் காட்டியபோதிலும் இனப் பிரச்சனையில் தெளிவான பார்வையை வெளிப்படுத்த இயலவில்லை. அதன் உருவாக்கத்தின் போது 'தினக்குரல்' பத்திரிகைக்கு 2012 ஏப்பிரல் 1 ம் திகதியன்று வளங்கிய செவ்வியில் புபுது ஜெயகொட "தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற வேறுபாடின்றிய ஒரு நாட்டை உருவாக்குவதில் கட்சிக் கொள்கைகள் அமையும்" என்றுதான் கூற இயலுமாயிற்று; இனவேறுபாடுகளின் தனித்துவம் பேணப்பட்டு உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படும் என்பதை அழுத்திச் சொல்ல இயலவில்லை. "தேசியப் பிரச்சனை எனும் வலைக்குள் சிக்கித்தவிக்கும் தமிழ் மக்களுக்காகவும் போராடுவோம். தமது ஆட்சி அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு சிங்கள பேரினவாதத்தை வளர்த்துள்ள எமது நாட்டில் சிறந்த ஆட்சிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்" என புபுது ஜெயகொட கூறுகின்றபோது பல்தேசிய நாடாக அங்கீகரித்து சிறுதேசிய இனங்களின் உரிமையை ஆணித்தரமாய் வலியுறுத்தக் காலம் கனியவில்லை என்பதே வெளிப்படுகிறது.<br />
ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைப்போராட்டம் பற்றிய புரிதலின்றி 'தேசியப் பிரச்சனை எனும் வலைக்குள் சிக்கித்தவிக்கும் தமிழ் மக்கள்' எனக்காண்பதே தூய வர்க்க இருப்பை மட்டும் கவனங்கொள்ளும் பார்வைக் கோளாறு சார்ந்தது. ஒற்றைத் தமிழ்த்தேசியம் பற்றிப் பார்க்க விரும்பி, இப்போதெல்லாம் சாதி முரண் எதுவும் இல்லை என வாதிடும் ஆண்டபரம்பரைப் பார்வை போன்றதுதான் இந்த 'ஆளும் சமூக வர்க்கமான' சிங்களச் சமூகத்திலிருந்து தேசியப் பிரச்சனையைக் குறைமதிப்பீடு செய்தலும். உங்களது வர்க்க பேதம் மட்டுமல்ல, சமூக வர்க்கமாக தேசிய இனங்கள் ஒடுக்கப்படும்போது, அதற்கெதிரான போராட்டமும் அழுத்திக் கவனம் செலுத்தப்பட அவசியமானது; இப்போது சிங்கள மக்களை அணிதிரட்ட இதனை அடக்கி வாசிக்கலாம் எனக் கருதுவீர்களாயின் நீங்கள் அடைய விரும்பும் சோசலிசத்தை ஒருபோதும் அடைய இயலாது என்பது தெளிவு; எப்படி ஆதிக்கசாதியமுதலாளித்துவக் கட்சிகளில் ஒன்று இனத்தீர்வை முன்வைத்தால் மற்றது எதிர்த்து ஆட்சிக்கவிழ்ப்பையே செய்ய இயலுமாக இருக்கிறதோ, அவ்வாறே நீங்கள் கட்டியெழுப்ப முனையும் சோசலிசம் நியாயமான இனப்பிரச்சனைத் தீர்வை முன்வைக்கும்போது, அந்தச் சோசலிசக் கட்டுமானத்தைத் தகர்ப்பதற்கும் அதனைக் கையாள்வார்கள். ஆக, முன்னதாக இனப்பிரச்சனைத் தீர்வுக்கான தெளிவான வரையறைகளை முன்வைத்து அணிதிரட்டப்படும் சிங்களப்பாட்டாளிகள் மற்றும் ஒடுக்கப்படும் சாதிகள் எனும் புரட்சிகர சக்திகளே வென்றெடுக்கப்படும் சோசலிசத்தைப் பாதுகாக்க வல்லவர்களாவர். தவிர, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களை அணி திரட்டவும் இந்தக் கோட்பாட்டு முன்வைப்பு அவசியம்; அவ்வாறு இல்லாதபோது, தமிழ்-முஸ்லிம் மக்களில்தான் சோசலிசத்தை ஏற்க முடியாத தவறு இருப்பதாகக் கருதி முன்னதாக அணிதிரட்டப்படும் சிங்கள மக்களை வைத்து 'சிங்களச் சோசலிசத்தை' வென்றெடுத்து நியாயமான ஆட்சியினால் சிறுதேசிய இனங்களை வளைத்துப்போடலாம் என்ற குறுக்கு வழிதேடுவது ஏற்படும். அந்த வேக அவதியில் ஏற்கனவே ஜெ.வி.பி. வாயிலாக போதிய அளவில் இரத்த காணிக்கை செய்யப்பட்டுள்ளதை மறக்காதிருப்பது அவசியம். வரலாற்றில் இருந்து கற்கத்தவறுவது எல்லா இடங்களிலும் பரவிக்கிடக்கிறது.<br />
தமிழ்த் தேசியத்தின் மிகமோசமான தோல்வியில் அதனை முன்னெடுத்த யாழ்.வெள்ளாளத் தேசியத்தின் தவறுகளைக் காணத் தவறுவதிலும் இப்பண்பைக் காணலாம். ஆதிக்க தேசியத்தைவிட தலித் மற்றும் இடைச் சாதித் தேசிய நலன் களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது அவசியம்; அதேவேளை, வெள்ளாளத் தேசியமும் பேரின வாதத்தால் ஒடுக்கப் படுகிறது என்றவகையில் மக்கள் விடுதலைக்கு அவசியமான அதன் கோரிக்கைகளையும் புரட்சிகர அணி கவனத்தில் கொள்ளவேண்டும். பிரிந்து செல்லமுடியாத சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சி அமைப்பு ஏற்கப்பட வேண்டும் என்பதைச் சிங்கள முற்போக்கு சக்திகள் ஏற்பது அவசியம் என்பதுபோலவே, தலித் தேசிய நலன் குறித்த அக்கறை தமிழ்த் தேசியத்துக்கு இருந்தாகவேண்டியது கட்டாய நிபந்தனை.<br />
யாழ்.வெள்ளாளத் தேசியம் தலித் தேசியத்தைக் கவனங்கொள்வது போல கிழக்கு மக்களின் தேசிய உணர்வையும் மதிக்கவேண்டியுள்ளது; சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒடுக்கப்படும் தேசம் ஒன்றினுள் இருக்கும் உள்-முரண்பாடு சார்ந்தது இது. இன்று ஆளும் தேசியமாயுள்ள சிங்களப் பேரினம் தனது இறைமையை ஏற்கனவே இந்திய மேலாதிக்கத்திடம் இழந்துள்ளது; இன்று அமரிக்க மேலாதிக்கத்திடம் மிச்சம் மீதியாக எதை அடைவு வைப்பது என்று அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆதிக்க சாதிய வர்க்க சக்தி இறைமையைத் தாரைவார்ப்பது பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை; உள்ளூரில் ஆதிக்கத்தைத் தமது கைகளில் வைத்துக் கொள்வது மட்டுமே அவர்களது குறி.<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNz1QRf1yRVIpfzv4eUjPwm-wA9h-sPYrTeZhStQxFaH9HXnxmik7P6QA-FNoe2dt0hBNb5b8GRpH8isBRhK5MvqoGa0XE2Pjwp0UyvNsR2BIQFVMFwWO3l0tKLuQIbOOt-e0Obk_diQI8/s1600/bible3.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNz1QRf1yRVIpfzv4eUjPwm-wA9h-sPYrTeZhStQxFaH9HXnxmik7P6QA-FNoe2dt0hBNb5b8GRpH8isBRhK5MvqoGa0XE2Pjwp0UyvNsR2BIQFVMFwWO3l0tKLuQIbOOt-e0Obk_diQI8/s320/bible3.gif" width="285" /></a>சின்னமீனைப் பெரியமீனும், அதைப் பென்னாம் பெரிய மீனும் விழுங்கும் விலங்கின விதி இன்னும் செயற்படும் வகையில் சுரண்டல் அமைப்பு நீடிப்பதன் பேறு இது. ஆக, "உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்" எனும் கோசத்தை முன்வைக்க அவசியமாகும் வகையில், பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்பட்ட தேசத்தை ஐக்கியப்படுத்தும் அதேவேளை அதனுள் ஒடுக்கப்பட்ட சாதிய சக்திகளை புரட்சிகர அணிதிரட்டலில் கூடுதல் கவனங்கொள்ளல் வலியுறுத்தப்பட வேண்டியதாகிறது. இவ்வாறு ஒடுக்கப்பட்ட சாதிகள் குறித்து அழுத்தம் கொடுக்கும்போது ஒடுக்கப்பட்ட தேசம் ஒன்றைப் பலவீனப்படுத்துவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. இது ஆதிக்கசாதி நலன் பேணும் பாதுகாப்புணர்வில் இருந்து வெளிப்படும் அக்கறையே அல்லாமல் விடுதலை உணர்வின் பாற்பட்டதல்ல. தலித் தேசியம் என்று பேசுவதெனில் அவர்கள் தொடர்ச்சியான ஒரு நிலப்பரப்பைக் கொண்டிருக்கிறார்களா எனக் கேட்கப்படுகிறது. இலங்கையில் தமிழ் பேசும் மக்களாயினும் மத அடிப்படையில் தனித் தேசிய இனமாக விளங்கும் முஸ்லிம் மக்கள் நிலத் தொடர்பில்லாமலே தமது சுயநிர்ணயத்தை வடிவப்படுத்த வல்லவர்களாயுள்ளனர். அதே போன்றே தலித் மக்கள் நிலத் தொடர் பில்லாத போதிலும் அவர்களுக்கான சுயநிர்ணய வடிவத்தைக் கண்டறிய இயலும். முஸ்லிம் தனித் தேசியம் பற்றிக் கூறியது நிலத் தொடர்பின்றி இருக்கும் தேசியத்துக்கான உதாரணத்துக்கு மட்டுமே. தலித் தேசியம் என்பது தமிழ்த் தேசியத்துக்கு உட்பட்ட இரட்டைத் தேசிய வடிவத்துக்குரியது. முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் ஆகியோர் தனித் தேசிய இனங்களாக முன்னர் அங்கீகரிக்கப்பட்டதில்லை; இப்போது ஏற்றுக்கொள்ளப் படுவதால் விடுதலைப் போராட்டம் பலவீனப்பட்டுவிடாமல் எப்படி சுயநிர்ணயத்தை வடிவப்படுத்த இயலுமாகிறதோ, அவ்வாறே தலித் தேசியம் என தமிழ்த் தேசியத்தினுள் உட்பட்டிருக்கும் வடிவத்தை இனங்காண்பதை விடுதலைப் போராட்டத்துக்கு வலுச் சேர்ப்பதாக ஆக்க இயலும். சமூகப் பிரச்சனைகளை இலகுவான சமன்பாடுகளுக்குள் வைத்து தீர்வு தேடிவிட முடியாது. இரட்டைத்தேசிய வாழ்முறை நிர்ப்பந்திக்கும் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு இயங்காத போது எம்மால் வரலாற்றைக் கையேற்க இயலாது; கடந்த முப்பது ஆண்டுகளாய்ப் பிறரது ஆக்கிரமிப்புக்கு கருவிகளாய் இருந்து அவலப்பட்டது போல இன்னும் நாசப்படுவதே நீடிக்கும்.<br />
அந்தவகையில், சுரண்டலின் வடிவத்தை வர்க்க ரீதியில் மட்டும் பார்ப்பதிலிருந்து விடுபட்டு சாதி, தேசம் எனும் வடிவில் 'சமூக வர்க்கமாக' சுரண்டப்படுவதும் நிதர்சனம் என்ற புரிதலுடன் அணுகுவதற்கு ஏற்றதாக எமது பார்வையைப் பழக்கப்படுத்திக்கொள்வோம். வர்க்கப் போராட்டம் மட்டுமன்றி சமூக வர்க்கங்களான சாதி, தேசம் என்பவற்றின் இடையேயான போராட்டங்கள் வாயிலாகவும் வரலாறு இயங்கியுள்ளது என்பதையும் கவனத்தில்கொள்வோம். இந்த மாற்றுவடிவத்தில் சமூக அமைப்பு மாற்றத்துக்கான புரட்சி எவ்வாறு அமையும்? பொருளுற்பத்திமுறை இயங்காற்றல் குறித்து "மூலதனம்" ஆய்வை மேற்கொண்ட கார்ல் மார்க்ஸ் இனமரபுக்குழு மேலாண்மையால் சுரண்டல் சாத்தியப்படும் மற்றொருவடிவத்தைக் காட்டியிருந்தார்-அதன் பேறானதே ஆசிய உற்பத்திமுறை என்ற புரிதலும் அவருக்கு இருந்தது; ஏங்கல்சுக்கு எழுதிய கடிதத்தில், அதெப்பிடி முகமது நபியினால் மதவடிவத்தினூடாக ஒரு சமூகமாற்றப் புரட்சியை நிகழ்த்த இயலுமாயிற்று என்று கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து அவர் வாழ்ந்திருப்பின், சமூக வர்க்கங்களிடையேயான போராட்டத்தில் சமூக மாற்றம் பண்பாட்டுப் புரட்சி வாயிலாகவே நடந்தேறுகிறது என்பதைக் கண்டுகாட்டியிருக்க வாய்ப்பிருந்தமையை உணர்த்தும் கண்ணிகள் இவை. <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNoumQYnDjk9Gh_FuWp8hAXeayYcd7zvV3lPnTcXIMqEWpuBRuBNkC4r-RZDti5xcFPxH79YxIop3yJ6vSA6y5mLgybksx_e5JRnBYM81xpfn6P11Mtu6Di7xeuY6RRHtGJQjm7h8iK1C6/s1600/das-kapital-bank.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNoumQYnDjk9Gh_FuWp8hAXeayYcd7zvV3lPnTcXIMqEWpuBRuBNkC4r-RZDti5xcFPxH79YxIop3yJ6vSA6y5mLgybksx_e5JRnBYM81xpfn6P11Mtu6Di7xeuY6RRHtGJQjm7h8iK1C6/s1600/das-kapital-bank.jpg" /></a><br />
முகமது நபி அரபுச் சமூகத்தில் அந்தச் சமூக மாற்றத்தை பண்பாட்டுப்புரட்சி வாயிலாக நிகழ்த்திய போது, இனமரபுக் குழுக்களாக ஒன்றோடு ஒன்று மோதிய நிலையிலிருந்து அனைவரும் சகோதரர்கள் என ஒருவர்போல ஐக்கியமுறுவது சாத்தியமானது. முன்னதாக யூத மதத்தினுள்ளும் ஓரே இரத்தம் எனும் பிணைப்பு இருந்தது; அது ஒரே இனமரபுக் குழுவின் தொடர்ச்சியின் பேறானது. இதன் காரணமாக, தாம் மட்டுமே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்ற உணர்வோடு பிறரிலிருந்து ஒதுங்கும் மனப்பாங்கு அவர்களிடம் காணப்பட்டது. அந்த யூத இனத்தில் வந்த யேசுகிறிஸ்து யூதர்கள் மட்டுமன்றி மனிதர்கள் அனைவருமே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே எனப் புதிய ஏற்பாட்டைச் சாத்தியமாக்கியிருந்தார். கி.பி.நாலாம் நூற்றாண்டில் அந்தக் கிறிஸ்தவ மதத்தை ரோம் பேரரசு கையேற்று ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவத்துக்கான மதமாக்கியிருந்தது. அரபு மண்ணில் பண்பாட்டுப் புரட்சியை நிகழ்த்திய கிறிஸ்தவம் இவ்வகையில் வர்க்கப் புரட்சியை நடாத்திய ரோமினால் கையேற்று வளர்க்கப்பட்ட புதிய வடிவத்தில் மீண்டும் அரபு மண்ணில் அறிமுகமாகிய நிலையிலேயே கி.பி.ஏழாம் நூற்றாண்டில் முகமது நபி மற்றுமொரு பண்பாட்டுப் புரட்சியை நிகழ்த்துகிறார். பழைய ஏற்பாடான யூத இறையியல், புதிய ஏற்பாடான கிறிஸ்தவ இறையியல் என்பவற்றின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக இது அமைந்தபோது, இனமரபுக்குழுப் பேதங்களைத் தகர்த்துக்கொண்டு ஒரு சமூக அடையாளத்தை ஏற்படுத்த வேண்டியதாகிறது.<br />
இந்த மாற்றம் மிகுந்த கவனிப்புக்குரியது. வர்க்கமுறை அறிமுகத்தை அரபுச் சமூகம் பெற்ற அக்காலம் வணிகத்தில் வீச்சோடு முன்னேறக் கால்பதித்து அடுத்த ஆயிரம் ஆண்டுகள் உலகை வெற்றிகொள்வதில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய காலம். பின்னாலே ஐரோப்பா மூலதனத்தைக் கண்டறிய வாய்ப்புப் பெற்றது போன்ற மற்றொரு வளர்ச்சி நிலை போல இல்லையெனிலும், இப்புதிய நிலையில் தேசியம் என்ற புதிய வடிவம் சாத்தியப்பட்டது போல முன்-தேசிய வடிவம் ஒன்றை அந்த வணிக எழுச்சிக் கட்டத்தில் முகமது நபி சாத்தியமாக்கினார். அதன்பேறானதே உலகின் எந்தமூலையில் இஸ்லாத்துடன் இணைகிறவரும் "முஸ்லிம்" எனும் ஒரே அடையாளத்தைப் பெறுவது ஆகும். எப்படி சாதியின் முன்-தேசிய வடிவம் இன்றைய தேசிய அரசியல் சாத்தியத்தில் இரட்டைத் தேசிய வடிவம் கொள்ள காரணமாயிற்றோ, அப்படியே முஸ்லிம் மக்கள் தனித் தேசிய வடிவம் கொள்வதற்கு அந்த மதத்தின் தோற்றத்தின்போதே இவ்வகையில் விதையூன்றப்பட்டிருந்தது.<br />
