Friday, April 6, 2012

இரட்டைத் தேசியம்: அறிதலும் அவசியமும்


இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்

                               2          


இரட்டைத் தேசியம்: அறிதலும் அவசியமும் 
ந.இரவீந்திரன்
                                                                    சில  இணைய  தளங்களில்  வந்த கருத்தாடல்கள், ஆரோக்கியமான விவாதத்தின் மூலம் சரியைக் கண்டறிய உதவும் என நம்புகிறேன் - நன்றி )


இந்தியாவில் ஆட்சியதிகார பீடமேறியுள்ள பிராமண மற்றும் ஆதிக்க சாதிகளின் தேசியங்களுக்கு எதிராக தலித் பிரச்சனை எதிர்ப் பண்பாட்டு இயக்கங்கள்
வாயிலாக முன்னெடுக்கப்படுகின்றது; ஆதிக்க சாதி - ஒடுக்கப்பட்ட (தலித்) சாதி முரண்பாடு பிரதானமாகியுள்ள நிலை காரணமாக, அங்கு ஆதிக்க சாதிகளுக்குரியதும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குரியதுமான இரட்டைத் தேசியம் நிலவுவதாகப் பேசுவதில் பொருளுண்டு; இன முரண்பாடு கூர்மையாகியுள்ள  இலங்கைக்கு இதனை இறக்குமதி செய்யவேண்டியதில்லை என்ற குரல் கவனிப்புக்குரியது. தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக அங்கே ஆதிக்கசாதிகள் பிரியும் வன் கொடுமைகளை விடவும் வலிமையாக பேரினவாத ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத் தமிழ் மக்கள் இங்கே ஒன்றிணைந்து ஒரே தேசிய இனம்
என்று ஐக்கியப்பட்டு போராடவேண்டியுள்ள போது இரட்டைத் தேசியப் பிளவாக்க கோட்பாடு பாதகங்களை ஏற்படுத்தாதா?

நிதர்சனமாகப் பிளவுபட்டிருக்கும் இருவேறுபட்ட நலங்கள் என்ற புரிதலின் பேறாக வெளிப்படும் கோட்பாடுதான் இரட்டைத் தேசியம் என்பது; மாறாக, இக்கோட்பாட்டை முன்னிறுத்தி இயங்குவதால் புதிதாக எந்தப் பிளவுபடலும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. இந்த யதார்த்தத்தை விளங்கிக்கொள்ளாமல் செயற்படும்போது தமது நலங்களுக்கு தீர்வு கிட்டப்போவதில்லை அ அஎன்று ஒரு தரப்பு விலகல் கொள்வதால் உள்ளூரப் பலவீனங்கள் வலுப்பட்டு தோல்விகள் தவிர்க்கவியலாதனவாகும். மாறாக, இரட்டைத் சியத்துக்குரிய இரு தரப்பினரது நலங்களின் வேறுபாட்டை மனங்கொள்வதால் - அவை இரண்டிலும் மக்கள் விடுதலைச் செல்னெறிக்குரியவற்றை கையேற்று போராடும்போது - வலுவான ஒற்றுமை சாத்தியமாகி வெற்றியை நோக்கி முன்னேற இயலுமாயிருக்கும்.

ஈழத்தமிழ்த் தேசியப் பிரச்சனையில் இதனை எவ்வகையில் பிரயோகிப்பது என்ற தேடலின்றி ''அடைந்தால் தனி நாடு, இல்லையேல் சுடு காடு'' எனும் வறட்டு வாதம் முன்னெடுக்கப்படுகையில் மக்கள் விரோத சக்திகள் ஆதாயம் பெற்று விடுதலை தவறிக்கெட்டுச் சீரழியும் அவலமே பெருகும். சாதியத்துக்கு எதிரான போராட்டத்துக்கான அவசியமுள்ள இந்தியாவில் இரட்டைத் தேசியம் பற்றிப் பேசட்டும் எமது தேசியப் பிரச்சனையில் இதுகுறித்து பேசமாட்டோம் என்ற கதவடைப்புவாதத்தைத் தகர்த்தெறிந்து சபா நாவலன் ''இனியொரு'' இணையத் தளத்தில் இது தொடர்பில் விவாதிக்க முன்வந்திருப்பது ஆரோக்கியமான ஒரு அறிகுறி. மறுத்தோடியபோதிலும் அவரது தர்க்கங்களும் கருத்துரையாளர்களது வாதங்களும் இரட்டைத் தேசியக் கோட்பாட்டை வலுவேற்றுவனவாயே அமைந்துள்ளன; தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கூட்டு விவாதம் இதனை மேலும் செழுமைப்படுத்தும். எந்தவொரு புதிய கண்டடைதல்களும் கூட்டு முயற்சியின் பேறேயல்லாமல், தனி மனித முயற்சிகள் பெரிதாக எதனையும் சாதித்ததில்லை (தனி மனிதரின் வரலாற்றுப் பாத்திரம் குறித்த சரியான புரிதல் இன்மை பல ன்னடைவிகளை, அது குறித்த கோட்பாட்டுத் தெளிவை மிகச் சிறப்பாக யறைப்படுத்தியிருந்த  மார்க்சிய இயக்கத்துக்கும் ஏற்படுத்தி இருந்தது; தேசிய இனப் பிரச்சனை குறித்த தேடலும் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. இது குறித்து பின்னாலே பார்க்கலாம்).



