Thursday, February 23, 2012

கார்த்திகேசு சிவத்தம்பி : வக்கிரங்களும் மதிப்பீடும் ந. இரவீந்திரன்

கார்த்திகேசு சிவத்தம்பி : வக்கிரங்களும் மதிப்பீடும்
 ந. இரவீந்திரன்

      பேராசிரியர் கா.சிவத்தம்பி எனும் புலமைச்சிந்தனை ஆற்றல் தனது இயக்கத்தினை நிறுத்திக் கொண்டதன் பின்னர் ஒன்றரை மாதங்கள் கடந்தோடிய நிலை@ அவருக்கான அஞ்சலிகள் அவரது சாதனைகளை விண்ணதிர முழங்கின. அதன் கனங்காத்திரம் காரணமாக எதிர்க்கணைகள் கடும் விமர்சனத்தொனியோடு எதிரொலித்தன. இன்னும் மேலே, சகிக்க இயலாத வக்கிரங்களும் வெளிப்பட்டன. இத்தகைய பின்னணியில் அவர் குறித்த ஒரு மதிப்பீட்டினை மேற்கொள்வது தவிர்க்கவியலாதிருக்கும் பணி. முழுமையான மதிப்பீட்டுக்கு இன்னும் கால அவகாசம் வேண்டியிருக்கும். அதற்கான ஒரு முன்னோட்டமாக இந்தக்கட்டுரையைக் கருதும்வகையில் இதனை அமைத்துக் கொள்ள முயல்வேன்.
      இத்தகைய ஒரு மதிப்பீடு எத்தகைய தகுதிநிலைப்பட்டும் மேற்கொள்ளப்படவில்லை. அவரது சாதனைகள் சமூக இயங்காற்றலின் பாற்பட்டது@ அந்தப் புரிதலுடன் இயங்கிய அவரது உணர்வு நிலையிலிருந்து அதனை வெளிப்படுத்துவதில் எத்தகைய கர்வமோ உரிமைகோரலோ குறைமதிப்பீடோ அவசியமற்றது. அவ்வாறே விமர்சனங்களை அவரது செயற்பாட்டின் மீது மேற்கொள்ளும் போது தனிநபர் தாக்குதலாக ஆக்கவேண்டியதில்லை@ வக்கிரங்களாக அவை வெளிப்படும்போது வெறும் குரோதமும் பொறாமையும் தெரிகின்றனவே அல்லாமல் எந்தவகையிலும் சமூகப் பெறுமானம் உள்ளதாய்ப்படவில்லை. அவர் பெற்றுக்கொண்ட சர்வதேச தேசிய சமூக அங்கீகாரத்தின் வீச்சினைப் புரிந்துகொள்ளவும் சீரணிக்கவும் முடியாத சிக்கல்காரணமாகவே அவர் மீதான வக்கிரங்கள் வெளிப்படுகின்றன. அவரை வெளிக்கொணர்ந்த சமூக இயங்காற்றலில் அவரது ஆளுமைத்திறன் செயற்பட்டபாங்கின் பேறான தகுதியின் பாற்பட்டதே அவருக்கான சமூக அங்கீகாரம்.
      அவரைக் கொண்டாடும் போற்றுதல்களை இயல்பானது என ஏற்றுக்கொண்டு, அவர் மீதான விமரிசனங்களைத் தட்டிக் கழித்துவிட வேண்டும் என்பது இக்கட்டுரையின் நோக்;கமல்ல. வக்கிரநிலைத்தாக்குதலுக்கான காரணங்களை முன்னிறுத்தி, நியாயமான விமரிசனங்களை இனங்கண்டு, அவருக்கான தளம் குறித்த புரிதலைப்பெற இங்கு முயல்வோம். அரை நூற்றாண்டு தமிழியல் செல்நெறி மீதான ஒரு ஆளுமையின் தாக்குறவை இதன்வாயிலாக மதிப்பிட வேண்டிய பொறுப்பு எம் முன் உள்ளது.
      இந்த முன்னுரையைக் காணும் எவரும் கா.சிவத்தம்பி மீதான பக்தி விசுவாசத்துடன் எழுதப்படும் அஞ்சலிக்குறிப்பாக இதனைக் கருத வேண்டியதில்லை. மறைந்த பெரியார் ஒருவர் மேல் விமரிசனங்களைக் கிளற வேண்டாம் என்ற மரபுணர்வின் பாற்பட்டும் இக்கட்டுரை அமையாது. மரணத்துக்கு முதல் நாள் தனது குடும்பத்தினரிடம் அவர் கூறியதாயிருந்த விடயமாக அறியப்பட்ட வகையில், வாழ்ந்து சாதித்துச் செய்ய வேண்டியவற்றைப் பூரணமாக நிறைவுசெய்த திருப்தியுடன் இதயத்தின் இயக்கத்தை நிறுத்திக்கொண்டவர் கா.சி.