அரபு மண்ணில் இனமரபுக்குழு வாழ்முறை இவ்வகையில் தகர்க்கப்பட்டு ஒரே இனத்தேசிய வடிவத்தை முஸ்லிம்கள் பெற இயலுமானது போன்று இந்து மதத்துக்கு செய்தாக வேண்டிய அவசியம் இல்லாதது மட்டுமன்றி, இனமரபுக்குழுத் தொடர்ச்சியான சாதிவாழ்முறையை நீடிப்பதே அதுபேண விரும்பிய சமூக அமைப்பாகவும் இருந்தது (முஸ்லிம் மக்கள் ஒருதேசிய இனமாக உள்ள வாய்ப்பென்பதை, அவர்க்ளுக்குள் மொழி ரீதியாக தேசிய இன வேறுபாடுகொள்ள இடமில்லை எனப் பொருள்கொள்ள வேண்டியதில்லை; இந்தியாவிலிருந்து முஸ்லிம் தேசம் எனப் பாகிஸ்தான் தனி நாடாக முடிந்தமையையும், இரு தசாப்தங்கள் கடந்தபோது பாகிஸ்தான் என்ற முஸ்லிம் தேசத்தினுள் வங்காள இனத்தேசியம் ஒடுக்கப்பட்டபோது பங்களாதேஸ் தனிநாடாகப் பிரிந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டது என்பதையும் மனங்கொள்வோம்). இவ்வாறு இந்துசமயம் சாதித் தேசங்களாய் வேறுபடுத்தியிருந்த நிலையிலும் இந்தியா ஒரு தேசமாகக் கட்டமைக்கப்பட்டது எப்படி? பிராமணத் தேசியம் இந்தியா முழுமைக்கும் பொது இணைப்பை ஏற்படுத்த பெற்றிருந்த வாய்ப்பின் பேறு அது. பிராமணத்தேசிய அரசியல் இயக்கமாக கொங்கிரஸ் தோற்றம் பெற்றபோதே ஜோதிராவ் பூலே வடக்கிலும், அயோத்திதாசர் தெற்கிலும் சொல்லியிருந்தனர், இது பிராமணத்தேசத்தைக் கட்டமைக்க எடுக்கப்படும் முயற்சியென்று. பின்னாலே, அம்பேத்கர் தலித் தேசிய (ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல்) இயக்கத்தைமுன்னெடுத்தார். வடக்கில் எதிர்த் தேசியமாக தலித் இயக்கம் தோன்றிய சமகாலத்தில் தெற்கில் பெரியார் தொடக்கி வளர்த்த எதிர்த்தேசியமாக திராவிட இன அரசியல் எழுச்சி பெற்றமை தற்செயலானதல்ல; தமிழ் இனத்தேசியத்துக்கான அவசியத்தின் வெளிப்பாடு அது. இந்தத் தமிழினத் தேசியத்துக்குள் தலித் தேசிய எழுச்சி அவசியப்பட்டமையை எண்பதாம் ஆண்டுகளின் அரசியலாகக் கண்டோம். ஆக, இந்திய நாடு ஒரு தேசமாக முடிவதில் இந்துமதத்தின் பிராமண சாதித் தேசியம் வாய்ப்பளித்த போது, மொழி ரீதியிலான ஒடுக்கலுக்கு எதிராய் இனத்தேசியம் உருவாக இயலுமாகும் அதேவேளை ஒடுக்கப்பட்ட சாதியினரின் எதிர்த் தேசியம் நாட்டுத் தேசியத்தினுள்ளும் இனத் தேசியத்தினுள்ளும் இயங்க ஏற்றதாக இந்துவாழ்முறை அமையக் காண்கிறோம்.<br />
தேசியம் என்பதே பொதுவான ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் கடந்து, மத அடிப்படையில் முஸ்லிம் தேசியம் எனவும் சாதித் தேசியங்கள் எனவும் பேசுவது குழப்பமாக அமையலாம்; என்ன செய்வது ஒவ்வொரு சமூக முறையும் சாத்தியப்படுத்தும் நிதர்சனத்திலிருந்துதான் கோட்பாட்டை வகுக்க இயலுமேயன்றி கோட்பாடு சொல்கிற மாதிரித்தான் இயங்கப் போகிறேன் என்றால் ஓரடிகூட முன்னேற முடியாது இடர்ப்பட வேண்டியது தான். தேசம், தேசியம் என்பன மாற இயலாத கோட்பாட்டுப் புனிதங்களோடு இல்லை. அப்படி இல்லாமல் ஆகி தேச இறைமைகள் இன்றைய உலகமயமாதல் சூழலில் அர்த்தமிழக்கத் தொடங்கியுள்ளதால் தேசியம் என்பதே பொய்த்து விட்டது எனும் குரலையும் கேட்கிறோம். தேசங்களாய் முதன்முதலில் பிரிந்து அடையாளம் பெற்ற ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் எனத்தேச எல்லை கடந்து ஒன்றிணைவதையும், உலகமயம் அனைத்து நாடுகளையும் ஒரே கிராமமாக இணைப்பதையும் பார்க்கும்போது தேசியம் பொருளிழந்தது போலத்தான்.<br />
ஒடுக்கப்பட்டு, எமது உரிமை குறித்த கேள்விகளோடு ஈடிணையற்ற அர்ப்பணிப்புகளைச் செய்த எமக்குத் தெரியும் தேசம், தேசியம் என்பவை அர்த்தமற்றவை அல்ல என்பது. இவை பொய்த்துப்போய்விடவில்லை என்பது எவ்வளவுக்கு உண்மையோ, அதேயளவுக்கு மாற்றம்பெறாத ஏதோ ஒரு வரைவிலக்கணத்துக்குரிய புனித வகைப்பட்டன அல்ல என்பதும் அறிவோம். முதல் தேசிய வடிவம் பெற்ற மேலாதிக்க நாடுகள் சுரண்டலில் பெற்ற வாய்ப்பு இழக்கப்படும் நிலையில் மாற்றுவடிவில் அதைத் தொடர தேசம்-இறைமை என்பதெல்லாம் பொய் எனப் பேசுவர். ஒரு தேசிய இனத்தினுள் சுரண்டல் வாய்ப்பை உச்சமாக்கிக்கொள்ள வேண்டியுள்ளவர்கள் தேசம்-தேசியம் என்பவற்றுக்கு அதீதமான புனிதத்தை வளங்க முயல்வர். வைத்தால் கூந்தல் அடித்தால் மொட்டை என்றில்லாமல் இவற்றுக்குரிய அளவில் இவற்றைப் புரிந்துகொள்வோம். பாட்டாளி வர்க்கச் சிந்தனை அடிப்படையில் சமத்துவச் சமூக உருவாக்கம் மட்டுமே பிரச்சனைகளின் தீர்வுக்கு ஒரேவழி; அதனை அடையும் மார்க்கத்துக்கு ஏற்புடைய வகையில் தேசிய வடிவத்தைக் கட்டமைத்து அவையவற்றுக்கான சுயநிர்ணயத்தை வரையறுப்போம்.<br />
நூறாண்டின் முன்னர் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுதலைபெற நிர்ப்பந்திக்கப் பட்ட நிலையில் எமது நாட்டுத் தேசியங்கள் வடிவம் பெற்றன. அதிகாரம் உள்ளூர் சுரண்டல் கும்பலிடம் மாறிய நிலையில் சிறு தேசிய இனங்களைச் சமூக வர்க்கமாய் ஒடுக்கிச் சுரண்ட அவை முற்பட்டன; படவும் ஒடுக்கப்பட்ட இனத் தேசியங்கள் சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டியதாயிற்று. இவ்வகையில் சமூக வர்க்கமாக ஒடுக்கப்படுவதற்கான தீர்வை நாடும்போது இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னர் சமூக வர்க்கமாகச் சுரண்டப்பட்ட தலித் மக்களின் பிரச்சனைக்கான தீர்வுக்கும் வழிவகை தேட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. முதலாளித்துவத்துக்கான தேசியப் புனிதம் தேசிய இனங்களுக்குத் தான் உள்ளது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவற்றுக்கெல்லாம் கணக்குத் தீர்க்க வர வேண்டாம் என்று சொல்லப் போகிறோமா? அன்றைக்கு ஏற்பட்ட சாதியவடிவில் சமூகவர்க்கமாக சுரண்டும் முறைமையிலிருந்து அதிகம் வேறுபட்டதாய் இன்றைய தேசியவடிவில் சமூக வர்க்கமாய்ச் சுரண்டுவது இல்லை. அதற்காக எந்த வேறுபாடும் இல்லை என்பதற்குமில்லை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGNIcVvWXjp-g1dOwUI8wnjd817eEXjcBL6TGx8P9_70JSuhinm5km7GI0IK72FhDHJiOdGY_aVxdVwaF0hcaT1wRAc6HTEHinjAAzg1TTV54MB2stEW7jTZNciTQvWDvXRh6W6j58gHyg/s1600/images.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGNIcVvWXjp-g1dOwUI8wnjd817eEXjcBL6TGx8P9_70JSuhinm5km7GI0IK72FhDHJiOdGY_aVxdVwaF0hcaT1wRAc6HTEHinjAAzg1TTV54MB2stEW7jTZNciTQvWDvXRh6W6j58gHyg/s1600/images.jpg" /></a> நவீன வரலாற்றில் அறிமுகமான ஏகாதிபத்தியம் மட்டுமில்லை, முன்னர் பெரும் வல்லரசுகள் ஆக்கிரமித்திருந்ததும் ஏகாதிபத்தியக் குணாம்சம் உடையவை தான் என்போர் இருக்கின்றனர். நிலப்பிரபுத்துவ, அல்லது அதற்கு முந்திய ஆக்கிரமிப்புகளில் இருந்து இன்று மூலதன அபகரிப்புக்கான வாய்ப்புள்ள காலத்தின் சுரண்டலின் தன்மையிலுள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வது அவசியம். ஏகபோக மூலதனம் ஏற்படுத்தும் வாய்ப்பில் இன்றைய ஏகாதிபத்தியம் வகிக்கும் பாத்திரத்திலிருந்து அன்றைய அக்கிரமிப்பாளர்கள் பெற்றிருந்த வாய்ப்புகள் பண்புரீதியில் வேறுபட்டதாகும்; அவர்களை ஏகாதிபத்திய வாதிகள் எனக்கொள்ள இயலாது, வெறும் ஆக்கிரமிப்பாளர், அவ்வளவே. ஆயினும் ஆளும் சாதி ஒடுக்கப்பட்ட சாதியினரை அடக்கிச் சுரண்டியதில் வலுவான சமூக-பண்பாட்டு ஏகாதிபத்தியக் குணாம்சம் இருந்தது என்பதில் ஓரளவு பொருளுண்டு; இங்கும் உள்ள 'ஏகாதிபதியம்' என்பது பொருத்தமற்றது என்றபோதிலும் - வேறு வார்த்தைகள் இல்லாத நிலையில் சில பொருத்தப்பாடுகளின் அடிப்படையில் ஆதிக்கச் சாதியை "சமூக-பண்பாட்டு ஏகாதிபத்தியம்' என்பது ஏற்புடையதே.<br />
இவ்வாறு சமூக-பண்பாட்டு ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட தலித் மக்கள் எதிர்த் தேசியத்தை நடைமுறையில் வெளிப்படுத்தும் நிலையிலேயே இரட்டைத் தேசியக் கோட்பாட்டை வகுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். அவர்களது கோரிக்கைகளுக்கான தீர்வையும் உட்படுத்திப் புரட்சி அணி தனது போராட்ட மார்க்கத்தை வகுப்பது தவிர்க்க இயலாத ஒன்று. எமது சமூக-பண்பாட்டு ஏகாதிபத்திய சுரண்டல் அமைப்பில் சமூக மாற்றம் பண்பாட்டு புரட்சிகள் வாயிலாக நடந்தேறியமை குறித்து ஏற்கனவே கண்டுள்ளோம்; ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தேசியப்போராட்டங்களிலும் பண்பாட்டுப் பேணுகையுடன் விடுதலைக்காக இயக்கங்கள் செயற்பட்டுள்ளன. அந்தவகையில் எமது புதிய-பண்பாட்டுப் புரட்சிக்கான வடிவங்களைக் கண்டறிந்து அதன் வழி செயற்பாடுகளை முன்னெடுப்பது புரட்சிகர அணியின் முன்னால் உள்ள சவால் ஆகும்; இதுவரை அதற்கான தேடலின்றி இருந்தோம், வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டு புதிய வழித் தடங்களை முன்னேற்றத்தின் பொருட்டு தேடுவோம். வர்க்க ஒடுக்குமுறையினால் மட்டுமன்றி,, சமூக வர்க்கமாயும் சுரண்டப்படுதலை ஒழித்துக்கட்ட,<br />
<b><u><span style="color: red;"> "உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒடுக்கப்பட்ட (தலித்) மக்களே ஒன்று சேருங்கள்"</span></u></b><br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXg__w8lG7ZlYZP57VnmNCVzctdylg9wIn82FINLexE1PKbdV0SmzV34TNKVqeEhbX1bZZHs0GY2C_6Yew83O3ibmgbBlrNJ__DUs-IOwTRkJQnriSQABssUbH2RnUxyiPbTO75zxhift1/s1600/179519_307111959375150_182480828_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXg__w8lG7ZlYZP57VnmNCVzctdylg9wIn82FINLexE1PKbdV0SmzV34TNKVqeEhbX1bZZHs0GY2C_6Yew83O3ibmgbBlrNJ__DUs-IOwTRkJQnriSQABssUbH2RnUxyiPbTO75zxhift1/s400/179519_307111959375150_182480828_n.jpg" width="400" /></a><br />
<br />
</div>ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-86306135783968475342012-05-20T14:10:00.000-07:002012-05-20T14:10:30.392-07:00இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்- 7<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="uiHeader uiHeaderBottomBorder mbm" style="border-bottom-color: rgb(170, 170, 170); border-bottom-style: solid; border-bottom-width: 1px; margin-bottom: 10px; padding-bottom: 0.5em;">
<div class="clearfix uiHeaderTop" style="zoom: 1;">
<h2 class="uiHeaderTitle" style="margin: 0px; outline: none; padding: 0px; text-align: left;" tabindex="0">
<span style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 1.5em;"><span style="color: red;"><u style="font-weight: bold;">எமது வரலாறு எழுதுமுறைக்கான புதிய பார்வை </u><span style="font-weight: normal;"> ந.இரவீந்திரன் </span></span></span></h2>
</div>
</div>
<div class="mbl notesBlogText clearfix" style="font-size: 11px; line-height: 1.5em; margin-bottom: 20px; word-wrap: break-word; zoom: 1;">
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;">
<span class="photo_left" style="clear: left; float: left; max-width: 180px; padding: 2px 10px 5px 0px;"><img alt="" class="photo_img img" src="http://photos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash2/74740_299356073484072_100002290445134_693685_142247575_a.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 493px; padding: 0px;" /><span class="caption"></span></span> முந்திய சந்திப்பின்போது இந்தத் தொடரைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளலாம் எனக் கூறியிருந்தேன். பல நண்பர்கள் அதனை ஆட்சேபித்திருந்தனர். இப்போதுதான் விடயத்தைத் தொட்டிருக்கிறீர்கள், அதற்குள் எப்படி நிறுத்தமுடியும் எனக் கேள்வியெழுப்பியிருந்தனர். இரட்டைதேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் பற்றி பத்து வருடங்களாக நான் பேசி வந்தபோதிலும் பலருக்கும் இப்போதுதான் பரிச்சயமாகியுள்ளதால் இதுதொடர்பிலான மேலும் சில விடயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே. தேசியம் என்பதை எமது வரலாற்றுச் சூழலில் எவ்வாறு புரிந்துகொள்வது என்பதிலே அடிப்படையான பிரச்சனை உள்ளது. முதலாளித்துவம் தோன்றிய நிலையில் அதற்கான சந்தைத் தேவையில் இருந்தே தேசியம் தோற்றம் பெற்றது என்ற கருத்தில் எனக்கு மாறுபட்டகருத்து இல்லை. சாதியச் சமூகமான எமக்கு சாதியிலேயே தேசியத்தின் முந்திய வடிவம் இருந்துள்ளது என்றதும், அப்படியென்றால் நிலப்பிரபுத்துவ அமைப்பிலேயே தேசியம் இருந்ததாகக் கூறுகிறீர்களா எனக் கேள்வி எழுப்பப் படுகிறது. சாதிமுறை நிலப்பிரபுத்துவத்துக்கானது என்ற புரிதலிலிருந்து எழும் இக்கேள்வி இன்னுமொரு அடிப்படையான பிரச்சனை குறித்தும் பேசுவது அவசியம் என உணர்த்தியது. இவைதவிர உப விடயங்களாக விவாதிக்கவேண்டிய அம்சங்களும் உள்ளதால் தொடர்ந்து உரையாடுவோம்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;">
சாதிமுறையை உச்சமாகப் பயன்படுத்தி அதீதமான ஆடம்பர வளர்ச்சிகளில் நிலப்பிரபுத்துவம் திழைத்தது மெய்யாயினும், சாதி நிலப்பிரபுத்துவத்தினால் தோற்றுவிக்கபட்ட அமைப்பு அல்ல என்பதை மார்க்ஸிய ஆய்வியல் ஏற்கனவே வெளிப்படுத்திவிட்டது. சாதியம் குறித்த ஆய்வில் கேசவனின் பங்களிப்பு கவனிப்புக்குரியது. இனமரபுக் குழுக்கள் சாதிகளானது குறித்து அவர் பேசியுள்ளார்; ஆயினும், அவரும் நிலப்பிரபுத்துவதுக்குரிய சாதியக் கருத்தியலை மட்டுமே கவனத்தில் எடுத்ததால், ஏற்றத்தாழ்வு முறை தோன்றி நிலப்புரபுத்துவத்துக்கு முன்னதாக இருந்ததைச் சாதியத்துக்கான முன் வடிவமாயே கருதினார். இதன்பேறாக, முழுமையான முதலாளித்துவ வளர்ச்சியில் சாதிமுறை ஒழியும் எனக்கூறினார். இன்று அரை-நிலப்பிரபுத்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சம் காணப்படுவதாலேயே சாதியுணர்வு நீடிக்கிறது என்பார். </div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;">