இரட்டைத்தேசியம் பற்றிய தேடல் தமிழக நகர்ப்புற சிந்தனையாளர்களுக்குரியது,  என சபா நாவலன் சொல்வதில் ஒரு சிறுபகுதி உண்மையுண்டு; கடந்த இரு தசாப்தங்களாக அயோத்திதாசர் - இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரது மறு கண்டுபிடிப்பும், அம்பேத்கரை முன்னிறுத்தி எழுச்சியடைந்த தலித்திய இயக்கமும் இந்தியத் தேசியம் என்பதே பிராமண ஆதிக்கத்தை மீண்டும் நிலைனிறுத்த முன்னெடுக்கப்பட்ட சதி என அம்பலப்படுத்தின. பிராமண எதிர்ப்பை முன்னிறுத்திய வெள்ளாளர் - முதலியார் - நாயக்கர் எனும் ஆதிக்க சாதிகளின் நலங்களை முன்னிறுத்திய திராவிடர் இயக்கமும், எண்பதுகளில் எழுச்சிபெற்ற தேவர் - வன்னியர் என்ற இடைச்சாதிகள் அரசதிகாரத்தில் பங்கேற்றமையும் தலித் விரோதங்களுடன் கூடியனவாகவே இருந்தன என்பதனையும் தலித்தியம் அம்பலப்படுத்தியிருந்தது. இவ்வாறு பிராமண - ஆதிக்க சாதிகள் - இடைச்சாதிகள் என்பவற்றை எதிர்த்து எழுச்சிபெற்ற தலித்தியம் இரு தசாப்தங்களாக இயங்கியபோதிலும் ஏதாயினும் இரு தலித் சாதிகளையேனும் ஐக்கியப்படுத்த வலுவற்றதாயிற்று. சாதிய நோக்கு மேலோங்கும்போது அருகிலிருக்கும் தன் போன்ற இன்னொரு சாதியையும் நிராகரிக்க வழி கோலுமேயன்றி தலித் ஐக்கியத்தை ற்படுத்தப்போவதில்லை என்பதை தலித்தியம் எழுச்சியுறத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே முன்வைக்க இயலுமாயிற்று.

மாறாக, இரட்டைத்தேசியத்தைக் கோட்பாட்டுருவாக்கம் செய்தது வர்க்கப்பார்வையில் சாதியப் பிரச்சனையை அணுகி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ''சாதிமுறை தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்'' என்ற 1966 ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கத்தின் பேறாகும்; இதற்கு வழிசமைத்த வரலாறு யாழ்ப்பாணத்தில் 1925 இல் மாணவர் காங்கிரஸ் (பின்னர் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்) மாநாடு எழுச்சியுறுத்திய தேசிய விழிப்புணர்வோடு தொடர்புடையதாகும். இருபதாம்
ஆண்டுகளிலிருந்து எழுச்சியுற்ற இந்த மக்கள் நலனாட்ட வரலாற்று முன்னெடுப்பை ஆதிக்க சாதியான வெள்ளாளர் உட்பட அனைத்து சாதியினரும் சாத்தியப்படுத்தினர். இதன்பேறாக 40 களிலேயே ஒடுக்கப்பட்ட சாதிகளைச்சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து ''சிறுபான்மைத் தமிழர் மகா சபை'' என்பதாக ஒன்று பட்ட அமைப்பாக்கம் கொள்வது சாத்தியமாயிற்று. ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கத்தின் பேறான ''தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கம்'' ஒடுக்கப்பட்ட  சாதியினர் மட்டுமன்றி ஆதிக்க மற்றும் இடைச்சாதியினரும் அங்கம்பெறும் அமைப்பை சாத்தியமாக்கி, சாதியத்துக்கெதிரான வலுவான போராட்டங்களை
அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக நாட்டம்மிக்கோரும் முன்னெடுக்க வாய்ப்பேற்படுத்தியிருந்தது.