      அவ்வாறு தனது பணியென அவர் முன்னெடுத்த செயற்பாடுகள் பலவற்றின் மீதான அதிருப்தியுடனும், கடும் விமரிசனங்களுடனும் இருந்த ஒருவன் என்ற நிலைப்பாட்டுடனே அவர்மீதான நிதானமான மதிப்பீட்டினை இங்கு மேற்கொள்ள முயல்கிறேன். அந்தவகையில் அவருக்கான மிகை மதிப்பீடு எதுவும் வெளிப்பட இடமில்லை@ மாறாக, புறக்கணிக்கப்படுகிற எந்த அம்சமும் இருந்துவிடக் கூடாது என்ற கவனம் கொள்ளலே முனைப்பாகும்.
      அவரை 2006இன் இறுதிப்பகுதியில் சந்தித்த பின்னர் மூன்று வருடங்கள் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து இருந்தேன். மூன்று வருடங்களின் பின்னர் காணச்சென்ற போது உரிமையுடன் கேட்டார், ஏன் கனநாளாக வரவில்லை என. அவரது நிலைப்;பாட்டைக் குறைசொல்லி விமரிசனங்களை முன்வைக்கும் சூழல் இல்லாதகாரணத்தால் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆயினும், அவரிடம் அணிந்துரை ஒன்றை வாங்கி அனுப்புமாறு கோரியிருந்த பெ.சு.மணி, உங்களுக்குச் சென்று சந்திப்பதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம் - எனக்காக நேரில் கண்டு அணிந்துரையைப் பெற்று அனுப்புங்கள் எனக்கேட்டிருந்தார்.
      பெ.சு.மணி உட்படப் பலரிடமும் கா.சிவத்தம்பி தமிழ்த்தேசியப் போரியல் செல்நெறிகுறித்து வெளிப்படுத்தும் கருத்துகளைக் கடும் விமரிசனப்படுத்தியிருக்கிறேன். பிற்போக்கான அரசியல் நிலைப்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட்ட வலதுசாரித் தலைiமையின் வன்முறை வழிபாட்டின் மீது அவசியமான கண்டனங்களை முன்வைக்காமல் அவர்களை ஆதரித்து அவர் எழுதிக்கொண்டிருந்த நேரம் அது. அத்தகைய எதிர் மனப்பாங்கை ஓரங்கட்டி வைத்துவிட்டு பெ.சு.மணி கேட்டிருந்த காரணத்துக்காகவே 2009இன் பிற்கூற்றில் சென்று சந்தித்தேன். அதுநாள்வரை வராததை ஆதங்கத்துடன் கேட்டதுமுதல் அந்த அணிந்துரையை வழங்கியது வரையான அவருடனான தொடர்பாடல் நெஞ்சைவிட்டு நீங்காவகையில் அமைந்தது.
      அப்போது என்னுடைய எழுத்து முயற்சிகுறித்துக் கேட்டார். திருக்குறளில் கல்விச் சிந்தனைநூலுருப் பெற்றுள்ளமையைக் கூறி வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் விரைவில் வெளியிடப்பட இருப்பதைக் கூறினேன். அந்தநூல் எனது கலாநிதிப்பட்ட மேற்படிப்புக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு. அந்த ஆய்வில் ஈடுபட்ட ஆரம்ப நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தார். அவரது ஆலோசனையை நாடி அவரோடு கலந்துரையாடிய போது, திருக்குறளானது கல்வி வாயிலாக சமூகத்தைக் கட்டமைக்கும் நோக்குடையதாயள்ளதைப் புரிந்துகொண்டமையைக் கூறியிருந்தேன். ஆறு வருடங்களின் பின்னர் அதனைக் கூறி, அதுபற்றிப்பார்க்க வேண்டும் என்பதால் உடனடியாக திருக்குறனில் கல்விச் சிந்தனைநூலினைத் தருமாறு கேட்டார். நூலைப்பெற்றதும், வெளியீட்டில் தனது வாழ்த்துரையை வாசிக்கும்படி சொல்லிக் காத்திரமான ஒரு வாழ்த்துரை வழங்கியிருந்தார் (அது உண்மையில் எனக்காக மட்டும் வழங்கப்பட்டதில்லை@ எனது வழிகாட்டியாக அமைந்த பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தியைக் கௌரவிக்கும் வகையில்தான் அதனைத் தரவேண்டும் என வலியுறுத்தி வழங்கியிருந்தார்).
      இந்தச் சந்திப்புக்களின்போது நிறையவே உரையாட முடிந்தது. அடிக்கடி வந்து கதையுங்கோ, அதுவும் இல்லாமல் வெறுமையாக இருப்பது கடினமாயுள்ளது என்பார். அதுவரை வராததுபோன குற்ற உணர்வு மனதை வருத்தும் வண்ணமாய் அவரது கோரிக்கை அமையும். அப்போதும் அவர்குறித்த விமரிசனம் எதனையும் முன்வைக்க இயலாமல்தான் இருக்கும். அவ்வளவு விரக்கியுடன் அவரது அபிப்பிராயங்கள் இருந்தன.