அவர்சரியாக எடுத்துக்காட்டியது போன்றும், முன்னதாகக் கார்ல் மார்க்சே கூறியிருந்தவாறும் இனமரபுக் குழு சாதியானது என்றவகையில் விவசாய வாய்ப்புடன் முன்னேறிய மருதத்திணை கிழார்களாகிப் பின்னாலே நிலப்பிரபுத்துவ வளர்ச்சியை எட்டத்தக்க சாதியான போது ஏனைய வென்றடக்கப்பட்ட திணைகளுக்குரிய இனமரபுக்குழுக்கள் இடைநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளாக்கப்பட்டன. இவ்வாறு ஆன ஆரம்ப காலத்திலேயே சாதியத்துக்கான முதல் கருத்தியல் வடிவம் தோன்றிவிட்டது. அதுவே ரிக்வேத இறுதிக் கட்டத்தில் தோன்றிய வருணக் கோட்பாடு(பிரஹஸ்பதியின் தலையிலிருந்து பிராமணனும், தோள்களிலிருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், பாதத்திலிருந்து சூத்திரனும் தோன்றினர் என்பது); தொடர்ந்த வளர்ச்சியில் பின்னர் வென்றடக்கப்பட்டவர்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்ட அவர்ணர்களான ஒடுக்கப்பட்ட மக்கள் (தலித் சாதிகள்) எமது வரலாற்று அரங்கில் பிரவேசித்தனர். கிழார்களின் இந்த முதல் வெற்றிக்கட்டத்துடன் இந்த ஏற்றத்தாழ்வு வாழ்முறையை ஏற்புடையதாக்கும் பிராமணரும் விவசாயச் சாதியுடன் சொத்துகளுக்குரிய ஆளும் சாதியாக்கப்பட்டனர். இதனூடு வளர்ச்சியுற்ற வணிக ஆதிக்கம் அரசு ஏற்புக்குரியதாக இருக்கவேண்டியிருந்தபோது பிரமணர் ஆதிக்கம் தகர்க்கப்படவேண்டியிருந்த வரலாற்றுக் கட்டம் தோன்றியது; அத்தேவையை நிறைவாக்கும் வண்ணம் சமண பௌத்த எழுச்சி சாத்தியமானது. இப்புதிய மதங்கள் பிராமணர் புனிதமான சாதியினர் என்பதை அகற்றிய அதேவேளை சாதி வாழ்முறையை அங்கீகரிக்க வேண்டியிருந்தது. சாதி எனும் சொல்லே பௌத்தத்துக்குரிய பாளிச் சொல் என்பது தற்செயலானது அல்ல. தொடர் வளர்ச்சியில் இந்துமதம் ஊடாக மீண்டும் பிராமணர் ஆதிக்கம்பெற்ற நிலப்பிரபுத்துவக்கட்டத்தில் உண்மையில் வர்ணக் கோட்பாடு விளக்கக் கடுமையான நிலையில் சாதி என்பதே நிலைபேறடைந்தது(ஆயினும், வர்ணக் கோட்பாடு வாயிலாக சாதியை விளக்க மனு ஸ்மிருதி முயன்றது கவனிப்புக்குரியது).</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;">
இந்த மாற்றக்கட்டமான கி.பி.நாலாம் நூற்றாண்டு முக்கியத்துவம் மிக்க ஒரு காலப் பகுதி. இந்த எல்லையில் முன்னர் வணிக ஆதிக்கம் நிலவியது; பின்னர் நிலப்பிரபுத்துவம் மேலாண்மைபெற்று, கி.பி.ஏழாம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ சமூகம் நிலைபேறான ஆதிக்க அமைப்பாகியிருந்தது. இந்தமாற்றத்தில் மதங்களின் கருத்தியலில் ஏற்படும் மாற்றம் மாறுகின்ற அமைப்புக்கான ஏற்பினை சமூகத்தில் சாத்தியப்படுத்துவதாக அமையும். மனுதர்ம சாஸ்திரம், வாத்ஸாயனரின் காமசூத்திரம், பகவத்கீதை ஆகியன இத்தகைய நிலப்பிரபுத்துவ மாற்றத்துக்கான பண்பாட்டுப் புரட்சியின் கருத்தியல் வெளிப்பாட்டுப் படைப்பாக்கங்கங்களாகும். இவற்றின் வாயிலாகவே பிராமண மதம் புதிய இனக் குழுக்களை உள்ளீர்த்து, முழுமுதற் கடவுள் கோட்பாட்டுடனான இந்துமதம் தோற்றம்பெற ஏதுவாயிற்று. இதற்குமுன்னர் எந்தக் கடவுளும் இத்தகைய பரம்பொருள் அல்ல. பௌத்தத்திலும் இக்கட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. நிலப்பிரபுத்துவத்துக்கு ஏற்றதாக அதன் கருத்தியல் மாற்றம் ஏற்பட்டபோது மகாயான பௌத்தம் தோன்றி, புத்தரை ஒரு முழுமுதற் கடவுள் ஆக்கிக் கொண்டது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;">
இவ்வகையில் இந்துமத வடிவம்போல புத்தர் முழுமுதற்கடவுளாக ஏனைய பரிவாரத் தெய்வங்களோடு பவனிவரும் காட்சிகளை சீன, யப்பான் போன்ற நாடுகளின் பௌத்ததில் காணவியலும்; ஆம், சமகாலத்தில் தோன்றிய இந்து மதத்துக்குப் பல கருத்தியல்களை வழங்கிய மகாயான பௌத்தமே கிழக்காசியாவில் பரவியது என்பது கவனிப்புக்குரியது. முன்னதாக இலங்கையில் தேரவாத(புத்தரின் மூலக் கோட்பாட்டைப் பேணி வைத்திருக்கிறோம் எனும் பிரிவு) பௌத்தம் சிங்கள மன்னரின் செல்வாக்கைப் பெற்றிருந்த போதிலும் இக்கட்டத்தில் மகாயான பௌத்தம் இலங்கையில் செல்வாக்குப் பெற்றிருந்தது. பின்னர் மீண்டும் ஆதிக்கத்தைப் பெற்ற தேரவாத பௌத்தம் மகாவம்சத்தினூடாக மகாயான பௌத்தத்திற்கெதிரான வலிய கருத்தியல் போராட்டத்தை நடாத்தியது. மகாயான பௌத்தப் பரவுகையில் தமிழ்ப் பௌத்தத்துக்கு கணிசமான பங்குண்டு. தமிழகதிலிருந்து அவ்வாறு மகாயான பௌத்தத்தைச் சீனாவுக்குக் கொண்டுபோய்ப் பரப்பியதன் பேரில் நம்ம தமிழர் சீனா, யப்பான் போன்ற நாடுகளில் வழிபடப்படுவது பற்றி இன்று விசேடமாக சொல்லத்தேவையில்லை;சினிமாவிலும் ஏழாம் அறிவாகிவிட்டாரே!</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;">
இவ்வாறு இலங்கை மக்களிடம் செல்வாக்குப் பெற வைத்ததில்(முன்னர் தேரவாத பௌத்தம் ஏற்கனவே சொன்னவாறு அரசரிடமும் ஆதிக்கத்தரப்பினரிடமுமே மட்டுப்பட்டிருந்தது) மகாயான பௌத்தம் ஏற்படுத்திய தாக்கத்தை மறுக்கும் தேவை மகாவம்சத்துக்கிருந்தது; தமிழகத்தினூடாக பௌத்தம் பரவியதைச் சொன்னால் மாகாயான பௌத்தத்தின் பங்களிப்பை ஏற்றதாகிவிடும் என்பதால், தமிழ் நாட்டினூடாக வந்து யாழ்ப்பாணத்தின் கரையில் இறங்கி நடைபவனியாக வந்த மகிந்த தேரரை பறந்துவந்து மிகிந்தலையில் இறங்கியதாகக் காட்டவேண்டியதாக உள்ளது. என்னதான் மகாயான பௌத்தத்துக்கு எதிராக 'விட்டுக்கொடுக்காத' போராட்டத்தை தேரவாத பௌத்தம் மேற்கொண்டபோதிலும், அதனால் முழுமுதற்கடவுளாக்கப்பட்ட புத்தரைப் பாடிப் பரவுவதன்றி வேறு மார்க்கம் இருக்கவில்லை; இவ்வகையில் நிலப்பிரபுத்துவ மதமாக வேண்டிய நிர்ப்பந்தம் தேரவாத பௌத்தத்துக்கு மாறிய சமூகச் சூழலில் இருந்தது என்பது கவனிப்புக்குரியது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;">
இந்தப் பௌத்தம் மற்றப்பல விடயங்களில் மகாயான பௌத்தத்தை நிராகரித்தபோதிலும், முழுமுதட் கடவுளாக நடைமுறையில் புத்தரை ஏற்கவேண்டியிருந்தது ஏன்? இலங்கையில் ஆதிக்கச் சாதியான கொவியா ஏனைய சாதிகளைத் தனது ஆளுகைக்குள் கட்டுப்படுத்தும் வகையிலேயே இவ்வாறு முழுமுதற்கடவுள் கோட்பாட்டை வரிக்க வேண்டியிருந்தது . பதினைந்து நூற்றாண்டுகளின் பின் வணிகத்தில் முதன் முதலாக சிங்களச் சமூகம் நுழைவதில் கரவா சாதி முன்கை எடுப்பதுவரை இந்தக் கருத்தியல் சோதனைக்குள்ளாகாது இருக்க முடிந்தது; பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த மாற்றம் உட்பட அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை வேண்டிய நிலையும் இருந்த போது இலங்கையின் பௌத்தம் மறுமலர்ச்சி இயக்கத்தை முன்னெடுக்க வேண்டியிருந்தது. <span class="photo_center" style="clear: both; padding: 0px 0px 10px; text-align: center;"><img alt="" class="photo_img img" src="http://photos-a.ak.fbcdn.net/hphotos-ak-prn1/550680_299360016817011_100002290445134_693695_830912611_a.jpg" style="border: 0px; margin: 0px auto; max-width: 493px; padding: 0px; width: 180px;" /><span class="caption" style="font-size: 9px; margin: 0px auto; padding: 0px; width: 180px;"></span></span></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;">
இந்து மதமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவ்வகையில் கருத்தியல் மாற்றத்துக்குள்ளாகும் மறுமலர்ச்சி இயக்கத்தை முன்னெடுத்தது. தயானந்த சரஸ்வதி, ராஜா ராம் மோகன் ராய், இராமகிருஸ்ண பரமகம்சர், விவேகானந்தர் என வட இந்திய ஆளுமைகள் போல இராமலிங்க வள்ளலார், நாராயணகுரு, ஐயங்காளி போன்றோர் தமிழக மறுமலர்ச்சியில் தாக்கம் செலுத்தினர். ஆதிக்க சாதி மேலாண்மையை நிலைநிறுத்த முன்னிறுத்தப்பட்ட பரம்பொருளுக்கு மாறாக வெவ்வேறுவகையில் தமக்கேயான வழி முறைகளில் இவர்கள் தமக்கான இயக்கத்தை முன்னெடுத்தனர். அரம்பத்தில் பெருங்கடவுளரைப் புதிய உள்ளடக்கத்துடன் பாடிய வள்ளலார் பின்னர் கடவுள் என்பதை அத்தகைய வடிவங்களிலிருந்து முற்றிலும் விடுவித்துக்கொண்டு சுத்த சமரச சன்மார்க்க அடிப்படையிலேயே அருட்பெருஞ்சோதியை வழிபாட்டுக்குரியதாய் முன்வைத்தார். நாராயண குருவின் போராட்டம் இன்னொருவகையில் அமைந்து ஆதிக்கசாதிக் கடவுள் என்பதைத் தகர்த்தது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;">
தீண்டாமைக் கொடுமையை அப்போது அனுபவித்த நாடார் சாதியினர் பல்வேறு போராட்டங்கள் வாயிலாக வர்ணத்தளத்தில் அசைவியக்கம் பெற்று வளர்ச்சியை எட்டுவதில் நாராயண குருவின் போராட்டம் வலுமைமிக்க ஆன்மீகத்தளப் பங்களிப்பாயிருந்தது. ஆதிக்க சாதியினர் பிரதிட்டை செய்ய முடிந்த சிவனைத் தீண்டாமைக்குட்பட்டிருந்த தான் வழிபடுவதை எவர் தடுக்க இயலும் என்ற துணிவோடு சிவனைப் பிரதிட்டை செய்தார்; எதிர்ப்புத் தெரிவித்த ஆதிக்க சாதியினருக்கு, "நீங்கள் உங்கள் சாதிச் சிவனை வழிபடலாம், நான் என் சாதிச் சிவனைப் பிரதிட்டை செய்திருக்கிறேன்" எனப் பதிலிறுத்தார் நாராயணகுரு. சிவன் ஆதிக்கப்பீடத்தைத் தகர்த்துக்கொண்டு ஜனநாயகப் பண்பைப் பெறவேண்டி இருந்த சமூக மாற்றக் காலகட்டத்தின் ஆன்மீக ஆளுமையாக இவ்வகையில் நாராயணகுரு திகழ்ந்தார்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;">
முன்னதாக பிராமணரும் வெள்ளாளரும் மட்டுமே பிரதிஸ்டை செய்ய வல்லவராக இருந்த சிவன் ஆதிக்க சாதிப் பரம்பொருளாவர். இவரின் ஆளுகைக்குட்பட்ட சிறுதெய்வங்கள் அடுத்தநிலைக்கான சாதிகளின் இருப்பை உணர்த்துவர். "சிறு தெய்வம்" என்பதில் குழப்பம் உள்ளது. நாட்டார் தெய்வங்களை அவ்வாறு கருதுவது கோட்பாட்டு ரீதியில் தவறு. பெருந்தெய்வங்கள் எனப்படுவோரையே எவர் பரம்பொருள் எவரெல்லாம் சிறுதெய்வங்கள் எனப்பகுக்க இயலும்; சைவருக்கு சிவன் பரம்பொருளாக இருக்கும்போது, விஸ்ணு-சக்தி-முருகன் என்போர் சிறு தெய்வங்களாவர். வைணவர்களுக்கு விஸ்ணு முழுமுதற் கடவுளாக இருக்கும்போது சிவன்-சக்தி-முருகன் ஆகியோர் அவரால் இயக்க வல்ல அடுத்த நிலைச் சிறுதெய்வங்களாவர். நாட்டார்வழிபாட்டுக்கான கிராமியத் தெய்வகள் இந்தப் போட்டிக்குள் வர அவசியமற்ற முந்திய வழிபாட்டின் தொடர்ச்சியாக இருப்பர். பரம்பொருள்-சிறுதெய்வங்கள் என்ற "பெருந்தெய்வங்கள்" எல்லாம் நிலப்பிரபுத்துவ விழுமியங்களுக்கு ஆட்பட்டு பிராமணப் பூசை புனஸ்காரங்களையும் "சைவப் படையல்கள்" உட்பட்ட புனிதங்களையும் கோருவன; கிராமியத் தெய்வங்களோ முந்திய இனமரபு வாழ்முறையின் தொடர்ச்சியான நெருக்கத்தை வழிபடும் மக்களோடு கொண்டிருப்பன. தான் உண்ணும் இறைச்சி, மீன் மற்றும் குடித்து மகிழும் கள்ளுச் சாராயம், சுருட்டு என்பவற்றைப் படையலாக வைப்பதில் இந்தக் குல தெய்வங்கள் மகிழும் என்ற நெருக்கத்துடன் கிராமியத் தெய்வ வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் கிராமியக் கடவுளர்கள் சாதிகளுக்கானது, சாதிகளுக்குள்ளும் குலத் தொடர்ச்சியினருக்கானது எனத்தனித்துவத்துடன் அமைவன("பெருந்தெய்வம்" என்பவரும் சாதி அடையாளம் கடந்தவரல்ல; அதுதான் ஆதிக்க சாதியினர் மட்டுமே பரம்பொருளைப் பிரதிஸ்டை செய்ய இயலும் என்பதிலேயே வெளீப்பட்டதே).</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;">
ஆக, இந்து சமயம் என்பது சாதிகளின் சமயம் ஆகும். ஒவ்வொரு சாதிக்குமான தனிச் சமயப்பின்பற்றலோடு, ஆதிக்க சாதிப் பரம்பொருளுக்கு ஆட்பட்டு அவை இயங்கின. இந்த சமாதான-சகவாழ்வு செமிட்டிக் மதங்களான யூத-கிருஸ்தவம்-இஸ்லாம் என்பவற்றிலிருந்து அடிப்படையான வேறுபாட்டை உடையது. செமிட்டிக் மதங்கள் வர்க்க சமூக வாழ் முறையின் வெளிப்பாடு என்கிறவகையில், இனமரபுக்குழுக்களுக்கான கடவுளர்கள் இல்லாதாக்கப்பட்டன. எமது சாதியச் சமூகத்தில் சாதிகளின் சமயமாக இந்து சமயம் அமைந்தமை பிரத்தியேக வரலாற்றுப் போக்கின் வெளிப்பாடு.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;">
வர்க்கப் பிளவுறாது, இனமரபுக்குழு மேலாண்மையோடு சுரண்டல் சாத்தியப்பட்ட எமது வரலாறு எழுது முறையை வர்க்கபிளவுற்ற ஐரோப்பியப் பாணியில் எழுதுவதின் பேறாக தோற்ற மயக்கங்கள் மலிந்துபோயுள்ளன. எமது சமூகத்தைப் புரிந்து கொள்வதிலும், மாற்றத்துக்கான மார்க்கத்தை வகுப்பதிலும் இடர்ப்பட வேண்டியுள்ளது. இகருத்தை எந்தத் தயக்கத்துக்கும் இடமளிக்காமலே நிராகரித்து விடுகிற நண்பர்களும் உள்ளனர். எம்மிடம்தான் முழுமையான விஞ்ஞானபூர்வமான மார்க்சியக் கண்ணோட்டம் இருக்கிறதே - அதன் வழி வர்க்கங்களை ஆய்வதும், பாட்டாளி வர்க்கத் தலைமையில் அணிசேர்க்கக்கூடிய வர்க்கங்களை ஐக்கியப்படுத்த வேண்டியதுந்தானே உடனடிப் பணி! அதற்கு அமைவாக இன்றைய ஜனநாயக வாய்ப்பு ஆளும் சாதிக்கு இருந்த முழுமுதற்கடவுளின் அனுக்கிரகத்தைத் தகர்த்து, அனைத்து சாதிகளிலிருந்தும் முதலாளிகள் உட்பட அனைத்து வர்க்கங்களையும் சாத்தியப்படுத்தி விட்டதே, இனிச் சாதிபற்றிப் பார்க்க என்ன இருக்கிறது,வர்க்கத்தைப் பார்த்தால் போதாதா எனக் கேள்விகளை அடுக்குவர். இனி சாதி பற்றிப் பேசினால் தலித்தியவாதம் தானா? மார்க்சியப் பார்வையில் இன்றைய சாதி இயங்குமாறினைக் காண இயலாதா? முதலாளித்துவ ஜனநாயகம் பூரணப்பட்டாலும் சாதி இருக்கத்தான் போகிறது, சாதி அரசியல் இயங்கத்தான் போகிறது என்றால், அது பின் நவீனத்துவக் கண்ணோட்டமாகுமா?</div>
</div>
</div>ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-23360742026428127382012-05-07T03:24:00.000-07:002012-05-07T03:24:08.873-07:00இரட்டைத் தேசியம் - 6 எங்கிருந்து தொடங்குவது?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px;">
<span class="fbUnderline" style="text-decoration: underline;"><strong>இரட்டைத் தேசியம் - 6</strong></span></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px;">
<i>எங்கிருந்து தொடங்குவது?</i>......<em>ந.இரவீந்திரன்</em></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px;">
<span class="photo_left" style="clear: left; float: left; max-width: 180px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 10px; padding-top: 2px;"><img alt="" class="photo_img img" src="http://photos-f.ak.fbcdn.net/hphotos-ak-ash3/524471_293347814084898_100002290445134_677864_515295243_a.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; max-width: 493px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" /><span class="caption"></span></span></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px;">