இந்தச் சாதித் தகர்ப்புப் போராட்டத்தை ஈழத் தமிழ்த் தேசியம் ஆதரித்திருந்திருக்க வேண்டும். இருபதாம் ஆண்டுகளில் எழுச்சியுற்ற தமிழுணர்வாளர்கள் இலங்கைத்தேசிய அக்கறையுடன் சாதியத் தகர்ப்பையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்; இந்தியத் தேசிய விடுதலைக் கொந்தளிப்பின் பகுதியாகவும் -சர்வதேச உணர்வின் பகுதியாகவும் இலங்கையினதும் தமிழ் மக்களினதும் விடுதலையை அவர்கள் கண்டனர். இதனை உடைத்துக்கொண்டு முப்பதுகளில் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையில் யாழ்.வெள்ளாளத் தேசியம் தமிழ்த் தேசியத்தின் ஒரு பிரிவை தொடக்கி வளர்க்க முற்பட்டபோதுதான் இரிட்டைத் தேசியப்
பிளவு நேர்ந்தது. எமது தேசியம், அந்நியரிடமிருந்து விடுதலை பெறுவதும் நிலவுடைமைச் சமூக முறைமைக்கான பண்ணையடிமைத்தனத்தை தகர்ப்பதும் என்ற இரு பிரதான கடமைகளைக் கொண்டிருந்தது. யாழ்.வெள்ளாளத் தேசியம் பண்ணையடிமைத்தனம் தகர்க்கப்படுவதற்கு எதிராக இருந்தவாறே பேரினவாத த்திலிருந்து விடுதலை பெறுவதுபற்றி அக்கறைகொண்டிருந்தது. பின்னாலே செல்வநாயகம் - அமிர்தலிங்கம் தலைமையிலான யாழ்.வெள்ளாளத் தேசியமும் சாதியத் தகர்ப்புப் போராட்டத்துக்கு எதிராகவே செயற்பட்டது. அறுபதுகளில் பண்ணையடிமைத்தனத்தைத் தகர்க்கும் தேசியப் பணியான சாதி ஒழிப்புப்
போராட்டமே பிரதான செல்னெறியாக அமைந்தபோது ஈழத் தமிழ்த் தேசியம் அதனை ஏற்பதற்கு மாறாக இவ்வகையில் யாழ்.வெள்ளாளத் தேசியமாய்த்
தன்னை அடையாளப்படுத்தியிருந்தது.

பேரினவாதக் கொலைவெறித் தாண்டவம் ஈழத்தமிழ்த் தேசிய எழுச்சியைப் பிரதான வரலாற்றுப் போக்காக ஆக்கிய பின்னர், தமிழ்த் தேசியப் பிரச்சனையே பேசுபொருளாயிற்று; சாதித்தகர்ப்பு பற்றிய அக்கறை அவசியமற்றதுபோல பாசாங்கு செய்யப்பட்டது; கொம்யூனிஸ்ட்டுகள் முன்னெடுத்த சாதித் தகர்ப்புப் போராட்டம் ''தமிழ்த் தேசிய'' விரோதம் என்பது போலக் காட்டும் எத்தனிப்புகள் வலுப்பட்டது. அப்போதைய விவாதங்களின் போதுதான் இரட்டைத் தேசியம் பற்றி புரிதல் கொள்ள இயலுமாயிற்று. வரலாற்றுத் துரோகிகளாக இருந்த ஈழத் தமிழ்த் தேசியர்கள், அன்றைக்குரியதான வரலாற்றைக் கையேற்று சாதிய முறைமையைத் தகர்ப்பதில் ஆதிக்க சாதியினருட்பட அனைத்துச் சாதியினரையும் ஐக்கியப்படுத்திய, வரலாற்று முன்னுதாரணமற்ற சாதனையைச் சாத்திய மாக்கிய கொம்யூனிஸ்ட்டுகளை எப்படித் ''தமிழ்த் துரோகிகள்'' என முத்திரை குத்த இயலும்?