      அடிப்படையான தமிழியல் சிந்தனை தொடர்பாக மிகுந்த ஆளுமையுடன் உரையாடும் அவர், விரக்தியுடன் உரையாடுவது தன்மீதான கடும் விரிசனங்கள் பற்றிக் கூறும்போதாகும். இந்தத் தாக்குதல் எல்லாத்தையும் பார்த்தால் உண்மைதான், அப்படி எதைச் சாதித்தோம், உருப்படியாக எதுவும் இல்லாததுக்கு இந்தத் தாக்குதல்கள் வேண்டியதுதான் என்பதுபோல் இருக்கும்என்றார். தன்னால் தாங்க முடியாததாய் இருப்பதை வெளிப்படுத்துவே இதனைக் கூறினார்.
      இன்றைய தாக்கதல்களால் துவண்டு போவது அவசியமில்லை எனக்கூறி, கைலாசபதி சிவத்தம்பி ஆகியோருக்கான புகழ் என்பது எதாயினம் பிரசார உத்திகளால் வலிந்து எற்படுத்தப்பட்டதல்ல, அன்றைய எமது சமூகத்தின் சாதனைகளைத் தமிழியல் தளத்தில் பூரண ஆளுமையுடன் அவர்கள் வெளிப்படுத்தியதன்பேறு அது என எப்போதும் நான் சொல்லிவருகின்றேன் என்பதை வலியுறுத்தினேன். அவருக்கான ஆறுதல் வார்த்தையல்ல அது. அவரது சாதனைகள் பற்றிப் பலரும் அவரிடம் வெளிப்படுத்தவே செய்வர். அவரளவில் தனது பங்களிப்புகள் மற்றும் தாக்குதல் விமரிசனம் என்பனவற்றிடையேயான சமநிலையைக் காணும் மனப் போராட்டம் தொடர்ந்தபடி இருந்திருக்கும்.
      ஒரு வருடத்தின் முன்னர் கோவை ஞானி பேராசிரியரிடமிருந்து அவரது தமிழ்ப் பணிகுறித்து ஆக்கம் ஒன்றினைப் பெற்று அனுப்புமாறு கோரியிருந்தார். அக்கடிதத்தினைப் படித்ததும் அவர் கூறியது தமிழுக்கு நான் ஏதோ பணிசெய்தேன் என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள். தமிழைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தோமே அல்லாமல் அதற்காகப் பெரிதாக எதோ செய்தோம் என்பது தப்பு. தமிழியல் ஆய்வில் என் அனுபவங்கள் குறித்து எழுத இயலும்என்பதாகவே அமைந்தது. அதை அவர் வெறும் அவையடக்கமாகக் கூறவில்லை. கோட்பாட்டு நிலையில் ஒருவரது சமூக மற்றும் பண்பாட்டுச் செயற்பாடுகளின் வரம்பினைத் தெளிவாகப்புரிந்து கொண்ட வரையறையுடனேயே கூறியிருந்தார் (அந்தக் கட்டுரையை எழுதுவதற்கு எனது உதவியைக் கோரியிருந்தார்@ அவர் சொல்லச் சொல்லக் கேட்டு எழுத வேண்டும். அந்த நேரத்தின் எனது வேலைப்பழு அதற்கு நேரம் ஒதுக்க அனுமதிக்க மறுத்ததால் பெறுமதிமிக்க ஒரு ஆக்கத்தை வெளிக்கொணர இயலவில்லை).
      இதன்போது செம்மொழி மாநாட்டுக்காக அவர் தமிழ்நாடு (கோயம்புத்தூர்) சென்றிருந்தார். தமிழியலின் தலைமககனாக அவர் உள்ள நிலையில் ஆய்;வரங்கத் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் செல்வது தவிர்க்கவியலாததே@ அந்தவரம்பை மீறித் தமிழக அரசியல் சகதியில் அகப்பட்டுபோனதால் பிந்திய கடும் தாக்குதல்களுக்கும் சேறுபூசல்களுக்கும் ஆளானார். கலைஞர் உலகத் தமிழினத் தலைவர்என்று பேசிய அன்று செய்தியைப் பார்த்ததும் தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்த எம்மோடு தொலைபேசித் தொடர்பில் திட்டித்தீர்த்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் பேராசிரியரைப் பெரிதும் மதித்தவர்கள் அவரிடமுள்ள இரு அம்சங்களையும் பார்க்க வேண்டும்என அவர்களுக்கு ஆறுதல் கூறவேண்டியிருந்தது.