இவ்வுலகத்துக்கான தீர்மானத்தன்மையுள்ள ஓர் அறிவியலின் பகுதியாகவும், மறுக்கக்கூடாத சம்பிரதாயமுமாய் "மார்க்சியம்" பார்க்கப்படுவதைக்கண்ட மார்க்ஸ், 'நல்லவேளை நான் ஒரு மார்க்சிஸ்ட்டில்லை' என்று சொல்லவேண்டியிருந்தது. எத்தகைய இறுக்கமான முடிந்த முடிவுகளை மார்க்சியத்தின் பேரால் முன்வைப்பதையும், அதனை ஒரு பொருளாதார வாதமாய் முடக்குவதையும் கார்ல் மார்க்ஸ் வெறுத்தார். "ஒவ்வொரு மக்கள் சமுதாயமும் தாம் எந்தெந்த வரலாற்றுச் சூழ்நிலைகளில் வசிக்க நேர்ந்தாலும், அவர்கள் மீது விதி சுமத்தும் பொதுவான வாழ்க்கைப் போக்கு பற்றிய ஒரு வரலாற்றியல்-மெய்யியல் கோட்பாடு மட்டுமே தம் படைப்பு" என்று மார்க்ஸ் கருதியது குறித்து அஸ்கர் அலி எஞ்சினியர் கூறுவார். அதெப்படி மத எழுச்சியொன்றினூடாக முகமது நபியால் சமூகப் புரட்சியொன்றை நிகழ்த்திக்காட்ட இயலுமாயிற்று என்று மார்க்ஸ் வியப்புத் தெரிவித்து, அதுகுறித்து ஆய்வு செய்யவேண்டும் என்று ஏங்கல்சுக்கு எழுதியிருந்தாரல்லவா, அந்த இஸ்லாமிய மார்க்கம் இன்று எதிர் நோக்கும் நெருக்கடி குறித்து மார்க்சிய நோக்கில் அணுகியபோது இதனை அவர் கூறியிருந்தார். "இஸ்லாத்தின் பிரச்சனைகள்: ஒரு மறு பார்வை" என்பது அந்நூல்(ப. 132).இந்நூலில் அஸ்கர் அலி எஞ்சினியர் கூறும் இவ்வார்த்தைகள் கவனிப்புக்குரியன: "சமுதாயத்தைப் புரட்சிகரமாக்குவதற்கான ஓர் இறைத்திட்டமாக இஸ்லாம் இருந்தது. இஸ்லாம் ஒரு சீரிய இறைத் திட்டம் என்பதோடு அதுவரையான இறைத்திட்டங்களில் அதுவே ஒரு நீதிமிக்க சமுதாயத்துக்கான மிகப் பெரிய திட்டமாக இருந்தது. அந்தச் சமூகம் நீதி, சமத்துவம் இவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது மட்டுமல்ல, மனித குலத்துக்கு அது ஆழ்ந்த மரியாதையும் அளித்தது. சாதி, நிறம், இனம் சார்ந்த எல்லாப் பாகுபாடுகளையும் அது ஒழிக்க முயன்றது. மரியாதைக்கும் கவுரவத்துக்கும் உரிய அடையாளம் நன்னடத்தையே என வலியுறுத்தியது. நிறம், இனம், குலம், தேசியம் என்பவை எல்லாம் வெறும் அடையாளக் குறிகள் தாமே தவிர மற்றவர்களிலிருந்து பாகுபடுத்திப் பெருமைப்பட்டுக்கொள்வதற்கான விசயங்களல்ல.ஒரு மனிதன் மற்றவனைவிட உயர்ந்தவனுமல்லன்; அப்படியே ஓர் இனம்,குலம் அல்லது தேசிய இனம் மற்றோர் இனம், குலம் அல்லது தேசிய இனத்தைவிட உயர்ந்ததுமல்ல. நன்னடத்தையின் வழியாக மட்டுமே எவரும் சிறப்புப் பெறமுடியும். இறையச்சத்தின் வழியாக மட்டுமே ஒருவர் அல்லாஹ்வின் பார்வையில் தன்னை உயர்த்திக் கொள்ள முடியும்(49:13). இறையச்சம், நன்னெறி என்பவை சம்பிரதாயமான தொழுகையையும் நோன்பையும் மட்டுமே குறிப்பதில்லை. அவை நீதியான நடத்தையைக் குறிப்பன(5:8). இயக்க ஆற்றல் மிக்க, புரட்சிகரமான ஓர் ஒழுக்கச் செயற்பாடு மட்டுமே நன்னடத்தையையும் இறையச்சத்தையும் நீதியுடன் தொடர்புபடுத்தும். சம்பிரதாயமான கோட்பாடு, துறவிலும் ஆன்மிகப் பயிற்சிகளிலும் இறையச்சத்தைக் காணுமேயன்றி நீதியைக் கடைப்பிடிப்பதிலும் ஒரு நேரிய சமூகத்தை நிறுவுவதிலும் அவ்வளவு அக்கறைப்படுவதில்லை. தொழுகை(ஸலாஹ்) என்பதுகூட மரபுப் பொருளிலான ஆன்மீகப் பயிற்சி என்பதாகக் கொள்ளப்படுவதில்லை. தொழுகை அவமானகரமானதும் அநீதியானதுமான செயல்களிலிருந்து ஒருவர் தம்மைக் காத்துக் கொள்ளும் ஒரு வழியாகவும் இருக்கிறது" (பக். 47 -48).இன மரபுக் குழுக்களாகப் பிளவுபட்டு ஒன்றோடொன்று மோதிய அரபுச் சமூகத்தை முஸ்லிம்கள் எனும் ஒரே சகோதரத்துவ உறவுடையோராக ஒன்றிணைத்த நபியின் புரட்சிகரப் பங்களிப்பு விதந்துரைக்கத்தக்க ஒன்றே. அரபுலகைக் கடந்து உலகின் எந்த மூலையிலுள்ளோரையும் இஸ்லாம் மார்க்க அடையாளத்துடன் சகோதரத்துவ உறவு பூண வகைசெய்தமை கவனிப்புக்குரியது. மதம் என்ற கட்டுக்கோப்பைக் கடந்து கல்விக்கும் அறிவியல் பார்வைக்கும் நபி வழங்கிய முக்கியத்துவம் சமூக உறவுகளை புரட்சிகரமாக வடிவமைத்திருந்தது; அன்றைய அறிவியல் வளர்ச்சி எட்டியிருந்த எல்லையை இஸ்லாம் எட்டியிருந்தது.இன மரபுக் குழுப் பண்பை இஸ்லாம் நபி வாயிலாகத் தகர்த்தது போல இந்துச் சமூகம் மேற்கொள்ளாதது மட்டுமன்றி, தொடர்ந்து அதைப் பேணுவதையே தன் சிறப்புப் பண்பாகக் கொண்டிருந்தது. தகர்ப்பு அங்கே அவசியப்பட்ட வரலாற்று அவசியம் எனில், இனமரபுக் குழுப் பண்போடேயே சமூக மாற்றப் புரட்சிக் கருத்தியலை இந்துச் சமூகத்துக்கு வழங்க இயலுமாயிருந்தமை இந்திய மதங்களின் சிறப்பு. முகமது நபி புரட்சிகரமாய் வடிவமைத்த சகோதரத்துவ உறவும் அறிவியல் பார்வை வீச்சும் சமூக மாற்றத்தில் மதப் பங்களிப்பை இனங்காண வெளிப்படையாக அழைப்புவிடுத்திருந்தது. அதன்பால் கவனம்குவித்த போதிலும் மார்க்சினால் அதனை மேற்கொள்ள இயலாது போனதில் இந்தப் பக்கம் நீண்ட காலத்துக்குப் பின்போடப்பட்டு இன்று மார்க்சிய ஆய்வாளர்களது கவனத்தைப் பெற்றுவருகிறது.ஆயினும் அரை நூற்றாண்டுக்கு முன்னரே பிராமணியப் பிடியைத்தகர்த்து சமூக உற்பத்திமுறை மாற்றத்தை ஏற்படுத்திய புரட்சியை பௌத்த மதச் சிந்தனை முறை வழங்கி இருந்தமையை எம்.என்.ராய் காட்டியிருந்தார். அதேவேளை, கி.பி.நாலாம் நூற்றாண்டில் பௌத்தம் வீழ்த்தப்பட்டு பிராமணரது மேலாண்மை மீண்டும் ஏற்பட்டமையை புரட்சிகர மாற்றமாயன்றி பழமைக்கான பின்வாங்கல் என்றே எம்.என்.ராய் கண்டுகாட்டினார்.வட இந்தியாவில் இதனைக் கண்டறிவதில் சிரமமிருந்தது. தமிழகத்தில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய நிலப்பிரபுத்துவ எழுச்சிக்கான மாற்றத்தை வெறும் பிராமண மீட்சியாகக் காண அவசியமற்ற செல்நெறி இயக்கம்கொண்டிருந்தது. வட இந்தியாவில் போன்று முன்னதாக இங்கு பிராமண ஆதிக்கம் நிலவியதில்லை; நிலப்பிரபுத்துவச் சாதியாக வெள்ளாளர்களே இங்கு அதிகாரத்தைக் கையகப் படுத்தியிருந்தனர். அந்த மாற்றத்தின் பின்னர் தமது அதிகார நிலைபேற்றுக்கு அவசியம் என்ற வகையில் பிராமணரை வரவேற்று அவர்களையும் நிலப்பிரபுக்களாக்கிக்கொண்டனர்.இந்த மாற்றப் போக்கைக் கைலாசபதி தனது ஆய்வுகள் வாயிலாக தெளிவுபடுத்தியிருந்தார். வணிகச் சாதியினரான காரைக்காலம்மையாரால் தொடக்கப்பட்டு, வெள்ளாளரான நாவுக்கரசராலும் ஞானசம்பந்தர் என்ற பிராமணராலும் வளர்க்கப்பட்ட பக்திப் பேரியக்கத்தை வெறும் மத எழுச்சியாகப் பார்க்கப்பட்ட நிலையிலிருந்து மீட்டு, சமூக மாற்றச் செயலாற்றலாய் அதனைக் கண்டு காட்டியவர் கைலாசபதி. ஆயினும் இந்த அம்சம் போதிய அளவுக்குக் கவனத்தில்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, இந்தியா முழுமையிலும் பிராமணத்தேசியம் பெற்ற அதிகார வாய்ப்புக்காரணமாக தமிழகத்தில் வெள்ளாளருடன் கூட்டமைத்த அதிகாரப் பகிர்வு என்ற முந்திய நிலையிலிருந்து கூடுதல் வாய்ப்பைப் பிராமணர் பெற்றிருந்தனர். இதன் பேறாக ஆதிக்க சக்திகளின் கூட்டில் பிளவேற்பட்டு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக பிராமண எதிர்ப்பியக்கம் தமிழகத்தின் பிரதான செல்நெறியாக வளர்ந்துவந்தது. இதன் காரணமாய் இந்து சமயம் குறித்த தெளிவின்மை பெரும் குழப்பநிலையை அடையலாயிற்று. ஆகவும், கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒரு புரட்சிகர மாற்றத்தை நிகழ்த்திய இந்து மதம் குறித்த தெளிவின்மை தொடர்கிறது.எது இந்து மதம் என்ற வரையறையுமின்றியே இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற அவலம் எம்மிடமுண்டு. கி.பி.நாலாம்-ஐந்தாம் நூற்றாண்டுகளில் இருந்து எழுச்சி பெற்ற புதிய மதமே இந்து சமயம். முன்னதாக பௌத்தத்தால் கி.மு.ஆறாம்-ஐந்தாம் நூற்றாண்டில் வீழ்த்தப்பட்டது பிராமண மதம்; சிந்து வெளிப் பண்பாட்டில் நிலவிய ஏற்றத்தாழ்வு வாழ் முறைக்கானதாக இருந்தது பிராமண மதமல்ல - இன மரபுக் குழு வாழ்முறையோடான சிந்தனைகளோடு புகுந்த ஆரியர்களுக்கான ரிக் வேத பிராமணர்களிடம் இருந்தது பிராமண மதமல்ல. இவையிரண்டும் இணைந்து ஏற்பட்ட புதியவடிவம் பிராமண மதம்.இது ஏனைய இன மரபுக்குழுக்களோடு இணைந்து இந்துமதம் எனும் புதிய வடிவத்தைப் பெற்றிருந்தது. சிந்துவெளிப் பூசகர்கள், ரிக்வேதப் பிராமணர்கள், இவையிரண்டினதும் இணைப்பில் உருவான பிராமணமதம் என்பவற்றிடையே சிறிய வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும் இவை இயற்கையம்சங்களை ( அவற்றின் குறியீட்டு வடிவங்களை ) வழிபட்டன. அதுசார்ந்த பலவேறு கடவுளர்களிடையே எவர் பெரியவர் எனும் பேதங்கள் இருந்ததில்லை. இந்து மதத்தில் இயற்கை வழிபாடும் பல கடவுளர்களும் காணப்பட்ட போதிலும், அவர்களிடையே யார் முழுமுதற்கடவுள் - எவரால் ஏனைய கடவுளர்கள் இயக்கப்படுவர் என்ற பிரதான வேறுபாடுண்டு.இனமரபுக் குழுக்களுக்குரிய சிவன் - கிருஷ்ணர் - அம்மன் போன்ற கடவுளர்களையே ஒவ்வொரு மதப் பிரிவினர் (சைவம்-வைணவம்-சாக்தம்) முழுமுதற்கடவுள் ஆக்கியிருந்தனர். இதன் வாயிலாக மேலாதிக்கம்பெற்ற ஆளும் சாதியாக பரிணமித்த இனமரபுக் குழுவும் பிராமணரும் முழுச் சமூகத்தின் மீதுமான சுரண்டல் வாய்ப்பையும் ஆட்சியதிகாரத்தையும் ஏற்படுத்திக்கொண்டனர். முன்னரான பிராமண மதமோ பௌத்தம் சமணம் போன்ற மதப் பிரிவுகளோ அனைத்து சமூகப் பிரிவுகளையும் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றனவல்ல. ஆட்சியிலுள்ள அரசையும் அதிகார சமூகப் பிரிவையும் தம்மை ஏற்போராக ஆக்கிவிட்டாலே போதுமானதாக அப்போது இருந்தது.நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிலப்பிரபுக்களுக்கு அவர்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து சமூகப் பிரிவினரும் பல்வேறுவகைகளில் உழைத்தாக வேண்டியவர்கள். வல்லாண்மையால் அவர்கள் கவர்ந்துகொண்ட நிலம் அனைத்தையும் கடவுளே அவர்களுக்கு வழங்கியதாக ஏற்றுக்கொண்டு தமது கன்மப் பயன் பிரகாரம் அவர்களுக்காய் உழைத்தாக வேண்டியது தம் கடன் என்று ஏற்புக்கொள்ள வழிப்படுத்துவதாக முழுமுதற் கடவுளுக்குக் கட்டுப்பட்டதாய் தம் வழிபாட்டுக் கடவுளும் மத உணர்வுகளும் அமையும் வகையில் இடைச் சாதிகளாயும் ஒடுக்கப்பட்ட சாதிகளாயும் மாற்றப்பட்ட இன மரபுக்குழுக்கள் இந்துமதத்தால் ஆற்றுப்படுத்தப்பட்டன.இந்த மாற்றத்துக்கு அமைவாக முழுமுதற் கடவுளும் முந்திய பிராமண மதக்கடவுளரிலிருந்து பண்புரீதியிலான மாற்றத்தைப் பெறவேண்டியிருந்தது. சுடலைப் பொடி பூசிய சிவனும், இடையரின் கிருஷ்ணரும், போர்க்குணமிக்க காளியும் முழுமுதற் கடவுளராக இயலுமாயிருந்ததில் இந்த அம்சத்தைக் காணலாம். அதேவேளை இப்பரம்பொருள் அதிகார ஆளுகையை ஏற்புடையதாக்குவது; அதற்கமைவாக இக்கடவுளர் சாதாரண மக்களின் புரிதலுக்கேற்ற பாடுபொருள்களாயினர். பௌத்தம் பாளியிலும் பிராமண மதம் சமஸ்கிருதத்திலும் பாடிப்பரவிய கடவுளர் நிலப்பிரபுத்துவ முழுமுதற்கடவுளாக பரிணமித்தபோது பிராந்திய மொழிகளில் பாடப்படலாயினர். சிங்கள மொழியின் முதல் இலக்கியம் பூஜாவலிய புத்தரின் சரிதம் பேசுவது; மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராட்டி, வங்காளி என்பவற்றின் முதல் இலக்கியங்களெல்லாம் மஹா பாரதம் அல்லது இராமாயணம் போன்ற இதிகாஸங்களையும் புராணங்களையும் பாடுபொருட்களாய்க் கொண்டுள்ளன. இவையனைத்தும் ஏழாம் நூற்றாண்டைத் தொடர்ந்து வெளி வந்தன என்பது கவனிப்புக்குரியது.தமிழின் பக்திப் பேரியக்கத்தை வணிக வர்க்க அதிகாரம் முறியடிக்கப்பட்டு நிலப்பிரபுத்துவம் ஆதிக்கம் பெற்ற மாற்றப் போக்காகக் கொள்ள இயலாது என்போர் உள்ளனர்; இது தொடர்பில் மே.து.ராசுகுமார் ஆய்வு கவனிப்புக்குரியது. பௌத்தம் சமணம் ஆகியவற்றின் மத நிறுவனங்களும் ஆதரவுப் பிரிவினரும் சிறு விவசாயிகளாயிருந்தனர், அவர்களிடம் இருந்து அச் சிறு நிலவுடைமையோடு அதிகாரத்தையும் பெரு நிலவுடைமையாளர்கள் அபகரிப்பைச் செய்தமையே பக்திப் பேரியக்கம் என்பர். இன்றைய நோக்கில் இந்து மதம் வாயிலாக ஆதிக்கம் பெற்ற பிராமணியம் சாதியத்தையும் தீண்டாமைக் கொடுமையையும் சாத்தியமாக்கியது என்ற புரிதலோடு, அத்தகைய ஆன்மீகப் புனிதமுள்ள தனிச் சாதி எதனையும் காட்டாததுடன், அதன் வேதம் ஆய்வுக்கு அப்பாற்பட்ட கடவுள் வாக்கு என்பதால் அப்படியே ஏற்கப்பட வேண்டும் என்பதுபோலன்றி புத்தியைப் பயன்படுத்தித்தேடு(பௌத்தம்), ஐயவாதத்துடன் எதையும் ஆய்வுக்குட்படுத்து(சமணம்) என வலியுறுத்திய முந்திய மதங்கள் நீடித்திருப்பின் இன்றைய அவலங்கள் இருந்திருக்காதே என்ற ஏக்கத்திலிருந்து இந்த நோக்கு ஆதரவைப் பெறக் காணலாம்.பௌத்தமோ சமணமோ இன்று இருந்திருப்பின் எப்படி இருந்திருக்கும்? கொலைவெறி இராணுவத்துக்கு 'புத்த பகவானின்' ஆசியை பிரித்தோதி வழங்குவதோடு, அச்சத்துடன் ஓடோடி சிறு நிலப்பரப்பில் தஞ்சம் கோரி நிற்கும் மக்களைக் கருணையின்றிக் கொல்லலாம் என தம்மபிடக வாசகங்களால் நியாயப்படுத்தும். ஆதிக்க சமூகப் பிரிவின் எந்த மதமும் கருணை காருண்யங்களோடு இல்லை. அதேவேளை தம்மை ஏற்கும் மக்கள் பிரிவினருக்கு ஏதோ சில நன்மைகளை வழங்காமல் எந்த மதமும் ஏற்பினைப் பெற்று நீண்ட காலத்துக்கு நிலைக்க இயலாது.