பிளவற்ற தமிழ்த் தேசியமாயின் கொம்யூனிஸ்ட்டுகளின் அந்த வரலாற்றுப் பங்களிப்பால் தமிழினம் ஒன்றுபட வாய்ப்பேற்பட்டதாக மகிழ்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களை பெரும்பான்மையாய் அணிதிரட்டியிருந்த கொம்யூனிஸ்ட்டுகளையும் அரவணைத்தவாறு தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். சாதித் தகர்ப்புப் போராளிகளான கொம்யூனிஸ்ட்டுகள் எவரும் பேரினவாத சக்தியுடன் ஐக்கியப்பட்டிருக்கவில்லை; சகல அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடும் மார்க்கம் என்கிறவகையில் சாதியத்தகர்ப்பை அங்கீகரிக்கும் தமிழ்த் தேசியத்துடன் ஒன்றுபட்டு சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகப் போராடுவதில் தடை ஏதுமில்லை.

ஒன்றுபடுவதற்கு எதிரான தடை அன்றைய தமிழ்த் தேசியத்தின் பக்கமே இருந்தது. அவர்கள் சாதியத் தகர்ப்புப் போராட்டத்துக்கு எதிராக இருந்ததோடு, ஏகாதிப த்தியப் பிடிப்புகளைத் தகர்க்கும் சிங்கள முற்போக்கு சக்திகளின் முயற்சிகளுக்கு எதிராக மக்கள் விரோத ஐ.தே.க.வை ஆதரிப்பவர்களாக இருந்தார்கள். இத்தகைய பிற்போக்கான யாழ்.வெள்ளாளத் தேசிய வடிவம் கொண்ட ஈழத் தமிழ்த் தேசியம் ஐ.தே.க. உடன் கொண்ட கள்ள உறவினால் 1977 ஆட்சிபீடமேறிய ஜே.ஆர். தலைமயிலான ஐ.தே.க. அரசில் எதிர்க்கட்சித் தலைவராக ஆனபோதிலும் ஜே.ஆரின். கூட்டாளியாக அமிர்தலிங்கத்தை செயற்பட வழிப்படுத்தியது. அதன்பேறாக ஈழப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தத் தவறுகிறார் எனக்குற்றம் சாட்டி அனைத்து இளைஞ்ஞர் இயக்கங்களும் அவரிலிருந்து பிரியநேர்ந்தது; இறுதியாகப் பிரிந்த, அவரால் அன்புடன் தம்பி என அழைக்கப்பட்டு பொதுவாகவே ''தம்பி'' என அடையாளம் பெற்ற பிரபாகரன் அணியினரால் அவரது துர் மரணம் நேர்ந்தது என்பது உலகறிந்த உண்மை.

வர்க்க சமூகமொன்றில் பண்ணையடிமைத் தகர்ப்பு - அந்நிய சக்தியிடமிருந்து விடுதலை என்ற தேசியத்தின் இரு பணிகளும் பிளவுபட்ட தேசியச் செல்நெறி
களாயன்றி ஒரே தேசிய எழுச்சியின் பகுதிகளாயாகியிருக்க இயலும். சாதி ஒடுக்குமுறையை சுரண்டலுக்கான ஏற்றத்தாழ்வுச் சமூக முறையாக உடையதான எமது சாதியச் சமூகத்தில் ஆதிக்க சாதியினருக்கு அன்னியரிடமிருந்து விடுதலை பெற்று ''ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆழ நினைப்பதில்'' மட்டுமே  நாட்டம் இருக்கும். அவர்கள் பண்ணை அடிமைத்தனத்தைத் தகர்ப்பதைக் கையேற்காதது மட்டுமன்றி, அதற்கென முனையும் ஒடுக்கப்பட்ட மக்களின் அக்கறை
களுக்கு எதிராகப் போராடவும் வேண்டியிருந்தது. அவர்களுக்கு அடிபணிந்து உழைக்க வேண்டியவர்களுக்கு அடிமைதளை நீக்கம் செய்யமுனைந்தால் தமது நலன் பாதிக்கப்படும் என்பது ஆதிக்க சாதியினர் பிரச்சனை. ஏகாதிபத்தியத்தைத் தகர்க்கும் அதெவேளை பண்ணையடிமைகளின் அடிமைத் தளைகளைத் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே ஆதிக்க சாதியினரின் நலனுக்கு உகந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை, ஏகாதிபத்தியமோ பேரினவாதமோ அவர்களை நேரடியாக சுரண்டுவதுமில்லை ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதும் இல்லை. இவற்றை உயர் சாதியினரே நேரடியாகப் புரிவதனைக் கண்கூடாகக் காண்பதால் தம்மீது ஆதிக்கம்புரியும் சாதியத் தளைகளினின்றும் விடுதலை பெறுவதே ஒடுக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவையாகின்றது. ஏகாதிபத்தியம், பேரினவாதம் ஆகியவற்றுடன் கூட்டமைத்தேனும் பண்ணையடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் நலனோடு தொடர்புபட்ட அம்சமாகின்றது. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில், பிரித்தானிய ஏகாதிபத்தியம்
ஒடுக்கப்பட்ட(தலித்) மக்களுக்கு நன்மை எதனையும் செய்யாததுடன் சாதிபேதத்தைத் தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக்கொண்டது எனக் கூறிய அம்பேத்கரும் அதைவிடவும் கொடுமையாக நடந்து கொண்ட பிராமணத்தேசியத்துக்கு எதிராக பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைக்க வேண்டியவராக இருந்தார்.