      முன்னதாக விடுதலைப் புலிகளை விமரிசனப் பார்வைக்கு இடம் வைக்காமல் ஆதரிக்கிறார் என நாங்கள் விலகல் கொண்டிருந்தோம் (அரசியல் புரிந்துணர்வடன் புலிகளின் தவறுகள் குறித்து அவர் அறியாமல் இல்லை@ முன்னர் அதனைக் கூறியிருக்கிறார். பிற்கூறில் புலிகளின் சரிவை ஏற்க மனமற்றவராக விமரிசன வெளியை அடைத்துக்கொண்டார். கெடுகுடிக்கான பண்புகளுடன் சொற்கேளாத பரிமாணங்களோடு புலிகள் செயற்பட்டார்கள் என்றபோதிலும் சிவத்தம்பி எனும் ஆளுமை தமிழ்த் தேசியத்தின் தவிர்க்கவியலாத இயங்காற்றலை ஆதரித்த அதே வேளை தலைமையின் தவறுகளையும் வெளிப்படுதியிருக்க வேண்டும்). கண்மூடித்தனமாக புலிகளை ஆதரித்தவர்கள் அப்போது சிவத்தம்பி பேரறிஞர் எனக்கொண்டாடினார்கள். செம்மொழி மாநாட்டில் கலைஞரை உலகத்தலைவராக அறிவித்துக் கொண்டவுடன் எந்தத்தயக்கமும் இல்லாமல் பேராசிரியருக்கு துரோகிப்பட்டம் சூட்டிக்கொண்டனர். அவர் மீது வக்கிரபத்தியுடன் தாக்குதல்களை முன்வைப்பவர்கள் இத்தகைய நிதானங்கெட்ட பிற்போக்கு கும்பல் என்பதில் சந்தேகம் இருக்க வேண்டியதில்லை.
      அவர் மீதான விமரிசனங்களின் இரு தளங்கள் இங்கு தெளிவாகின்றன. தமிழ்த்தேசியமும் அதன் இயங்காற்றலும் தொடர்பாக அவர் சரியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்;லை என்பது ஒரு தளம். இன்னமும் அதே தவறான பிற்போக்குத் தேசியவாதம் உலக மேலாதிககத்தின் ஐந்தாம்படையாக செயற்பட்டபடி கண்மூடித்;தனமான ஆதரவைத் தமிழ்த் தேசியத்துக்கு வழங்கவில்லை என்பதற்காக வக்கிரங்களை அள்ளிவீசும் மற்றொரு தளம்.
      இன்னொரு தளத்திலான விமரிசனம் எண்பதுகளின் நடுக்கூறிலிருந்து அவர்மீது செயற்பட்டுவந்தது. மக்கள் இலக்கியச் செல்நெறியொன்றை முற்போக்கு இலக்கிய இயக்கம் முன்னேடுத்தபோது முன்னர் அதற்கு அடித்தளமிட்டவர்களில் வலுவான ஒரு சக்தியாக விளங்கிய அவர் பின்னர் பலவீனப்படுத்தும் கருத்துகளை வெளிப்படுதிவந்தார். அழகியல்வாதிகளின் தாக்குதல்களால் பலவீனப்பட்ட அவர் முற்போக்குத் திறனாய்வாளர் என்ற பண்பிலிருந்து மாறி அழகியல்வாதிக்குரிய நிலைப்பாட்டை மேற்கொள்ளத் தொடங்கினார். இது குறித்து பின்னால் பார்க்க இயலும்.


ஐஐ
      எண்பதுகளில் ஈழத்தமிழ்த் தேசியம் முனைப்புறத் தொடங்கியது. ஐம்பதுகளின் நடுக்கூறிலிருந்து முற்போக்கு இலக்கிய இயக்கம் இலங்கைத்தமிழின் முதன்மைச் செல்நெறியாக முற்போக்கு இலக்கிய இயக்கம் இலங்கைத்தமிழின் முதன்தைச் செல்நெறியாக விளங்கிய நிலை மாற்றம்பெற்று ஈழத்தமிழர் வாழ்விலும் இலக்கியத்திலும் தாமிழ்த்தேசியம் முதன்மை பெறலாயிற்று. ஈழத் தமிழ்த் தேசியம் குறித்து நிதானமான பார்வையை முற்போக்கு இயக்கமும் சிவத்தம்பியும் முன்னர் முழுநிறைவாக முன்வைக்கவில்லை என்பது உண்மைதான்@ அதற்காக முற்போக்கு இயக்கம் பாரிய தவறுக்குரிய என்றும் தமிழ்த்தேசியம் அப்பழுக்கற்ற சரியான மார்க்கத்துக்குரியது என்றும் பொருளாகாது. உண்மையில் முற்போக்கு இயக்கம் தமிழினத் தேசியம் குறித்து சரியான கணிப்பைப் பெறத்தவறியது என்ற குற்றச்சாட்டுத்தவிர்ந்த எனைய பல அம்சங்களில் மகத்தான சாதனைகளை எட்டியிருந்தது (அதன் தமிழியல் தள வெளிப்பாடுகளாக கைலாசபதி சிவத்தம்பி ஆகியோரும், படைப்பாளுமையில் டானியல், டொமினிக் ஜீவா, என்.கே.ரகுநாதன், நீர்வைபொன்னையன், தெணியான், செ.யோகநாதன், பெனடிக்ற்பாலன், நந்தினி சேவியர், பிரேம்ஜி, தணிகாசலம் எனத்தொடர்ந்து நீளும் பட்டியலும், அரசியல் ஆளுமைகளாய்ப் பலரும் உள்ளனர்). மாறாக ஈழத்தமமிழ்த் தேசியம் ஏற்படுத்திய அவலங்களோடு ஒப்பிடுகையில் சாதனை கழித்தல் பெறுமானத்தையே பெறும்.