அந்தவகையில் இந்து மதம் அன்றைய வரலாற்றுத் தேவையொன்றை நிறைவு செய்தவகையிலேயே ஆயிரமாண்டுகளுக்கு மேலாக நீடித்திருக்க இயலுமாயுள்ளது என்ற புரிதலில் என்ன தவறு இருக்கும்? அதற்காக வலிந்த பொருள் கொள்ளலுக்கு அவசியம் எதுவுமில்லை. அவ்வகையில் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றன எப்படி வணிக ஆதிக்கம் அன்றைய சமூக ஆதிக்கத்தை வெளிப்படுத்தின என்பதைக் கைலாசபதி கண்டுகாட்டியுள்ளமையைப் புரிந்துகொள்வதில் சிரமமேதுமில்லை. அந்தச் சமண, பௌத்தக் காப்பியங்கள் சமூக ஏற்பாய் வலியுறுத்திய கன்மக் கோட்பாடு வணிக வர்க்கத்துக்கு ஏற்புடையதாக இருந்தமையாலேயே, வணிகக் குழாங்கள் அந்த மதப் பரப்புரையாளர்களான துறவிகளைத் தம்மோடு எடுத்துச் சென்று இந்தியா முழுமையையும் பண்பாட்டு ஒருமைக்குள் பௌத்தமும் சமணமும் கொணர்வதற்கு வாய்ப்பளித்தனர். அத்துறவிகளுக்கான பள்ளி அமைக்கவும் வாழ்வாதாரத்துக்குமான பாறை செதுக்கலையும் நிலங்களையும் வழங்கினர்.அவ்வாறு நிலம் இருந்தமையாலேயே சிறு நிலவுடைமையாளர்கள் ஆக அவர்கள் கொள்ளப்பட முடியாது. அன்றைய வாழ்வாதாரத்தில் பிரதான சமூக சக்தியாக இருந்தது வணிக சமூகப் பிரிவே; நிலம் பிரதான உற்பத்தி சக்தியாக அன்று இல்லை. அதனை பேணுவதோ அதன் உற்பத்திப் பெருக்கத்துக்கான கடமையே அரசியல் எனக் கருதப்படும் கருத்தியலோ அன்று காணப்படவில்லை. வணிக நலன் பேணுவதும், வணிகர்கள் சுதந்திரமாய்ப் பயணித்து வணிகம் செய்ய வாய்ப்பளித்து பாதுகாப்பளிப்பதே அரசியல் எனக் கருதப்பட்டதாலேயே கோவலன் என்ற வணிகனுக்குத் தவறான தீர்ப்பைக் கொடுத்ததை உணர்ந்த கணமே நின்றசீர் நெடுமாறன் நிலை தடுமாறி மாரடைப்பில் வீழ்ந்துபட்டு இறக்க நேர்ந்தது. இவ்வாறு வணிக நலன்பேணும் காலகட்டத்தில் இயற்கை வழிபாட்டுடன் பிராமணிய மதத்தையும் ஆதரித்திருந்த கிழார்கள்(சிறு நிலவுடைமையாளர்கள்) அப்போது அரசு விவசாயத்தை ஆதரிக்காத நிலை காரணமாக நலிவுற்றிருந்தனர். உணவுற்பத்தி பெருகாது ஈழத்துணவை வணிகர்கள் வருவித்து தம்மைப் போசிக்க முடியும் - மக்கள் எப்படி வாழ்ந்திருக்க முடியும்? பஞ்சம், பட்டினிச் சாவு மலிந்திருந்ததை மணிமேகலை வாயிலாகக் காண்போம். இதன் எதிர்வினையாகவே விவசாயிகளது எழுச்சியாகப் பக்திப் பேரியக்கம் அனல் வாதம் புனல் வாதம் வாயிலாக சமணத்தையும் பௌத்தத்தையும் வீழ்த்தி அரசனைத் தம்பக்கம் மாற்றிக்கொண்டது. வாதங்களில் சைவ சமயக் குரவரது வெற்றி என்பது பட்டினியில் வாடிய மக்களை பக்திப்பேரியக்கம் வாயிலாக அணி திரட்டியமையின் பேறே. மக்கள் புதிய மதத்தை அரவணைத்துவிட்டமையால் அரசு தவிர்க்க இயலாது அதனைத் தாமும் தழுவியாக வேண்டிய நிர்ப்பந்தம்.விவசாயச் சார்பான அரசானதும் நீர்ப்பாசனத்தைப் பெருக்கும் அணைகளையும் குளங்களையும் பராமரிப்பது அரசின் பிரதான பணி ஆயிற்று; ஏராளமான ஏர்க் கொழுவைகளை வடிக்கவும் மண்வெட்டி போன்ற விவசாயக் கருவிகளை உற்பத்தி செய்யவும் ஏற்றதாக கைவினைஞ்ஞர்களை இருத்தவும் வெளியேறாது கண்காணிக்கவும் அரசு ஆவன செய்தது. இச் செயல்வேகம் பட்டினியைப் பறந்தோடச் செய்ததால் பரமனும் பரந்தாமனுமே உணவைத் தந்தனர் என மக்களை நம்பவைத்து, சைவமும் வைணவமும் மக்கள் அனைவரும் பின்பற்றும் மதங்கள் ஆக வழிகோலியது. பின்னரும் வணிகர்களில் ஒருபகுதியினர் தொடர்ந்தும் சமணத்தில் நீடித்தனர்; கணிசமான இன்னொரு பிரிவினர் சமணத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவினர்(தமிழ் முஸ்லிம்களிடம் தொழுகை, நோன்பு போல சமணம் சார்ந்த நல்ல பல தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இருப்பது கவனிப்புக்குரியது). இன்னுமொரு கணிசமான பிரிவினர் சைவத்தையும் வைணவத்தையும் தழுவினர். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பின்னர் அரசு நிலப்பிரபுத்துவ நலன் பேணுவதாக ஆன பின்னர், தனதும் சமூகத்தினதும் வணிகத் தேவை என்கிற அளவில் வணிகர்களை பேணுவது தவிர்க்கவியலாதது. பெரிய புராணத்தில் தந்தையை இழந்த வணிகக் குடும்பத்தில் சிறுவனுக்கு சொத்துச் சேர சிவனே வந்து வழக்குரைத்ததைக் காண்போம்; சைவ எழுச்சியின் தொடக்க நிலையிலேயே அப்பூதியடிகள் எனும் வணிகர் நாவுக்கரசர் பால் பக்திபூண்டிருந்ததைக் கண்டுள்ளோம். அந்தவகையில் ஆதிக்கத்தை வென்றெடுத்த சைவம் தனது ஆளுகைக்குள் வணிகர்களையும் அரவணைத்துச் செல்லும் தேவையை உணர்ந்திருந்தது எனக் கொள்ளலாம்.ஆக, கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டுகளில் பக்திப் பேரியக்கமானது வணிக அரசாதிக்கத்தை தகர்த்து நிலப்பிரபுத்துவம் அரசாதிக்கம் பெற வழிகோலியது என்பது தெளிவு. இந்த மாற்றத்தில் அதிகாரம் கைமாறியபோதிலும் சமூக சக்திகள் ஒரே அடையாளத்துடன் இருந்தனர். கிழார்கள் எனும் வேளாண்மை சார்ந்த வெள்ளாளர் வீர யுகத்தில்(சங்க காலத்தில்) தோற்றம் பெற்று மூவேந்தர் ஆளுகையில் அதிகாரச் சாதியாயிருந்தனர்; அப்போது இரண்டாம் நிலையிலிருந்த வணிகச் சாதியான செட்டியார், கி.பி.4 - 6 ஆம் நூற்றாண்டுகளில் ஆதிக்கமுள்ள முதல் நிலைச் சாதியாகி, இப்போது மீண்டும் இரண்டாம் நிலைச் சாதியாகினர். வணிக ஆதிக்கம் மேலோங்கிய காலத்தில் சிலப்பதிகாரம் - மணிமேகலை முதல் சீவகசிந்தாமணிவரை அற்புதமான காப்பியங்களும், நீதி நூல்களும், இலக்கண நூல்களும் தோற்றம் பெற்றிருந்ததை அறிவோம். இவை சமண - பௌத்த கோட்பாடுகளை நிலைநிறுத்திய அதேவேளை சாதிகளின் இருப்பை வலியுறுத்துவனவாயும் இருந்தன; பிராமணர் புனிதச் சாதியினர் என்பதை மறுத்தபோதிலும் சாதியின் இருப்பை நிராகரிக்க இயலாதனவாய்ப் பௌத்தமும் சமணமும் இருந்தன என்பது கவனிப்புக்குரியது. எமக்கான சுரண்டலைப் பேணும் ஏற்றத்தாழ்வுச் சமூக அமைப்பு இனமரபுக் குழுக்கள் வர்க்கங்களாய்ப் பிளவுற்று ஏற்பட்டதல்ல. படைநடத்த ஏற்ற அளவில் உணவை வழங்க வாய்ப்புடைய மருதத் திணைக்கான இனமரபுக் குழு ஏனைய திணைக்கான இனமரபுக் குழுக்களைச் சாதிகளாக்கி ஆட்சிக்குட்படுத்தியே எமது ஏற்றத்தாழ்வுச் சமூகமுறை இயங்கிவந்துள்ளது. இதற்கு ஏற்றதாயும், மாறும் அமைப்பு மாற்றங்களுக்கு ஏற்ப கருத்தியல் மாற்றங்களைக் கண்டறிந்து பரப்புரை செய்யவும் ஆன புனிதமான சாதியினர் என்று பிராமணர் வைக்கப்பட்டனரே அல்லாமல் சாதிமுறை என்பது பிராமணர் ஏற்பாடல்ல; அதாவது எமது சாதி வாழ்முறையின் வெளிப்பாடு தான் பிரமணரே தவிர, அவர்களின் கண்டுபிடிப்பாக உற்பத்தியானதல்ல சாதிமுறை.ஆட்சியதிகார வலுவோடு எந்தச் சாதி உற்பத்திச் சாதனத்தில் ஆளுகையைக் கொண்டிருப்பரோ, அச் சாதி ஆளும் சாதி; ஏனைய சாதிகள் படியிறக்கத்துடன் அதிகார இழப்புடைய அடுத்தடுத்த படிநிலைகளுக்குரிய சாதிகளாய் அமைவர். தமிழக வரலாற்றில் வீர யுகத்தில் மருத்தத் திணைக்கான வேளாண்மைச் சாதிக் கிழார்கள் ஆளும் சாதி ஆயினர். இந்த விவசாய எழுச்சிக்கு முன்னதாகவே வணிக வாய்ப்பு தமிழகத்தில் இருந்தது. விவசாயத்தைச் சாராமலே ஏலம், கறுவா, கராம்பு, மிளகு, நீலமணிக்கல், முத்து, மயிலிறகு என்பன அன்றைய வணிகப் பொருட்கள். தமது பாதுகாப்புக்கான சிறிய படையணியை இவர்கள் வைத்திருக்க இயலுமேயல்லாமல், ஏனைய இனமரபுக் குழுக்களை வென்றடக்கி ஆளப்படும் சாதிகளாக்க வாய்ப்பற்றிருந்தனர். இந்த மாற்றத்தை கிழார்கள் சாத்தியமாக்கி, சாதி ஏற்புக்கு அளவாக பிராமணரையும் இருத்திய நிலையில், பெரு வளர்ச்சி பெற்ற வணிகச் சாதி அரசைத் தமது நலன் பேணும்வகையில் மாற்றவேண்டியதாக உணர்ந்தனர். அப்போது மூவேந்தர் திருமுருகாற்றுப்படை, பரிபாடல் எனும் படைப்பாக்கம் எழுச்சி பெறும்வகையில் முருகனையும் திருமாலையும் முழுமுதற்கடவுளாக்கக் கூடிய முன்வடிவத்தை சாத்தியமாக்கிய வளர்ச்சியைக் காட்டினர்.அது வீழ்ச்சியடைந்து வணிகர் மேலாண்மை பெற ஏற்ற, அவர்களது கருத்தியலான கன்மக் கோட்பாட்டை பரப்புரை செய்த பௌத்தமும் சமணமும் ஆதிக்கம்பெற ஏற்றவாறு களப்பிரர் ஆட்சி தமிழகத்தை ஆட்படுத்தியமையை அறிவோம். களப்பிரர் வருகைக்கு முன்னரே பௌத்தமும் சமணமும் தமிழில் தாக்கத்தை ஏற்படுத்தியமையை வீரயுகப் பாடல்களிலிருந்து அறிந்துள்ளோம். அந்தவகையில் அந்தப் புதிய பண்பாட்டுத்தளத்தைக் களப்பிரர் கையேற்று வணிகர் நலனை ஆதிக்கத்துக்குரியதாக்கினர். அதனை முறியடித்து விவசாயிச் சாதி(நிலப்பிரபுத்துவம்) அதிகாரம் பெறுவதற்கு அவசியப்பட்ட பண்பாட்டுப் புரட்சியாக பக்திப்பேரியக்கம் அமைந்தமைகுறித்து மேலே பார்த்தோம்.ஏற்கனவே கைலாசபதி உட்பட மார்க்சிய அறிஞர்கள் இவ்வகையில் மதக் கருத்தியலிலான மாற்றப்புரட்சிகள் வாயிலாக சமூக அமைப்பு மாற்றங்கள் நிகழ்ந்தேறியமையே எமது பிரத்தியேக வரலாற்றுச் செல்நெறியெனக் கண்டு காட்டியுள்ளனர்; அதன் அடுத்த தள வளர்ச்சியாக, ஏற்பட்ட சமூக அமைப்பு முறைக்கான மாற்றம் புதிய சமூக சக்தியாக இருப்பதாயில்லாமல் ஏற்கனவே நிலவிய சாதியொன்று அதிகாரத்தைப் பெறுவதாக அமைந்த உண்மையை வெளிச்சப்படுத்த வேண்டியவர்களாயுள்ளோம். இது புதிய சங்கதி இல்லை;</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px;">
<span class="photo_right" style="clear: right; float: right; max-width: 180px; padding-bottom: 5px; padding-left: 10px; padding-right: 0px; padding-top: 2px;"><img alt="" class="photo_img img" src="http://photos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash3/545017_293347970751549_100002290445134_677866_2132921112_a.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; max-width: 493px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" /><span class="caption"></span></span></div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px;">
அறிந்த ஒன்றே. ஆயினும் இது நுண்மாண் நுழை புலத்தோடு கவனங்கொள்ளப்படாமையினால் எமது வரலாற்றுப் போக்கை வர்க்க அமைப்பு மாற்றமாய்ப் புரிதல் கொண்டு இடர்ப்பட்டுள்ளோம். அமைப்புமுறை மாற்றம் என்கிற வகையில் வணிக மேலாதிக்கமுள்ள ஆதிக்க அமைப்பு இங்கே நிலவிய போதிலும் அதற்குரிய சமூக சக்தி ஒரு சாதியாய் இன்றுவரை இருக்கிறது. அதன் வீழ்ச்சியை அதனால் முன்னர் அதிகாரமற்றதாக்கப்பட்ட வேளாண்மைச் சாதியே சாத்தியமாக்கி நிலப்பிரபுத்துவ அமைப்பை ஏற்படுத்தியது. இந்த வேளாண்மைச் சாதியும் அதன் நட்புச் சாதியான பிராமணரும் நிலப்பிரபுத்துவ அமைப்பு அகற்றப்பட்ட பின்னரும் இருப்பன.புதிய அமைப்பாக முதலாளித்துவத்துக்கான தேசியத்தை வெற்றிகொள்ள முயன்ற தொடக்க நிலையிலேயே பிராமணத் தேசியமா, வெள்ளாளத் தேசியமா, தலித் தேசியமா என்கிற கேள்விகள் எழுந்தன. அதனை இந்த வடிவில் புரிந்துகொள்ளவில்லையெனில் ,வர்க்க நினைப்பின் தோற்றமயக்கம் தடையேற்படுத்தியதே அல்லாமல் இப்புதிய வரலாறு எழுதுமுறையை வாலாயமாக்கிக்கொள்வதன் வாயிலாக மட்டுமே எம்மைப்புரிந்துகொண்டு ஏற்ற மாற்றத்தை வென்றெடுக்க இயலும் என்பதில் சந்தேகமில்லை.வர்க்க சமூகமொன்றில் வாழ்ந்தபோதிலும் எமது சமூக முறைமையிலிருந்த வேறுபாட்டை மார்க்ஸ் வெளிப்படுத்தியிருந்தார். ஆசிய உற்பத்திமுறை, அதற்கான பிரத்தியேக அரசியல் வடிவம், இங்கே மதம் முக்கியத்துவமுள்ள பாத்திரம் வகிப்பது என்பன பற்றியெல்லாம் மார்க்ஸ் கவனம் செலுத்தியுள்ளார். வர்க்கப் பிளவுறாமல் மேலாண்மை பெற்ற இனமரபுக் குழுவால் சாதிமுறை ஏற்பட்டமை குறித்தும் அவர் பேசியுள்ளார். முன்னதாக மார்க்சிய சிந்தனை முறையை அறிமுகம் கொள்ள அவசியப்பட்ட அளவில் கவனம் செலுத்தியபோது பிரத்தியேகமான இந்தப் பக்கத்தை காணத் தவறியிருந்தோம்; அது தவிர்க்கவியலாத வகையில் கடந்தாக வேண்டியிருந்த ஒரு படிநிலை. இப்போதும் இதனை விவாதப் பொருளாக்கிக் கொள்ளாதிருப்பின் மிகப் பெரும் வரலாற்றுத் தவறிழைத்தவர்களாவோம்.அவ்வாறன்றி இப்போது இது விவாதப்பொருளாகியுள்ளது என்கிற வகையில் நாம் ஆரோக்கியமான திசையில் பயணிக்கிறோம் என உணரலாம். எழும் சந்தேகங்களாக இரு அம்சங்கள் வெளிப்படக் காண்போம். ஒன்று, இரட்டைத் தேசியம் என ஆளும் சாதித் தேசியம் - ஒடுக்கப்பட்டோருக்கான தேசியம் என்பதையும் கடந்து சாதித் தேசியங்கள் என பலவற்றைப் பேசுவது பற்றியது. மற்றையது, பண்பாட்டுப் புரட்சியே எமக்கான சமூக மாற்ற வடிவம் எனில் பாட்டாளி வர்க்க கட்சி ஒன்று முன்னெடுக்கும் புரட்சிகரப் பணிகளை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட வேண்டுமா என்பது பற்றியது.பாட்டாளி வர்க்கக் கட்சியொன்றின் கவனிப்புக்குரிய விடயங்களாயே இவற்றைப் பேசுகிறோம் என்பதை முன்னதாக அழுத்தியுரைப்பது அவசியம். அதேவேளை சென்றுகொண்டு இருக்கும் தடம் போய்ச் சேரும் இடத்துக்கு இட்டுச்செல்லாது என அறிந்த பின்னரும் ஓடுதலே முக்கியம் என வேகம் கூட்டிப் பயனில்லை. சரியான மார்க்கத்தைத் தெளிவு படுத்துதல் அவசியமாகும்.முதலாளித்துவத்தின் அவசியமாயுள்ள சந்தை நலன் என்பதிலிருந்து எழுச்சிபெற்றதான தேசிய வடிவம் பிற தேசங்களைச் சுரண்டும் வாய்ப்புக்காரணமாக தேசிய உணர்வு பெற உள்ள வாய்ப்புகள் சார்ந்து தேசியத்துக்கான வரைவிலக்கணம் கறாரான வரயறைக்குள் அடங்கியதாயில்லை. இனமரபுக்குழுக்கள் சாதிகளாக்கப்பட்ட எமது வாழ்முறை ஒவ்வொரு சாதியும் தனக்கேயான பிரத்தியேகப் பண்பாட்டைப் பேணுவதற்கு வாய்ப்பளித்துள்ளது. தனித்த பண்பாட்டு வேறுபாடென்பது தேசியத் தனித்துவத்தில் முக்கியமான ஒரு அம்சம். தவிர சாதி நலன் ஆள்வோருக்கு சாதகமாயும் ஆட்சிவலுவில் தொலைவடைய அடைய பாதிப்புகள் அதிகரிப்பதையும் காண்போம். ஆள்வோர் அதிக வாய்ப்புகளைப் பெற்றுள்ளதோடு தமது பண்பாடே மேலானது எனும் மமதையோடிருக்க, இரண்டாயிரம் ஆண்டுகளாகப் புறக்கணிப்புகளுக்காளான ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஏற்கத்தக்கதல்லாத பண்பாட்டை உடையோரெனக் கணிக்கப்படும் நிலை காணப்படுகிறது. இதன் காரணமாயே அம்பேத்கர், ஆளும் சாதியினர் ஒருவரும் ஒடுக்கப்பட்ட(தலித்) சாதியினர் ஒருவரும் சந்திக்கும்போது இருவேறு தேசத்தவர் போன்றே முகங்கொடுப்பர் எனச் சொல்லியிருந்தார். பாரிய இந்த வேறுபாடு இரட்டைத் தேசியத்துக்குரியதாக உள்ள அதேவேளை, ஏனைய சாதிப்பிரிவினரும் தத்தம் சாதி நலன் மற்றும் பண்பாடு என்கிற வகையில் தேசிய வடிவத்துடனேயே இருக்கும்; பேதத்துக்கான வேறுபாட்டுப் பேதம் மட்டுப்பாட்டுக்குள் இருக்கும்; அவ்வளவே.