இலங்கையிலும் இதற்கு உதாரணம் உண்டு.சாதியத் தகர்ப்புப் போராட்டம் உக்கிரம் பெற்று வந்தபோது யாழ்.வெள்ளாளத் தேசியத்தின் சைவ மேலாதிக்கத்தைத் தகர்க்கும் எண்ணத்துடன் தமிழ்ப் பௌத்த இயக்கம் தொடங்கப்பட்டது. சிங்கள அரசின் அனுசரணையோடு பௌத்த சங்கம் வாயிலாக யாழ்ப்பாணத்தில் பௌத்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஒடுக்கப்பட்ட மக்களில் கணிசமானோர் அதில் இணைந்து கொண்டனர். வைரமுத்து(ஐயாத்துரை) அவர்களின் தலைமையிலான அந்த இயக்கம் நூறு மாணவர்களைப் பிக்குகளாக பயிற்சிபெற தென்னிலங்கைக்கு அனுப்ப இயலுமாயிருந்தது. இந்தப் போக்கினை ஆரம்பத்தில் டானியல்கூட ஆதரித்திருந்தார். இது தொடர்பில் யோகரட்னம் எழுதியுள்ள ''தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்'' எனும் நூல் கவனிப்புக்குரியது.

சாதியத் தகர்ப்பில் சிறுபான்மைத் தமிழர் மகா சபை, தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கம் ஆகியவற்றோடு சமதையாக மூன்றாவது செல்நெறியாக இதனை கணிக்க இயலாது. யோகரட்ணம் தனது நூலில் அவ்வாறு சொல்கிறார் என்றால், அவ்வாறு பிக்கு ஆகும் நோக்குடன் பயிற்சி பெறச்சென்ற நூறு மாணவர்களில் ஒருவராக அவர் இருந்து அதன் தீவிர செயற்பாட்டாளராக அவர் இருந்த தாக்கத்தின் பேறு அது. அக்காலத்தில் வலுவோடு தமிழ்ப் பௌத்தம் இயங்கியமையை நிராகரிக்க இயலாது. அந்தவகையில், இரட்டைத் தேசியத் தன்மையோடு யாழ்.வெள்ளாளத் தேசியத்துக்கு எதிர்த் தேசியமாக பௌத்த தலித் தேசியம் எழுச்சிபெற வாய்ப்பிருந்தது. அது சிங்களப் பேரினவாதத்துக்கு காட்டிக்கொடுக்கும் நோக்குடையதாயன்றி, சைவ வெள்ளாள சாதி அகம்பாவத்தை தகர்க்கும் ஒரு முயற்சி என்பதை யாழ்.வெள்ளாளத் தேசியர்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம்; மக்கள் விடுதலையை நேசிக்கும் எவரும் அன்றைய நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதியினர் ஆதிக்க சாதித் தேசியத்துக்கு எதிராக சிங்களப் பேரினவாதச் சதி வலையில் வீழ்ந்திருக்கக் கூடிய தலித் எதிர்த் தேசியம் சாத்தியமாகும் புற நிலை நிலவியது என்பதைக் காணத் தவறமுடியாது.