      இருப்பினம் ஈழத்தமிழ்த் தேசியம் குறித்த சரியான கணிப்பு எட்டப்பட வேண்டும். இன்றும் முற்போக்கு சக்திகளிடம் இது குறித்த பூரண தெளிவு எட்டப்பட்டதாய் இல்லை. எண்பதுகளில் பேராசிரியரும் நிதானமாக அணுகுவதாய் இல்லாமல், தமிழ்த்தேசியத்தின் முன்னால் சரணடைந்தார். முற்போக்கு செயற்பாட்டின் கடந்தகாலத்துக்காக பாவமன்னிப்புக்கோரும் பலவீன நிலை அவரில் வெளிப்பட்டது.
      தொண்ணூறுகளின் நடுக்கூறில் கொழும்பில் யாழ்ப்பாணச் சமூகத்தைப் புரிந்து கொள்வதுபோன்றதான மாநாடு (இரண்டு நாட்கள் என்பதாக ஞாபகம்) நடந்தது. மேற்படியான பாவமன்னிப்புக் கோரல் தொனியில் பேராசிரியர் பேசியிருந்தார்@ கருத்துரையில் பேராசிரியர் சிவத்தம்பி இன்று தனது பாதையிலிருந்து தடம்புரண்டு போகலாம், ஆயினம் கைலாசபதி சிவத்தம்பி போட்டுத்தந்த பாதையில் தொடர்ந்து செல்கிறவர்கள் ஏராளமாய் இருக்கிறோம்என்பதாக நான் பேசியிருந்தேன். அவ்வாறு பேசிய பின்னர் மேடையை விட்டு இறங்கி எனது இருக்கைக்கப் போகிறபோது அவரைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. எனது கையைப்பிடித்து அருகில் அமரச்செய்து, “காலையில் நான் இல்லாதபோது என்னைப்பற்றி நல்லதாகப் பேசினீர்கள் என்று கேள்விப்பட்டேன்எனச் சொல்லித் தனது சந்தோசத்தையும் நட்புறவையும் வெளிப்படுத்தியிருந்தார்.
      முன்னதாக காலையில் சாதியப் பிரச்சனை தொடர்பில் பேராசிரியரைத் தாக்கி வ.ஐ.ச.ஜெயபாலன் சில கருத்துக்களைச் சொல்லியிருந்தார். தமிழ்த் தேசியத்துக்குள் தலையை நுழைக்கிறபோது சாதிய ஆய்வை ஓரங்கட்டுவது பேராசிரியருக்குத் தவிர்க்கவியலாததாயிருந்திருக்கும். அவரது போதாமையைக் குறிப்பிட்ட nஐயபாலன் அப்போது தமிழ்த்தேசியத்துடன் சாதிய முரண்களையும் ஆய்வுசெய்துவந்தார். அதற்கான கருத்துரையைச் சொன்னபோது இன்று வ.ஐ.ச.ஜெயபாலனின் ஆய்வுக்கான அடித்தளத்தைப் போட்டுத்தந்தவர் போராசிரியர் சிவத்தம்பிதான்@ அவரது போதமையைச் சொல்கிறபோது யாழ்ப்பாணச் சமூகச் சாதிய இயங்காற்றல்பற்றி முன்னதாக ஆழமாக ஆய்வுசெய்த அவருடைய பங்களிப்பை மதித்தபடிதான் விமரிசனத்துக்கு உட்படுத்த வேண்டும்என்று பேசியிருந்தேன் (அவரது இந்தப்பங்களிப்புக் குறித்து பின்னால் பார்க்கலாம்).
      அவரது பாதையை நாம் தொடர்கிறோம் என வலியுறுத்திய அதேவேளை அவரது தமிழ்தேசியம் மற்றும் அழகியல்வாதம் குறித்த தடம்புரளல் பற்றிய விவாதங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துவந்தோம். ஆழகியல்வாதத்தினுள் அமிழும்போது கைலாசபதியின் விமரிசனக் கொடுங்கோன்மைபற்றி அவர் பேசியது குறித்துக் கடும் விவாதங்கள் எழுந்தன. ஏதிர்நிலையில் கூறவில்லை எனக்கூறிய அதேவேளை முற்போக்கு இலக்கியம் அழகியல் குறித்து அக்கறை கொள்ளாதது தவறு என்பதாகவே தொடர்ந்து கருத்துரைத்தார். மக்கள் இலக்கியம் என்பதாகவோ அதற்கேயான அழகியல் குறித்தோ அவரால்சிந்திக்க இயலவில்லை.