இவ்வாறுள்ள யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்னும்போது, உடனே ஒவ்வொரு சாதிக்கும் சுயநிர்ணய உரிமையை வழங்கிப் பிரிந்துபோக விரும்பினால் பிரிந்து போங்கள் என்பதா எனக்கேட்கப்படலாம். ரொம்பச் சின்னப்பிள்ளைத் தனமா இப்படியும் யாரும் கேட்பாங்களா என்று மேட்டிமைத்தனமாக இருக்க எவருக்கும் உரிமை கிடையாது. மிகுந்த பக்திவிசுவாசத்தோடு லெனின் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையைக் கூறியுள்ளதால், தேசம் என்றால் சுயநிர்ணயம்-அது சமன் பிரிந்து செல்லும் உரிமை என வாய்ப்பாட்டுக்குள் இருக்கும் அடிப்பொடிகளுக்கும் உரிய மதிப்பளிப்பது அவசியம்.ஆயினும், சாதி ஒவ்வொன்றும் தேசத்துக்குரிய பண்பைக் கொண்டுள்ளது என்பது எமக்கான பிரத்தியேக வரலாற்றோடு தொடர்பானது. சாதிகள் கொண்டும் கொடுத்தும் ஒன்றோடொன்று ஊடாட்டத்துடன் இயங்கும் அதேவேளை தமக்கான தனித்துவத்தையும் பேணி வருவன. அந்தவகையில் பிரிந்து செல்வதென்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. அவற்றிடையான பேதங்கள் களையப் பட்டு ஒன்று கலத்தலுக்கு வாய்ப்பேற்பட விரும்பின் சலுகை அனுபவித்தவர்கள் தம் வாய்ப்புகள் பறிபோவதுபற்றிப் புலம்புவதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களான பிற்படுத்தப்பட்டோரதும் இன்னும் அதிகமாய் தலித்மக்களினதும் கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பது அவசியம். சாதிகள் தேச வடிவத்தோடு இயங்குவன எனும்போது அவற்றின் கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்து மக்கள் விடுதலைக்கு பாதிப்பற்ற அளவில் புரட்சிகர அணியின் கோரிக்கையாக்கப்பட வேண்டும்.இத்தகைய பிளவுபடலைத் தகர்ப்பதற்கும், புதிய மாற்றங்கள் பண்பாட்டுப் புரட்சி வாயிலாகவே நடந்தேறியது என்கிற வகையிலும் பண்பாட்டு இயக்கங்களின் அவசியத்தை வலியுறுத்துகிறபோது புரட்சிகரக் கட்சிப் பணிகள் குறைத்து மதிப்பிடப் படுவதாகாது. முன்னர், பக்திப் பேரியக்கத்திலும் அர்சதிகாரத்தை வைத்து வன்முறைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையைப் பார்த்திருக்கிறோம். அரசனை வென்றெடுக்க வந்த சம்பந்தரை மடத்தோடு எரிக்க அரசாதரவுபெற்ற சமணர்கள் முயன்று தோற்றிருந்தனர். வெற்றிபெற்றபின்னர் சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றும்படி அரசைத்தூண்டினார். அதற்கான விலையாக அவரது திருமணப் பந்தலில் வைத்தே அவர் சமணரால் எரிக்கப்பட்டார்.அந்தவகையில் சமூகமாற்றப் புரட்சி என்பதை பல்வேறு வடிவ இணைப்பாகவே காணவேண்டும். பாராளுமன்ற வாதம் - வன்முறை வழிபாட்டாளர் என்று எரிந்த கட்சி - எரியாத கட்சியாக விவாதித்துப் பொருளற்றதாகிப்போன பழைய வழியில் போக வேண்டியதில்லை. நடைமுறை அவசியத்தோடு சமூக மாற்றத்துக்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தும் அதேவேளை, பண்பாட்டுப் புரட்சி வடிவமே அதிகம் தாக்கம் செலுத்தும் வாய்ப்புடையதாய் எமது அமைப்புமுறை உள்ளது என்ற நிதர்சனத்தை ஏற்பது அவசியம்.இவ்வாறு சொல்வதால் கட்சியொன்று என்ன செய்யலாம் என்பதை வெளியே உள்ளவர் எப்படிச் சொல்லலாம் எனக்கேட்கலாம். உண்மை, இயங்குகிறவர்களே எங்கிருந்து தொடங்குவது என்பதைத் தீர்மானிக்க முடியும்; அதற்கான அக்கறையும் சமூக நலநாட்டமும் உள்ள ஒவ்வொருவரும் இதற்கான விவாதத்தில் பங்கெடுத்து, சரியான மார்க்கம் கண்டறியப்பட்டு, அவ்வழியில் இயக்கம் வளரும்போது பங்காற்றவும் வாய்ப்பேற்படும். தனியாள் கருத்து வெளிப்பாட்டில் இது சாதிக்க இயலாதது என்ற எல்லைப்பாட்டைப் புரிந்துகொள்ளும் வகையில் இந்தக் கருத்தாடலை தற்காலிகமாய் நிறுத்திக்கொள்ளலாம். கருத்தாடல் தொடரப்பட்டு எமக்கான செயலாற்றலுக்கான மார்க்கத்தைக் கண்டடைவோம்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px;">
<span class=""><img alt="" class="photo_img img" src="http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/578140_293347614084918_100002290445134_677862_2116109568_n.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; max-width: 493px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" /></span></div>
</div>ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-52718837633079811072012-05-05T01:38:00.001-07:002012-12-10T20:46:49.883-08:00பாரதியின் ஆன்மீக நாத்திகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
</div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span style="color: #444444; font-family: Kalaham; font-size: x-small;"></span></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham; font-size: x-small;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Kalaham; font-size: x-small;"><span style="color: red;"><u>பாரதியின் ஆன்மீக நாத்திகம்</u></span></span></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham; font-size: x-small;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham; font-size: xx-small;">ந. இரவீந்திரன்</span></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham; font-size: x-small;"><br /></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmxbsSh3lBl0qO4OHyrQmckPfgZ2jCZpdU34-s7o4UGG8tiQQtiy3HHKXSUffDLqRkCoe9g2XA0LxxPMSuwEv8CVXhojoRZoyaZoFXSBw4xRGpP24vPoXoXY7bljWeddNlHr6fyxwgsT6F/s1600/5-color+bharathi.jpg" imageanchor="1" style="clear: left; float: left; font-size: small; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmxbsSh3lBl0qO4OHyrQmckPfgZ2jCZpdU34-s7o4UGG8tiQQtiy3HHKXSUffDLqRkCoe9g2XA0LxxPMSuwEv8CVXhojoRZoyaZoFXSBw4xRGpP24vPoXoXY7bljWeddNlHr6fyxwgsT6F/s320/5-color+bharathi.jpg" width="176" /></a>ஐந்து வருடங்களின் முன்னர் 'குமுதம்' வார இதழின் அரசு கேள்வி - பதில் பகுதியில் ஒரு கேள்வி, ' உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா' என்பதாக கேட்கபட்டிருந்தது. எல்லாம்வல்ல ஒரு இறைவன் இயக்க- தான் தாம் ஒரு கருவியாக செயற்படுவது அல்லாமல், ' நான் கருத யுகம் படைக்க நீ ஆமென் என்று வழிமொழிந்து இரும்' என்பதுட்பட மக்கள் செயற்பாட்டுக்கான சக்தியாக மட்டுப்படுத்தி கடவுளைக்காட்டும் பாரதி வரிகளை எடுத்துக் காட்டிய பின்னர் - இப்படியெல்லாம் பார்க்கும் போது பாரதியை ஒரு நாத்திகராகவே காண முடிகிறது' என்பதாக அரசின் பதில் அமைந்திருந்தது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;">தேசிய விடுதலை- சாதியொழிப்பு- பெண்விடுதலை- வறுமைத் தகர்ப்பு – சமத்துவ சமூக படைப்பு என்பவற்றுக்காக மக்களைச் கிளர்ச்சிக் கொள்ள உணர்வூட்டும் படைப்புகளையும் செய்தி வெளிப்பாடுகளையும் எழுதுவதையே தனது தொழில் துறையாகக் கொண்டிருந்தார் பாரதி. கடவுளின் கருவியாக மனிதனைஃ மனுசியைப் பார்ப்பதை விட்டொழித்து , மனித சக்தியின் கருவியாக கடவுள் உணர்வை மடைமாற்றிவிடும் அவரது பண்பு அவரை முழுமையாக ஆன்மீகவாதிக தரிசிக்க இடம் தரவில்லை என்பதால் அரசு பதில் பாரதி நாத்திகவாதியாகக் காட்டப்படுகிறார்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;">மாறாகப் பொதுவழக்கில் பாரதி முழு நிறைவான ஆன்மீகவாதியாகவே பார்க்கப்படுகின்றார் என்பதை அறிவோம். 'பாரதி கவிதைகள்' தொகுப்புகளை ஆன்மீகப்பாடல்கள்- தேசியப்பாடல்கள் என்பதாகப் பகுத்துப் பல பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன: அவற்றில் அவற்றில் ஆன்மீகப் பாடல்களே அதிகமாய் இருக்கும். 'பாரதி ஆன்மீக கவிஞரா- தேசியக் கவிஞரா' என்ற பட்டி மன்றங்கள் தொடர்தப்படியுள்ளன. பாரதியின் தேசியப் பாடல்கள் காலங்கடந்தனவாகிவிட்டன, ஆன்மீக கவிதைகள் வாயிலாக இன்னமும் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் எனும் தீர்ப்புகளையும் கேட்டிருக்கின்றோம். புhரதியை ஒரு ஆன்மீகவாதியாகவே தரிசிக்கும் போக்கே மேலோங்கி உள்ளது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;">இவ்வாறு பாரதியை ஆன்மீகவாதி அல்லது நாத்திகவாதி என எதிர்முனைப்படுத்தி விவாதிக்க உரிய கருத்து மோதல்களுக்கான களங்கள் பாரதியின் எழுத்துக்களில் காணப்படுவனவே. உண்மையில் அவர் இந்த இரு முனைகளில் எதன் பக்கத்திலும் இல்லை; அவர் ஒரு ஆன்மீக நாத்திகர்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;">உள்ளிருந்து உணர்த்தும் கடவுள் சித்ததால் இயங்குகின்றேன் என்ற ஆன்மீக வாதியாக காந்தியை அறிவோம். கடவுள் நம்பிக்கையை விட்டொழித்தால் மட்டும் உய்வுண்டு என்று செயற்பட்ட நாத்திகவாதியான பெரியாhரை அறிவோம். இரண்டும் இல்லாமல்- அல்லது இரண்டும் கலந்தாக, அதென்ன ஆன்மீக நாத்திகம்?</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;">இது பாரதி உலகுக்கு அளித்த மற்றொரு புதுமை. துனத சுயம் அறியாத சிறு பராயத்தில் தனது பிராமணச் குடும்ப வளர்ப்பு முறைக்கான ஆண்மீகக் குணாம்சம் பாரதியிடம் விதைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தென்கோடியில் தந்தையின் வற்புறுத்தலுக்காக Nவுண்டா வெறுப்புடன் ஆங்கிலக் கல்வியைப்பெற்றவர், இளைஞராக முகிழ்க்கும் காலத்தில் இந்திய வடபுலமும் ஆன்மீக கொடிமுடியாக காசியில் கற்பதற்கு அனுப்பபட்டார். திருநெல்வேலியில் கல்வி பயிலும் சிறுவனாக இரந்த போதே எட்டயப்புரம் மன்னர் அவையில் 'பாரதி' பட்டம் பெறும் வகையில் செய்யுள் ஆக்கும் திறனை வெளிப்படுத்தியவர்; காசியில் கவித்துவ தேடலும் வாழ்வியல் தேடலும் ஆன்மீக உலகின் போலித் தனங்களையே வெளிப்படுத்தின.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;">புpன்னாலே பாரதி எனும் கவிஞராக பரிணமிப்பை எட்டும் சமூக நோக்கு முளைவிடும் காசி வாழ்வில் அவர் கண்ட ஒடுக்கப்பட்ட சாதி பிரிவினர் பாரதி அழைக்கப்பட்டமையே தன்னை அவர் சுப்பிரமணிய பாரதியாக அடையாளப்படுத்த வழிகோலியது. அந்தத் தீண்டாமைக்கொடுமைக்கு ஆட்பட்டவர்களது அடையாளமே, பாரதி என்றும் பூண்டிருந்த கறுப்புக்கோட்டும் முண்டாசும். புpராமணத் தன்னடையாளம் காத்து ஒடக்கப்பட்டவர் கோலம்பூண்ட பாரதி ஆன்மீகவாதப் போலிதனங்களுக்கு எதிராக தன்னை நாத்திகவாதியாக வெளிப்படுத்திக் கொண்டார். நாத்திகரான ஷெல்லியின் பால் ஈடுபாடு கொண்டு ஷெல்லிதாரன் எனத் தன்னை வெளிப்படுத்தினார்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;">துமிழ்நாடு திரும்பி, இந்திய சுதந்திரப் போராட்ட போராளியாகத் மக்களைக் கிளந்தெழத் தூண்டும் பணியைக் கையேற்ற போது மக்களின் உணர்வுகள் -நம்பிக்கைகள் ஆகியவற்றிலிருந்து மக்களுக்கான கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ஏற்பட்ட நடைமுறைப் பிரச்சனையிலிருந்தே பாரதி புதிய கருத்தியல் நிலைகு வளர நிர்பந்திக்கப்பட்டார். தோடக்க காலத்தில் சென்னை பிரசிடென்சி கொலஜ்ஜில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது நீங்கள் நம்பும் கடவுள்கள் நன்மைக்காக செயற்பட வழிப்படுத்தியவர்களே என்பதாகப் பேசியிருப்பதைக் காணமுடியும். மற்றவர்கள் நம்பும் கடவுள் எனத்தன்னைப் வேறாக்கிப் பார்க்கும் விடலைப்பருவ உணர்விலிருந்து விரைவிலேயே பாரதி விடுப்பட்டுக் கொண்டார். இந்த வேறுப்பாடு மக்கள் மொழியிலிருந்து அன்னியப்படும் தன்னையை ஏற்படுத்தும். விடுதலைக்காக மக்கள் போராட்டத்திற்கு மக்களை அணித் திரட்ட வேண்டுமாயின் மக்களின் மொழியிலேயே பேச வேண்டும் எனும்போது மக்கள் நம்பும் வரையிலேயே கடவைள முன்னிறுத்திப் பேசுகிற அவசியத்தையுடைய பண்பை அடைந்த போது ஆன்மீக நாத்திகம் எனும் புதிய நிலை சாத்தியமானது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;">ஐரோப்பியச் சிந்தனையில் எட்டப்பட்ட நாத்திகவாதம் இந்தியாவில் அறிமுகமானபோது பாரதியும் அதனை ஏற்றார். தத்துவத் தேடலில் ஆர்வம் கொண்ட அவருக்கு நாத்திகம் இலகுவில் ஏற்கத்தக்கதாகNவு இருந்தது. அவர் ஸ்மார்த்த பிராமணாத் பிரிவைச் சேர்ந்தவர். அப்பிரிவினர்சைவம்- வைணவம் போல ஏதாயினும் கடவுளை முன்னிறுத்துவதாயன்றி ' நானே பிரமம்' எனக் கூறும் அத்வைதத்தை நம்புகின்றவர்கள். இந்து சமயத்தின் 6 தத்துவங்களில் 4 பிரிவுகள் கடவுளை ஏற்பனவல்ல. அதிலும் மீமாம்சை முற்றிலும் கிரியைகளையுடையனவே அல்லாமல் கடவுள் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. ஸ்மார்த்தப் பிரிவினர் இத்தகைய மீமாம்சையில் நாட்டமுள்ளவர். பொதவாகவே பிராமணர்கள் ஓதும் வேதம் இயற்கை முழுமையையும் கடவுளர்களாய்க் காண்பதே அல்லாமல் இயற்கைக்கு அப்பாலான ஒரு கடவுளை எற்பதில்லை.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;">வேதாந்தம் அப்பாலைத் தத்துவத்தைத் தேடும் போது பிராமண மேலாண்மை ஆட்டங்கண்டு சத்திரியர்கள் ஆன்மீகத்தேடலில் முன்னிலை பெற்றார்கள் என்பது கவனிப்புக்குரியது. அவ்வாறு கண்டறியப்பட்ட கடவுளையும் பிராமணர்கள் தமதாக்கினர் என்பது வேறுவிடயம். சுத்தியர்களும் ஆன்மீகத் தலைமையை அவர்களிடமேட விட்டுவிட்டு ஆட்சித் தொழிலில் முன்னேறினர் என்பதறிவோம். இவ்வகையிலான பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ளதாக நம்பபட்ட கடவுளை மறுத்த பாரதி, இயற்கை- பிரபஞ்சம் முழுமையையும் வழிப்படுவதோடு, மனிதர்கள் தமக்குள் உறையும் பிரமத்தை உணர்ந்து பூரணத்துவம் ஏய்தவது குறித்தும் பேசுவார்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;">இந்தியச் சமயங்கள் அப்பாலைத் தத்துவத்துக்கான ஒரு முழுமுதற்கடவுளை(பரம் பொருள்) பற்றி பேசிய போதும் இனமரபுகளுக்கான இயற்கை வழிபாடு உட்பட பல கடவுளர்களையும் ஏற்று மதிப்பதை ஒழித்துக்கட்டவில்லை. கிறிஸ்தவ மத போதகர்களுடனான விவாதங்களில் நாவலர் போன்ற சைவப்பிசாரகர்கள் பதிஃசிவன் என்பதை ஒரு கடவுட் கோட்பாட்டுக்கு உட்பட்தாகக் காட்ட முனைந்த போதிலும் பல கடவுளர்களில் மேம்பட்ட பரம்பொருளாகவே பதிஃசிவன் அமைந்துள்ளமை தெளிவு.