அவ்வாறு ஆகாமல் போனமை கொம்யூனிஸ்ட்டுகளின் சரியான அணுகுமுறையின் பேறு. டானியல் பௌத்த மதமாற்றத்தை ஆரம்பத்தில் ஆதரித்திருந்தது பற்றி மேலே குறிப்பிட்டிருந்தோம்; அதைவிடவும், அதிலிருந்து ஏன் பின் வாங்கினார் என்பதுதான் மிகுந்த கவனிப்புக்குரியது. கொம்யூனிஸ்ட் கட்சி அத்தகைய மத மாற்றத்தை வன்மையாகக் கண்டித்து நிராகரித்திருந்தது; கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்பதால் அப்படி எனக் கருதலாம். அப்போது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடு ஐ.தே.க. பிற்போக்கு சக்திக்கு எதிரான முற்போக்கு அணியில் பௌத்த பிக்குகள் மிக அதிகமாய் இருந்தனர்; யோகரட்ணம் பிக்குபயிற்சியில் சந்தித்த முற்போக்கான பிக்கு குறித்து கூறியிருந்தமையையும், அவரிடம் நூலுக்கான ஆசியுரை பெற்றமையையும் அவதானிக்க இயலும். கொம்யூனிஸ்ட்டுகளாக
பல பிக்குகள் இருந்துள்ளனர். அவ்வாறிருந்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் பௌத்தத்துக்கு மாறுவதனைக் கொம்யூனிஸ்ட்கட்சி ற்றுக்கொள்ளவில்லை. அதேவேளை, சொந்தச் சமூகத்தில் உரிமையை வென்றெடுக்கும் வகையில் கோயில் நுழைவுப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தது.

இவ்வகையில் உரிமை வென்றெடுக்கப்படும் சாத்தியம் லுத்துவந்தமையால் பௌத்தமாற்றம் வலுவிழந்து கொம்யூனிஸ்ட் அணிகளான சிறுபான்மைத் தமிழர் மகா சபையிலும் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து வந்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னெடுதிருந்த அந்தப் போராட்டத்தைக் கொம்யூனிஸ்ட்கட்சி தலைமை தாங்கியபோது அது வர்க்க ரீதியாக அணிதிரட்டியிருந்த அனைத்து சாதிப்பிரிவினரும் அப்போராட்டத்தில் பங்கேற்க வகைசெய்திருந்தது. குறிப்பாக, புரட்சி மார்க்கத்தை ஏற்றிருந்த தீ.ஒ.வெ.இயக்கத்துக்கு தலைமயேற்றிருந்த ''சீன சார்பு'' கொம்யூனிஸ்ட்கட்சி அரசில்
ஒருபோதும் பங்கேற்றதில்லை. அந்தவகையில் பேரினவாதத்துக்கு தம்மையறியாமலே ஏதாயினும் விட்டுக்கொடுப்புக்கு உள்ளாகியதான எந்தக் குற்றச்சாட்டுக்கும் இடமில்லாமலே சாதியத்துக்கு எதிரான அறுபதுகளின் போரட்டம் இடம்பெற்றிருந்தது.

இது அன்றைய பிரதான வரலாற்றுச் செல்நெறியாக அமைந்தபோது ஒடுக்கப்பட்டோருக்கான (தலித்) எதிர்த் தேசியமாக வடிவங்கொள்ளவில்லை; விடுதலை பிளவுபடாதது என்கிறவகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை வென்றெடுக்கும்போது எந்தச் சாதிப் பிரிவினருக்கும் எதிராக அமையாது உயர் சாதியில் உள்ள உழைக்கும் மக்களுக்கான விடுதலையின் கோரிக்கைகளையும் இணைத்துக் கொண்டிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறின், சாதியத்துக்கு எதிரான அந்தத் தேசியப் போராட்டம் வர்க்கப் பார்வையில் கொம்யூனிஸ்ட் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட காரணத்தால், இரட்டைத் தேசியப் பிளவுக்கு அவசியமின்றி அனைத்துத் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாக அமைந்திருந்தது.