      அதன் காரணமாய், முற்போக்கு இலக்கிய எழுச்சிக் காலத்தில் சோஷலிஸ யதார்த்தவாதம்பற்றிப்பேசியவர், முற்போக்கு அலை ஓய்ந்து உலக மயமாதலின் ஐந்தாம்படை தேசியவாத முனைப்பில் அதற்கும் பாவவிமோசனம் தேடவேண்டியவரானார். சோஷலிஸ யதார்த்தவாதத்தை இங்கும் நாம் பேசியிருக்கும்என்பதாக கருத்துரைத்தார். சோஷலிஸ யதார்த்தவாத உள்ளடக்கம் வேறு பரிமாணத்துக்குரியது என்ற விவாதங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும் அவற்றை உள்வாங்கும் நிதானம் அவரிடம் இருக்கவில்லை. இவற்றுக்கு அப்பால் மக்கள் இலக்கியம் - அதற்கான கோட்பாட்டு உருவாக்கம் என்பவற்றுக்கு எப்படி அவரால் பங்களித்திருக்க இயலும்?
ஐஐஐ
      தொடர்ந்தும் மார்க்சியச் சிந்தனையை முன்னெடுப்பதாக அவர் நம்பியபோதிலும் பிற்போக்குவாதம் மேலோங்கிய சூழலில் மார்க்சியத்தைப் பாதுகாத்து வளர்த்தெடுப்பது எவ்வகையில் சாத்தியம் என்பது குறித்த தேடலில் ஈடுபட அவருக்கு அவகாசம் இருக்கவுமில்லை இயலவுமில்லை. முந்திய அவரது சாதனையில் பெற்ற அங்கீகாரத்தை காட்டிக்கொடுக்கும் பிற்போக்குத் தேசியவாதமும் அதன் இலக்கியக் கோட்பாடாக அழகியல்வாதமும் தமக்குரியதாகப் பயன்படுத்தும் களங்களை வழங்கவும் அதற்கே அவரது அவகாசம் கசியவேண்டியதானது. இருப்பினம், மார்க்சியத்திலிருந்து விலகல்களுக்கு ஆளானாரேயன்றி, அதற்கு எதிராகவோ பிற்போக்குவாதி எனும் நிலைக்கோ சென்றாரில்லை என்பது கவனிப்புக்குரியது.
      ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லவேண்டும். ஐந்தாறு வருடங்களின் முன்னர் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழியலில் போராசிரியர் சிவத்தம்பிஎன்பதாக மூன்று நாட்கள் தொடர்ச்சியான ஆய்வரங்கை நடாத்தியது (இது மிகுந்த கவனிப்புக்குரிய அம்சம். தமிழின் இயல்பறிந்தவர்களுக்கு வாழும் தமிழறிஞருக்கு இத்தகைய முக்கியத்துவத்தை ஒரு பல்கலைக்கழகம் கொடுத்தது என்பது எத்தனை  வியப்புக்குரியது என்பது புரியும்). அங்கு சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையில் அ.மார்க்சின் கட்டுரை முதல்நிலைக்குரியது. இரு அம்சங்கள்  அ.மார்க்ஸ் கட்டுரையில் படைப்புக்குரியன. ஓன்று, தன்னைப் பின்நவீனச்சிந்தனைப் படைப்புகளுக்கு அறிமுகப்படுதிய அத்திசைக்கு ஆற்றுப்படுத்திய போராசிரியர் அவ்வழியில் வளரத்தவறினார் என்பது@ மற்றையது ஒரு தசாப்தமாய்ப் பின்நவீனத்துக்குள் போன வேகத்தில் மார்க்சியத்தால் பயனில்லை என்பதுவரை போய், ( நான் அறிந்தவரை இங்கேதான் முதன் முதலில்) மார்க்சியமே சமூகப்பிரச்சனைகளுக்கான தீர்வைத் தரும் என்பது அ.மார்க்ஸ் முன்வைத்த கருத்தாய் இருந்தமை.
      பின்நவீனத்துவாதியாகப் பயணித்த போதிலும் மார்க்சிய அடிப்படை அ.மார்க்சை மக்கள் நலநாட்டத்துடன் செயற்படத்தூண்டி, மார்க்சியத்தின் அவசியத்தை வலியுறுத்த ஆற்றுப்படுத்தியுள்ளது. அவரளவுக்கு பின்நவீனத்து வாதத்துக்குள் மூழ்காதபோதிலும் கரையில் நின்றபடி அதன் சாயலால் மார்க்சியப்; பார்வையிலிருந்து தடம்புரளல்களுக்கு அளாகிறவராக சிவத்தம்பி இருந்துள்ளார். இவர்கள் மார்க்சியத்தின் அவசியத்தை வலியுறுத்துகிற அளவில் பல அம்சங்களில் கவனிப்புக்குரிய இடத்தைத் தக்க வைத்தனராயினும் அதனின்றும் எற்பட்ட விலகலினால் தவறான அணுகுமுறைகளைப் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
      உலகமயமாதலுடன் மேலோங்கிய பிற்போக்குவாதத்துக்கான மற்றொரு புதிய மோஸ்தரான பின்நவீனத்துவாதனாகப் போற்றப்பட்ட பின்னணி இத்தகைய துன்பியல்களுடனானது என்ற  அவலம் மறக்கப்படக்கூடாதது. காலத்தோடு அடிபட்டுப்போகிற துரும்பாக அன்றி எஃகு போன்ற உறுதியடன் மார்க்சிய நிலைப்பாட்டில் தளம்பாமல் நின்று சரியான வழிகாட்டலைச் சமூக மாற்ற சக்திகளுக்கு வழங்கியிருப்பின் இன்று பெற்றுள்ள தமிழியல் தலைமகன் என்ற மகுடம் சாத்தியமற்றதாகியிருக்கும். மாறாக, இதனைப் பெறவதற்காகக் காலம் வழங்கியிருக்கக்கூடிய மதிப்பீடுகளை இழக்கும் கறைகளைத் தனதாக்கிக்கொண்ட அவலம் நேர்ந்துள்ளது.