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;">யூத மதம், கிறிதவம், இஸ்லாம், போன்ற செமிட்டி சமயங்கள் முன்னிறுத்தும் ஒரு கடவள் என்பதிலிருந்து இந்து சமயத்தின் பகரம் பொருள் மற்றிலும் வேறானதாகும். ஒரு இறைவன் மட்டும் வழிப்படத் தக்கவன் எனக் கூறும் இஸ்லாம் மட்டுமல்ல கி.மு. 1500 இலேயே யெஹோவா எனும் ஒரு கடவுளை முன்னிறுத்திய யூத மதமே பலவகைத் தேவதைகளையும் வழிப்படுவதை நிராகரித்ததிலிருந்தது. பிதா-சுதன்- பரிசுத்த ஆவி எனும் முக்கடவட் கோட்பாட்டை முன்னிறுத்தும் கிறிதவமும் ஏனைய தேவதைகளை வழிபடக் கூடாது என்றே வலியுறத்தும். இவ்விரு மரபுகளின் தொடர்ச்சியான இஸ்லாம், இன மரபுக் குழுக்கள் பிளவுற்று ஒன்றுடன் ஒன்று மோதிய அரப சமூகத்தில் அவற்றுக்கான இயற்றை வழிபாட்டு கடவுளர்களையும் அவற்றக்கான சிலைகளையும் முற்றாக ஒழித்துக்கட்டி, முஸ்லிம் எனும் ஒரே சமூகமாக ஒன்றுப்படுத்தியிருந்தது. வணிக எழுச்சி ஏற்படுத்தித்தந்த இச்சாத்தியம் பல்வகை வேறுப்பாடுகளைக் களைந்து முஸ்லிம் எனும் முற்பட்ட ஓர் 'தேசிய உணர்வு' கொள்ள வழிப்படத்தியிருந்தது என்பது கவனிப்புக்குரியது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;">முறாக, இன மரபுக்குழப் பண்பு தொடரும் இந்தியச் சமூகங்களில் ஏற்றத்தாழ்வு அதிகாரச் சமூக படிமுறை நீடிக்கும் காரணத்தால் ஆதிக்கச் சாதியின் மேலாதிக்கத்தைப் பதி அல்லது சிவன்- விஷ்னு- சக்தி பொன்ற பரம்பொருள் பெற்ற போதிலும் ஏனைய இன மரபுக் குழப் பண்பு நீடிக்கும் சாதிகளது கடவுளர்கள் ஒழித்துக்கட்ட அவசியமற்றதானது. ஆந்தவகையில் பரம்பொருளும் பல கடவுளர்களும் சமாதான சகவாழ்வு நடாத்தியாக வேண்டிய நிர்பந்தம் உடையதாக இந்துச் சமூகம் அமைந்திருந்ததுஃ அமைந்துள்ளது. ஆதிக்கச் சாதியின் பரம் பொருளுக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்களாயினம், இடைநிலைச் சாதியினர் கூட தமது கோயில்களில் அப்பரம்பொருளைப் பிரதிஷ்டை செய்ய முடியாது. தத்தமது சாதிக் கடவுளருக்கான கோயில்களைக் அகாண்டிருக்க கூடிய இடைச்சாதியினர் ஆதிக்க சாதியினரது கோயிலுக்குள் செல்ல முடியும். ஒடுக்கப்பட்ட சாதியினர் அவ்வாறு கோயிலினுள் செல்ல முடியாது தவிர்க்கப்பட்டுள்ளனர். இவ்வகையான சாதிச்சமூகத்தில் பல கடவுளர் நம்பிக்கையை எப்படி தகர்த்திருக்க முடியும்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;">பிராமணரும் வெள்ளாளரும் எனும் அதிக்கச் சாதிகளது சிவனை நூற்றாண்டுகளின் முன் தீண்டாமைக்குட்பட்டிருந்த நாடார் சமூகத்தினருக்காக நாராயணகுரு பிரதிஷ்டை செய்து வழிப்பட்டபோது ஆதிக்க சாதியினர் கண்டித்தனர். தடுக்க முயன்றனர்; அதனை நிராகரித்து சிவ வழிப்பாட்டை மேற்கொண்ட நாராயணகுரு, 'நீங்கள் உங்களது வழிபடுவது போல, நான் எனது சாதிச் சிவனைப் பிரதிஷ்டை செய்துள்ளேன்' எனக் கூறி ஒடுக்கப்பட்டோருக்கான ஒரு சிவனை முன்னிறுத்தினார். தீண்டாமையை ஒழித்து சமூக அசைவியக்கம் பெற்று வர்ண உயர்வை நாடார்கள் பெறுவதில் நாடார்களின் பல்வேறு வடிவப் போராட்டங்களில் நாராயண குருவின் இபபண்பாட்டு புரட்சியும் ஏற்ற பங்களிப்பை நல்கியிருந்தது. இது குறித்து பாரதி எழுதினார். துவிர, பாரதி அதிக்கச் சாதிப் பெருங்கடவுளர்கள் மீது பாடல் எதனையும் புனையவில்லைளூ போர்குணம் மிக்க உழைக்கும் மக்கள் வழிபாட்டுக்குரிய காளி, திரௌபதி, கண்ணன், கணபதி என்ற கடவுளர்களே அவரது பாடலுக்குரியோராய் இருந்துள்ளனர்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;"> பாரதியை ஓர் ஆன்மீகவாதியாக மயங்குவதற்கு காரணமாக அமையும் உச்சமான ஆதாரமாய்த் திகழ்வது ருசியப்புரட்சியை ''மாகாளி கடைக்கண் வைத்தாள்,ஆகாவென்றெழுந்ததுப்பார் கிருதயுகம்|| எனப்பாடியதில் காண்பர். கிருதயுகட் உணர்த்தும் சமத்துவம் உருவாமும் சமூக மாற்றம் கடவுள் சித்தம் என பாரதி கருதினாரா? கடவுள் இனி சமத்துவமே சாத்தியம்; என கருதிவிட்டார் என்பதாக பாரதி எழுதியது உண்மைதான்ளூ அதேவேளை கடவுளே அதைப்படைத்தருளுவார், அவரைத்தொழுது பக்தி விசுவாசத்துடன் பூசைபுனஸ்காரங்களில் மூழ்கியிருங்கள் என்று அவர் கூறிவிடவில்லை. சமத்துவத்தைப் படைக்கும் காலம் கடவுள் வகுத்த விதி ஆகிவிட்டதால் கொடுங்கோன்மைக்கு எதிராக கிழர்ந்தெழந்தது போராடுவோம் என்றே முழக்கம் செய்தார்;.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;"> சென்ற நூற்றாண்டின் ஏழாம் ஆண்டில் சுதந்திரப் போராட்டக் கிழர்ச்சி தொடக்கம் பெற்றபோது விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் தொற்றம் பெற்றதாக எழுதியவர் பாரதிளூ சுதேசியமே அவரது மந்திரம் - பஹிஸ்காரம் அவரது ஆயுதமம் எனக் கூறி, அவதாரக் கோட்பாட்டை மக்கள் உணர்வாகக் காட்டி பகிஸ்காரப் போரட்டத்தை முன்னிருத்திய அறவழிப்போராட்டத்தை பிரசாரப்படுதத்தினார். ஒரு தசாப்தத்தின் பின்னர், கிளர்ந்தெழுந்த ருசிய மக்கள்; சமத்துவம் படைக்கும் மற்படியை வெற்றிகண்டபோது மாகாளி அங்கே கடைக்கண் வைத்தாள் எனப் புளகாங்கிதம் அடைந்தார்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;"> ஒரு வருடத்தின் பெயர் பின்னர் சோவியத்ருஷ்யாவிலும் கவிஞரொருவர் இதேபோன்ற பாடலை வடித்தார். அவர் பாரதியின் கவிதையைப் பார்த்திராதப்போதிலும் ஓரளவு பாரதியின் கருத்தியல் அவரிடம் இருந்ததன் வெளிப்பாடாக அந்த கவிதை அமைந்திருந்தது. அலெக்சாண்டர் பிளாக் என்பவரது கவிiதியை சோ.பத்மநாதன் தமிழாக்கித்தந்துள்ளார்;. ருசியப் புரட்சியை சித்தரிக்கும் அது, படையெழுச்சியின் முன்;னணியில் சிலுவைப் போன்ற ஒன்றுடன் யாரோ ஒருவர் அடையாளம் தெரியாதவர் போய்க்கொண்டிருப்பதாக இடையிடையே கூறியவாறு கவிதை வளர்ந்து செல்லும். கவிதை முடிவில், முன்னால் சென்றவர் ஜேசுகிருஸ்து என அடையாளம் காணப்பட்டிருப்பார்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;"> அந்த கவிதையை லெனின் ஏற்கவில்லைளூ மக்கள் பங்கேற்பில் சாத்தியப்பட்ட போராட்ட வெற்றியை இறை அனுகிரகம் எனக்காட்ட முயல்கிறதா கவிதை என சந்தேகம் எழுப்பினார். பிறகென்ன, கட்சி அதை தடைசெய்தது. ஆயினும் அக்கவிஞர் சோசலிச மாற்றியமைத்தலைப் பற்றுதியுடன் ஆதரித்து உழைத்து வந்தார். ஐம்பதுகளில் தென்னமெரிக்காவில் விடுதலை இறையியல் கம்யூனிஷ்ட்டுகளுடன் இணக்கமாகப் போராடத்தொடங்கியபோது சோவியத்ருஷ்யாவில் அந்தக் கவிதை மீதான தடை நீக்கப்பட்டது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;"> மாகாளியோ, ஜேசுவோப் ருசியப்புரட்சியின்பால் நாட்டங்கொள்வதாகக் காட்டுவதால் மக்கள் பங்கேற்பு மறுக்கப்படுவதாய் ஆகாது. மறாக, ஏகாதிபதியவாதிகள் முன்னிருத்திய பொய்ப்பிரசாரமான - கம்யூனிஸ்ட்டுகள் கோயில்களை இடித்துத் தள்ளிக் கடவுளுக்கு விரோதம் செய்வர் என்பதை முறியடிப்பதாக இக்கவிதைகள் அமைவனளூ கடவுளை நம்பும் மக்களிடம், இந்த சமூக மாற்றப் புரட்சி கடவுள் விருப்புக்குரியதெனக் காட்டி அவர்களை ஆர்வத்தோடு பங்கேற்க தூண்டுவதாக அமைவன ருஷ்யாவுக்கு வெளியே ருஷ்யப் புரட்சியை ஆதரித்து எழுதப்பட்ட முதல் கவிதை பாரதியின் ''புதிய ருஷ்யா|| எனும் இப்பாடல் என்பதை சோவியத் அறிஞர்கள் விதந்த கூறியுள்ளனர். இது எப்படி சாத்தியமானது?</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;"> ருஷ்யப் புரட்சிக்கான ஒத்திகையாக ஒரு தசாப்தத்தின் முன்னர் 1906 இல் முதல் புரட்சியெழுச்சி சாத்தியமானபோதே, அது குறித்த விபரங்களை பாரதி தனது பத்திரிக்கை எழுத்துகளில் வடித்துத்துத் தந்துள்ளார். பல மதங்களாக நீடித்த அந்த மக்கள் போராட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சிகளையும், இருதியாக அது ஒதுக்கப்படட்டதையுமம் பாரதி எழுதியுள்ளார். அவ்வாறே ஒக்டோபர் புரச்சியின் வளர்திசையையும், சோஷலி;ஸத்தாயகம் எதிர்நோக்கிய நெருக்கடிகளையும், வெற்றிகரமான சாதனைகளையும் பற்றியெல்லாம் அவ்வப்போது அவர் எழுதிவந்துள்ளார்.அந்த வகையில், இடைவிடாத மக்களின் தியாக அருவடை அப்புரட்சி என்பதில் வேறெவலையும் விடப் பாரதிக்கு தெளிவி</span></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;">ருந்தது. கவியுள்ளம் புரிந்தோருக்கு மாகாளி மக்கள் எழுச்சியின் படிமம் என்பது விளக்கமுறும்;.</span></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;"> </span></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;"> உலக விவகாரங்களை உடனுக்குடன் விரிவாக வழங்கும் துக்கியத்துவம் குறித்து முழுமையான உணர்வு பாரதியிடம் இருந்தது. ''இங்கிலாந்தின் செய்திகளைப்பற்றி நமது 'மித்திரன்| பத்திரிக்கை படிப்போருக்கு அடிக்கடி தெளிவான குறிப்புகளெழுதுவதாக எண்ணங்கொண்டிருக்கிறேன். இங்கிலாந்தைப் பற்றிமாத்திரமன்றுளூ பொதுவாகவே அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் முதலிய 'நாகரிக| நாடுகளைக் குறித்;தும் விசேஷமாக இங்கிலாந்தைக் குறித்தும் இக்காலத்துத் தமிழ் மக்களுக்கு அதிகப்; பழக்கமேற்படுத்தவேண்டுமென்பது என் விருப்பம்|| என 1920.12.29 அன்று ''சுதேச மித்திரன்|| பத்திரிக்கையில் பாரதி எழுதியிருப்பதைக் காணலாம். உலக நாடுகளின் சமகால வரலாற்றுச் செல்நெறி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் தனது தனித்துவம் பற்றி அவர் தொடரந்து சொல்வார்: ''இந்த அம்சத்தில் தமிழ்நாட்டிலுள்ள தமிழ்ப் பத்திரிகைகள் மட்டுமன்றி, இந்தியா முழுமையிலுமே தேச பாஷைகளிலும் ஆங்கிலத்திலும் பிரசுரம் செய்யப்படும் பத்திரிகை அனைத்துமே போதிய ஜாhக்ரதை செலுத்தவில்லையென்பது என் அபிப்பிராயம். மற்றப்; பகுதிகளின் நிலைமை எவ்வாறாயினும், தமிழ் நாடு ஸம்பந்தப்பட்டவரை இக்குறையை இயன்றமட்டில் நீக்க முயற்சி செய்தேன். இதனால்; பல வகைகளிலே பல துறைகளிலே நலமுண்டாகுமென்று உருதியாக நம்புகிறேன்||(கால வரிசைப்படுத்தப்பட்;ட பாரதி படைப்புகள்-12.ப.195)</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;"> இவ்வகையில் உலக விவகாரங்களை வெறும் கடவுள் செயற்பாடாக கருத்துமுதல்வாத நிலைநின்று பார்த்து வெளிப்படுத்த பாரதி முயன்றதில்லைளூ இயங்கியல்; -பொருன் முதல் வாதிக்குறிய தெளிந்த புரிதலுடன் விளக்கம் பெற்றுவிடுவதனாலேயே துணிவுடன் அவரால் உலகபோக்கை உடனுக்குடன் கண்டு காட்ட இயலுமாயிருந்தது. எந்தவொரு விவகாரத்தையும் அதறிகுறிய அடிமுடிகளைத் தேடிக்கண்டறிந்து வரலாற்றுப் பொருள் முதல்வாத அணுகுமுறையில் விளக்குவதற்கு அலரால் இயலுமாயிற்று. அத்தகைய பாரதியின் பார்வைக்கு எடுத்துக்காட்டாக அமைவது ''விஜயா|| (மறுபிரசுரம் 'இந்தியா|) பத்திரிக்கையில் ஒக்டோபர் 1909 இல் அவர் எழுதிய ''மொகலாய ராஜ்சியத்தின் அழிவு|| எனும் கட்டுரை ஆகும்;.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;"> ஆக, பாரதியின் கடவுள் அவரைக் கருத்து முதல்வாதப் பார்வைக்குறியவரர்க்கிவிடவில்லை. கடவுள் சித்தப்படியே அணுவும் இயங்கும் என்பதாயில்லாமல், எதற்குமான இயங்காற்றலுக்குறிய காரண காரியத்தை கண்டறிந்து, அச்செயல் கடவுளால் சாத்தியப்படுவதாக அமைதி காணாது, தனக்குறிய பணி என கருதித் திடமனதோடு செயற்பட வலியுருத்தி, கால சக்தியெனும் கடவுள் விருப்பமும் அதுவே எனக் காட்டும் அளவிலேயே பாரதியின் இறை தரிசனம் எல்லைப்படுகிறது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;"> அத்தவகையில் ஆன்மீக சொல்லாடலில் நாத்திகம் வெளிப்படக் காண்கிறோம்.இந்த ஆன்மீகம் - நாத்திகம் இயங்கியல் - பொருள் முதல்வாத உலக நோக்கை அவரிடம் சாத்தியப்படுத்தியிருந்தது, இவ்வகையில், கடவுள் பற்றியப் பேசுவதனாலேயே ஒருவர் கருத்துமுதல்வாதி ஆகிவிடுவதில்லை என்பதைப் போலவே, கடவுளை மறுக்கும் நாத்திகவாதம் பொருள்முதல் வாதம் ஆகிவிடுவதில்லை என்பதையும் காண்போம். பெரியார் , சமூகமாற்றச் செயற்பாட்டை சாத்தியமாக்குவதற்கு கடவுள் நம்பிகையை விட்டொழிப்பதே முன்னிபந்தனை என வழியுறுத்துவார் : வறுமைக்கு ஆட்பட்டு கையறு நிலையில் கடவுளிடம் தஞ்சம் புகும் உழைப்பாளியின் உழைப்பு அபகரிக்கப்படுவதைத் தகர்த்து, தனக்கே அதன் பயன்கள் வந்தடைய ஏற்ற சமூக மாற்றத்தை சாத்தியமாக்கியதாலேயே கடவுளை நம்புவதை விட்டொழிக்க வழிப்படுத்த இயலும். மாறாக, கடவுள் என்ற கருத்தை விட்டொழித்தால் சமூக மாற்றம் இலகுவாகிவிட போவதில்லை. இது பெரியாரின் நாத்திகவாத நிலைப்பட்ட கருத்துமுதல்வாதச் சிந்தனை.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham;">மார்க்சியர்களிடம் நார்த்திக நிலைபாடு இருந்த போதிலும், கடவுளை ஒழித்துக் கட்டுவதே முதற் பணி எனும் நாத்திகவாதம் இருப்பதில்லை. பாரதியிடம் ஆன்மீகம் இருந்த அதே வேளை கடவுள் சித்தம் அனைத்தும் இல்லாமதைப் போன்னதே மார்க்சியர்களின் நாத்திகம் நாத்திக வாதமாய் இல்லை என்பதும். அதேவேளை பாரதியிடம் ஆன்மீக நார்த்திகம் சாத்தியப்பட்டதைப் போல மார்க்சியர்களிடம் நாத்திக ஆன்மீகம் விருத்தியுற்றிருக்க அவசியம் இருந்தும் அத்தகைய கருத்தியல் வளர்ச்சியை மார்க்சியர்கள் எட்டியிருக்கவில்லை என்பது கவனிப்புக்குரியது. அந்த வகையில் மார்க்சியர் பலரது பொருள் முதல் வாதம் இயங்கியல் தன்மையற்று வறட்டுத்தனமாய் அமைந்திருந்தது. ஆத்தகைய பல மார்க்சியகளது கருத்தியலை விடவும், பாரதியினது கருத்தியல் கூடுதல் சரியானதாக அமைந்திருந்தது என்பது தெளிவு.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKMQrvrRFyJ-6y8sDSjcrUGYd7tdp_xtYN1zdqtag7-n9oAE2ToSzgw8wV2zV8Q-g94IHxkXQy_tQ98-wKtt2xsVRqhUXQbdAkA4eoDcVUle_RlupBjRI10et4mLiSpPx9wByFWJ2_x1hR/s1600/bharathi.jpg" imageanchor="1" style="clear: left; float: left; font-family: Kalaham; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><br /></a><span style="color: #444444; font-family: Kalaham;">இத்தகைய பாரதியினுடைய உள்ளத்தின் ஒளி இந்தியத் தேசியம் பிராமணத் தேசியமாக அமைவதற்கு எதிராக அவரை வழிநடத்தியது. இந்திய சுதந்திரம் வெள்ளைப் பறங்கியனரை துரை எனச் சொல்லும் அடிமைத்தனத்தைத் தகப்பதாய் மட்டுமன்றி பார்ப்பானை ஐயரென்று கூறும் சமூக – பண்பாட்டு ஏகாதிபத்தியதை ஒழித்துக் கட்டுவதாகவும் அமைய வேண்டும் என வலியுறுத்தினார். பிராமணத் தேசியத்தை நிராகரித்த பெரியார் எதிர்த்தேசியத்தை முன்னுறுத்தி ஏகாதிபத்தியம் முதல் எதிரி என்பதைக் காணத்தவறும் பாதிப்புடையவராக இருந்துள்ளார். அவ்வாறே மார்க்சியர்கள் வர்க்கத்தை மட்டும் நோக்கிய தோற்ற மயக்கத்தில் பிராமணத் தேசியத்தின் சமூக – பண்பாட்டு ஏகாதிபத்திய அம்சத்தைக் காணத்தவறினர்ளூ இதன் பேறாக இந்திய சுதந்திரம் பிராமணத் தேசியமாக அமைந்தது குறித்த உணர்வற்றவர்களாயிருந்தனர். இது குறித்து இன்றுவரை மார்க்சிய அமைப்புகள் விவாதித்ததில்லை என்பதால் இன்னமும் குறைப்பட்ட நிலைப்பாட்டுகளுடனே உள்ளன. இத்தத்துவத் தேடல்களில் பாரதி இறங்காத போதிலும், அவரது நிலைப்பாடு மார்க்சியர்களை விடவும் சரியாக அமைவதற்கு ஏற்றதாக அவரது நாத்திகம் அவரை வழிப்படுத்தியுள்ளது. </span></div>