அவ்வாறாயின் தமிழ்த் தேசியத்தின் கோரிக்கைகளை ஏன் உள்ளடக்கியிருக்கவில்லை? பல தடவைகள் சுட்டியிருந்தது போல, பிரதான வரலாற்றுச் செல்நெறியாக அமைந்த சாதித் தகர்ப்புத் தேசியக் கடமைக்கு எதிராக யாழ்.வெள்ளாளத் தேசியமாய் வடிவங்கொண்ட ஈழத் தமிழ்த்தேசியம் செயற்பட்டமையால் அதன் தவறை எதிக்கும் முனைப்பில் அவசியமான தமிழ்த் தேசியத்தின் பக்கமும் கவனங்கொள்ளாத தவறு நேர்ந்தது. பேரினவாத ஒடுக்குமுறை வலுத்தபோது கொம்யூனிஸ்ட்
கட்சியினர் தேசிய இனப்பிரச்சினையும் சுயநிர்ணய உரிமையும் குறித்த தேடல்களில் ஈடுபட்டனர்; தொடர்ந்த வலதுசாரிப் பிற்போக்கு ஆதிக்க சாதித் தேசியப் பாஸீஸம் இயங்கிய சூழலில் எதையும் செய்ய இயலாமற் போயினும் இன்றைய தத்துவார்த்த விவாதங்கள் வாயிலாக தமிழ்த் தேசியத்தை ஆதிக்க சாதிப் பிளவாக்கலுக்குள்ளாக்காமல் விடுதலைத் திசைமார்க்கத்தில் முன்னெடுப்பதற்கு இரட்டைத் தேசிய நிதர்சனத்தை வலியுறுத்தி நிற்கிறது மார்க்சிய இயக்கம்.

இரட்டைத் தேசியம் பற்றி மார்க்சிய முன்னோடிகள் எங்கே சொல்லியிருக்கிறார்கள்? இப்படிக் கேட்கிறவர்களே இறக்குமதித் தத்துவம் வேண்டாம் என்று சொல்கிற வினோதங்களையும் பார்ப்போம். மார்க்சியம் இறக்குமதிச் சரக்கில்லைத்தான்; அது ஏற்றத்தாழ்வைத் தகர்த்து சுரண்டலற்ற சமத்துவ சமூகத்தைப் படைப்பதற்கான ஒரு சிந்தனை முறை. அதற்கான முதல் முயற்சி பாட்டாளி வர்க்கத் தலைமையில் ஐரோப்பாவில் முன்னெடுக்கப்பட்டபோது அந்த அனுபவங்களின் தொகுப்பான
மார்க்சியம் அங்கே பிறப்பெடுத்தது. ''உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்'' என்ற முழக்கம் பிறந்தது. ருசியப் புரட்சி அதனைச் சாத்தியமாகியபோது தனது நாட்டின் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருந்த தேசங்கள் பிரிந்து செல்ல உரிமையுடைய சுயநிர்ணயமுடையன என்ற வாக்குறுதியுடன் அவற்றை ஐக்கியப்படுத்தும் வகையில் ''உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்'' என்பதாக, பாட்டாளி வர்க்கம் மட்டுமன்றி ஒடுக்கப்பட்ட தேசங்களும் சமத்துவம் படைக்கும் புரட்சிக்குரிய சாத்தியக்கூறுடையதாயிருப்பதை கூறாமல் கூறியிருந்தது. அதன்பின்னர் பாட்டாளி வர்க்கப் புரட்ட்சியால் அல்லாமல்
சீனா,கியூபா,கிழக்கைரோப்பியனாடுகள் என தேசிய விடுதலைப் போராட்டங்கள் வாயிலாகவே சோசலிச மாற்றியமைத்தலுக்கான சாத்தியம் ஏற்பட முடிந்தது.

இதனை எவ்வாறு புரிந்து கொள்வோம்? ஆளும் சாதிபோலவே ஏகாதிபத்தியமும் ஒடுக்கப்பட்ட தேசங்களை சுரண்டும் வகையில் தேசியத்துக்கும் சாதி முறைக்கும் தொடர்புள்ளதா? இவைகொண்டு எமது சாதிச் சமூகத்தில் சோசலிசம் சிருஷ்டிப்பதற்கான மார்க்கத்தை வகுக்க முடியுமா? தேசிய விடுதலை சோசலிசத்தை எட்டும் சாத்தியம் போல சாதியத் தகர்ப்பு போராட்டம் சோசலிசத்துக்கு இட்டுச்செல்லுமா? பார்க்கவேண்டும்!!! 

No comments:

Post a Comment