      அவர் தமிழியலில் பங்களிப்பு நல்கிய அரைநூற்றாண்டுக் காலப்பகுதியில் முந்திய இருபத்தைந்து வருடங்கள் தலைசிறந்த மார்க்சியச் சிந்தனையாளராக விளங்கி மகத்தான பங்களிப்புகளை நல்கியுள்ளார். பிந்திய இருபத்தைந்து வருடங்களில் மார்க்சியத்திலிருந்து விலகிச்சென்று தமிழியல் தலைமகன்”;படம்டத்தைச் சூடிக்கொண்டார். ஆயினம் அவருக்குள் இயங்கிய மார்க்சியத்தின் பண்புகள் சிலவாயினும் தொடர்ந்து செயற்பட்டதன் பேறாகப் பிற்கூற்றில் மார்க்சியராகத் திகழ்ந்தார் என்பதில் சந்தேகமில்லை.
      குறிப்பாக அவரது பிற்காலப்பகுதியில் தொடக்கம் பெற்று வளர்ந்த மட்டக்களப்பின் கிழக்குப் பல்கலைக்கழகம்அரங்கியல் - கூத்து நாடக இயலில் சாதனைகள் படைப்பதற்கு தொண்நூறுகளில் அங்கு வருகைப் பேராசிரியராகப் பணியாற்றிய சிவத்தம்பி அற்புதமான வழிகாட்டியாக விளங்கியுள்ளார். இது குறித்த அச்சாதனையை முன்னெடுத்த மௌனகுரு தினக்குரல்நாளிதழில் தொடர்கட்டுரையாக விளக்கமாக எழுதியுள்ளார். தமிழ்ச்சினிமா குறித்த பேராசிரியரது கட்டுரைகள் (சிவாஜி கணேசன் குறித்த மதிப்பீடு) விதந்துரைக்கத்தக்கன. தமிழ்நாவல் - திறனாய்வு என்பவை தொடர்பில் அவரது அழகியல்வாதம் பாதகங்களை ஏற்படுத்திய போதிலும் அரங்கியல் - சினிமா தொடர்பான பார்வையில் அந்தப்பலவீனம் வெளிப்படாமல் ஆளுமையுடன் அவரால் கருத்துரைக்க இயலுமாகியுள்ளது. 
ஐஏ
      அவர் மீதான வக்கிரங்கள் செல்லுபடியற்றன என்றாலும் விமரிசனத்துக்கான அம்சங்கள் இவ்வகையில் காணப்படுகின்றனஇவற்றைக்கடந்து அவரது சாதனைகள் மேலோங்கியியுள்ளன என்பதே கவனிப்புக்குரியது. அவரது சாதனைகள் மேலோங்கியுள்ளன என்பதே கவனிப்புக்கரியது. அவரது மறைவைத்தொடர்ந்து வெளியான பல கட்டுரைகள் அவற்றை வெளிப்படுத்தியுள்ளன. இங்கு சுருக்கமாக அவைகுறித்துத் தொட்டுக்காட்டுவது போதுமானதாகும் (இவை விரிவான ஆய்வுக்குரியன@ இக்கட்டுரையின் அமைவு கருதிச் சுருக்கமாகக் காட்டப்படுகிறது).
      சிவத்தம்பியின் தனித்துவப் பங்களிப்பில் முதன்மையாக வலியுறுத்த வேண்டிய திணைக் கோட்பாட்டில் அவர்காட்டிய ஈடுபாடும் சாதியம் குறித்த ஆய்வுக்கான தொடக்கனராக அமைந்தமையும் ஆகும். ஏற்கனவே பார்த்ததுபோல மாநாட்டு நிகழ்வில் வெளிப்பட்டதைப்போல, தலைசிறந்த தொடக்குனராக விளங்கியபோதிலும் வளர்த்தெடுக்கத்தவறிய போதாமை இருந்துதொலைத்துவிட்டது. பிற்கூறில் மார்க்சியத்திலிருந்து ஏற்பட்ட விலகலினால் தொடக்குனராகப் பங்களித்த சாதனையைக் குறைமதிப்பீடு செய்யமுடியாது.