<div class="MsoNormal">
<span style="color: #444444; font-family: Kalaham; font-size: x-small;"><br /></span></div>
<div class="MsoNormal">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKMQrvrRFyJ-6y8sDSjcrUGYd7tdp_xtYN1zdqtag7-n9oAE2ToSzgw8wV2zV8Q-g94IHxkXQy_tQ98-wKtt2xsVRqhUXQbdAkA4eoDcVUle_RlupBjRI10et4mLiSpPx9wByFWJ2_x1hR/s1600/bharathi.jpg" imageanchor="1" style="clear: left; font-family: Kalaham; font-size: small; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKMQrvrRFyJ-6y8sDSjcrUGYd7tdp_xtYN1zdqtag7-n9oAE2ToSzgw8wV2zV8Q-g94IHxkXQy_tQ98-wKtt2xsVRqhUXQbdAkA4eoDcVUle_RlupBjRI10et4mLiSpPx9wByFWJ2_x1hR/s1600/bharathi.jpg" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKMQrvrRFyJ-6y8sDSjcrUGYd7tdp_xtYN1zdqtag7-n9oAE2ToSzgw8wV2zV8Q-g94IHxkXQy_tQ98-wKtt2xsVRqhUXQbdAkA4eoDcVUle_RlupBjRI10et4mLiSpPx9wByFWJ2_x1hR/s1600/bharathi.jpg" imageanchor="1" style="clear: left; font-family: Kalaham; font-size: small; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKMQrvrRFyJ-6y8sDSjcrUGYd7tdp_xtYN1zdqtag7-n9oAE2ToSzgw8wV2zV8Q-g94IHxkXQy_tQ98-wKtt2xsVRqhUXQbdAkA4eoDcVUle_RlupBjRI10et4mLiSpPx9wByFWJ2_x1hR/s1600/bharathi.jpg" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKMQrvrRFyJ-6y8sDSjcrUGYd7tdp_xtYN1zdqtag7-n9oAE2ToSzgw8wV2zV8Q-g94IHxkXQy_tQ98-wKtt2xsVRqhUXQbdAkA4eoDcVUle_RlupBjRI10et4mLiSpPx9wByFWJ2_x1hR/s1600/bharathi.jpg" imageanchor="1" style="clear: left; font-family: Kalaham; font-size: small; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKMQrvrRFyJ-6y8sDSjcrUGYd7tdp_xtYN1zdqtag7-n9oAE2ToSzgw8wV2zV8Q-g94IHxkXQy_tQ98-wKtt2xsVRqhUXQbdAkA4eoDcVUle_RlupBjRI10et4mLiSpPx9wByFWJ2_x1hR/s1600/bharathi.jpg" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKMQrvrRFyJ-6y8sDSjcrUGYd7tdp_xtYN1zdqtag7-n9oAE2ToSzgw8wV2zV8Q-g94IHxkXQy_tQ98-wKtt2xsVRqhUXQbdAkA4eoDcVUle_RlupBjRI10et4mLiSpPx9wByFWJ2_x1hR/s1600/bharathi.jpg" imageanchor="1" style="clear: left; font-family: Kalaham; font-size: small; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKMQrvrRFyJ-6y8sDSjcrUGYd7tdp_xtYN1zdqtag7-n9oAE2ToSzgw8wV2zV8Q-g94IHxkXQy_tQ98-wKtt2xsVRqhUXQbdAkA4eoDcVUle_RlupBjRI10et4mLiSpPx9wByFWJ2_x1hR/s1600/bharathi.jpg" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKMQrvrRFyJ-6y8sDSjcrUGYd7tdp_xtYN1zdqtag7-n9oAE2ToSzgw8wV2zV8Q-g94IHxkXQy_tQ98-wKtt2xsVRqhUXQbdAkA4eoDcVUle_RlupBjRI10et4mLiSpPx9wByFWJ2_x1hR/s1600/bharathi.jpg" imageanchor="1" style="clear: left; font-family: Kalaham; font-size: small; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKMQrvrRFyJ-6y8sDSjcrUGYd7tdp_xtYN1zdqtag7-n9oAE2ToSzgw8wV2zV8Q-g94IHxkXQy_tQ98-wKtt2xsVRqhUXQbdAkA4eoDcVUle_RlupBjRI10et4mLiSpPx9wByFWJ2_x1hR/s1600/bharathi.jpg" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKMQrvrRFyJ-6y8sDSjcrUGYd7tdp_xtYN1zdqtag7-n9oAE2ToSzgw8wV2zV8Q-g94IHxkXQy_tQ98-wKtt2xsVRqhUXQbdAkA4eoDcVUle_RlupBjRI10et4mLiSpPx9wByFWJ2_x1hR/s1600/bharathi.jpg" imageanchor="1" style="clear: left; font-family: Kalaham; font-size: small; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKMQrvrRFyJ-6y8sDSjcrUGYd7tdp_xtYN1zdqtag7-n9oAE2ToSzgw8wV2zV8Q-g94IHxkXQy_tQ98-wKtt2xsVRqhUXQbdAkA4eoDcVUle_RlupBjRI10et4mLiSpPx9wByFWJ2_x1hR/s1600/bharathi.jpg" /></a> </div>
<div class="MsoNormal">
</div>
<br /></div>
ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3900970486295009272.post-45184989108914447692012-05-02T19:56:00.000-07:002012-05-02T19:56:37.028-07:00மே தினம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="uiHeader uiHeaderBottomBorder mbm" style="background-color: white; border-bottom-color: rgb(170, 170, 170); border-bottom-style: solid; border-bottom-width: 1px; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px; margin-bottom: 10px; padding-bottom: 0.5em;">
<div class="clearfix uiHeaderTop" style="zoom: 1;">
<h2 class="uiHeaderTitle" style="color: #1c2a47; font-size: 16px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" tabindex="0">
<br /></h2>
</div>
</div>
<div class="mbl notesBlogText clearfix" style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 1.5em; margin-bottom: 20px; word-wrap: break-word; zoom: 1;">
<div style="line-height: 1.5em;">
<strong><span class="photo_left" style="clear: left; float: left; max-width: 180px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 10px; padding-top: 2px;"><img alt="" class="photo_img img" src="https://fbcdn-photos-a.akamaihd.net/hphotos-ak-prn1/535085_289550047798008_100002290445134_667498_68866945_a.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; max-width: 493px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" /><span class="caption"></span></span> மே தினம்:</strong> முதலாளி வர்க்கத்தின் மூடு திரையல்ல!</div>
<div style="line-height: 1.5em;">
<br /></div>
<div style="line-height: 1.5em;">
இன்று மே தினம்; ஊர் சுற்றி ஓடி தோழர்களை அணி திரட்டியவாறு யாழ் நகரின் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் கோசங்களை முழக்கும் அந்த நாட்களுக்கு ஏங்க வேண்டும் என்பதற்கு இல்லை. மக்கள் விரோத நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அரசுகளும் முதலாளி வர்க்கமும் மேதினம் கொண்டாடும் வேடிக்கைக்காக வருந்த ஒன்றும் இல்லை. இன்றைய பத்திரிகைகளின் கருத்துப்படங்கள் எல்லாமே அனேகமாய் முதலாளிகள் அரிவாளையும் சுத்தியலையும் கையுக்கொன்றாய் அபகரித்து வைத்துக்கொண்டு வேடிக்கை வினோதம் காட்டுவதாயே உள்ளன.</div>
<div style="line-height: 1.5em;">
<br /></div>
<div style="line-height: 1.5em;">
அவற்றில் ஒன்றில், சஜித் பிரேமதாசும் ரணிலும் ஒருவர் கழுத்தில் மற்றவரது அரிவாளும், அவரின் தலையில் இவரது சுத்தியலும் மோதத் தயார் நிலையில் இருப்பதாக சித்திரிக்கப்பட்டிருந்தது. மேதினத்தை தமது உட்கட்சி பிளவுக்கு வெளிப்பாடானதாக அவர்கள் ஆக்கும் கோளாறு மட்டும் இதில் இல்லை. பாட்டாளி வர்க்க மற்றும் ஒடுக்கப்படும் இன அரசியல் முன்னெடுப்பை ஆதிக்க வர்க்கப் பிரதிநிதிகள் எவ்வகையில் கையாள்கிறார்கள் என்பதையும் இதுகாட்டுகிறது.</div>
<div style="line-height: 1.5em;">
<br /></div>
<div style="line-height: 1.5em;">
மேதினத்தை நினைவு கூர அனுமதிக்க மறுத்த கட்சி ஐ.தே.க. ; பண்டாரநாயக்க அரசு அதனை விடுமுறை நாளாக்கி தொழிலாளர்களுக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கிய பின்னர், அந்நாளில் இரத்தம் சிந்தவைத்த வரலாறு ஐ.தே.க.வினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று தவிர்க்க இயலாமல் 'விடுதலைக்கான போராடும்' நாளாய் இத்தினத்தை நினைவு கூருகிறார்களென்றால், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்டங்களின் மகத்தான வெற்றியின் வெளிப்பாடு இதுவென்பதை அழுத்தி வலியுறுத்துவது அவசியம். </div>
<div style="line-height: 1.5em;">
<br /></div>
<div style="line-height: 1.5em;">
யாழ்ப்பாணத்தில் ரணில் மேதினத்தை கொண்டாடும்போது ஒடுக்கப்பட்ட இனமொன்று விடுதலை கொள்ள வாய்ப்பிருப்பதாக மயங்க இடமுண்டு. போதாக்குறைக்கு தமிழ் மக்களின் வாக்கு அங்கீகாரத்தைப் பெற்ற கூட்டமைப்பு இதனோடு ஐக்கியப்பட்டு மேதினத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்துகிறது. இறுதி யுத்தத்துக்கு தலைமையேற்று கொலை பாதகங்களைப் புரிந்ததோடு முள்ளு வேலிக்குள் தப்பிவந்த மக்களை அடைத்துவைத்த சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க பிரசாரம் செய்த கூட்டமைப்பு, தமிழினத்துக்கு எதிராக யுத்தமென்றால் யுத்தமென்று பிரகடனம் செய்து இன்றுவரை அரசியல் தீர்வுக்கு எதிராக இன்னும் போராடிக்கொண்டிருக்கும் கட்சியொன்றோடு சேர்ந்து மேதினம் கொண்டாடுவதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை; இவர்கள் மக்கள் விரோத சக்திகள் என்ற புரிதலை ஏராளமான தமிழ் மக்கள் வந்தடைய இயலாதிருக்கிறது என்பதே வியப்புக்குரியது.</div>
<div style="line-height: 1.5em;">
<br /></div>
<div style="line-height: 1.5em;">
சஜித் பிரேமதாச கொழும்பில் நடாத்தும் 'பிரேமதாச நினைவு நாள்' கொண்டாட்டம் கூட்டுக்குழப்பமேளா! இதை அவர் கட்சியுணர்வோடு ஐ.தே.க.வின் யாழ் மேடையிலேயே இணைத்திருப்பின் குறைந்தபட்ச அரசியல் நேர்மையாளராகக் கணிக்கப்பட இடமேட்படுத்தியிருப்பார். வெறும் உட்கட்சிப் போட்டியாக இதனைக் கணிக்க இயலவில்லை; அவரது மோசமான இனவாத உணர்வையும் இது வெளிப்படுத்தியுள்ளது. பிரேமதாச 19 ஆண்டுகளின் முன்னே தனது கட்சி மேதின ஊர்வலத்துக்காக நின்ற களத்தைக் கொலைவெறிக்குதேர்வு செய்தமை புலிகள் இழைத்த பல்வேறு அயோக்கியத்தனமான உழைக்கும் மக்கள் விரோதச் செயற்பாடுகளிலேயே அதியுச்சமானது. அதற்கு சஜித் இந்த வடிவில் பழி தீர்ப்பது புலியும் யானையும் வேறுவேறு வகை மிருகங்கள் அல்ல என்பதை எடுத்துக்காட்டுவது. </div>
<div style="line-height: 1.5em;">
<br /></div>
<div style="line-height: 1.5em;">
இன்றைய ஆதிக்கவாத அரசியல் அமைப்பை அரங்கேற்றிய ஐ.தே. க., தனது குதிரையை சக்கடத்தார் மேலும் கொலைவெறி வேகத்தில் வலுவேற்றுவதில் மகிழும் கொண்டாட்டமாயும் இவற்றைக் காணலாம். இவர்கள் இரண்டுபட்டு தமிழிலும் சிங்களத்திலும் பிற்போக்கான இந்த மாயத்தினத்தைக் கொண்டாடும்போது 'ஒரே நாடு' எனும் தொனிப் பொருள் எதிர்காலத்தில் தமது ஆதிக்கவாத-பேரினவாதக் கொலைவெறி ஆட்சிக்கு மேலும் வலுவான அத்திவாரத்தை இட்டுத்தருவதாக மகிழ்வோடு இருப்பர் என்பதில் சந்தேகமில்லை.</div>
<div style="line-height: 1.5em;">
<br /></div>
<div style="line-height: 1.5em;">
இதுபோன்ற பாதகங்களைக் கண்டு துவண்டு போக பாட்டாளி வர்க்க இயக்கம் ஒன்றும் அத்தனை பலவீனமான ஒன்றல்ல; அனைத்துவகை கபடச் சூழ்ச்சிகளையும் புறங்காணச் செய்து, முதலாளித்துவத்தின் புதிய மூடு திரைகளையும் கிழித்தெறிந்து, தன்னைச் சூழ்ந்த சாம்பல் மூட்டத்தையும் ஊதித் தள்ளி கொழுந்துவிட்டெரியும் போர்ச் சுவாலையில் உலகைப் புதிதாய்ப் புனையும் தன் வரலாற்றுப் பணியை மீண்டும் பாட்டாளி வர்க்க இயக்கம் கையேற்கும்! அதற்கென ஒன்றுபட்டு உழைக்க இந்த உழைப்பாளர் தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்!!</div>
<div style="line-height: 1.5em;">
<br /></div>
<div style="line-height: 1.5em;">
<strong>"உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்'"</strong></div>
</div>
</div>ந. இரவீந்திரன்http://www.blogger.com/profile/09581647954492550719noreply@blogger.com0