      திணைகள் படிமுறை வளர்ச்சி பெறுவதனை மரபுக்கருத்தை விரித்துரைத்த போதிலும், தமிழகத்தில் சமநிலையில் நான்கு திணைகள் நிகழ்ந்துள்ள ஐயப்பாட்டையம் அவர் வெளிப்படுத்ததத்தவறவில்லை. அதன் தொடர்ச்சசியாக குறிஞ்சியின் வணிக வாய்ப்பைக் கண்டிருக்க வேண்டும் விவசாய எழுச்சிக்கு முந்திய வணிகமும், வீரயுகத்திலேயே (சங்ககாலத்திலேயே) வணிகமும் வணிககக் கருத்தியல்களான ஆசீவகம் - சமணம் - பெத்தம் என்பன நிகழ்ந்தமையையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அவற்றைக் காணத்தவறினார். அது குறித்து அவரோடுவிவாதித்ததுண்டு. வலிமையாக மறுக்காத போதிலும் சந்தேகங்களையே வெளிப்படுத்தினார். இரு பெருங்கட்டுரைகள் சந்தேகங்கள் அவ்வகையில் அர்த்தமற்ற தளம்பல்களுடன் சந்தேகங்களை வெளிப்படுத்தின.
      அவரது ஆழமான ஆங்கிலப் புலமை இங்கு அவரைப் பலவீனப்படுத்தும் தடையாக இருந்துள்ளது.விவசாயத்துக்கு முந்திய வணிகம் பற்றிய ஆய்வு ஏதும் ஆங்கிலத்தில் இருந்திருப்பின் கண்டிப்பாக திணைக்கோட்பாட்டை இன்னொரு தளவீச்சடன் வெளிப்படுத்தியிருப்பார். தமிழின் துயர், அது தமிழகத்துக்கு மட்டுமே வாய்த்த ஒர் சிறப்பு அம்சமாய் இருந்து தொலைத்தது. இருப்பினம், இப்புதிய விவாதத்;தை நிர்மூலமாக்கும் எந்தச் செயலிலும் அவர் ஈடுபடவில்லை. தலைசிறந்த ஆய்வறிஞருக்கு இருக்க வேண்டிய பண்பின் பிரகாரம் ஐயப்பாட்டைக்கிளர்த்திப் புதிய ஆய்வுச்செல்நெறி விடைதேடவேண்டிய கடப்பாங்கினை ஏற்படுத்தித்தந்தமையாகம்.                                                  
      திணைக் கோட்பாட்டின் அருட்டுணர்வு காரணமாய் எமது சமூகத்தை வெறும் வர்க்க பேதமாய் மட்டுப்படுத்திப் பார்க்காமல் சாதி அமைவுகள் குறித்து ஆய்வுக்குட்படுத்தினார் சிவத்தம்பி. யார் இந்த யாழ்ப்பாணத்தான்?” என்ற அவரது கட்டுரை இவ்விடயத்தில் முக்கியத்துவம்மிக்கது. யுhழ்ப்பாணச் சமூக அசைவியக்கத்தில் சாதிகளின் வகிபாகம் குறித்த ஆய்வுத் தொடக்கத்தை அவர் ஏற்படுத்தியதன் பேறாக ஈழத்தமிழ்தேசியம் யாழ் வெள்ளாளத் தேசியமாக உள்ளமையை இன்றைய பல ஆய்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. திராவிடர் இயக்கச் செல்நெறி குறித்த அவரது ஆய்வுகளும் பெரும் தாக்கத்;தை ஏற்படுத்தின. தமிழினத்தேசியம் குறித்த சரியான புரிதலை எட்டுவதற்கு அவர் தொடக்கிவைத்த தளங்கள் உறுதியாய் உள்ளன.
      ஐம்பதுகளின் பிற்கூறிலிருந்து மண்வாசைன இலக்கியம், தேசிய இலக்கியம், மரபுப்போராட்டம் என்பன முனைப்படைந்த காலம் அவரது சமூக கலை - இலக்கியப் பங்களிப்பின் தொடக்கமாக அமைந்தது. அந்தக் களங்கள் ஒவ்வொன்றிலும் புலமைத்திறனோடு பங்களித்ததன் பேறாகவே தமிழியலின் கவனிப்புக்குரியவராக முகிழ்த்தார் என்பதை அறிவோம். அவரைக் காத்திரமான மார்க்சியத் திறனாய்வாளராக வெளிப்படுத்திய காலங்கள் அவை.
      இயக்கச் செல்நெறியில் சில விலகல்கள் தென்பட்டபோதிலும் அடிப்படையில் மக்கள் விடுதலைக்காக கலை - இலக்கிய பண்பாட்டுச் செயற்பாடுகள் பங்களிக்க எற்றமார்க்கத்தை வகுத்து வழங்கிய உன்னதமான தமிழியல் சிந்தனையாளர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. 

நன்றி_ புதுவிசை செப் 2011

No comments:

Post a Comment